செவ்வாய், 18 செப்டம்பர், 2018

தமிழ்நாட்டை ஆண்டவர்கள்

*பழங்காலம் முதல் இக்காலம் வரை தமிழ்நாட்டை யாரெல்லாம் ஆண்டிருக்கிறார்கள்?*


👉 நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கிபி 2ஆம் நூற்றாண்டு வரை *சேரர், சோழர், பாண்டியர்* ஆகிய மூவேந்தர்கள் மற்றும் *தொண்டைமான்கள், பாரி, ஓரி, காரி, அதியமான் முதலான குறுநில மன்னர்கள்* (இவர்கள் *தமிழர்*).

 சோழர் தலைநகரம் பூம்புகார், உறையூர், பழையாறை. பாண்டியர் தலைநகரம் மதுரை. சேரர் தலைநகரம் பெரியாறு அரபிக் கடலில் கலக்கும் இடமான வஞ்சி என்ற கொடுங்களூர் மற்றும் கரூர்.. தொண்டைமான்களின் தலைநகரம் காஞ்சிபுரம். அதியமான்களின் தலைநகரம் தகடூர் என்னும் தருமபுரி..


👉 கிபி 2ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4ஆம் நூற்றாண்டு தொடக்கம்வரை *களப்பிரர்*. ( இவர்கள் தமிழரா? யார்? எங்கிருந்து வந்தார்கள்? என்று தெரியவில்லை).


👉 கிபி 4ஆம் நூற்றாண்டு தொடக்கம்முதல் கிபி 9ஆம் நூற்றாண்டு வரை *பல்லவர்கள்*. (இவர்கள் *தமிழர்*). இவர்கள் சங்க காலத் தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள்.. பல்லவர் தலைநகரம் காஞ்சிபுரம். இவர்களின் கடற்கரை தலைநகரம் மாமல்லபுரம்.


👉 கிபி 9ஆம் நூற்றாண்டு முதல் கிபி 13ஆம் நூற்றாண்டு வரை *சோழர்கள்.* இவர்கள் *தமிழர்*.

சோழர் தலைநகரம் பழையாறை, தஞ்சாவூர் பிறகு கங்கைகொண்டசோழபுரம். 250 ஆண்டுகள் கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரம்.. பிறகு தீவுக்கோட்டை. அதன் பிறகு சிதம்பரம் அருகே பிச்சாவரம்.. இந்தியா, இலங்கை, மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளின் பகுதிகள் சோழப்பேரரசில் அடங்கியிருந்த காலம்...

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் வலிமைமிக்க பேரரசர்களாக இருந்தனர்..


👉 கிபி 13ஆம் நூற்றாண்டு முதல் கிபி 14ஆம் நூற்றாண்டு வரை *பாண்டியர்*. (இவர்கள் *தமிழர்*). பாண்டியர் தலைநகரம் மதுரை.


👉 கிபி 14ஆம் நூற்றாண்டு முதல் கிபி 17ஆம் நூற்றாண்டு வரை *விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் தெலுங்க நாயக்க மன்னர்கள்*. (இவர்கள் *தெலுங்கர்*). விஜயநகரப் பேரரசர்கள் கர்நாடகாவில் ஹம்பி என்ற ஊரில் இருந்து ஆண்டார்கள். அவர்களின் ஆளுநர்களாகத் தமிழகத்திற்கு வந்த தெலுங்க நாயக்க மன்னர்கள் மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய ஊர்களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள்.


👉 கிபி 17ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் 1947 வரை *ஆங்கிலேயர்*. இவர்களின் தலைநகரம் சென்னை, கல்கத்தா, டில்லி.


👉 *1920 முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்களில் யாரெல்லாம் தமிழர்?* யாரெல்லாம் தெலுங்கர்? யாரெல்லாம் மலையாளி? யாரெல்லாம் கன்னடர்? யாரெல்லாம் ஆரியர்?


1. சுப்பராயலு ரெட்டியார்- தெலுங்கர்


2. பனகல் ராஜா தெலுங்கர்


3. *பி. சுப்பராயன் - தமிழர்*


4. முனுசாமி நாயுடு- தெலுங்கர்


5. பொப்பிலி ராஜா- தெலுங்கர்


6. *பி.டி.ராஜன் -தமிழர்.*


7. கே.வி.ரெட்டி நாயுடு - தெலுங்கர்.


8. இராஜாஜி - தெலுங்க பிராமணர் - ஆரியர்


9. டி.பிரகாசம் - தெலுங்கர்.


10. ஓ.பி.ராமசாமி ரெட்டியார் - தெலுங்கர்.


11. பி.எஸ்.குமாரசாமிராஜா -தெலுங்கர்


11. *காமராஜர் - தமிழர்*


12. *எம்.பக்தவச்சலம் - தமிழர்*


13. அண்ணாதுரை - தெலுங்கர்


14. கருணாநிதி - தெலுங்கர்


15. எம்ஜிஆர் - மலையாளி


16. ஜானகி - மலையாளி


17. ஜெயலலிதா - கன்னட பிராமணர் - ஆரியர்


18. *ஓ.பன்னீர்செல்வம் - தமிழர்*


19. *எடப்பாடி பழனிசாமி -தமிழர்*


தமிழ்நாடு தமிழர் நாடு. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்.


"வாழும் உரிமை அனைவருக்கும்.

ஆளும் உரிமை தமிழருக்கே".

குறிப்பு:
கீழைச்சாளுக்கிய நாட்டு இளவரசனாக இருந்த அனபாயன் என்பவனின் தந்தை இராஜராஜ நரேந்திர சாளுக்கியன். அவன் தெலுங்கன். தாய் சோழனின் மகள். அவள் தமிழச்சி. அதாவது அனபாயன் என்பவன் ராஜராஜ சோழனின் மகள் வழிக் கொள்ளுப்பேரன். இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரன்.
1070 ல் அதிராசேந்திர சோழன் சோழப்பேரரசின் மன்னனாக முடிசூட்டிக்கொள்கிறான். அவன் சில மாதங்களிலேயே இறந்துவிடுகிறான். அதிராசேந்திர சோழனுக்கு வாரிசு இல்லை. அதனால் கீழைச்சாளுக்கிய இளவரசனான அனபாயன் என்பவன் அதிராசேந்திர சோழனின் இறப்புக்குப் பிறகு குலோத்துங்க சோழன் என்ற பெயரில் சோழப்பேரரசின் மன்னனாக 1070 ல் முடிசூட்டிக் கொண்டான். அவன் வழியினர் 4 தலைமுறையினர் 1163 வரை சோழப்பேரரசை ஆண்டனர். அதன் பிறகு மீண்டும் நேரடி சோழர் பரம்பரையினர் ஆட்சிக்கு வந்துவிட்டனர்.

1163 ல் முடிசூடிய இரண்டாம் இராஜாதிராஜ சோழன் நேரடி சோழர் பரம்பரையைச் சேர்ந்தவர்..  இவர் முதலாம் குலோத்துங்க சோழனின் மகனான விக்கிரம சோழனின் மகள்வழிப் பேரன்... இவரது தந்தை சங்கமன் (நெறியுடைய பெருமாள்) ராஜராஜ சோழனின் நேரடி சோழர் பரம்பரையைச் சேர்ந்தவர்.. இந்த நேரடி சோழர் பரம்பரையைச் சேர்ந்தவர்களே பிச்சாவரம் சோழர்கள்..

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

பல்லவர்கள் தமிழரே!

பல்லவர்கள் தமிழரே!
பல்லவர்கள் யார்?
பல்லவர்கள் தொண்டைநாட்டின் குறுநில மன்னராயிருந்த தமிழ் மன்னர்களான தொண்டைமான் வழிவந்த தமிழர்களே. தொண்டைமான் இளந்திரையன் என்போன் சங்ககாலத்தில் தொண்டை நாட்டை ஆண்ட சிறப்புமிக்க தமிழ் மன்னன் ஆவான். சங்க காலத்திற்குப் பிறகு பல்லவப் பேரரசு அமையும்வரை தொண்டைமான்கள் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர் பேரரசுக்குக் அடங்கிய குறுநில மன்னர்களாக இருந்துள்ளனர்.
தொண்டைமான்கள் சோழர்களின் வழித்தோன்றல் ஆவர்.
பல்லவ மன்னர்கள் தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள் என்பதாலேயே பல்லவ மன்னர்களின் வழிவந்த சில மன்னர்களும் தளபதிகளும் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டனர். குலோத்துங்க சோழனின் படைத் தளபதியாய் இருந்த கருணாகரத் தொண்டைமானைப் "பல்லவர் தோன்றல்" என்று புகழ்கிறார் ஜெயங்கொண்டார். பல்லவ  வழித்தோன்றலாக இருந்த கருணாகரன் தொண்டைமான் என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? பல்லவ மன்னர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள்.

பல்லவர்களின் முன்னோரான தொண்டைமான்கள் தமிழர்கள் என்பது சங்க இலக்கியங்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை நூலின் மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கும்
உண்மை.
கருணாகரத் தொண்டைமானைக் கலிங்கத்துப்பரணி 535 ஆவது பாடலில் "பல்லவர் தோன்றலைப் பாடீரோ" என்கிறார் ஜெயங்கொண்டார்.
இதே கருணாகரத் தொண்டைமானைச் சிலை எழுபது என்ற நூலின் 68ஆவது பாடலில்-
" புவிக்காயிரம் பொன் இறைநீக்கி
கவிக்காயிரம் பொன் பரிசளித்தான்
கருணாகரத் தொண்டை வன்னியனே "
எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடுகிறார்.
கவிச்சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார் கருணாகரத் தொண்டைமானைப் பல்லவர் என்று அடையாளப்படுத்துகிறார்.
அதே தொண்டைமான் வன்னியர் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் அடையாளப்
படுத்துகிறார்.

ஆகவே பல்லவர்கள் தமிழர்தான். கம்பர் எழுதிய சிலை எழுபது என்ற நூலின் மூலம் பல்லவர்கள் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது.

தென்னிந்தியாவில் அமைந்த வலிமையான முதல் பேரரசு தமிழர்கள் அமைத்த பல்லவப் பேரரசு.
தமிழர்களான பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 9 நூற்றாண்டுகள் வலிமையான பேரரசாக இருந்து நல்லாட்சி செய்தார்கள். அதன்பிறகு காடவராயர், சம்புவராயர் என்ற பெயர்களில் குறுநில மன்னர்களாக இருந்தும் ஆண்டார்கள். பிற்கால சோழ, பாண்டிய பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகும் தெலுங்க நாயக்கர் ஆட்சிக்காலத்தில் உடையார்பாளையம், முகாசா பரூர் ஆகிய பகுதிகளில் பாளையக்காரர்களாக ஆட்சி செய்தனர். அதன்பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  உடையார்பாளையம், முகாசா பரூர் ஆகிய ஜமீன்களுக்கு ஜமீன்தாரர்களாகவும் தொடர்ந்து ஆட்சி செய்தனர். ஜமீன் ஒழிப்புச் சட்டம் வரும்வரை பல்லவர் வழிவந்தோர் ஜமீன்தாரர்களாக இருந்துவந்தனர்.
இப்போதும் வாழும் பல்லவ வழித்தோன்றல்கள் உடையார்பாளையத்திலும், முகாசா பரூரிலும் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகப் பகுதியான தொண்டைநாடு ஆந்திர எல்லைக்கு அருகில் இருப்பதால் பல்லவர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திராவின் பெரும்பகுதியைப் பிடித்து ஆளுவதற்கும் வசதியாக இருந்துவிட்டது.

பல்லவர்கள் தமிழகம், ஆந்திரம் மட்டுமல்லாமல் கடல்கடந்து இலங்கை, மலேசியா, கம்போடியா வரை சென்று ஆட்சி செய்தனர். கம்போடியாவின் அங்கோர்வாட் என்ற உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத் தளத்தைப் பல்லவர்கள்தான் கட்டினர்.

பல்லவர்கள் தொடக்க காலத்தில் பிராகிருத மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் பட்டயங்களை வெளியிட்டுள்ளனர். சங்க காலத்திற்குப் பிறகு பல்லவப் பேரரசு அமைவதற்கு முன்பு தொண்டைமண்டலம் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர் பேரரசுக்கு கட்டுப்பட்டு அடங்கிய நாடாக இருந்ததால் முற்காலப் பல்லவர்கள் சாதவாகனப் பேரரசின் தாக்கத்தால் பிராகிருத, சமஸ்கிருத ஆதரவாளர்களாக மாறியிருந்தனர். பல்லவப் பேரரசு அமைவதற்கு முன்பே வட இந்தியாவிலிருந்து சமண, பௌத்தத் துறவிகளும், சமஸ்கிருத வைதீகர்களும் காஞ்சிபுரத்தில் குடியேறி அவர்தம் பிராகிருத, சமஸ்கிருத மொழிகளை மதத்தளத்தில் பரப்பி இருந்ததும் முற்காலப் பல்லவர்கள் பிராகிருத, சமஸ்கிருதப் பட்டயங்களை வெளியிட்டமைக்கு காரணம் ஆகும்.

பல்லவர்கள் தொடக்கத்தில் சமணத்தைத் தழுவி இருந்தனர். முற்காலப் பல்லவர்கள் சமணத்தைத் தழுவியிருந்த போது பிராகிருதத்தையும், பிறகு இடைக்காலப் பல்லவர்கள் வைதீகத்தைப் பின்பற்றிய போது சமஸ்கிருதத்தையும், பிற்காலப் பல்லவர்கள் சைவத்தைப் பின்பற்றிய போது தமிழையும் ஆட்சிமொழியாகக் கொண்டிருந்தனர். சமண, பௌத்த, வைதீக சமயங்கள் சங்க காலத்திற்குப் பிறகு காஞ்சிபுரத்தில் செல்வாக்குடன் பரவியிருந்தன. சமண, பௌத்த மதங்களின் மொழி பிராகிருதம். வைதீக மதத்தின் மொழி சமஸ்கிருதம். தமிழரின் சைவம் தமிழைச் சமய மொழியாகக் கொண்டு வளர்ந்தது. பல்லவர்கள் பிராகிருதம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளை முறையே ஆட்சி மொழிகளாகக் கொண்டிருந்தமைக்கு அவர்கள் பின்பற்றிய மதங்களே முதன்மைக் காரணம் ஆகும்.
தற்காலத்தில் இசுலாம் மதத்தைத் தழுவியுள்ள சில தமிழர்கள் அரபு மொழியைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றனர் அல்லவா? இந்துக்கள் சமஸ்கிருதத்தில் வழிபாடு, திருமணச்சடங்கு போன்றவற்றைச் செய்யவில்லையா? அப்படித்தான்.

பல்லவர்கள் தம்மைப் பரத்வாஜ கோத்திரத்திலிருந்து வந்த சத்திரியர்கள் என்று கல்வெட்டுகளில் பதிந்துள்ளனர் எனவும் அதனால் பல்லவர்கள் ஆரியர் எனவும் தமிழரல்லர் எனவும் சிலர் சொல்கின்றனர்.
தமிழகத்தில் வட இந்திய ஆரிய கலாச்சாரமும் மனுதரும நால்வருண கோட்பாடும் புகுந்த பிறகு பல தமிழ்க்குடிகள் தம் சாதிப் பெயரை வடமொழிப்படுத்தி புராணமயப்படுத்தினர்.
எடுத்துக்காட்டாக, கொங்கு மண்டல வேளாளர்கள் தம்மை மரபாள வம்சம் என்றனர். வடமொழியின் மரபாள புராணத்தைத் தழுவி வேளாள புராணம் எழுதிக்கொண்டனர்.
கோனார் என்னும் இடையர்கள் தம்மை யாதவர் என்று சொல்லிக்கொண்டனர்.
தொண்டை மண்டலம், நடுநாடு, வட கொங்கு மண்டலம் ஆகியவற்றைப் பூர்வீகமாக கொண்ட வன்னியர்களான பள்ளிகள் தம்மை அக்னி வம்சம் என்று சொல்லிக்கொண்டனர். வடமொழியில் உள்ள ஆக்னேய புராணத்தைத் தழுவி வன்னிய புராணம் எழுதிக்கொண்டனர்.
தச்சர்கள் தம்மை விஸ்வாமித்திர கோத்திரம் என்று சொல்லிக்கொண்டனர்.
நாடாண்ட மன்னர்கள் தம்மை சத்திரியர் என்று சொல்லிக்கொண்டனர்.
இவ்வாறே பல தமிழ்க்குடிகள் பெருமைக்காக வடமொழிப்பெயர்களையும் வடமொழி புராணங்களையும் தமக்கு ஏற்றிக்கொண்டன.
பல்லவர்கள் சொல்லும் பரத்வாஜ கோத்திரம் என்பதும் அவ்வாறுதான்.

பல்லவர்கள் தமிழர் என்பதில் ஐயமில்லை.

பல்லவர் பற்றிய முந்தைய வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள் மறு ஆய்வுக்கு உட்பட்டவை.
முந்தைய வரலாற்று ஆய்வாளர்களின் பல்லவர் பற்றிய தரவு சேகரிப்புக்கு செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி நூலின் செய்தியும், கம்பரின் சிலையெழுபது நூலின் செய்தியும் எட்டாமல் இருந்திருக்கிறது.
அதனால் "பல்லவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை" என்று பொத்தாம் பொதுவாக எழுதிவிட்டுச் சென்றனர்.
"பல்லவர்கள் யார் என்று தெரியவில்லை" என்று வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய காரணத்தால் பல்லவர்கள் மீது தெலுங்கர்கள் உரிமை கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

சனி, 8 செப்டம்பர், 2018

பல்லவர்கள் தமிழர்தான்

பல்லவர்கள் யார்?
தமிழரான பல்லவர் வரலாறு ஆரிய பிராமணர்களாலும் திராவிடத் தெலுங்கர்களாலும் திரிக்கப்பட்டுள்ளது.

பல்லவர்கள் தொண்டைமான் வழிவந்த தமிழர்கள்.

பல்லவர்கள் தொடக்க காலத்தில் பிராக்கிருதம், சமஸ்கிருதம் போன்ற வடமொழியில் பட்டயங்களை வெளியிட்டுள்ளனர். அதனால் அவர்கள் ஆரியர் என்று வரலாற்றாய்வாளர் சிலர் தவறாகப் பதிவுசெய்துள்ளனர்.
பல்லவருக்கு முன்பே வட இந்தியாவிலிருந்து காஞ்சிபுரத்தில் புத்த, சமண துறவிகளும் சமஸ்கிருத வைதீகர்களும் குடியேறி அவர்தம் வடமொழியை மதத்தளத்தில் பரப்பி இருந்தமையே அக்காலத்தில் பல்லவர்கள் பிராக்கிருத, சமஸ்கிருதக் கல்வெட்டுகளை வெளியிட்டதற்கு காரணம்.

பல்லவர்கள் ஈரானியர்கள் என்று சிலர் நிறுவ முயன்றுள்ளனர். பல்லவர்கள் ஈரானியர் என்றால் ஈரானிய மொழியில் அல்லவா பட்டயங்களை வெளியிட்டிருக்க வேண்டும்.
பல்லவர்கள் தெலுங்கர்கள் என்றால் அவர்கள் தெலுங்கு மொழியில் அல்லவா பட்டயங்களை வெளியிட்டிருக்க வேண்டும்.

பல்லவர்களைத் தமிழரல்லர் என்று சொன்ன வரலாற்றாய்வாளர்கள் ஆரிய, தெலுங்க பக்தர்கள்தான். அதனால் பெருமைமிகு தமிழர் வரலாற்றை மறைக்க முயன்றனர்.  "பல்லவர் வரலாறு" என்ற நூலை எழுதிய ம.இராசமாணிக்கனார் ஒரு மிகப்பெரிய வரலாற்று திரிபுவாதி. அவர் நிச்சயமாக தெலுங்கராகத்தான் இருக்க வேண்டும்.  பல்லவர்கள் தெலுங்கர்கள் என்பதை நிறுவுவதற்காக பொய்ச் செய்தியை வலிந்து திணித்துள்ளார். அவருக்குத் தமிழர் மீதிருந்த காழ்ப்புணர்ச்சியை காரணம்.

பிற்காலச் சோழர்களும் சமஸ்கிருத ஆதவாளர்களாக இருந்தனர் . சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர். அதனால்
சோழர்களையும் தமிழரல்லர் அவர்கள் வடவர்கள் அல்லது ஈரானியர் என்று சொல்வார்கள் போலும். என்ன ஒரு குழப்படி வேலை.

முந்தைய வரலாற்றாய்வாளர்களின் ஆய்வு முடிவுகள் பல மறு ஆய்வுக்கு உட்பட்டவை.

பல்லவர்கள் தம்மைப் பரத்வாஜ கோத்திரத்திலிருந்து வந்த சத்திரியர்கள் என்று கல்வெட்டுகளில் பதிந்துள்ளனர் எனவும் அதனால் பல்லவர்கள் ஆரியர் எனவும் தமிழரல்லர் எனவும் சிலர் சொல்கின்றனர்.
தமிழகத்தில் வட இந்திய ஆரிய கலாச்சாரமும் மனுதரும நால்வருண கோட்பாடும் புகுந்த பிறகு பல தமிழ்க்குடிகள் தம் சாதிப் பெயரை வடமொழிப்படுத்தி புராணமயப்படுத்தினர்.
எடுத்துக்காட்டாக, கொங்கு மண்டல வேளாளர்கள் தம்மை மரபாள வம்சம் என்றனர். வடமொழியின் மரபாள புராணத்தைத் தழுவி வேளாள புராணம் எழுதிக்கொண்டனர்.
கோனார் என்னும் இடையர்கள் தம்மை யாதவர் என்று சொல்லிக்கொண்டனர்.
தொண்டை மண்டலம், நடுநாடு, வட கொங்கு மண்டலம் ஆகியவற்றைப் பூர்வீகமாக கொண்ட வன்னியர்களான பள்ளிகள் தம்மை அக்னி வம்சம் என்று சொல்லிக்கொண்டனர். வடமொழியில் உள்ள ஆக்னேய புராணத்தைத் தழுவி வன்னிய புராணம் எழுதிக்கொண்டனர்.
தச்சர்கள் தம்மை விஸ்வாமித்திர கோத்திரம் என்று சொல்லிக்கொண்டனர்.
நாடாண்ட மன்னர்கள் தம்மை சத்திரியர் என்று சொல்லிக்கொண்டனர்.

இவ்வாறே பல தமிழ்க்குடிகள் பெருமைக்காக வடமொழிப்பெயர்களையும் வடமொழி புராணங்களையும் தமக்கு ஏற்றிக்கொண்டன.
பல்லவர்கள் சொல்லும் பரத்வாஜ கோத்திரம் என்பதும் அவ்வாறுதான்.

உலக மொழிகள் பலவற்றில் தமிழ்ச்சொற்களை ஒத்த பல சொற்கள் உள்ளன.
ஈரானிய பஹலவா என்ற சொல்லுக்கும் தமிழ் பல்லவர் என்ற சொல்லுக்கும் உள்ள ஒலிப்பொற்றுமையை மட்டும் வைத்து பல்லவர்களை ஈரானியர் என்று கதைகட்ட வேண்டாம்.

பல்லவர்கள் தொண்டைநாட்டின் குறுநில மன்னராயிருந்த தமிழ் மன்னர்களான தொண்டைமான் வழிவந்த தமிழர்களே. தொண்டைமான் இளந்திரையன் என்போன் சங்ககாலத்தில் தொண்டை நாட்டை ஆண்ட சிறப்புமிக்க தமிழ் மன்னன் ஆவான்.
தொண்டைமான்கள் சோழர்களின் வழித்தோன்றல் ஆவர்.
பல்லவ மன்னர்கள் தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள் என்பதாலேயே பல்லவ மன்னர்களின் வழிவந்த சில மன்னர்களும் தளபதிகளும் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டனர். குலோத்துங்க சோழனின் படைத் தளபதியாய் இருந்த கருணாகரத் தொண்டைமானை பல்லவர் தோன்றல் என்று புகழ்கிறார் ஜெயங்கொண்டார். பல்லவ  வழித்தோன்றலாக இருந்த கருணாகரன் தொண்டைமான் என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? பல்லவ மன்னர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள்.
பல்லவர்கள் தமிழர்கள் என்பது சங்க இலக்கியங்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை நூலின் மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கும்
உண்மை.
கருணாகரத் தொண்டைமானை கலிங்கத்துப்பரணி 535ஆவது பாடலில் பல்லவர் தோன்றலைப் பாடீரோ என்கிறார் ஜெயங்கொண்டார்.
இதே கருணாகரத் தொண்டைமானை சிலை எழுபது நூலின் 68ஆவது பாடலில்-
" புவிக்காயிரம் பொன் இறைநீக்கி
கவிக்காயிரம் பொன் பரிசளித்தான்
கருணாகரத் தொண்டை வன்னியனே "
எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடுகிறார்
கவிச்சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார் கருணாகரத் தொண்டைமானைப் பல்லவர் என்று அடையாளப்படுத்துகிறார்.
அதே தொண்டைமான் வன்னியர் என்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் அடையாளப்
படுத்துகிறார்.

ஆகவே பல்லவர்கள் தமிழர்தான்.

களப்பிரர் காலத்தில் நிகழ்ந்த இருட்டடிப்பால் வடமொழிப்பண்பாடு, வடமொழி ஆதிக்கம் தமிழகத்தில் புகுந்து பல உண்மைகளை மறைத்திருக்கிறது.

தென்னிந்தியாவில் அமைந்த வலிமையான முதல் பேரரசு தமிழர்கள் அமைத்த பல்லவப் பேரரசு.
தமிழர்களான பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 9 நூற்றாண்டுகள் வலிமையான பேரரசாக இருந்து நல்லாட்சி செய்தார்கள். அதன்பிறகு காடவராயர், சம்புவராயர் என்ற பெயர்களில் குறுநில மன்னர்களாக இருந்தும் ஆண்டார்கள்.
பல்லவர்கள் சங்க காலத்தில் தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள் ஆவர். பல்லவர்கள் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தமிழகப் பகுதியான தொண்டைநாடு ஆந்திர எல்லைக்கு அருகில் இருப்பதால் பல்லவர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திராவின் பெரும்பகுதியைப் பிடித்து ஆளுவதற்கும் வசதியாக இருந்துவிட்டது.

பல்லவர்கள் தமிழகம், ஆந்திரம் மட்டுமல்லாமல் கடல்கடந்து இலங்கை, மலேசியா, கம்போடியா வரை சென்று ஆட்சி செய்தனர். கம்போடியாவின் அங்கோர்வாட் என்ற உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத் தளத்தைப் பல்லவர்கள்தான் கட்டினர்.

திங்கள், 3 செப்டம்பர், 2018

தமிழக இட ஒதுக்கீட்டின் அவலநிலை

தமிழக அரசின் சாதிவாரி இட ஒதுக்கீட்டில் 40 விழுக்காடுக்கும் மேலாக தமிழரல்லாத பிறமொழியினரே பயன்பெறுகின்றனர். தெலுங்க, கன்னட சாதியினரை எல்லாம் SC, ST, BC, MBC பிரிவுகளுக்குள் கொண்டுவந்ததே காரணம். தமிழக அரசுப் பணியில் தெலுங்க, கன்னட மொழியினரின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது.

ST பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 36

கொண்டாரெட்டி,
மலையாளி,
மலையக்கண்டி,
ஊராளி,
காட்டு நாயக்கர்,
கம்மாரா,
கொரகா,
மலை அரையர்,
குடியா,
கண்யான்,
இது போல இந்த பட்டியலில் உள்ள
36 சாதிகளில் 20 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள் உள்ளனர்.

SC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 76

ஆதி ஆந்திரர்,
ஆதி கர்நாடகர்,
அஜிலா,
பைரா,
ராணேயர்,
பஞ்சமா,
நாயாடி,
டோம்,
ஜக்கலி,
பகூடா
இது போல இந்த பட்டியலில் உள்ள
76 சாதிகளில்
40 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

BC பட்டியலில் மொத்த சாதிகளின்
எண்ணிக்கை= 138

பில்லவா,
செளத்திரி,
கெளடா,
ஜெட்டி,
கன்னடிய நாயுடு,
கேரள முதலி,
மராட்டியர்,
ஒதியா,
ரெட்டி,
சாலிவாகனா,
லம்பாடி,
இது போல இந்த பட்டியலில் உள்ள
138 சாதிகளில்
65 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்,

MBC பட்டியலில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 41

பெஸ்கா,
பட்ராஜீ,
இசை வேளாளர்,
சீவியர்,
ஜோகி,
கொரச்சா,
தெலுங்கு பட்டி செட்டி,
தொம்மரா,
நோக்கர்,
ஜம்புவானோடை,
இது போல இந்த பட்டியலில் உள்ள
41 சாதிகளில் 20 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

DC பட்டியலில் உள்ள மொத்த
சாதிகளின் எண்ணிக்கை = 68

பட்டுதுர்காஸ்,
சக்கலா,
தெலுங்கு பட்டி செட்டிகள்,
மொந்த கொல்லா,
தொங்க போயர்,
தொம்பர்கள்,
நோக்கர்கள்,
போயர்கள் ,
இது போல இந்த பட்டியலில் உள்ள
68 சாதிகளில் 35 சாதிகள்
வேறு மொழியை சார்ந்தவர்கள்.

முற்பட்டபட்டியலில் உள்ள
சாதிகளின் எண்ணிக்கை= 79,

ஆங்கிலோ இந்தியர்,
லண்டன் மிஷன்,
மலங்கரா,
சட்ஸி,
மைமன்,
நவாப்,
குதுப்பத்தான்,
நாயுடு,
மூசிக பலிஜ குலம்,
கொண்ட ரெட்டி,
இது போல இந்த பட்டியலில் உள்ள
79 சாதிகளில் 40 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள்.

இவர்கள் எல்லாம் இங்கு இட ஒதுக்கீடு பெறுவது எப்படி என நாம் இது வரை சிந்தனை செய்தது
உண்டா?

தமிழர்களால் வேறு
மாநிலத்தில் அந்த
மாநில அரசுப் பணிக்கு விண்ணப்பம்
செய்ய முடியுமா?

ஆனால் இங்கு
மலையாளிகளும்,
கன்னடர்களும்,
தெலுங்கர்களும்,
மற்றும் பிற மொழியினரும் இங்கு
இட ஒதுக்கீட்டை அனுபவித்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும்
அனைத்து பலன்களையும் இந்த நிலத்தில் அனுபவித்து வருகின்றனர்.
இது யாருக்கும் தெரிவதில்லை.

தமிழகத்தில் உள்ள சாதிய  எண்ணிக்கையில் பிற மொழியை சார்ந்த சாதிகள் தான் அதிகம்.

இதைப் பற்றி யாராவது 
இந்த நிலத்தில் பேசியது உண்டா?

இது தெரியாமல் தமிழர்களுக்கு
இட ஒதுக்கீடு பற்றிய போதிய தெளிவான பார்வை இல்லை.

ஏதோ குறிப்பட்ட மக்களுக்கு மட்டுமே
இட ஒதுக்கீடு இருப்பது போல
பொது வெளியில் பேசிக் கொண்டு
தன்னை அறிவாளி போல காட்டி கொள்கிறது முட்டாள் தமிழ் சமூகங்கள்.

இட ஒதுக்கீடு முறையில்
தமிழர்களைவிட
பிறமொழி சாதிகள்தான்
அதிகளவு பயன் பெறுகிறார்கள்.

இதைக் கேட்க யாருக்கு
தைரியம் உள்ளது?
இங்குதான் தமிழ்ச் சாதிகளுக்குள்
அடித்துக்கொள்வதற்கு மட்டுமே
நேரம் உண்டு.

இத்தனை
உரிமைகளையும் ,
அதிகாரத்தையும் ,
பலன்களையும்,
பிறமொழி சாதியினருக்குக் கொடுத்தவர்கள்
திராவிடர்கள்தான்.

இத்தனை பிற மொழிச் சாதிகளை இங்கு இடம் பெறச் செய்து நாம் முழுமையாக பெற வேண்டியதை
பிறமொழி சாதியினரும் அனுபவிக்கக் காரணமானவர்கள் திராவிடர்கள்தான்.

இந்த மண்ணில் திராவிட ஆட்சி தொடரும் வரை இந்த அவல நிலை இருக்கத்தான் செய்யும்.