புதன், 14 மார்ச், 2018

இறைநம்பிக்கை தேவையா தேவையில்லையா?

இறைநம்பிக்கை தேவையா தேவையில்லையா?
இறைவழிபாடு உளவியல் சார்ந்த மருந்துவம் போன்றது. வாழ்க்கையில்
சிக்கல்கள், துன்பங்கள் நேரும்போது மனிதர்களை மனநோய்க்கு ஆளாக விடாமல் நம்பிக்கையின் அடிப்படையில் காப்பாற்றுவது.
இறைவழிபாட்டைக் குறை சொல்ல முடியாது.
அதனை வைத்து செய்யப்படும் மூடநம்பிக்கைகள், அதீத மதப்பற்றின் காரணமாக மற்ற மதத்தவர் மீது எழும் வெறுப்புணர்வு போன்றவைதான் களையப்பட வேண்டியவை.

இறைநம்பிக்கையை களைந்துவிட்டால் மனிதன் மிருகமாகத்தான் இருப்பான்.

அறிவியல் நம்பிக்கையால் இறைநம்பிக்கை அற்றுப்போன அமெரிக்காவில் ஒரு தனிமனிதன் நூற்றுக்கணக்கான மக்களை சுட்டுத் தள்ளுகிறான்.
அந்த மனநோய் வரக்காரணம் இறைநம்பிக்கை அற்றுப் போவதே.

இப்போது அறிவியல் கல்வியால் எல்லோரிடமும் பகுத்தறியும் மனப்பான்மை வந்துவிட்டது.
இருந்தாலும் இறைநம்பிக்கை தேவைப்படுகிறது.
இறைநம்பிக்கையை அழிக்கவேண்டியதில்லை.
அதை பகுத்தறிவோடு ஒன்றிய இறைநம்பிக்கையாக மாற்றவேண்டும்.

எல்லாவற்றையும் குற்றம் மூடநம்பிக்கை என்றால் மனிதன் அம்மணமாகத்தான் சுற்றுவான்.
மனிதாபிமானம் வளராது.

இறைநம்பிக்கை அன்புணர்வை உண்டாக்குவது.
உண்மையான இறைநம்பிக்கை வன்முறையைத் தடுப்பது.

கடவுள் என்ற பெயரில்தான் மதக்கலவரங்கள் நடக்கின்றன என்று நீங்கள் வாதிடலாம்.
அவர்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் அல்ல.
சுயநலவாதிகள்.