சனி, 10 மார்ச், 2018

வீரபாண்டிய கட்டபொம்மன் தெலுங்கன்:

வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழனல்ல.
அவன் தெலுங்கன். கி.பி 1529 ம் ஆண்டுமுதல்
தெலுங்க நாயக்க மன்னர்கள் தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆண்டபோது இப்போதைய தாலுக்கா என்னும் வட்டங்களைப் போல அப்போது தமிழகத்தை பாளையங்களாகப் பிரித்தனர்.
ஒவ்வொரு பாளையத்திலும் தெலுங்க ராணுவத்தை நிறுத்தி தமிழரின் நிலங்களைப் பிடுங்கிக்கொண்டு தமிழரை அடிமைப்படுத்தினர்.
பாளையங்களின் பரம்பரை தெலுங்க ராணுவத் தளபதிகளே பாளையக்காரர்கள். அதாவது தெலுங்க நாயக்க மன்னர்களுக்குக் கீழ் குறுநில மன்னர்களாகவே பாளையக்காரர்கள் இருந்தனர்.
அந்த பாளையக்காரர்கள் பாளையங்களில் சர்வாதிகார ராணுவ ஆட்சி நடத்தினர்.
நிலம் அரசுக்கே சொந்தமென சொல்லி தமிழரின் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டதோடு தமிழரை அடிமைச் சாதிகளாக்கி வரிக்கொடுமையும் செய்தனர்.
உயர்குடியாக இருந்த தமிழ்ச்சாதியினர் தமது வளமான நிலங்களை இழந்து தாழ்ந்த சாதியினராக மாறிப்போயினர்.
தமிழ்ச்சாதியினர் விவசாய கூலிகளாக மாற்றப்பட்டனர்.
அந்த பாளையக்காரர்களே ஆங்கிலேயர் காலத்தில் ஜமீன்தார்களாக பெயர் மாற்றிக்கொண்டு ஆட்சி செய்தனர்.

கட்டபொம்மன் அந்த பாளையக்காரர் பரம்பரையில் வந்த தெலுங்கன்.