திங்கள், 4 பிப்ரவரி, 2019

மழநாடு

*மழநாடு*
மழவர்கள் ஆண்ட நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது.

இடம்

திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி முதல் பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூர்) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதி, திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு. கி.மு. முதல் கி.பி. வரை மழநாட்டின் வரலாறு நீள்கிறது. சங்ககால புலவர் ஔவையாரால் பாடப்பட்ட அதியமான்கள், வல்வில் ஓரி, கொல்லி மழவன், அரியலூர் ஜமீன் சமஸ்தானத்தை கி.பி. 14ம் நூற்றாண்டில் ஆண்ட ஒப்பில்லா மழவராயர், திருவக்கரை வல்லவ நாட்டை கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆண்ட மழவராய பண்டாரத்தார் போன்றோர் மழநாட்டை ஆண்டு வந்தனர். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையரின் முன்னோர்கள் இந்த அரியலூர் மழவராயர்களால் போற்றப்பட்டனர். மழநாடு எல்லை குறித்த கல்வெட்டுகள் கருநாடக மாநிலத்தில் கிடைத்துள்ளன.

மழகொங்கம்

கி.பி. 770ல் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் மழகொங்கம் பகுதியைக் குறிப்பிடுகின்றன. அதில், இராஜசிம்மன்(மாறவர்மன்), பூக்கள் விரிகின்ற சோலைகளையுடைய காவிரியைக் கடந்து அழகமைந்த வில்லினால் மழகொங்கம் பகுதியை அடிப்படுத்தினான் என்றுள்ளது. இந்த மழகொங்கம் தமிழ் நாட்டிலே காவிரியின் வடகரையில் உள்ளது. அப்போது, சங்க இலக்கியத்தில் மழவர் பெருமகன் என்றழைக்கப்படும் அதியமான்கள் இப்பகுதியை ஆண்டு வந்தார்கள். அதியமான்கள் உருவாக்கிய கோயில்களே நாமக்கல் குகைக்கோயில்கள். தமிழக அரசியல் வரலாற்றில் மழகொங்கம் முக்கிய பங்கு வகித்தது. மலை வளமும் நீர் வளமும் மிக்கது. இப்பகுதி கிழக்கே பாச்சில்(திருவாசி) வரை பரவியிருந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமழபாடி பண்டை நாளில் மழவர் ஊராகத் திகழ்ந்தது.

மழநாடு

தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பிரம்மியம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 998ஆம் ஆண்டு கல்வெட்டில் மழநாடு என்றொரு நாடு இருப்பது பதிவாகியுள்ளது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு இயற்றப்பட்ட இளம்பூரணர் உரையில் மழநாடு என்றொரு நாடு இருப்பது குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த மழநாடு திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி என்று அகராதிகள் கூறுகின்றன. மேலும், மழகொங்கம், மழபுலம் ஆகிய சொற்களுக்கு அருத்தம் மழநாடு என்று அகராதிகள் குறிப்பிடுகின்றன. கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இயற்றப்பட்ட பெரியபுராணம் மேல்மழநாட்டை மேன்மழநாடு எனும் நீர்நாடு என்று குறிப்பிடுகிறது. சங்க இலக்கியமான புறநானூற்றில் அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் மழவர் பெருமகன் என்றும் தலை நீர் நாடன் என்றும் அழைக்கிறார். இதன் மூலம், மழவர் பெருமகனான அதியமான் நெடுமான் அஞ்சியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது என்பதும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. கல்வெட்டுகளில் தலைநீர் என்ற சொல் முதல் மடைப் பாய்ச்சல் என்ற அருத்தத்தில் பயின்று வரும். இதன் மூலம் காவிரியாறு முதன்முதலில் பாயும் நாடு தலைநீர் நாடு என்பது புலப்படும். இப்பெரியபுராணத்துப் பாடலின் உரையிலிருந்து மழநாடு மேல்மழநாடு, கீழ்மழநாடு முதலிய நிலப்பகுப்புகளை உடையது என்றும் அதில் கீழ்மழநாட்டை திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவாசியைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன் எனும் அரசன் ஆண்டான் என்றும் அறியமுடிகிறது. இதன்மூலம், மழவர் ஆண்ட நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது என்று அறியமுடிகிறது. மேலும், சுமார்த்தப்பிராமணரின் ஒரு உட்பிரிவு மழநாட்டுப்பிருகச்சரணம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலமும், மழநாடு என்றொரு நாடு இருப்பது நமக்குத் தெரியவருகிறது.

மழவர் பெயரில் உள்ள இடங்கள்

வரலாற்று இடப்பெயர்கள்

தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம் என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், கங்க மன்னன் ஸ்ரீ புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார்(கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்) என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார் என்றும் அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற வீரன் இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.
தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிந்தல்பாடி என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டில், கானப்பள்ளி எனும் ஊரில் மழவராயப்புத்தேரி எனும் ஏரி இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

வரலாற்றுச் சான்றுகள்

தொல்லியல் மூலங்கள் தரும் செய்திகள்

கி.பி. 6ஆம் நூற்றாண்டு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் அசுரம்சேரி எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற கி.பி. 6ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், பல்லவன் சிம்மவர்மனுடைய இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 524) ஆடி மாதம் புணர்பூச நட்சத்திரம் கூடிய நாளின் போது தகடூரின் பிடி மண்ணேரிக் கிழக்குப் பகுதியை ஆள்பவருடைய படையை எதிர்த்து இலாட நாடு ஆளும் அரைசர், மழவரைசர் ஆகியோர் இணைந்த கூட்டுப் படையைச் சேர்த்துக் கொண்டு போரிட்டு வென்று வீர சாவடைந்தார் கங்க அதி அரைசர் உடைய படைத் தலைவரான கல்நாட்டின் மாதன் பெருதிஅரைசர் என்பவர், என்னும் செய்தி பதிவாகியுள்ளது.
கி.பி. 8ஆம் நூற்றாண்டு தொகு
கி.பி. 770ல் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் மழகொங்கம் பகுதியைக் குறிப்பிடுகின்றன. அதில், இராஜசிம்மன்(மாறவர்மன்), பூக்கள் விரிகின்ற சோலைகளையுடைய காவிரியைக் கடந்து அழகமைந்த வில்லினால் மழகொங்கம் பகுதியை அடிப்படுத்தினான் என்றுள்ளது. இந்த மழகொங்கம் தமிழ் நாட்டிலே காவிரியின் வடகரையில் உள்ளது.
வேள்விக்குடி செப்பேடுகள் வழங்கிய பராந்தகன் நெடுஞ்சடையன் பாண்டியனின் தாய் மழவர் குடியில் பிறந்தவராவார். இவரை மழவேந்திரனின் மகள்(செப்பேட்டில் உள்ள சங்கத சுலோகத்தின் படி மளவேந்திரன்) அதாவது மழவ மன்னன் மகள் என்றும் இவரை பாண்டிய வேந்தன் இராஜசிம்மன்(மாறவர்மன்) மணந்தான் என்றும் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இச்செப்பேட்டுகள் பராந்தகன் நெடுஞ்சடையன் பாண்டியனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் வழங்கப்பட்டன என்பதால் இவற்றின் காலம் கி.பி.770 என அறியமுடிகிறது.

கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு

தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம் என்னும் ஊரில் கிடைத்த நடுகல் கல்வெட்டில், கங்க மன்னன் ஸ்ரீ புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார்(கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்) என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார் என்றும் அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற வீரன் இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.

கி.பி. 9ஆம் நூற்றாண்டு

தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள செல்லம்பட்டி என்னும் ஊரில் கிடைத்த நடுகல் கல்வெட்டில், கி.பி.898ஆம் ஆண்டு தகடூர் மாவலிவாணராயரடியான் கூடல் மாணிக்கன் உளைக்குன்றினை ஆண்டு வந்தான். அவனுடைய மாமனும் கோவூர் நாட்டு ஐந்நூறின் தலைவனாக விளங்கியவனுமான மழற்பையன் என்பவனின் அடியான் சூழிபுளியன் என்பவன், புலியைக் கொன்றபோது இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது. இக்கல்வெட்டில் மழற்பையன் என்ற சொல் மழவர் மகன் என்ற அருத்தத்தில் பயின்று வந்துள்ளது.

கி.பி. 10ஆம் நூற்றாண்டு

கண்டராதித்த சோழனின் பட்டத்தரசி, அருண்மொழிவர்மனை(முதலாம் இராஜராஜ சோழன்) வளர்த்த வளர்ப்புத்தாய், செம்பியன் மாதேவி, மழவர் குடியில் பிறந்தவராவார். இவர் கொல்லி மலை மழவரையரின் மகளாராவார். இவரை கல்வெட்டுக்கள் ஸ்ரீ உத்தம சோழதேவரை திருவயிறு வாய்த்த மழவரையர் மகளார் பராந்தக மாதேவ (டிகளார்) ராந செம்பியன் ம(ர)ஹ(ர) தேவியார் என்றும் மேற்கெழுந்தருளிய தேவர் கண்டராதித்த தேவர் தேவியார், மழப் பெருமானடிகள் மகளார் பராந்தகன் மா தேவடிகளான செம்பியன் மா தேவியார் என்றும் கூறும். இவரது காலம் கி.பி.910-1001 ஆகும்.
அருண்மொழிவர்மனின்(முதலாம் இராஜராஜ சோழன்) தந்தை சுந்தர சோழனின் மனைவி, முதலாம் இராஜராஜ சோழனின் தாய், வானவன் மாதேவி, மலையமான் வமிசத்து மழவர் குடியில் பிறந்தவராவார்.
தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பிரம்மியம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 998ஆம் ஆண்டு கல்வெட்டில் மழநாடு என்ற சொல் பதிவாகியுள்ளது.
தற்கால கருநாடக மாநிலம் ராமநகரம் மாவட்டம் சன்னபட்னா வட்டத்தில் உள்ள ஊர் மாலூர்பட்டினம். இந்த ஊரில் கிடைத்த கல்வெட்டுகள் படி இவ்வூர் மழவூர் என்றும் முடிகொண்டசோழமண்டலத்து இராஜேந்திரசோழவளநாட்டுக் கிழலைநாட்டு மழவூரான இராசேந்திரசிங்கச்சதுர்வேதிமங்கலம் என்றும் முடிகொண்டசோழமண்டலத்து கரிகாலசோழவளநாட்டு பெரிய மழவூர் இராசேந்திரசிங்கச்சதுர்வேதிமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.மற்றொரு கல்வெட்டு சன்னபட்னா எனும் ஊரை சிறியமழவூர் என்று குறிப்பிடுகிறது. இதன்மூலம், மழவூர்பட்டினம் என்னும் ஊர் மாலூர்பட்டினம் என்றும் சின்னமழவூர்பட்டினம் என்ற பெயர் சின்னபட்டினம் என்றாகி இன்று சன்னபட்னா என்றும் வழங்கப்படுவது புலனாகிறது.
கி.பி. 14ஆம் நூற்றாண்டு தொகு
தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிந்தல்பாடி என்னும் ஊரில் கிடைத்த கல்வெட்டில், கானப்பள்ளி எனும் ஊரில் மழவராயப்புத்தேரி எனும் ஏரி இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

கி.பி. 16ஆம் நூற்றாண்டு

தற்கால திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேசூர் பேரூராட்சியில் உள்ள ஈசுவரன் கோவிலில் உள்ள கி.பி. 1528ஆம் ஆண்டு கல்வெட்டில், சி(சீ)ர்மழவர் குலம் என்ற சொல் பதிவாகியுள்ளது. இக்கல்வெட்டு படி, கரிதுர்க்க நாவலற்கருள் கம்பையாதிபன் கன்னன் மிகு பொன்னைநாடன் கார்போலவந்த பாரியாழ்வானுக்கந்ததொரு கருணை உண்ணாமுலையன் என்பவன், திருமருவுமிசுரத்திம்மையன் என்பவனின் கிறுபைகொண்டு, சி(சீ)ர்மழவர் குலம் விளங்கத் தேசூரிலே செங்கை வேலாயுதனுக்கொரு திருக்கோவிலைக் கட்டுவித்தான் என்றுள்ளது.
தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மயில்ரங்கம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 1532ஆம் ஆண்டு கல்வெட்டில் மாடைகளில் மழவராயர், அவினாசி மழவராயர் ஆகிய சொற்கள் பதிவாகியுள்ளன.

இலக்கிய மூலங்கள் தரும் செய்திகள்

சங்ககாலம்

சங்க இலக்கியங்களில் மழவர்

இவர்கள் மணிகட்டிய வேலை ஏந்திப் போர் புரியும் பாங்கினர். வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சியும் வள்ளல் ஓரியும் மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகின்றனர். பல்யானைச் செல்கெழு குட்டுவன் மூன்றாம் பத்தின் தலைவன். இவன் மழவர்களைக் காக்கும் கவசமாக விளங்கினான். இவர்கள் ஆயர் குலத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இம்மழவர் குடியினர் தண்டாரணியப் பகுதியிலும் வாழ்ந்தனர். இவர்கள் வருடை ஆடுகளைப் பிடித்துவந்து பழக்கப்படுத்தி வளர்த்து அதன் பயனைத் துய்த்து வந்தனர். ஆறாம்பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அவர்களின் ஆடுகளைக் கவர்ந்துவந்து தன் நாட்டுத் தொண்டி மக்களுக்கு வழங்கினான். அன்றியும் ஆடுகளைக் கவர்ந்து வரும்போது எதிர்த்த ஏனை கரந்தை மழவரையும் போரில் வென்றான்.மழவர் வில்லும் அம்பும் ஏந்தியவராய் வீளை (வாய் ஊதல்) அடித்துக்கொண்டு நாள்தோறும் ஆனிரைகள் மேய்த்து வருவர்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விடியும் பொழுதில் தன்னைத் தாக்கிய மழவர்களை விரட்டினான் மழவர் குடியினர் குதிரைமலை நாட்டில் வாழ்ந்துவந்தனர். பொதினி எனப்பட்ட பழனிமலை அரசன் தனைத் தாக்கிய இந்த மழவர்களை விரட்டினான். திருச்சி மாவட்டத்தில் திருப்பாச்சில் ஆசிரமத்தைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன் என்பவன் ஆட்சிபுரிந்துவந்தான். இது இடைக்கால நிலை. இக்காலத்துத் திருமழபாடி முற்காலத்தில் மழவர்குடியினர் வாழ்ந்த இடம் எனக் கருத இடமுண்டு. இவர்கள் வாழ்ந்த ஊர் பாடி என்று வருவதால் இவர்கள் முல்லை நில குடியினர் என்பது விளங்குகிறது.

சிற்றுரை சேர்ந்த ஆயர்கள் கையை தலை மீது வைத்து வருந்தும்படி கொழுத்த ஆவினை கவர்ந்து அதன் இறைச்சியை பாலைத்திணை மழவர் உண்டனர் என்றும், கன்றினையுடைய பசுவினை கொன்று உண்டனர் என்றும் கடவுளுக்கும் காணிக்கையாக பலியிட்டனர் என்றும் அறிய முடிகிறது.

மழபுலம்

மழபுலம் என்பது சங்ககாலத்தில் மழவர் வாழ்ந்த நாடு.
வேங்கட நாட்டை ஆண்ட தமிழ்மன்னன் புல்லி
இவன் மழவர்களை வணங்கச் செய்து அவர்களது நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.
சங்ககாலப் புலவர் மாமூலனார் இந்தச் செய்தியைக் குறிப்பிடுகிறார்.. கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி

கி.பி. 11ஆம் நூற்றாண்டு

தொல்காப்பியம் - இளம்பூரணர் உரை

கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு இயற்றப்பட்ட இளம்பூரணர் உரையில் மழநாடு என்றொரு நாடு இருப்பது குறிப்பிடப்படுகிறது.

திருத்தொண்டர் திருவந்தாதி
கி.பி. 11ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் இயற்றப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதியில் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றிக் கூறும் பாடலில் மேல்மழநாட்டைப் பற்றி குறிப்புள்ளது.

கி.பி. 12ஆம் நூற்றாண்டு

பெரியபுராணம்

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பெரியபுராணம் மேல்மழநாட்டை மேன்மழநாடு எனும் நீர்நாடு என்று குறிப்பிடுகிறது.

கி.பி. 13-17ஆம் நூற்றாண்டு

கைலாயமாலை

கைலாய மாலை எனும் இவ்விலக்கியம் செகராசசேகரன் என்னும் அரசன் யாழ்ப்பாணத்தை ஆளத் துவங்கிய போது உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது. இதில், பாண்டி மழவன் என்பவன், செகராசசேகரனிடம் சென்று யாழ்ப்பாண அரசை ஏற்கும் படி வேண்டினார் என்ற செய்தி பதிவாகியுள்ளது. மேலும், பாண்டி மழவனை விவரிக்கையில், இவனை பொன்பற்றியூரன், அண்டர் போரில் அழல்சூரன், மின்பற்று காலின் விலங்குதன்னை - அன்புற்று வெட்டுவித்து விட்டபுகழ் வேளாளர் வங்கிஷத்தில் திட்டமுடன் வந்து செனனித்தோன் என இன்னும் பலவாறு விவரிக்கிறது.

கி.பி. 15ஆம் நூற்றாண்டு

திருப்புகழ்

கி.பி. 15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழில் காவிரி ஆறு நிறைந்து வரும் கால்வாய்கள் உள்ள சிறந்த மழ நாட்டுப் பகுதியில் சிறப்புடன் உள்ள பூவாளூரில் வீற்றிருக்கும் பெருமாளே என்று குறிப்பிடப்படுகிறது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டு

சோழ மண்டல சதகம்

கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் மறுபதிப்பாக வெளியிடப்பட்ட சோழ மண்டல சதகத்தில் மழநாட்டுப் பகுதிகள் இராசாச்சிரய வளநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

கொங்குநாடு கற்பனையே

*கொங்குநாடு கற்பனையே*

கொங்கு நாடு என்பது வரலாற்றில் எக்காலத்திலும் இருந்ததில்லை. அது கொங்கு வேளாளக் கவுண்டர்களால் உருவாக்கப்பட்ட கற்பனையே.

தமிழ்நாட்டில் சோழ நாடு, சேரநாடு, பாண்டிய நாடு, தொண்டைநாடு,  பல்லவநாடு, தகடூர் நாடு ஆகிய நாடுகளே மன்னர் பரம்பரையைக் கொண்டு ஆட்சி செய்த நாடுகளாக இருந்தன.

தற்போது கொங்கு மண்டலம் என்று சொல்லப்படும் பகுதிகள் சங்க காலத்தில் பல சிற்றரசுகளால் ஆளப்பட்ட சிறுசிறு குறுநாடுகளாக இருந்தன. அக்காலத்தில் சேரநாட்டை ஆண்ட சேரர்கள் அச் சிற்றரசர்களை வென்று அப்பகுதிகளைச் சேர நாட்டின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டனர். பின்னர் வந்த பல்லவர், சோழர், பாண்டியர் ஆகிய பேரரசுகள் அப்பகுதியை தங்கள் பேரரசுடன் இணைத்து ஆண்டு வந்துள்ளனர்.
கொங்கு நாடு என்பது எக்காலத்திலும் தனிநாடாகவோ, தனியாக மன்னர் பரம்பரையைக் கொண்ட நாடாகவோ இருந்ததில்லை.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தங்கள் சாதிக்கு என தனியாக ஒரு மாநிலத்தை உருவாக்குவதற்காக இல்லாத கற்பனையான கொங்குநாடு என்ற ஒன்றைச் சொல்லி அதன் பெயரில் சாதிக் கட்சிகளைத் தொடங்கி நடத்துகின்றனர். கொங்கு சாதிக்கட்சிகள் தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தானவை.

கொங்கு வேளாளக் கவுண்டர் கட்சிகள் சொல்லும் கொங்குநாடு என்ற வரம்புக்குள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்காது. ஏனெனில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வன்னியர் சாதி தமிழர்கள் பெரும்பான்மையானோர் பூர்வீகமாகக் வாழ்ந்துகொண்டிருக்கும் பகுதிகள் ஆகும். இம்மாவட்டங்களில் ஏதோ ஒரு சில சிற்றூர்களில் மட்டுமே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் வாழ்கின்றனர். அந்த கொங்கு வேளாளர்களும் தங்கள் குலதெய்வக் கோயில்களை நாடி நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலுள்ள கோயில்களுக்கே செல்கின்றனர். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் எவருக்கும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குலத்தெய்வக் கோயில்கள் கிடையாது. எனவே சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள ஒருசில  சிற்றூர்களில் மட்டுமே வாழும் கொங்கு வேளாளர்கள் நாமக்கல், ஈரோடு மாவட்டப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அங்கிருந்து மிக அண்மைக் காலத்தில்தான் சேலம் பகுதிக்கு வாழ்வாதாரம் தேடிக் குடிபெயர்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.
நாமக்கல் வட்டாரத்தில் வாழும் கொங்கு இன மக்கள் காவிரிக்குத் தெற்கில் காங்கேயம் முதலிய பகுதிகளிலிருந்து காவிரிக்கு வடக்கே குடிபெயர்ந்துள்ளனர். இவர்கள் காவிரிக்குத் தெற்கில் வாழும் கொங்கு இன மக்களுடன் திருமண உறவை முறித்துக்கொண்டு நாட்டுக்கவுண்டர் என்ற தனி சாதியினராகப் பிரிந்துவிட்டனர்.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அனைவரின் பூர்வீகம் காவிரிக்குத் தெற்கே உள்ள ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களே ஆகும். கொங்கு மண்டலம் என்பது இம்மூன்று மாவட்டங்களை மட்டுமே குறிக்கும்.

எது கொங்குநாடு?

எது கொங்குநாடு?

கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல் கொங்கு மண்டல வடக்கெல்லையாகச் சொல்லும் தலைமலை என்பது ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்களத்திற்கு வடக்கே உள்ள தலைமலை.
கொங்கு மண்டல சதகம் வடக்கெல்லையாகச்  சொல்லும் பெரும்பாலை என்பது ஈரோடு மாவட்டத்திற்கு வடக்கே மேட்டூருக்குத் தெற்கே உள்ள பாலமலை.

அதாவது காவிரிக்கு தென்மேற்கிலும், தெற்கிலும் உள்ள ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மற்றும் கரூர் மாவட்ட மேற்குப் பகுதி ஆகியவை மட்டுமே கொங்கு மண்டலம் என்பது தெளிவு.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கொங்கு மண்டலத்தில் அடங்காது. காவிரிக்கு வடக்கே உள்ள இப்பகுதிகள் தகடூர் நாடு எனவும், தலைநீர் நாடு எனவும், மழநாடு எனவும் அழைக்கப்பட்டது. தகடூர் நாட்டை சங்க காலத்திலிருந்து 13 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டவர்கள் அதியமான் மரபினர். இப்பகுதி மழவர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் மழநாடு என்று பெயர். மழவர்கள் மழவராயர் பட்டத்துடன் இப்போது வன்னியரில் உட்பிரிவினராக உள்ளனர். மழநாட்டைச் சேர்ந்த இப்பகுதி மக்கள் காவிரிக்குத் தெற்கே வாழும் கொங்கு வெள்ளாள மக்களிடமிருந்து சாதியாலும், பழக்கவழக்கங்களாலும், பண்பாட்டாலும், குலத்தெய்வ வழிபாட்டு முறைகளாலும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

கோவைக் கிழார், புலவர் குழந்தை, வேங்கடசாமி நாட்டார் உள்ளிட்டவர்கள் சாதி உணர்வோடு கொங்குநாட்டின் பரப்பளவைப் பெரிதாகக் காட்ட வேண்டும் என்பதற்காக வலிந்து தகடூர் நாட்டைக் கொங்கு நாடு என்கின்றனர்.
காவிரிக்கு வடக்கே உள்ள சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் வன்னியர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல் கொங்கு நாட்டின் எல்லையாக பழனி தெற்கு, தலைமலை வடக்கு என்றுதான் சொல்கிறது. கொங்கு மண்டல சதகம் கொங்கு நாட்டின் வடக்கெல்லை எனச் சொல்லும் பெரும்பாலை என்பது ஈரோடு மாவட்டம் சத்தியமங்களத்தை அடுத்த பகுதியிலுள்ள மனிதர்கள் வாழாத வறண்ட காட்டுபகுதி அல்லது ஈரோடு மாவட்டத்திற்கு வடக்கே மேட்டூருக்குத் தெற்கே உள்ள பாலமலை ஆகும்.
தலைமலை என்பது ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலத்திற்கு வடக்கே உள்ள தலமலை ஆகும்.

கொங்கு வெள்ளாள சாதி மக்கள் பெரும்பான்மையாகப் பாரம்பரியமாக செறிந்து வாழும் மாவட்டங்கள் காவிரிக்குத் தெற்கே ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களே ஆகும். இம்மாவட்டங்களுக்கு வெளியே மற்ற மாவட்டங்களில் சிறுபான்மையினராக வாழும் கொங்கு வெள்ளாளர்கள் தங்கள் குலத்தெய்வக் கோயில்களைத் தேடி காவிரிக்குத் தெற்கே ஈரோடு, காங்கேயம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள குலத்தெய்வக் கோயில்களுக்கே செல்கின்றனர். இம்மூன்று மாவட்டங்களைத் தவிர்த்து வெளிமாவட்டங்களில் கொங்கு வெள்ளாளர்களுக்குக் குலத்தெய்வக் கோயில்கள் கிடையாது. சேலம், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட காவிரிக்கு வடக்கே உள்ள மாவட்டங்களில் மிகச் சிறுபான்மையினராக வாழும் கொங்கு வெள்ளாளர்கள் காவிரிக்குத் தெற்கு, தென்மேற்குப் பகுதிகளிலிருந்து அண்மைப் காலத்தில்தான் குடிபெயர்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல்களும், கொங்கு மண்டல சதகமும் சொல்லும் கொங்கு மண்டல எல்லைக்குள் ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களும், கரூர் மாவட்ட மேற்குப் பகுதியும் மட்டுமே அடங்கும்.

சனி, 2 பிப்ரவரி, 2019

தகடூர் நாடு, மழநாடு

*மழநாடு*
*தகடூர் நாடு*

திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதிமுதல் பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூரு) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு. கிமு முதல் கிபி வரை மழநாட்டின் வரலாறு நீள்கிறது. சங்ககாலப் புலவர் ஔவையாரால் பாடப்பட்ட அதியமான்கள், வல்வில் ஓரி, கொல்லி மழவன், அரியலூர் ஜமீன் சமஸ்தானத்தை 14ம் நூற்றாண்டில் ஆண்ட ஒப்பில்லா மழவராயர் போன்றோர் மழநாட்டைச் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தனர். தமிழ்த் தாத்தா உவே சாமிநாதையரின் முன்னோர்கள் அரியலூர் மழவராயர்களால் போற்றப்பட்டனர்.
(எ. கா.) மங்கல மென்பதோர் ஊருண்டு போலும் மழநாட்டுள் (தொல். சொல். 273, இளம்பூரணர்)

ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகள் தகடூரைத்(தருமபுரியைத்) தலைநாகராகக் கொண்ட தகடூர் நாடு எனவும், மழவர்கள் வாழும் நிலப்பரப்பு என்பதால் மழநாடு எனவும் சங்ககாலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

எக்காலத்திலும் இப்பகுதிகள் கொங்குநாடு என்ற வரம்புக்குள் இருக்கவில்லை. கொங்குநாடு என்பதே கொங்கு வெள்ளாளர்களால் உருவாக்கப்பட்ட தனிமாநிலக் கோரிக்கைக்கான கற்பனை. கொங்குநாடு என்ற பெயரில் எக்காலத்திலும் தனியாக அரசாட்சி செலுத்தியிருக்கவில்லை. அது கற்பனையே.

கோவைக் கிழார், புலவர் குழந்தை உள்ளிட்டவர்கள் சாதி உணர்வோடு வலிந்து தகடூர் நாட்டை கொங்கு நாடு என்கின்றனர்.
காவிரிக்கு வடக்கே உள்ள சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வன்னியர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல் கொங்கு நாட்டின் எல்லையாக பழனி தெற்கு, தலைமலை வடக்கு என்றுதான் சொல்கிறது. கொங்கு மண்டல சதகம் கொங்கு நாட்டின் வடக்கெல்லை எனச் சொல்லும் பெரும்பாலை என்பது ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் பகுதியிலுள்ள மனிதர்கள் வாழாத வறண்ட காட்டுபகுதியே ஆகும்.
தலைமலை என்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி அருகே உள்ள தலமலை கிராமம் ஆகும். கொங்கு இன மக்கள் பெரும்பான்மையாக பாரம்பரியமாக செறிந்து வாழும் மாவட்டங்கள் காவிரிக்குத் தெற்கே ஈரோடு, திருப்பூர், கோவை ஆகியவையே ஆகும்.

"தமிழ்பேசும் நிலம் தமிழர் நிலம். தமிழர் நிலத்தில் தமிழுக்கு முதன்மை தமிழர்க்குத் தலைமை" என்பது தமிழ்த்தேசியக் கொள்கை. இந்த தமிழ்த்தேசியக் கொள்கைக்கு எதிரானது ஆரியமும் திராவிடமும் மட்டுமல்ல. கொங்குத்தேசியப் பிரிவினை வாதமும் தமிழ்த்தேசியத்திற்கு ஆபத்தானது. எதிரானது.

கொங்கு வெள்ளாள சாதிவெறியர்களில் சிலர் தங்கள் சாதிக்கு தனிமாநிலம் அமைக்கவேண்டும் என்னும் சுயநலத்தால் "வரலாற்று ஆய்வாளர்" என்னும் முகமூடி அணிந்துகொண்டு "கொங்குநாட்டு வரலாறு" என்ற பெயரில் தவறான தகவல்களைத் தந்து வரலாற்றைத் திரித்து எழுதிவருகின்றனர். அது தமிழினத்தின் ஒற்றுமைக்கும் தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கும் ஆபத்தானது.

கொங்குநாடு என்பதே வரலாற்றில் எக்காலத்திலும் இருந்ததில்லை. அது கொங்கு வெள்ளாளர்களால் தங்கள் சாதிக்கு தனிமாநிலம் அமைக்கும் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட கற்பனை. அதற்குத் தனியாட்சி செய்த அரச மரபினர் கிடையாது. கொங்குநாடு என்ற பெயரில் தனி நாடோ அதற்குத் தலைநகரமோ மன்னர் பரம்பரையோ எக்காலத்திலும் இருக்கவில்லை.

சோழநாடு, சேரநாடு, பாண்டியநாடு, தொண்டைநாடு, தகடூர்நாடு, மழநாடு, பல்லவநாடு என்பவையே சங்ககாலத்திற்கு முன்பிருந்து அரச மரபினர் ஆண்ட நாடுகளாக இருந்தன.

கொங்குநாடு பிரிவினைவாதம் பேசும் சாதிவெறியர்களை முளைக்கும்போதே கிள்ளி எறிய வேண்டியது தமிழ்த்தேசியவாதிகளின் கடமை.

*தகடூர் நாடு*

தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கொங்கு நாட்டைச் சேர்ந்தவை அல்ல. இம்மாவட்டங்கள் தகடூர் நாட்டைச் சேர்ந்தவை.

தமிழக வரலாற்றுக்குத் தனித்த புகழைத் தேடித் தந்துள்ளது தகடூர். பண்டைய தகடூரே தற்போது தருமபுரி. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்புகூட இதன் பெயர் தகடூர்தான். சுமார் 2000 ஆண்டுகளாக வழங்கி வந்த பெயர். தகடூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது “அதியமான் நெடுமான் அஞ்சி”. இவ்வூரைத் தலைநகராக கொண்டு ஆண்டவர். அதியனைப் போற்றிப் புகழ்ந்து பாடிய ஔவையார் அதியனின் சபையை அலங்கரித்தார். தித்திக்கும் கரும்பை முதன்முதலில் பயிர் செய்யக் கண்டுபிடித்தவன் அதியமான்.

தகடூர் நாட்டில் இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுகளில் தகடூர் நாடு என்றே உள்ளது (தகடூர் நாட்டுத் தகடூர்), சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டு கூட “கொங்கு” என்ற பெயருடன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்றுள்ள சில மக்கள் அறியாமையால் இதைக் கொங்கு நாடு/கொங்கு மண்டலம் என்றழைக்கின்றனர். தகடூர் நாட்டில் வாழும் சில பாமர மக்களும் தகடூர் என்ற வராலாற்று சிறப்பு மிக்க பெயரை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகின்றனர்.

தகடூர் என்றாலே இந்த நாட்டின் பூர்வகுடி மக்களான “மழவர்கள்” வாழ்ந்த பூமி. கொங்கு நாட்டிற்கும் தகடூர் நாட்டிற்கும் நிறைய கலாச்சார வேறுபாடுகள் உண்டு.

தமிழகத்திலேயே எங்கும் காணப்படாத நடுகல் வழிபாடு என்பது தகடூர் நாட்டில் அதிகம். இவ்வாறு வழிபாடு, மொழி, மக்களின் கலாச்சாரம், இனம் அனைத்திலும் கொங்கு நாட்டிலிருந்து வேறுபட்டவர்கள் இந்த தகடூர் நாட்டு மக்கள்.

இப்படி தனி நாடாக இருந்த  தகடூர் நாட்டை (சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி) அறியாமையால் கொங்கு நாடாகக் கூறுகின்றனர். கிடைத்த பல தகவல்களை வைத்துப்பார்க்கும் போது இது ஒரு தனி நாடாக இருந்துள்ளது.

தகடூர் நாடு. சங்க காலம் முதல் 13 ஆம் நூற்றாண்டுவரை இந்த நாட்டை அதியமான் மரபினர் ஆண்டுவந்துள்ளனர். இப்பகுதி கொங்கு நாடல்ல. இது தகடூர் நாடு. அதியமான் மரபினர் மழவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். மழவர்கள் மழவராயர் பட்டத்துடன் வன்னியரில் உட்பிரிவினராக இப்போது உள்ளனர். இந்த மன்னர்களில் ஐந்து மன்னர்களின் பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாழும் மக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் செறிந்து வாழும் கொங்கு இன மக்களிடமிருந்து பேச்சு வழக்கு, பழக்கவழக்கம், பண்பாடு, குலத்தெய்வ வழிபாட்டுமுறை ஆகியவற்றால் முற்றிலும் வேறுபட்டவர்கள். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டப் பகுதி ஆகியவை தகடூர் நாட்டில் அடங்குகிறது. இப்பகுதியில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் எதிலும் கொங்கு என்ற சொல்லே இடம்பெறவில்லை. தகடூர் நாடு என்றே கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.

தகடூர் நாடு கொங்கு நாட்டோடு சேர்ந்ததல்ல. இது தனிநாடாக இருந்த ஒன்று.

பல ஆய்வுகளிலிருந்து பார்க்கும்போது தகடூர் நாடு என்பது சங்ககாலம் முதல் தனி நாடே அது எந்த நாட்டுடனும் (கொங்கு நாட்டுடன்) சேர்ந்தது அல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது.