tag:blogger.com,1999:blog-75268293615048716482024-03-05T15:57:17.188+05:30தமிழ் மகேந்திரன்தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-7526829361504871648.post-76211990305570914152023-08-20T19:18:00.004+05:302023-08-27T13:09:19.275+05:30MBBS படிப்புக்கான பாடங்கள்<p dir="ltr" id="docs-internal-guid-c87be589-7fff-44f6-3ac5-ace6216407ce">எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை அறுவைச் சிகிச்சையியல்) படிப்புக்கான பாடங்கள்</p>(4ஆண்டுகள் படிப்பு + 1 ஆண்டு பயிற்சி)<br><p dir="ltr"> </p><p dir="ltr">முதலாமாண்டு</p><p dir="ltr">1.உடற்கூறியல்,</p><p dir="ltr">2.உடலியங்கியல்,</p><p dir="ltr">3.உயிர்வேதியியல்</p><br><p dir="ltr">இரண்டாமாண்டு</p><p dir="ltr">1.நோயியல்,</p><p dir="ltr">2.மருந்தியல்,</p><p dir="ltr">3.நுண்ணுயிரியல்</p><br><p dir="ltr">மூன்றாமாண்டு</p><p dir="ltr">1.தடயவியல் மருத்துவம் & நச்சுயியல்</p><p dir="ltr">2.கண் மருத்துவம்,</p><p dir="ltr">3.காது மூக்கு தொண்டை மருத்துவம்,</p><p dir="ltr">4.சமுதாய நோய்த்தடுப்பு மருத்துவம்</p><br><p dir="ltr">நான்காமாண்டு</p><p dir="ltr"> 1.பொது மருத்துவம்,</p><p dir="ltr">2.பொது அறுவை மருத்துவம்,</p><p dir="ltr">3.பெண் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவம்,</p><p dir="ltr">4.விருப்பப் பாடம்</p><p dir="ltr">(குழந்தை மருத்துவம்,</p><p dir="ltr"> எலும்பியல்,</p><p dir="ltr"> மயக்கவியல்,</p><p dir="ltr"> கதிரியக்கவியல்,</p><p dir="ltr"> தோல் மருத்துவம், மனநல மருத்துவம் போன்ற தலைப்புகளில் ஏதேனும் ஒன்று)</p><br><p dir="ltr">ஐந்தாமாண்டு</p><p dir="ltr"> (மருத்துவராகப் பயிற்சி செய்தல்)</p><p dir="ltr">=============================</p><br><p dir="ltr">Subjects for MBBS (Bachelor of Medicine and Bachelor of surgery) course</p><br><p dir="ltr"> First year</p><p dir="ltr"> 1. Anatomy,</p><p dir="ltr"> 2.Physiology,</p><p dir="ltr"> 3. Biochemistry</p><br><p dir="ltr"> Second year</p><p dir="ltr"> 1. Pathology,</p><p dir="ltr"> 2. Pharmacology,</p><p dir="ltr"> 3. Microbiology</p><br><p dir="ltr"> Third year</p><p dir="ltr"> 1.Forensic Medicine & Toxicology</p><p dir="ltr"> 2. Ophthalmology,</p><p dir="ltr"> 3. Otorhinolaryngology,</p><p dir="ltr"> 4. Community preventive medicine</p><br><p dir="ltr"> Fourth years</p><p dir="ltr"> 1. General Medicine,</p><p dir="ltr"> 2.General Surgery,</p><p dir="ltr"> 3. Gynecology and Obstetrics,</p><p dir="ltr"> 4. Optional subject</p><p dir="ltr"> (Any one of the topics like</p><p dir="ltr">pediatrics,</p><p dir="ltr">orthopedics,</p><p dir="ltr">anaesthesiology,</p><p dir="ltr">radiology,</p><p dir="ltr">dermatology,</p><p dir="ltr">Psychiatry)</p><br><p dir="ltr"> Fifth years</p><p dir="ltr"> (practicing as a doctor)</p><p dir="ltr"> =============================</p><br><p dir="ltr"> Subject Topics Tamilization:</p><p dir="ltr"> Su Mahendran PhD (Linguist)</p><p dir="ltr">பாடத் தலைப்புகள் தமிழாக்கம்:</p><p dir="ltr">சு.மகேந்திரன் PhD (Linguist)</p><p dir="ltr"><br></p><p dir="ltr">MBBS படிப்புக்கான பாடநூல்களைப் பதிவிறக்க</p><p dir="ltr"><a href="https://spdfedu.blogspot.com/p/medical.html?m=1#YEARWISE%2520MBBS%2520STUDY%2520MATERIALS">பதிவிறக்க இணைப்பு 1 https://spdfedu.blogspot.com/p/medical.html?m=1#YEARWISE%20MBBS%20STUDY%20MATERIALS</a><br></p><p dir="ltr"><br></p><p dir="ltr"><a href="https://worldofmedicalsaviours.com/mbbs-pdf-books/">பதிவிறக்க இணைப்பு 2 https://worldofmedicalsaviours.com/mbbs-pdf-books/</a><br></p>தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-66384879208131971782023-08-17T10:51:00.003+05:302023-08-27T13:10:44.757+05:30MBBS படிப்புக்கான மருத்துவப் பாடநூல்களைப் பதிவிறக்க<a href="https://spdfedu.blogspot.com/p/medical.html?m=1#YEARWISE%2520MBBS%2520STUDY%2520MATERIALS">பதிவிறக்க இணைப்பு</a> 1 https://spdfedu.blogspot.com/p/medical.html?m=1#YEARWISE%20MBBS%20STUDY%20MATERIALS<div><br></div><div><a href="https://worldofmedicalsaviours.com/mbbs-pdf-books/">பதிவிறக்க இணைப்பு2 https://worldofmedicalsaviours.com/mbbs-pdf-books/</a><br></div>தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-37653726269038158262020-09-06T14:13:00.001+05:302020-09-06T14:13:14.165+05:30கொங்கு நாடும் மக்களும்...<p>எது கொங்கு மண்டலம்? கொங்கு மண்டலத்தின் பூர்வகுடி மக்கள் யார்? திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகே உள்ள வைகாவூரைத் தெற்கெல்லையாகவும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமலையை வடக்கெல்லையாகவும் கொண்ட நிலப்பரப்பே கொங்கு மண்டலம்.. அதாவது ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்களும், திண்டுக்கல் மாவட்ட வடக்குப்பகுதி, கரூர் மாவட்ட மேற்குப்பகுதி ஆகியவை மட்டுமே கொங்கு மண்டலம்.. காவிரிக்கு வடக்கேயும் கிழக்கேயும் உள்ள நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கொங்குநாடு அல்ல. இந்த மாவட்டங்கள் மழநாடு என்றும் தகடூர்நாடு என்றும், தலைநீர்நாடு என்றும் சங்ககாலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளன.</p><p>காவிரிக்கு வடக்கே நாமக்கல், சேலம் பகுதிகளில் உள்ள கொங்கு வெள்ளாளர்கள் காவிரிக்குத் தெற்கிலிருந்து குடியேறியவர்கள்.. காவிரிக்குத் தெற்கில் உள்ள கொங்கு வெள்ளாளர்களும் 800 ஆண்டுகளுக்கு முன்பு பிற்கால சோழராட்சிக்காலத்தில் சோழ மன்னர்களால் சோழ நாட்டிலிருந்தும் தொண்டை நாட்டிலிருந்தும் விவசாயம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள்...</p><p>800 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு மண்டலத்தில் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது... 400 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்திலும், 150 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டத்திலும், 60 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது... சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் இருபக்கமும் உள்ள நிலங்களை கடந்த 50 ஆண்டுகளுக்கு உள்ளாக வன்னியர்களிடமிருந்தும் பிற சாதியினரிடமிருந்தும் கொங்கு வெள்ளாளர்கள் வாங்கி குடியேறியுள்ளனர்... சேலம் தரும்புரி மாவட்டங்களில் கொங்கு வெள்ளாளர்களுக்கு குலதெய்வக் கோயில்கள் கிடையாது .. அனைவரும் குலதெய்வக் கோயில்களைத்தேடி தெற்கேதான் செல்கின்றனர்..</p><p>சேலம், தருமபுரி மாவட்டங்களில் கிராமங்களில் வன்னியர்கள் 80% உள்ளனர்... நகரங்களில் வன்னியர், முதலியார், கன்னட தேவாங்க செட்டியார் போன்றோர் உள்ளனர்... கொங்கு வெள்ளாளர்கள் மிகச் சிறுபான்மை மக்களாக ஆங்காங்கு, 10, 20 குடும்பங்களாக மட்டுமே உள்ளனர்...</p><p>ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்கள் கரூர் மாவட்ட மேற்கு ஆகிய பகுதிகளில் மட்டுமே கொங்கு வெள்ளாளர் பெரும்பான்மையாக உள்ளனர்... நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு வட்டத்தில் மட்டுமே கொங்குவெள்ளாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்... நாமக்கல் மாவட்டத்தின் கிழக்கு, வடக்குப் பகுதிகளில் வன்னியர்களே பெரும்பான்மை....</p><p>1975 க்கு முன்பு வரை வெள்ளாளர் என்றும், வெள்ளாளக் கவுண்டர் என்றும்தான் அழைக்கப்பட்டார்கள்.. அதன்பிறகு கொங்கு வேளாளர் என்று அரசு கெசட்டில் மாற்றிக்கொண்டார்கள்....</p><p>ஒட்டுமொத்த கொங்கு வெள்ளாளர்களும் பிற்கால சோழராட்சிக் காலத்தில் சோழ நாட்டிலிருந்தும், தொண்டை நாட்டிலிருந்தும் கொங்கு மண்டலத்தின் காங்கேயம் , பெருந்துறை பகுதிகளுக்கு குடியேறி அங்கிருந்து பிறகு பரவியுள்ளனர்... கொங்கு மண்டலத்தின் பூர்வகுடி மக்கள் கொங்கு வெள்ளாளர் அல்ல..</p><p>ஆதாரம்: சோழன் பூர்வ பட்டயம்....</p><p>காவிரிக்குக் தெற்கே ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்களின் பூர்வகுடி மக்கள் வேட்டுவர்கள்.. காவிரிக்கு வடக்கே உள்ள நாமக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களின் பூர்வகுடி மக்கள் வன்னியர்கள்... வன்னியர்களுக்கு இப்பகுதிகளில் எல்லா இடங்களிலும் குலதெய்வக் கோயில்கள் உள்ளன....</p><p>கொங்கு 24 நாடுகள் என்ற கதையெல்லாம் கொங்கு வெள்ளாளர் குடியேற்றத்திற்குப் பிறகு தோன்றிய வரலாற்றுக் கதைகள்....</p><p>நாடு என்றால் பரந்த நிலப்பரப்பு, அதனை ஆளும் மன்னர், படைவீரர் ஆகிய கட்டமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்...</p><p>கொங்கு வெள்ளாளர்கள் சொல்லும் 24 நாடுகள் என்பவை நாடுகள் அல்ல.. அவை கொங்கு வெள்ளாளர்கள் குடியேறிய கிராமங்கள். கொங்கு வெள்ளாளர் குடியேறி வாழ்ந்த ஒவ்வொரு கிராமத்தையும் நாடு என்றும் கிராமத் தலைவரை( ஊர்த் தலைவர்) நாட்டார் என்றும் சொல்லியுள்ளனர்...</p><ul><li>சோழன் பூர்வ பட்டயம்*</li></ul><p>கொங்கு நாட்டில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வெள்ளாளர்களை அடிமைகளாக அழைத்து வந்தவர்கள் வேட்டுவ மன்னர்கள் . சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வந்த வெள்ளாளர்களை படைதலை வெள்ளாளர் ,செந்தலை வெள்ளாளர்,பால வெள்ளாளர்,தென்திசை வெள்ளாளர் என்று அழைக்கபடுகிறது .பதினெண் குடிமக்களில் உழவு தொழில் செய்பவர்கள் வெள்ளாளர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . கொங்கு நாட்டில் 36 ஊர்களில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டு வெள்ளாளர்களை அழைத்து வந்தவர்கள் சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊருக்கும் தாசிகளை வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊர்களில் 32 ஊர்களுக்கு கோட்டை ,நகர் ,ஊர் அதிகாரத்துக்கு வேட்டுவர்களை வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . வேட்டுவ மண்ணாடிகளுக்கு ,வெள்ளாளர்கள் வரி கொடுத்ததை பற்றி சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . (மண்ணாடி-நில தலைவன் ).</p><ul><li>கூட்டப் பெயர்கள்*</li></ul><p>வேட்டுவர் இனத்துக்கும் , வெள்ளாளர் இனத்துக்கும்(கொங்கு வெள்ளாளர் ) கூட்ட பெயர்கள் ஒன்றாக இருப்தை பயன்படுத்தி வெள்ளாள சாதினர் ,வேட்டுவ இன வரலாறுகளை திருடி கொள்கிறார்கள் .</p><p>உதாரணம் : '...இப்படிக்கு பூந்துறையில் வெள்ளாளன் மேலைசாகாடைகளில் அப்பியன் எழுத்து..இப்படிக்கு எழுமாத்தூரில் வெள்ளாளன் பனகாடர்களில் பெரியன்ன காகுதார் எழுத்து..இப்படிக்கு குலவிளக்கில் பண்டி வேட்டுவரில் புலிகுத்தி தேவன் எழுத்து...இப்படிக்கு அறைச்சலூரில் கரைய வேட்டுவரில் குன்றிடர் எழுத்து..இப்படிக்கு குழாநிலையில் வெள்ளை வேட்டுவரில் நல்லண்ணன் எழுத்து .., (1967-68:231,கிபி 16,வீர நஞ்சராயர் ,பெருந்துறை கல்வெட்டு ) '..சோழியன் கரை ஒன்றுக்கும் அந்துவ வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் மேற்படி நச்சுளி வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் குறுங்காடை வேட்டுவரில் சின்னன் கரை ஒன்றுக்கும் வெள்ளாளன் தனிஞ்சிகளில் தயாண்டர் கரை ஒன்றுக்கும் ..' (ARE No-226 of 1968, ஈரோடு கல்வெட்டு ,கிபி 1538,திருமலை நாயக்கர் ) இக்கல்வெட்டு அந்துவ வேட்டுவர் -அந்துவ வேட்டுவ கூட்டம் நச்சுளி வேட்டுவர் - நச்சுளி வேட்டுவ கூட்டம் குறுங் காடை வேட்டுவர் -குறுங் காடை வேட்டுவ கூட்டம் (குறும்பூழ் -காடை) தனிஞ்சி வெள்ளாளர் - தனிஞ்சி வெள்ளாள கூட்டம் போன்ற கூட்ட பெயர்களை கூறுகிறது . '...வெள்ளாளன் அந்துவரில் செய கரிவான்டரும் ..' (காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1537,விஜய நகர் ஆட்சி ) இன்று காடை வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .காடை வேட்டுவர்களின் குல தெய்வம் கொங்கலம்மன் (பெரிய புலியூர் ,ஈரோடு ) இன்று காடை குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று காடை குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு காடை வேட்டுவ குலமும் ,காடை வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இன்று அந்துவ வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .அந்துவ வேட்டுவர்களின் குல தெய்வம் பத்ரகாளியம்மன் (அந்தியூர் ,ஈரோடு ) இன்று அந்துவ குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று அந்துவ குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு அந்துவ வேட்டுவ குலமும் ,அந்துவ வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இது தான் உண்மை . இது போலத்தான் மற்ற குலங்கள். வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது கூட்டம் அல்லது குலம் கிடையாது . கி பி 10ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது வெள்ளாளர் களை பல கூட்டங்களாக பிரிக்கப்பட்டு சாட்சி கையெழுத்து போட்டவர்களில் ஒருவர் வேட்டுவர் என்று கொங்கு காணியான பட்டயம் கூறுகிறது . இன்று வேட்டுவ குலத்துக்கும் ,வெள்ளாள குலத்துக்கும் 20 கூட்ட பெயர்கள் ஒன்றாக இருக்கிறது .இதற்கு காரணம் வெள்ளாளர்கள் ,பெருமைமிக்க வேட்டுவ கூட்ட பெயர்களை பார்த்து அதே கூட்ட பெயர்களை வைத்து கொண்டார்கள்.</p>தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-19981354599069297092020-01-13T17:53:00.001+05:302020-01-13T17:53:00.222+05:30கணினித்தமிழ் - தமிழில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி பக்கங்கள்.<div>கணினித்தமிழ் - தமிழில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி பக்கங்கள்.</div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div>10. மிக முக்கியமான காணொளி பக்கங்கள்.</div><div>1. http://keepvid.com/ you tupe downlode saftwer.</div><div><br></div><div>11. எவ்வாறு குறுஞ்செயலி உருவாக்குவது?</div><div>https://www.youtube.com/watch?v=qb2n5Yr_zys</div><div>3. https://www.youtube.com/watch?v=P8kppRBmBb8) - சொக்கனின் குறுஞ்செயலி காணொலி.</div><div><br></div><div>12. எப்படித் தமிழில் தட்டச்சு செய்வது?</div><div>https://www.youtube.com/watch?v=UgiQXOk_M2U</div><div> 2. https://www.youtube.com/watch?v=DFFPwucs3Bc (NHM Writter)</div><div> 3. https://speechnotes.co/</div><div>13. தமிழில் மின் நூல் உருவாக்குவது</div><div>https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs</div><div>14. எவ்வாறு மின்னூலை கூகுள் பிளேவில் இணைபது</div><div>https://www.youtube.com/watch?v=DyYvqsJcrSs</div><div>15. இணையம் என்றால் என்ன? அதன் பயன்பாடு</div><div>https://www.youtube.com/watch?v=FIIEZscplec</div><div><br></div><div>16. தமிழில் ஃபுரகிராம் உருவாக்குவது</div><div>https://www.youtube.com/watch?v=zCNPwhRw2aY</div><div>17. தமிழில் OCR முறையில் உருவாக்குவது</div><div>www.youtube.com/watch?v=Kx3XJKYVKWs</div><div>18. தமிழில் வலைப்பதிவை உருவாக்குவது</div><div>1. https://www.youtube.com/watch?v=GutxOJLVy_c</div><div>2. https://www.youtube.com/watch?v=QIsizu-Y3TY</div><div>19. தமிழில் இணையதளம் உருவாக்குவது எப்படி</div><div>1. https://www.youtube.com/watch?v=L-Fa-dxsRp0</div><div>2. https://www.youtube.com/watch?v=YtXOWFMd3Uw (தமிழில்)</div><div><br></div><div>20. தமிழ் கற்றல் கற்பித்தல் இணையதளம் & வலைப்பதிவு</div><div>1. http://www.tamilvu.org</div><div>2. http://www.southasia.sas.upenn.edu/tamil/index.html</div><div>3. www.tamilacademy.com/</div><div>4. http://www.tamilunltd.com/</div><div>5. http://www.thamizhagam.net/about/aboutus.html</div><div>6. http://www.tamilmitra.com/showpage?pageid=ta.home</div><div>7. http://tamilcube.com/</div><div>8. http://ta.vikaspedia.in/education</div><div>9. http://edu.tamilclone.com/</div><div>10. https://chalkpiece.wordpress.com/</div><div>11. http://thirutamil.blogspot.in/2011/10/2.html</div><div>21. தமிழ் இணைய நூலகங்கள்</div><div>1. www.tamil.net</div><div>2. www.tamilvu.org</div><div>3. www.noolagam.com</div><div>4. www.chennailibrary.com</div><div>5. www.ulakathamizh.org</div><div>6. www.dli.iit.ac.in</div><div>7. www.tamilheritage.org</div><div>8. http://ilakkiyam.com/</div><div>22. தமிழ் எழுத்துரு மாற்றிகள்</div><div>1. www.suratha.com/reader.htm</div><div>2. www.higopi.com/adhiyaman</div><div>3. http://kandupidi.com/converter/</div><div>4. www.sillampum.com/tamil-unicode-converter.html</div><div>5. http://www.islamkalvi.com/web/bamini2unicode_converter.htm</div><div>6. http://software.nhm.in/products/converter</div><div>7. http://www.tamillexicon.com/uc/bamini-unicode</div><div>8. www.ucsc.cmb.ac.lk/ltrl/services/feconverter/?maps=t_b-u.xml</div><div>9. tamil24news.com/links/font/bamini2unicode.html</div><div><br></div><div> 23. தமிழ் கணினிச் சார்ந்த இணையப்பக்கம் & வலைப்பதிவு.</div><div> 1. http://www.techtamil.com/</div><div> 2. http://www.zapmeta.co.in/</div><div> 3. http://bestkulam.blogspot.in/</div><div> 4. http://www.tamilkurinji.in/Technology.php</div><div> 5. www.thozhilnutpam.com</div><div> 6. www.suduthanni.bolgspot.in</div><div> 7. www.tvs50.blogspot.in</div><div> 8. www.pkp.blogspot.</div><div> 9. www.kaniyam.com/team/</div><div> 10. www.tamilarwiki.blogspot.in</div><div> 11. http://www.gnu.org/</div><div> 12. http://ilawasamenporul.blogspot.in</div><div> 13. http://ezilnila.com/archives/3031</div><div> 24. இணையப் பயன்பாடு புள்ளிவிபரக் கணக்கு</div><div> http://www.internetworldstats.com/facebook.htm</div><div><br></div><div> 25. வலைப்பதிவு மொத்த லிஸ்ட்.</div><div> http://www.valaitamil.com/tamilsites/</div><div> 26. கணினித் தமிழ் ஆய்விற்குப் பயன்படும் இணையதளங்கள்.</div><div>1..www.cict.org</div><div><br></div><div>27. ஆண்ட்ராய்டு உருவாக்கம்.</div><div>1. https://www.b4x.com/</div><div>2. https://apps.evozi.com/apk-downloader/</div><div>28. சொற்களைக் கண்டறியும் தளம்</div><div>1. http://www.tamilpulavar.org/</div><div>2. http://www.phdpostdoc.com/</div><div>29. apps உருவாக்கம் வலைப்பக்கம்.</div><div>1. https://ibuildapp.com/</div><div>2. https://www.appypie.com/</div><div>3. https://www.youtube.com/watch?v=wYlYGwUYRao</div><div>4. https://www.youtube.com/watch?v=9Uv5cf1L-cY</div><div><br></div><div>30. ஆங்கில மொழிபெயர்ப்பு இணையதளம்.</div><div>http://www.easyhindityping.com/tamil-to-english-translation</div>தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-49930273494644151522019-11-19T06:36:00.001+05:302019-11-19T06:36:42.960+05:30வெள்ளாளர்கள் கொங்கு நிலத்திற்கு வந்தேறிய காலம் :<div>வெள்ளாளர்கள் கொங்கு நிலத்திற்கு வந்தேறிய காலம் :</div><div><br></div><div>முல்லை நிலமாதலால், காடும், காடும் சார்ந்த நிலங்களாக கொங்கு காட்சியளித்தது. இங்கு வாழ்ந்த இனக் குழுக்கள், வேடர், ஆயர் மற்றும் எயினர் ஆகும். வேடர்கள் வேட்டைத் தொழிலையும் ஆயர்கள் கால் நடைவளர்த்தல், தினை, வரகு, அவரை, துவரை முதலிய பயிர்களை பயிரிடல் (விண்ணோக்கிய வேளாண்முறை) என்ற முறையில் பொருளாதார வாழ்க்கை இருந்தது. இவர்களுக்குள் கூட்டப்பிரிவுகள் இருந்தன. தாம் வாழும் முறை மற்றும் இடங்களுக்கேற்ப கூட்டப்பெயர்கள் நிலைத்து இருந்தன. திருமணத்திற்கான ஒழுக்க முறை கூட்டங்களிடையே வரையறை செய்யப்பட்டிருந்தது. </div><div><br></div><div> சோழ, பாண்டிய அரசுகளின் பொருளாதார தேவை கூடியது. நெல் அதிக உபரியை வழங்கும் தானியம் என்பதால், நெல்விளையும் நிலங்களிலும் முல்லை மற்றும் குறிஞ்சி நிலங்களிலும் பயிரிட முயற்சி எடுத்தனர். எனவே, பிரமதேயம் மற்றும் கோயில்கட்டி அதற்கான நிலங்களை உருவாக்க முனைந்தது. கொங்கு நாடு அதற்கு வசதியாக இருந்தது. இந்நிலத்தில் அமராவதி, நொய்யல், பவானி போன்ற ஆறுகளும், சண்முகநதி, பாலாறு, பெருந்தலாறு போன்ற சிறிய நதிகளும் ஓடிக்கொண்டிருந்தது.</div><div><br></div><div>பல்வேறு கூட்டப்பெயர்களுடன் வேட்டுவர்களும், ஆயர்களும் இனக்குழுவாக வாழ்ந்து வந்தனர். வேட்டுவர்கள் வேட்டைத் தொழிலும், ஆயர்கள் கால்நடை வளர்ப்பும், தானியம் பயிரிடல் என்ற அளவில் பொருளாதார வாழ்வு இருந்தது. “ஆ கெழு கொங்கர்’’ “கொங்கர் ஆ பரந்தன்ன’’ என சங்க இலக்கியம் இவர்களைப் பதிவு செய்துள்ளது. </div><div><br></div><div> கொங்கு தவிர்த்த இதரப்பகுதிகளில் வேளாண் தொழில் செய்வோரை, பாண்டிய வேளாளர், சோழிய வேளாளர் என அழைக்கப்பட்டு வந்தனர். இங்கு வேளாளர் என யாரும் இல்லை. எனவே, தஞ்சை தொண்டைமண்டலம் (புதுக்கோட்டை) ஆகிய பகுதிகளில் இருந்து வேளாளர்கள் கொங்கில் குடியேறினர் (நிக்கல்சன் 1887:86) இதையே, ”சோழன் பூர்வபட்டயம்’’, “அண்ணமார்கதை’’, “கொங்கு வேளாளர் புராணம்’’, ஆகியன உறுதிப்படுத்துகிறது. </div><div><br></div><div>குடியேறிய வேளாளர்கள் அங்குள்ள வேடர்களிடம் ரத்தக்கலப்பை கொண்டு , அவர்களின் கூட்டு பெயர்களை இவர்களும் வைத்துகொண்டனர் .</div><div><br></div><div> இதன் பிறகே , அதாவது சுமார் 10-ஆம் நூற்றாண்டுக்கு பிறகே கல்வெட்டுகளில் வேளாளர் என்று பொறிக்கப்பட்டுள்ளது என அறிகிறோம். </div><div><br></div><div>வேளாளர் என்ற சொல்லுக்கு வெள்ளத்தை ஆள்பவர் என்ற பொருள் உண்டு. </div><div><br></div><div>சோழ நாட்டில் உள்ள விவசாய குடிகளான வெள்ளாளர்களில் இருந்து கொங்கு நிலத்திற்கு குடிபெயர்ந்து அங்குள்ள வேடவர் ஆயர்களுடன் ரத்தக்கலப்பை ஏற்படுத்திக் கொண்ட இனம் கொங்கு வெள்ளாளர் இனம் ..</div><div><br></div><div>அதற்க்கு முன்பு சோழ நாட்டில் விவசாய குடியாக சோழிய வெள்ளாளர் மற்றும் பள்ளர்களே இருந்தனர் எனலாம் ..</div><div><br></div><div>இவர்களில் இருந்து சென்ற இனம் கொங்கு வெள்ளாளர் ..</div><div><br></div><div>கொங்கு பகுதிக்கு சென்றதால், இவர்கள் "கொங்கு வெள்ளாளர் " என்று அழைக்க பட்டனர் ..</div><div><br></div><div>அதாவது பிற்கால சோழர் ஆட்சி தொடங்கி சாளுக்கிய சோழர்கள் ஆட்சி செய்யும் காலம் உருவாகும் போதுதான், "கொங்கு வெள்ளாளர் " என்ற தனி இனமும் கொங்கு நிலத்தில் உதையமாகிறது ..</div><div><br></div><div>சோழன் பூர்வ பட்டயம் குறிப்பிடுவது :</div><div><br></div><div>சோழன் நாட்டில் இருந்து சேரநாட்டிற்கு (கொங்கு பகுதி ) வந்தேறிய வெள்ளாளர்கள் , அப்பகுதியின் பெயரை அடையாளமாக கொண்டு கொங்குநாட்டு வெள்ளாளர் (அ ) கொங்கு வெள்ளாளர் என்று அழைக்கலாயினர் ..</div><div><br></div><div>கொங்கு நாட்டில் உள்ள வெள்ளாளர்கள் பெரும்பான்மையினோர் சோழநாட்டின் செந்தழையில் இருந்து வந்தமையால் , இன்றும் அவர்கள் செந்தாழை வெள்ளாளர் என்று அழைக்கபடுவதும் உண்டு .</div><div><br></div><div>இவ்விதமாக கொங்கு வெள்ளாளர் குடியேற்றம் பற்றி சோழன் பூர்வ பட்டயம் குறிப்பிடுகிறது </div><div><br></div><div>கி.பி.பத்து-பதினாறாம் நூற்றாண்டுகளில், வேளாளர்கள் மிகச் சிறந்த முறையில் வேளாண்மையை முன்னேற்றி, உணவுப் பொருள்களை</div><div>உற்பத்தி செய்து,பொருளாதாரத் துறையில் பெரிதும் முன்னேறினர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவரின் பொருளாதார நிலை</div><div>சிறிது தாழ்ந்தது.</div><div><br></div><div>சில இடங்களில் வேட்டுவர்க்கும், வேளாளர்க்கும் போட்டியும் பூசல்களும் ஏற்பட்டன. கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில் இருவர்க்குமிடையே சமரசமும், சமாதானமும் ஏற்பட்டன. </div><div><br></div><div>வேட்டுவரின் நில உரிமைகளும்,கோயில் வழிபாட்டு, முப்பாட்டு உரிமைகளும் வேளாளர் கைக்கு மாறின.</div><div><br></div><div>வேட்டுவர்-வேளாளரிடையே நிகழ்ந்த காணியாட்சி உரிமை மாற்றம், வேளாளரின் பொருளாதார உயர்ச்சி ஆகியவை பற்றிய செய்திகள் சோழன் பூர்வபட்டயம் எனும் சாசனத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. வேட்டுவர்களைப் போன்று வேளாளர்களும் தமக்குள் கூட்டப் பெயர்களைப்(குலம்) பூண்டனர்.</div>தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-21048372232730210372019-11-18T00:10:00.001+05:302021-06-16T23:25:11.490+05:30கொங்கு வெள்ளாளர் குடியேற்ற வரலாறு<div>கொங்கு வெள்ளாளர் குடியேற்ற வரலாறு...</div><div><br></div><div>வன்னியர்களான சோழமன்னர்களால் சோழநாட்டிலிருந்தும், தொண்டை நாட்டிலிருந்தும் 900 ஆண்டுகளுக்கு முன்பு கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய கொங்குமண்டல பகுதிக்கு குடியேற்றப்பட்டவர்கள்தான் தற்போதைய கொங்கு வெள்ளாளர்கள்.</div><div>இவர்களின் பூர்வீகம் கொங்குமண்டலம் அல்ல.</div><div>வன்னியர்களான சோழர் மன்னர்களால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் இந்த கொங்கு வெள்ளாளர்கள்.</div><div><br></div><div>நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார கொங்கு வெள்ளாளர்கள் பிற்காலத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு காவிரிக்குத் தெற்கிலிருந்து குடியேறியவர்கள்.</div><div>இவர்கள் காவிரிக்கு வடக்கே குடியேறிய பிறகு காவிரிக்குத் தெற்கிலுள்ள கொங்கு வெள்ளாளர்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்ளாமல் நாட்டுக்கவுண்டர் என்ற பெயரில் தனி சாதியினராகப் பிரிந்துவிட்டனர். நாமக்கல் மாவட்ட கொங்கு வெள்ளாளர்கள் அனைவருமே காவிரிக்குத் தெற்கே இருந்து காவிரிக்கு வடக்கே பிற்காலத்தில் குடியேறியவர்கள்தான்.</div><div><br></div><div>பிறகு அங்கிருந்து குறைந்த எண்ணிக்கையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் பகுதிக்கு குடியேறியுள்ளனர்.</div><div>இங்கிருந்து பிறகு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்புதான் தருமபுரி பகுதிக்கு பஞ்சம் பிழைக்க மிகக்குறைந்த எண்ணிக்கையில் சென்றுள்ளனர்.</div><div><br></div><div>400 ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது.</div><div>100 ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது.</div><div>40 ஆண்டுகளுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது.</div><div><br></div><div>காவிரிக்கு வடக்கே நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கொங்குநாடு அல்ல. இப்பகுதி மழநாடு. வன்னியர் மண்டலம்.</div><div>இங்குள்ள கொங்குவெள்ளாளர்கள் வந்தேறிகள்.</div><div><br></div><div>ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்கள், கரூர் மாவட்ட மேற்குப்பகுதி ஆகிய பகுதிகள் மட்டுமே கொங்குநாடு. இந்த கொங்கு பகுதியின் பூர்வ குடிமக்கள் வேட்டுவர்கள்..</div><div><br></div><div>கொங்கு வெள்ளாளர்கள் கொங்கு மண்டலத்தில் குடியேறிகள்......</div><div><br></div><div>ஆதாரம்: சோழன் பூர்வ பட்டயம்....</div><div><br></div><div>கொங்கு நாட்டில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வெள்ளாளர்களை அடிமைகளாக அழைத்து வந்தவர்கள் வேட்டுவ மன்னர்கள் .</div><div><br></div><div>சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வந்த வெள்ளாளர்களை படைதலை வெள்ளாளர் ,செந்தலை வெள்ளாளர்,பால வெள்ளாளர்,தென்திசை வெள்ளாளர் என்று அழைக்கபடுகிறது .பதினெண் குடிமக்களில் உழவு தொழில் செய்பவர்கள் வெள்ளாளர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .</div><div><br></div><div>கொங்கு நாட்டில் 36 ஊர்களில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டு வெள்ளாளர்களை அழைத்து வந்தவர்கள் சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .</div><div><br></div><div>சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊருக்கும் தாசிகளை வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .</div><div>சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊர்களில் 32 ஊர்களுக்கு கோட்டை ,நகர் ,ஊர் அதிகாரத்துக்கு வேட்டுவர்களை வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .</div><div><br></div><div>வேட்டுவ மண்ணாடிகளுக்கு ,வெள்ளாளர்கள் வரி கொடுத்ததை பற்றி சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .</div><div>(மண்ணாடி-நில தலைவன் ).</div><div><br></div><div>வெள்ளாள சாதியினர் ,வேட்டுவ இனத்தை அண்டிப் பிழைத்தவர்கள்.</div><div>இன்று கொங்கு நாட்டில் வெள்ளாள சாதியினர் வழிபாடும் அனைத்து காளி கோயில்களும் வேட்டுவ இனத்தை ஏமாற்றி வெள்ளாள சாதியினர் உரிமையாக்கிக் கொண்டவையாகும் . </div><div><br></div><div>கிபி 1975 களில் "வெள்ளாள சாதி" என்ற பெயரை "கொங்கு வெள்ளாளர்" என்று சாதிகள் பட்டியலில் கொண்டுவந்தனர். அதற்கு முன்பு கொங்கு வெள்ளாளர் என்ற பெயர் கிடையாது. வெள்ளாளக் கவுண்டர், நாட்டுக்கவுண்டர் என்றுதான் சொல்வார்கள்.</div><div><br></div><div>இந்த கொங்கு மண்டத்தில் குடியேறிகளான கொங்கு வெள்ளாள சாதிக்குத் தனியாக "கொங்குநாடு" என்ற பெயரில் தனிமாநிலம் வேண்டுமாம். </div><div>ஒவ்வொரு சாதிக்கும் தனிமாநிலம் பிய்த்துக்கொடுப்பதற்குத் தமிழ்நாடு ஒன்றும் பஞ்சுமிட்டாய் அல்ல.</div><div><br></div><div><br></div>தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-27392002302766772262019-06-12T14:52:00.001+05:302019-10-10T23:06:15.885+05:30தமிழ்நாட்டில் தெலுங்கர் குடியேற்றம்<p dir="ltr">*தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் எப்படி குடியேறினார்கள்???*</p>
<p dir="ltr">1311 ல் மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பிறகு விஜயநகர அரசன் குமாரகம்பணன் உட்பட தெலுங்க நாயக்கர்கள் முஸ்லிம் படைகளை விரட்ட பாண்டியர்களுக்கு உதவிசெய்வதாகச் சொல்லித்தான் வந்தார்கள்.<br>
ஆனால் பாண்டியர்களோடு சேர்ந்து முஸ்லிம் படைகளை விரட்டிவிட்டு மதுரையின் ஆட்சிப் பொறுப்பை அந்த தெலுங்கர்களே கைப்பற்றிக் கொண்டார்கள். பாண்டியர்களை தென்காசி சீமைக்கு விரட்டிவிட்டார்கள். அதன் பிறகு மீண்டும் பாண்டியரும், சோழரும் மாறிமாறி மதுரையைக் கைப்பற்றி ஆண்டனர்.</p>
<p dir="ltr">மீண்டும் 1529 ல் விசுவநாத நாயக்கன் என்ற தெலுங்கன் மதுரையைக் கைப்பற்றிக்கொண்டான். அவன் வழிவந்த நாயக்க மன்னர்கள் தமிழகத்தைத் தொடர்ந்து ஆண்டனர்.<br>
தக்காண சுல்தான்கள் 1564 ல் விஜயநகரத்தைத் தாக்கி எரித்த போது உயிருக்குப் பயந்து அகதிகளாக நாயுடு, ரெட்டியார், சக்கிலியர் ஆகிய தெலுங்கு சாதியினர் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்குக் குடியேறினார்கள்.<br>
அப்போது உயிருக்குப் பயந்து அகதிகளாக கன்னட சாதியினரும் தமிழ்நாட்டிற்குக் குடியேறினர்.</p>
<p dir="ltr">அந்த தெலுங்க நாயக்க மன்னர்கள் பாளையப்பட்டு முறையைக் கொண்டுவந்து தமிழ்நாட்டைப் பல பாளையங்களாகப் பிரித்து தமிழர்களின் நிலங்களை எல்லாம் அபகரித்து அந்தத் தெலுங்கர்களுக்குப் பகிர்ந்தளித்தார்கள். பள்ளர், பறையர் உள்ளிட்ட தமிழ்க்குடிகளின் நிலங்களைப் பறித்துக்கொண்டு அவர்களைப் பண்ணை அடிமையாக்கினர். சாதிய ஏற்றத் தாழ்வையும் தீண்டாமையையும் தமிழ்நாட்டில் புகுத்தினார்கள்.</p>
<p dir="ltr">கோயில்களில் தெய்வப்பணி செய்து மிகப் புனிதமானவர்களாகப் போற்றப்பட்டுவந்த தேவரடியார்களை இழிவுபடுத்தி விலைமாதர்களைக் கோயில்களில் நியமித்து தேவதாசி முறையைக் கொண்டுவந்தார்கள். தெலுங்க நாயக்கராட்சிக்கு முன்பு தமிழ்நாட்டுக் கோயில்களில் விலைமாதர்களான தேவதாசிகள் கிடையாது. தேவரடியார் வேறு தேவதாசிகள் வேறு. தேவரடியார்கள் கோயிற்பணி செய்த புனிதமானவர்கள். தேவதாசிகள் விலைமாதர்கள்.<br>
தமிழ்ப் பார்ப்பனர்களைக் கோயில்களிலிருந்து விரட்டிவிட்டு தெலுங்க பிராமணர்களைக் குடியேற்றி நியமித்தார்கள்.</p>
<p dir="ltr">இப்போது தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 5.7% தெலுங்கர்கள் இருக்கிறார்கள்.<br>
அந்தத் *தெலுங்கர்கள்தான் இப்போது திராவிடர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.*</p>
<p dir="ltr">*பெரியார் தெலுங்கன்,* பலிஜா நாயுடு சாதி,</p>
<p dir="ltr">*அண்ணாதுரை தெலுங்கன்,* சின்னமேளம் சாதி,</p>
<p dir="ltr">*கருணாநிதி தெலுங்கன்,* சின்னமேளம் சாதி,</p>
<p dir="ltr">*எம்ஜிஆர் மலையாளி,* மேனன் சாதி,</p>
<p dir="ltr">*ஜெயலலிதா கன்னடச்சி,* சாத்தாத ஸ்ரீவைஷ்ணவா என்ற பிராமண சாதி,</p>
<p dir="ltr">*விஜயகாந்த் தெலுங்கன்,* நாயுடு சாதி,</p>
<p dir="ltr">*வைகோ தெலுங்கன்,* நாயுடு சாதி.</p>
<p dir="ltr">*கி.வீரமணி*, அஸ்த்திர கொல்லா என்னும் தெலுங்க யாதவா சாதி.</p>
<p dir="ltr">இந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா????</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-83664189097128625602019-03-27T12:55:00.001+05:302019-03-27T12:55:01.496+05:30இணையத்தில் தமிழ் தோற்றமும் வளர்ச்சியும்<p dir="ltr"><b>இணையத்தில் தமிழ் தோற்றமும் – வளர்ச்சியும்</b></p>
<p dir="ltr">உள்ளடக்கம்<br>
1.<a href="http://ta.vikaspedia.in/education/baabafba9bc1bb3bcdbb3-ba4bc6bbeb9fbb0bcdbaabc1b95bb3bcd/b87ba3bc8bafba4bcd-ba4baebbfbb4bcd-b87ba4bb4bcdb95bb3bcd/b87ba3bc8bafba4bcdba4bbfbb2bcd-ba4baebbfbb4bcd-ba4bb1bcdbb1baebc1baebcd-2013-bb5bb3bb0bcdb9abcdb9abbfbafbc1baebcd#section-1">அறிமுகம்</a><br>
2.<a href="http://ta.vikaspedia.in/education/baabafba9bc1bb3bcdbb3-ba4bc6bbeb9fbb0bcdbaabc1b95bb3bcd/b87ba3bc8bafba4bcd-ba4baebbfbb4bcd-b87ba4bb4bcdb95bb3bcd/b87ba3bc8bafba4bcdba4bbfbb2bcd-ba4baebbfbb4bcd-ba4bb1bcdbb1baebc1baebcd-2013-bb5bb3bb0bcdb9abcdb9abbfbafbc1baebcd#section-2">இணையம் அறிமுகம்</a><br>
3.<a href="http://ta.vikaspedia.in/education/baabafba9bc1bb3bcdbb3-ba4bc6bbeb9fbb0bcdbaabc1b95bb3bcd/b87ba3bc8bafba4bcd-ba4baebbfbb4bcd-b87ba4bb4bcdb95bb3bcd/b87ba3bc8bafba4bcdba4bbfbb2bcd-ba4baebbfbb4bcd-ba4bb1bcdbb1baebc1baebcd-2013-bb5bb3bb0bcdb9abcdb9abbfbafbc1baebcd#section-3">இணையம் விளக்கம்</a><br>
4.<a href="http://ta.vikaspedia.in/education/baabafba9bc1bb3bcdbb3-ba4bc6bbeb9fbb0bcdbaabc1b95bb3bcd/b87ba3bc8bafba4bcd-ba4baebbfbb4bcd-b87ba4bb4bcdb95bb3bcd/b87ba3bc8bafba4bcdba4bbfbb2bcd-ba4baebbfbb4bcd-ba4bb1bcdbb1baebc1baebcd-2013-bb5bb3bb0bcdb9abcdb9abbfbafbc1baebcd#section-4">இணையத்தின் தோற்றம்</a><br>
5.<a href="http://ta.vikaspedia.in/education/baabafba9bc1bb3bcdbb3-ba4bc6bbeb9fbb0bcdbaabc1b95bb3bcd/b87ba3bc8bafba4bcd-ba4baebbfbb4bcd-b87ba4bb4bcdb95bb3bcd/b87ba3bc8bafba4bcdba4bbfbb2bcd-ba4baebbfbb4bcd-ba4bb1bcdbb1baebc1baebcd-2013-bb5bb3bb0bcdb9abcdb9abbfbafbc1baebcd#section-5">இந்தியாவில் இணையத்தின் தோற்றம்</a><br>
6.<a href="http://ta.vikaspedia.in/education/baabafba9bc1bb3bcdbb3-ba4bc6bbeb9fbb0bcdbaabc1b95bb3bcd/b87ba3bc8bafba4bcd-ba4baebbfbb4bcd-b87ba4bb4bcdb95bb3bcd/b87ba3bc8bafba4bcdba4bbfbb2bcd-ba4baebbfbb4bcd-ba4bb1bcdbb1baebc1baebcd-2013-bb5bb3bb0bcdb9abcdb9abbfbafbc1baebcd#section-6">இணையச் செயல்பாடு</a><br>
7.<a href="http://ta.vikaspedia.in/education/baabafba9bc1bb3bcdbb3-ba4bc6bbeb9fbb0bcdbaabc1b95bb3bcd/b87ba3bc8bafba4bcd-ba4baebbfbb4bcd-b87ba4bb4bcdb95bb3bcd/b87ba3bc8bafba4bcdba4bbfbb2bcd-ba4baebbfbb4bcd-ba4bb1bcdbb1baebc1baebcd-2013-bb5bb3bb0bcdb9abcdb9abbfbafbc1baebcd#section-7">கணிப்பொறியில் தமிழ்</a><br>
8.<a href="http://ta.vikaspedia.in/education/baabafba9bc1bb3bcdbb3-ba4bc6bbeb9fbb0bcdbaabc1b95bb3bcd/b87ba3bc8bafba4bcd-ba4baebbfbb4bcd-b87ba4bb4bcdb95bb3bcd/b87ba3bc8bafba4bcdba4bbfbb2bcd-ba4baebbfbb4bcd-ba4bb1bcdbb1baebc1baebcd-2013-bb5bb3bb0bcdb9abcdb9abbfbafbc1baebcd#section-8">இணையத்தில் தமிழின் தோற்றம்</a><br>
9.<a href="http://ta.vikaspedia.in/education/baabafba9bc1bb3bcdbb3-ba4bc6bbeb9fbb0bcdbaabc1b95bb3bcd/b87ba3bc8bafba4bcd-ba4baebbfbb4bcd-b87ba4bb4bcdb95bb3bcd/b87ba3bc8bafba4bcdba4bbfbb2bcd-ba4baebbfbb4bcd-ba4bb1bcdbb1baebc1baebcd-2013-bb5bb3bb0bcdb9abcdb9abbfbafbc1baebcd#section-9">இணையத்தில் தமிழின் வளர்ச்சி நிலை</a><br>
10.<a href="http://ta.vikaspedia.in/education/baabafba9bc1bb3bcdbb3-ba4bc6bbeb9fbb0bcdbaabc1b95bb3bcd/b87ba3bc8bafba4bcd-ba4baebbfbb4bcd-b87ba4bb4bcdb95bb3bcd/b87ba3bc8bafba4bcdba4bbfbb2bcd-ba4baebbfbb4bcd-ba4bb1bcdbb1baebc1baebcd-2013-bb5bb3bb0bcdb9abcdb9abbfbafbc1baebcd#section-10">இணையம் தொடர்பான மாநாடுகள் – கருத்தரங்குகள்</a></p>
<p dir="ltr"><b>அறிமுகம்</b></p>
<p dir="ltr">அறிவியலின் அதிவேக வளர்ச்சியால் இன்றைய உலகம் கைக்குள் சுருங்கியுள்ளது. அறிவியலின் அதிநவீன வடிவமே கணிப்பொறியாகும். கணினி அறிவியலின் மற்றொரு பரிமாணமே இணையம் (Internet). ஒர் அலுவலகத்துக்குள், ஒரு நகருக்குள், ஒரு நாட்டுக்குள் அடங்கிவிடாமல், உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் உள்ள கணினிகள் தங்களுக்குள் ஓர் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள, உலகின் எங்கோ ஓர் இடத்திலுள்ள ஒருவர் தன் வீட்டிலுள்ள கணினிமூலமாகத் தனக்குத் தேவையான விவரங்களைத் தேடிப்பெறும் தகவல் பரிமாற்றமே இணையம் ஆகும்.</p>
<p dir="ltr"><b><b>இணையம்</b></b><b><b> </b></b><b><b>அறிமுகம்</b></b></p>
<p dir="ltr">உலகில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கிறது இணையம். இதன் மூலம் உலகம் முழுவதிலும் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. பல்வேறு கணிப்பொறிகளில் தொகுக்கப்பட்ட தகவல்கள் முதல் கட்டமாக அந்தந்த நாடுகள் அளவிலும், பின்பு கண்டங்கள் அளவிலும், செயற்கைக்கோள்கள் மூலமாக இணைக்கப்படுகின்றன. பின்பு அவ்வாறு இணைக்கப்பட்ட தகவல்களை (data) யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், பார்த்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட அமைப்பே இணையம் ஆகும்.</p>
<p dir="ltr"><b><b>இணையம்</b></b><b><b> </b></b><b><b>விளக்கம்</b></b></p>
<p dir="ltr">‘இணையம்’ என்னும் தமிழ்ச்சொல்லின் மூல ஆங்கிலச்சொல் இன்டர்நெட் (Internet) என்பதாகும். இதன் மூலப்பொருளை உணர இச்சொல்லை இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். ‘இன்டர்’ என்பது முதலாவது பகுதி. ‘நெட்’ என்பது இரண்டாவது விகுதி. இன்டர் என்ற சொல் ஒரே தன்மையுடைய பல பொருள்களின் தொகுதியைக் குறிப்பதாகும். எடுத்துக்காட்டாக, பல நாடுகளைக் குறிப்பிட ‘இன்டர்நேஷனல்’ (International), பல மாநிலங்களைக் குறிப்பிட ‘இன்டர்ஸ்டேட்’ (Inter-state) மற்றும், ‘இன்டர்காலேஜ்’ (Inter-college), ‘இன்டர்ஸ்கூல்’ (Inter-school) என்று பயன்படுவதைப் போன்று இச்சொல் அமையும்.</p>
<p dir="ltr">‘நெட்’ (Net) என்றால் வலை. இந்த இடத்தில் ‘நெட்வொர்க்’ (Network) (கட்டமைப்பு) என்பதன் சுருக்கம் நெட். ஒரு கட்டமைப்பில் பல கணிப்பொறிகளை ஒன்றாக இணைத்து அவைகளை ஒரு பொது நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதும், அவைகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதுமே கட்டமைப்பு (Network) எனப்படும்.</p>
<p dir="ltr">இப்பொழுது இரண்டு சொற்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கும் போது இன்டர்நெட் என்பது கட்டமைப்புகளுக்கான கட்டமைப்பு எனப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கணிப்பொறி சார்ந்த கட்டமைப்பையே இணையம் என்கிறோம். இவற்றில் தனித்தனி கணினிகளையும் இணைத்துப் பயன்பெறலாம்.</p>
<p dir="ltr">கணிப்பொறிகளின் உலகளாவிய வலையமைப்பே இணையம். உலகம் முழுவதிலும் உள்ள பல கோடி கணிப்பொறிகள் இணையத்தில் இணைக்கப்பட்டு, தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.</p>
<p dir="ltr"><b><b>இணையத்தின்</b></b><b><b> </b></b><b><b>தோற்றம்</b></b></p>
<p dir="ltr">தகவல் தொடர்புக்காக அட்லாண்டிக் கடலில் 1858-ஆம் ஆண்டு ஒரு கேபிள் நிறுவப்பட்டது. சில நாட்கள் மட்டுமே அது செயல்பட்டது. தகவல் தொலைத்தொடர்பு வரலாற்றில் இது வரலாற்றுச் சாதனையாக அமைந்தது. பின்னர் 1957-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ‘ஸ்புட்னிக்’ என்னும் செயற்கைக்கோளை விண்ணில் பறக்கவிட்டது. அப்போதைய அமெரிக்க அதிபர் ‘ஐசன் ஹோவர்’ ‘அர்ப்பா’ (ARPA) என்னும் ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க ஆணையிட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க இராணுவத்துறையில் கணிப்பொறி பயன்பாட்டை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் ‘அர்ப்பா’ இறங்கியது. 1962-இல் தொடங்கிய இந்த ஆராய்ச்சியில் டாக்டர் ஜே. சி. ஆர். லிக்லைடர் (J.C.R. Licklider) தலைமையேற்றார். போர் ஏற்பட்டு, எதிரிகளின் குண்டுவீச்சில் நெட்வொர்க்கின் ஒரு பகுதி சிதைய நேரிட்டாலும் மீதிப்பகுதி எந்தவித சிக்கலுமின்றி செயல்பட வேண்டும் என்பதே ‘அர்ப்பா’வின் நோக்கமாக இருந்தது. இந்த கோட்பாடுகளின் அடிப்படையில் 1968-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் இயற்பியல் ஆய்வுக்கூடம் முதல் சோதனை நெட்வொர்க்கை நிறுவியது. இதன்படி 1969-இல் ‘அர்ப்பாநெட்’ (ARPANET – The Advanced Research Projects Agency Network) அமைக்கப்பட்டது. பின்னர் அர்ப்பாநெட்டின் சிறப்பால் பல்கலைக்கழகங்கள் இதனோடு இணைந்தது.</p>
<p dir="ltr">1971-இல் முதல் மின்னஞ்சல் (email) அனுப்பப்பட்டது. “First email (electronic mail) transmission in 1971, was send by Ray Tomilinson, of the BBN company.” பின்னர் அர்ப்பாநெட்வாக்கின் மூலம் அறிவியல் அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை மற்ற அறிஞர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக தொடர்பு கொள்ளும் ஊடகமாகப் பயன்படுத்தினர்.</p>
<p dir="ltr">இதனால் 1984-இல் அர்ப்பாநெட் இரண்டு நெட்வொர்க்குகளாகப் பிரிந்தது. இவற்றில் ‘மில்நெட்’ என்பது இராணுவத்திற்காகவும், ‘அர்ப்பாநெட்’ என்பது உயர்தர ஆராய்ச்சிக்காகவும் என்று பிரிந்தன. அதன் பின்னர் பல பல்கலைக்கழகங்கள் இந்த அர்ப்பாநெட்டைப் பயன்படுத்தின. இதனால் அர்ப்பாநெட்டின் செயல்பாடுகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.</p>
<p dir="ltr">ஆரம்ப காலகட்டத்தில் இணையம் மின்னஞ்சல் அனுப்புவதற்கு மட்டுமே பயன்பட்டது. பின்னர் படிப்படியாக இணையத்தின் வழியாகச் செய்திகளைப் பெறும் ஆற்றல் பெருகத் தொடங்கியது. மேசைக் கணிப்பொறியின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு கணிப்பொறியின் வலையமைப்பு வளரத் தொடங்கியது. “மேசைக் கணிப்பொறிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட வலையமைப்புகள், குறும்பரப்பு வலையமைப்பு (LAN – Local Area Network), நகர்ப்பரப்பு வலையமைப்பு (MAN – Medium Area Network), பெரும்பரப்பு (WAN – Wide Area Network) எனச் செயல்படும் எல்லை வரம்புகளுக்கேற்ப, வெவ்வேறு அமைப்புகளைக் கொண்ட கணிப்பொறி வலையமைப்புகளாக வடிவமைக்கப்பட்டன.”</p>
<p dir="ltr">இணையத்தின் கண்டுபிடிப்பு கணிப்பொறியின் பயன்பாட்டில் மிகப்பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. எனவே இணையத்தின் ஆற்றலைப் பயன்படுத்தும் வகையில் ‘டிம் நெர்னர்ஸ்-லீ’ (Tim Nerners—Lee) என்பவரால் உலக தழுவிய இணையதளம் ‘www – worldwide web’ அறிமுகப்படுத்தப்பட்டது.</p>
<p dir="ltr">“ஜெனிவாவிலுள்ள CERN எனும் ஆய்வுச் சோதனைக் கூடத்தில் அறிவுரையாளராக (Conssultant) இருந்த ’டிம் நெர்னர்ஸ்-லீ’ எனும் இளம் அறிவியலாளராகிய ஆங்கிலேயர், மீ இணைப்பு (Hyper Link) மூலம், தனது உலகளாவிய வலை அமைப்பு (world wide web) திட்டத்தில், செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்று கண்டுபிடித்தார். பெர்னர்ஸ்-லீ இதனை, 1991-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.”</p>
<p dir="ltr">இன்று மனித வாழ்வில் தகவல் தொடர்பு கூறுகளில் இணையம் முதன்மையாகத் திகழ்கிறது. மின்னஞ்சல் அனுப்பவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட இணையம், இன்று தரவுதளம் (Database Site), இணையவலைதளம் (Web Page), இணைய இதழ் (Internet Journal), இணைய வணிகம் (e-business), இணைய விளையாட்டு, இணைய நூலகம் (Internet Library), இணையவழிக் கல்வி, வலைப்பூக்கள் (Blogs), சமூக வலைத்தளங்கள் (Orkut, Facebook, Twitter) என பலப் பரிமாணங்கள் கண்டு மனித வளர்ச்சியில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன.</p>
<p dir="ltr"><b><b>இந்தியாவில்</b></b><b><b> </b></b><b><b>இணையத்தின்</b></b><b><b> </b></b><b><b>தோற்றம்</b></b></p>
<p dir="ltr">உலக நாடுகள் பலவற்றிலும் இணையச் சேவை பரவலாயின. இந்தியாவில் முதன்முதலில் பொது மக்களுக்காக இணையம் 1995-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. முதலில் ஆறு நகரங்களில் தொடங்கி வைக்கப்பட்டது. ‘விதேஷ் சஞ்சார் நிகம் லிமிடெட்’ (Videsh Sanchar Nigam Limited - VSNL) இந்தியாவின் ஒரே இணைய இணைப்பு வழங்கும் சேவையாளராக இருந்தது. பின்னர் 1998-இல் இருந்து தனியாருக்கும் உரிமம் வழங்கப்பட்டது. 1999-இல் வெப்துனியா (webdunia.com) இந்திய மொழிகளில் முதலில் இந்தி மொழியில் இணையச் சேவையை அறிமுகம் செய்தது. இணையத்தின் பயன்பாடு மற்றும் வளர்ச்சிக்காக 2000-இல் இந்தியப் பாராளுமன்றத்தில் தொலைத்தொடர்புக்கான வரைமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. முதலாவதாக 4.5 கோடியில் யாகூ (Yahoo) எம்.எஸ்.என் (MSN) நிறுவனம் இணையச் சேவையை விரிவுபடுத்தியது. 2001-ஆம் ஆண்டு இந்திய இரயில்வே துறை (Indian Railway Catering and Tourism Centre – IRCTC) இணைய வழி பயணச்சீட்டுப் பதிவினை தொடங்கியது. பின்னர் படிப்படியாக வங்கி, விமானச் சேவைக்காகவும் இணையப் பயன்பாடு விரிவடைந்தன. இன்றைக்கு பல்வேறு நிறுவனங்கள் இணையச் சேவையை வழங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி செல்போன் நிறுவனங்களும் இணையச் சேவையை வழங்கி வருகின்றன. இன்று இந்தியாவில் இணையச் சேவை பெரும்பாலான இந்திய மொழிகள் அனைத்திலும் நடைபெறுகிறது.</p>
<p dir="ltr"><b><b>இணையச்</b></b><b><b> </b></b><b><b>செயல்பாடு</b></b></p>
<p dir="ltr">அறிவியல் புரட்சியின் விளைவால் உலகம் முழுவதையும் இணையம் கைக்குள் அடக்கிவிட்டது. இணையத்தில் இணைப்பினைப் பெறுவதற்கு மூன்று பொருள்கள் இருக்க வேண்டும். அவை,</p>
<p dir="ltr">கணிப்பொறிதொலைபேசி இணைப்புமோடம்</p>
<p dir="ltr">தொலைபேசி இணைப்பு வழியாக நமது கணிப்பொறியை மோடம் துணைகொண்டு தொலைதூரக் கணிப்பொறியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறோம்.</p>
<p dir="ltr">தொலைபேசி இணைப்பு மின்காந்த அலைகளாக இருக்கும் அனலாக் (Analog) சமிக்ஞைகைகளையே ஏற்றுக்கொள்கிறது. இவ்வாறு தொலைபேசிமூலம் வரும் தகவல்களை டிஜிட்டலாக (Digital) கணிப்பொறிக்கு அனுப்புவதற்கு மோடம் என்ற கருவி ஒரு மொழிபெயர்ப்பியாகச் செயல்படுகிறது. ஆனால் இன்று தொலைபேசி இணைப்பு மற்றும் மோடம் இல்லாமலே இணையச் சேவையைப் பெறமுடியும். அந்தளவிற்குத் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பல்வேறு நிறுவனங்கள் இணைய இணைப்பிற்கு “Data Card” வழங்குகின்றன. “Data Card” –டை நம் கணிப்பொறியில் இணைத்து நமக்கு வழங்கும் குறியீட்டு எண்களை நம் கணினியில் பதிவு செய்தாலே உடனடி இணைய இணைப்பினை நாம் பெற்றுவிடலாம். பயணத்தின் போதும் மடிக்கணினியில் இணையச்சேவையைப் பெற இத்தகைய தொழில்நுட்ப வசதி பயனுடையதாக உள்ளது. நம் இணையப் பயன்பாட்டினைப் பொறுத்து மாதாமாதம் கட்டணம் செலுத்தி நம் இணைப்பை புதுப்பித்துக் கொள்ளலாம். இது தகவல் தொழில்நுட்பத்தின் மற்றுமொரு புரட்சியாக விளங்குகிறது.</p>
<p dir="ltr"><b><b>கணிப்பொறியில்</b></b><b><b> </b></b><b><b>தமிழ்</b></b></p>
<p dir="ltr">கணிப்பொறி என்றாலே ஆங்கிலத்தில் இயங்கக்கூடியது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணங்கள் திரையில் ஆங்கிலத்துக்கான முக்கியத்துவம், கணிப்பொறி பற்றிய வெளிநாட்டுப் புது செய்திகளும், அறிவிப்புகளுமே இப்படியொரு மாயையை மக்கள் மனதில் பதித்துள்ளன. ஆனால் இவையனைத்தும் பொய்யானத் தோற்றமே.</p>
<p dir="ltr">கணிப்பொறியின் செயற்பாட்டு மென்பொருள்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியினைக் கொண்டு வடிவமைக்கப்படுவதால், கணிப்பொறியின் செயல்பாடுகள், மற்றும் இணையச் செயல்பாடுகள் ஆங்கில மொழியைச் சார்ந்து அமைந்துள்ளன. “பிரெஞ்சு, செருமானிய, சப்பானிய, சீன நாட்டினர் இது பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். அவர்களது ஆழ்ந்த தாய்மொழிப் பற்றின் விளைவாகக் கணிப்பொறிப் பயன்பாட்டிலும், இணையத்திலும் இந்த மொழிகள் இடம் பெறத் தொடங்கின.</p>
<p dir="ltr">ஒரு கணிப்பொறி பூஜ்யம், ஒன்று (0,1) எண்கள் அடங்கிய இரும (Binary) எண் குறியீடுகளைக் கொண்டுதான் செயல்படுகிறது. அதற்கு ஆங்கிலமோ, தமிழோ அல்லது வேறெந்த மொழியும் தெரியாது. கணிப்பொறியை நாம் எந்தத் துறையில் பயன்படுத்தினாலும், அந்தத் துறைக்குத் தேவையான தகவல்களை அதாவது தரவுகளை எண்களாகத்தான் சேமிக்க வேண்டும். கணிப்பொறியின் செயல்பாட்டுக்குத் தேவையின்படி நாம் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு எண்களாக மாற்றித்தான் சேமிக்க முடியும்.</p>
<p dir="ltr">“கணிப்பொறி, நாம் கொடுக்கின்ற கட்டளைகளுக்கேற்பச் செயல்படுகின்ற, சிந்திக்கும் திறனற்ற ஒரு பொறியாகும். கணிப்பொறி பல்லாயிரக்கணக்கான மின்சுற்றுகள் இயக்கப்படுவதால் செயல்படும் ஒரு திறன்மிக்க கருவி. இந்த மின்சுற்றுகள் 0.1 என்ற இரும எண் குறியீடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பொறிமொழியின் (Machine Language) கட்டளைகளால் இயக்கப்படுகின்றன.”</p>
<p dir="ltr">ஒரு மொழியை நாம் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமானால், அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கும் முறையை நாம் குறியீட்டு முறை என்று அழைக்கிறோம். ஒரு மொழியைக் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமென்றால், அந்த மொழிக்கு ஒரு குறியீட்டு முறையும் அதற்கு ஏற்ற ஓர் எழுத்துருவும் இருந்தால் போதும். அந்த மொழியைக் கணிப்பொறியில் பயன்படுத்தலாம் மற்றும் ஒரு மொழிக்கு கணிதப்பண்பு இருப்பின் எளிதில் கணிப்பொறியில் பயன்படுத்த முடியும்.</p>
<p dir="ltr">“கணிப்பொறியில் ஆங்கிலம் போன்று எந்த மொழியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் கணிப்பொறி கணித அடிப்படையில் செயல்படக்கூடிய ஒரு கருவியாகும். அவ்வகையில் தமிழ்மொழி கணிதப் பண்புடைய மொழியாகும். எனவே கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்துவது சுலபம்.”</p>
<p dir="ltr">கணிப்பொறியில் தமிழை உருவாக்க உலகம் முழுவதிலும் பரவியுள்ள கணினித் தமிழ் வல்லுனர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இவ்வாறு பல்வேறு இடங்களில் நடைபெற்ற முயற்சியின் விளைவாய் பல்வேறு தமிழ் எழுத்துருக்களும், அவற்றை இயக்க பல்வேறு விசைப்பலகை முறைகளும் உருவாக்கம் பெற்றன. இவற்றினை நெறிப்படுத்த பல கருத்தரங்கங்கள், மாநாடுகள் நடத்தி கணிப்பொறியில் தமிழை வளர்த்தனர். இத்தகைய ஒருங்கிணைப்புகள் நடந்துகொண்டிருக்கும் போதே தமிழ்த் தரவுகள் கணினியில் ஏற்றம் பெற்றுவந்தன.</p>
<p dir="ltr">இச்சூழ்நிலையில், பலரும் பல விசைப்பலகையைப் பயன்படுத்துவது பெரும் குறையாய் மாறிப்போனது. இக்குறையைப் போக்க கணிப்பொறியில் உலக அளவில் ஒரே விசைப்பலகை முறையைப் பயன்படுத்த 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி எட்டாம் தேதி சென்னையில் நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்விசைப் பலகை முறையைத் தமிழகத்திலுள்ள அனைத்து மென்பொருள் தயாரிப்பாளர்களின் ஆலோசனையின்படி தமிழக அரசு வடிவமைத்துத் தந்தது.</p>
<p dir="ltr">இச்சமயத்தில் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் வின்டோஸில் (Windows) தமிழைப் பயன்படுத்த துவங்கிய பின்பே பல்வேறு தமிழ் மென்பொருள் நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் பெரும் எண்ணிக்கையில் தமிழ் எழுத்து வடிவங்களை கணிப்பொறியில் அளிக்கத் துவங்கினார்கள். கூகுள் (Google) நிறுவனம் அறிமுகப்படுத்திய டிரான்ஸ்லிட்டரேஷன் (Transliteration) முறை தமிழ்ப் பயன்பாட்டை வெகு ஜனத்திற்கு கொண்டு சேர்த்தது.</p>
<p dir="ltr"><b><b>இணையத்தில்</b></b><b><b> </b></b><b><b>தமிழின்</b></b><b><b> </b></b><b><b>தோற்றம்</b></b></p>
<p dir="ltr">சமுதாய வாழ்வில் எந்தவொரு செயலும் நன்முறையில் தொடங்கி சீரிய முறையில் நடைபெற ஒருங்கினைந்த அமைப்பு முறையே பயன்தரும். பண்டைய தமிழ் நாகரிகத்தின் பன்னாட்டுச் செய்திகளாகத் தமிழர்கள் தென்மேற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அரசாங்கத் தூதுவர்களாகவும், வணிகர்களாகவும், அந்தந்த நாடுகளில் சில காலம் குடியேறினர். இவ்வாறு குடியேறிய மக்கள் நல்ல நிலையில் வாழ்கின்றனர். ஆயினும் தமிழ் நாட்டிலிருந்து பல்லாண்டுகளுக்கு முன்பு சென்ற தமிழர்களின் வழித்தோன்றல்கள் தன் தாய் நாட்டுடன் நேரடித் தொடர்பு குறைந்ததால் தமது தாய்மொழியான தமிழை மறந்தும், தமிழ்ப்பண்பாட்டின் சிறப்பினை உணராமலும் போய்விட்டனர்.</p>
<p dir="ltr">இந்நிலையில் இணையத்தின் வளர்ச்சியால் புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களை ஒன்றிணைத்துக் கொள்ள தமிழை இணையத்தில் தோற்றம் பெறச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். “உலகெங்கும் பரவிவரும் தமிழர்கள் இணையத்தின் வழியாகத் தமிழில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள விரும்பினர். அவர்கள் தங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, கலை ஆகியவற்றைத் தொடர்ந்து கற்றுத் தெளியவும் தமிழ் இணையதளங்களை உருவாக்க விரும்பினர். உலகின் பல பகுதிகளில் வாழ்ந்துவரும் கணிப்பொறியில் வல்லமைபெற்ற தமிழர்கள், தமிழைக் கணிப்பொறி மற்றும் இணையப் பயன்பாட்டில் கொண்டு செல்ல முயன்றனர்.”</p>
<p dir="ltr">அம்முயற்சியின் விளைவே இன்று இணையப் பயன்பாட்டில் தமிழ் தலைசிறந்து வளர்கிறது. தமிழில் இணைய தளங்கள் உருவாக பிறிதொரு காரணமும் முக்கியமாகும். 1983-க்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் கலவரத்தால் தமிழர்கள் உலகம் முழுக்க புலம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது. அதுபோன்று தமிழகத் தமிழர்கள் பணியின் பொருட்டு அயல் நாடுகளுக்கு சென்றனர். இவ்வாறு சென்ற தமிழர்கள் தாய்நாட்டுடன் தொடர்பு கொள்ளவும், பிற நாடுகளில் வாழும் தமிழர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் இணையத்தைப் பயன்படுத்தினர். இதில் தங்களை ஒன்றிணைக்க தமிழ் வளர்ச்சியில் கவனம் செலுத்தினர். இதன் விளைவாய் பல்வேறு சங்கங்கள், அமைப்புகளை இணையத்தில் உருவாக்கினர். உலகம் முழுக்க இத்தகைய பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாய் இணையத்தில் தமிழ் எளிதில் வளர்ந்தது.</p>
<p dir="ltr">“தமிழ் இணையத்தளங்களின் தோற்றம் பற்றித் துல்லியமாகக் குறிப்பிட முடியாதபடி உள்ளது. இதற்கு காரணம் இத்தகைய முயற்சி உலகம் முழுக்க பரவலாக நடந்தமையாகும். ஒவ்வொரு தளத்தினரும் தங்களின் முயற்சியே முதன்மை என்கின்றனர்.</p>
<p dir="ltr">இவ்வாறு குறிப்பிட்டுச்சொல்ல முடியாத அளவிற்கு இணையத்தில் தமிழின் தோற்றம் பரவலாகவும், விரைவாகவும் உருவானது. இத்தகைய முயற்சியும் ஒரு வகையில் இணையத்தில் தமிழின் வளர்ச்சிக்கு பெரும் பங்காய் அமைந்தன.</p>
<p dir="ltr"><b><b>இ</b></b><b><b>ணையத்தில்</b></b><b><b> </b></b><b><b>தமிழின்</b></b><b><b> </b></b><b><b>வளர்ச்சி</b></b><b><b> </b></b><b><b>நிலை</b></b></p>
<p dir="ltr"><b>உலகின் பழமை வாய்ந்த உயர்தனிச் செம்</b>மொழிகள் எட்டில் (கிரேக்கம், இலத்தீன், அரபி, சீனம், ஹீப்ரு, பாரசீகம், தமிழ், சமஸ்கிருதம்) இன்றளவும் மக்களின் பயன்பாட்டில் உள்ள மொழியாக தமிழும் சீனமும் விளங்குகிறது. இன்றைய உலகமயமாக்கலான காலகட்டத்திலும் வழக்காற்றில் நவீன மொழியாகவும், வரலாற்றில் வளமான மொழியாகவும் வளர்ந்து நிற்கிறது. இன்றைய காலகட்டத்தில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழோடு கணினித்தமிழ் நான்காம் தமிழாய் வளர்ந்து வருகிறது.</p>
<p dir="ltr">“ஒரு நாட்டின் மொழியை ஏற்றுக்கொள்ளாத கணிப்பொறி அந்நாட்டில் இயங்க முடியாது. கணிப்பொறியை ஏற்றுக்கொள்ளாத ஒரு மொழி வாழ முடியாது என்பது வரலாற்று உண்மையாகிவிட்டது. மேற்கண்ட கூற்று உணமையே. ஏனெனில் இன்றைக்கு கணிப்பொறியை பயன்படுத்தாத துறைகளே இல்லையெனும் அளவிற்கு கணினி வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.</p>
<p dir="ltr">கணினியில் தமிழ்மொழியின் பயன்பாட்டிற்கு காரணம் நம் மொழியின் சிறப்பே ஆகும். ஏனெனில் தமிழ்மொழியில் எழுத்தமைப்பு, ஒலியமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு ஆகிய எல்லாவற்றிலும் ஒரு கட்டுக்கோப்பு இருக்கிறது. இத்தனை சிறப்பினை பெற்றிருப்பதால் கணினியில் தமிழ் மிகக் குறுகிய காலத்தில் நுழைந்தது.</p>
<p dir="ltr">இதற்குப் பெருமளவில் துணை நிற்பவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களேயாவர். நாடு, இனம், மொழி எனக் கடல் கடந்து சென்றாலும் நம் தமிழர்கள் பண்பாடு, மொழி, கலை போன்றவற்றால் தமக்கான அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தை விட்டுத் தொழில் காரணமாக அயல் நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள், தமிழைப் பேசவும், கேட்கவும் வழி இல்லாமல் இருந்த நிலையில் இணையம் மூலம் சந்தித்துக்கொள்ள தமிழில் மின்னஞ்சல்களையும், இணைய இதழ்களையும், இணையத் தளங்களையும் பயன்படுத்தினர்.</p>
<p dir="ltr">இதுபோன்ற ஆரம்பகட்ட முயற்சிகளே இன்று இணையத்தமிழ் என்ற துறையை வளர்த்தெடுத்தன. கணிப்பொறி வரலாற்றில் 1975-இல் தனிமனிதக் கணிப்பொறி (Personal Computer) கண்டுபிடிக்கப்பட்டதும், உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் தத்தமது மொழியைக் கணினியில் காண ஆர்வம் காட்டினர். இது போன்றே கணிப்பொறியில் தமிழைக் கொண்டு வரும் முயற்சியினை புலம் பெயர் தமிழர்கள் மேற்கொண்டனர். “தமிழ் எழுத்துருக் குறியாக்க முயற்சிகள் 1980-இன் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டன.”</p>
<p dir="ltr">உலகம் முழுவதிலும் பல்வேறு தமிழறிஞர்கள் 1984 முதல் 1995 வரை அவரவர்க்கென தனிகுறியீட்டு முறையை அமைத்து எழுத்துருக்கள், விசைப்பலகைகள் அமைத்து தமிழைக் கணினியிலும், இணையத்திலும் ஏற்றம் பெறச் செய்தனர். இணையத்தில் முதல் நிலையாகத் தாங்கள் கண்டுபிடித்த தமிழ் எழுத்துருக்கள் மூலமாக தமிழில் மின்னஞ்சல் அனுப்பினர். பின்னர் இணைய இதழ்களும், இணையத் தளங்களும் இணையத்தில் உருவாகின.</p>
<p dir="ltr">இத்தகைய குழப்பத்தால் முதல் தமிழ் இணைய இதழ் மற்றும் முதல் இணையத்தளம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.“1995-ஆம் ஆண்டில் நா. கோவிந்தசாமி “கணியன்” என்கிற பெயரில் நடத்தியதுதான் முதல் தமிழ் இணையத்தளம். இவ்விணையத்திற்கான தகவல்கள் சிங்கப்பூர் மற்றும் சென்னையிலிருந்து தொகுக்கப்பட்டன. இத்தளத்தினை படிக்க ‘கணியன்’ என்ற எழுத்துருவை பயன்படுத்த வேண்டும்.</p>
<p dir="ltr">இணையத்தில் முதல் தமிழ் தளம், இணைய இதழ் குழப்பம் நிலவினாலும் இன்று இணையத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் தளங்களும், இணைய இதழ்களும் வெளிவருகின்றன. இவற்றில் சங்க இலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியம், சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், திறனாய்வுக் கட்டுரைகள், நூலகம், இணையப் பல்கலைக்கழகம், அகராதிகள், சினிமா போன்ற ஏராளமான தகவல்கள் லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்டுள்ளன.</p>
<p dir="ltr"><b><b>இணையம்</b></b><b><b> </b></b><b><b>தொடர்பான</b></b><b><b> </b></b><b><b>மாநாடுகள்</b></b><b><b> –</b></b><b><b>கருத்தரங்குகள்</b></b></p>
<p dir="ltr">எந்தவொரு அமைப்பும் தோன்றுவதற்கு முன்னர் மாநாடுகளும், கருத்தரங்கங்களும் அவசியமாகின்றன. தமிழில் இணையத்தளங்கள் செம்மையுற அமைவதற்கு பல கருத்தரங்குகளும், மாநாடுகளும் நடத்தப்பட்டன. இவை அரசாலும், சில தனியார் அமைப்புகளாலும் நடத்தப்பட்டன.</p>
<p dir="ltr"><b>முதல்</b><b> </b><b>தமிழ்க்</b><b> </b><b>கணினி</b><b> </b><b>கருத்தரங்கு</b></p>
<p dir="ltr">‘தமிழும் கணிப்பொறியும்’ என்ற தலைப்பில் முதன் முதலில் கணினித்தமிழ் கருத்தரங்கு 1994-ஆம் ஆண்டு டிசம்பர் 5, 6 தேதிகளில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிப்பொறித்துறைப் பேராசிரியர் வெ. கிருஷ்ணமூர்த்தியின் அவர்களின் முன் முயற்சியால் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் முப்பதிற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைக்கப்பட்டன.</p>
<p dir="ltr">தமிழ் எழுத்துருக்கள், சொற் செயலிகள், கணினி கலைச் சொற்கள், மற்றும் விசைப்பலகையைத் தரப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இக்கருத்தரங்கு நடத்தப்பட்டன. இணையத்தமிழ் வரலாற்றில் இக்கருத்தரங்கம் ஒரு திருப்பமாக அமைந்தது.</p>
<p dir="ltr"><b>முதல்</b><b> </b><b>உலகத்</b><b> </b><b>தமிழ்</b><b> </b><b>இணைய</b><b> </b><b>மாநாடு</b></p>
<p dir="ltr">சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கை அடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் ‘தமிழ் இணையம் 97’ என்னும் பொருளில் முதல் தமிழ் இணைய மாநாடு 1997-ஆம் ஆண்டு மே 17, 18 தேதிகளில் நடைபெற்றது. சிங்கப்பூர் நாங்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியர் நா. கோவிந்தசாமியின் முன் முயற்சியால் இம்மாநாடு நடத்தப்பட்டது.</p>
<p dir="ltr">இம்மாநாட்டில் தமிழகம், மலேசியா, இலங்கை, சிங்கப்புர், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பல நாடுகளிலிருந்து தமிழ் மென்பொருள் வல்லுநர்களும், கணினித்தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டனர்.</p>
<p dir="ltr">இம்மாநாட்டில் இணையத்தளங்களில் தமிழ்ப் பொருண்மைகளை மிகைப்படுத்துதல், விசைப்பலகையைத் தரப்படுத்துதல், தமிழ் எழுத்துருக் குறியீட்டைத் தரப்படுத்துதல், மற்றும் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் பற்றியும், அடுத்த இணைய மாநாடு நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டு முடிவு செய்தனர்.</p>
<p dir="ltr"><b>இரண்டாவது</b><b> </b><b>உலகத்</b><b> </b><b>தமிழ்</b><b> </b><b>இணைய</b><b> </b><b>மாநாடு</b></p>
<p dir="ltr">இரண்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில், நடுவணரசின் அமைச்சராக இருந்த முரசொலி மாறனை வரவேற்புக் குழுத் தலைவராகக் கொண்டு 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7, 8 தேதிகளில் ‘தமிழ் இணையம் 99’ (Tamil Net 99) என்னும் தலைப்பில் நடத்தப்பட்டது.</p>
<p dir="ltr">இம்மாநாட்டில் விசைப்பலகைத் தரப்பாடு தொடர்பாகவும், எழுத்துரு தொடர்பாகவும் வழங்கப்பட்ட கருத்தாய்வுகளைத் தொகுத்து ஒருங்கிணைப்பு செய்ய இரு குழுக்கள் அமைக்கப்பட்டன.</p>
<p dir="ltr">உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அறிஞர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.</p>
<p dir="ltr">இம்மாநாட்டின் மூலமாக ஒரே தமிழ் எழுத்துமுறையாக ‘டாம்’ (TAM) வகையும், ஆங்கில தமிழ் கலப்பு எழுத்துரு முறையாக ‘டாப்’ (TAB) வகையும் அறிமுகப்படுத்தப்பட்டன.தமிழ் மென்பொருள் ஆராய்ச்சி மானியக்குழு ஒன்று அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்காக இணையம் வாயிலாக உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (Tamil Virtual University) ஒன்றை நிருவுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது, இன்று இப்பல்கலைக்கழகம் ‘tamilvu.org’ என்ற பெயரில் பல்வேறு வளர்ச்சி பெற்று இயங்கிவருகிறது.</p>
<p dir="ltr">இம்மாநாடு தமிழ் இணைய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.</p>
<p dir="ltr"><b>மூன்றாவது</b><b> </b><b>உலகத்</b><b> </b><b>தமிழ்</b><b> </b><b>இணைய</b><b> </b><b>மாநாடு</b><b> – 2000</b></p>
<p dir="ltr">மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு இலங்கையைச் சேர்ந்த கொழும்புவில் தோட்டத் தொழிலாளர்களின் அமைச்சர் தொண்டைமான் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. அரசியல் சூழ்நிலை காரணமாக சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்புர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருண் மகிழ்நன் ஒருங்கிணைப்பில் இம்மாநாடு 2000-ஆம் ஆண்டு ஜீலை மாதம் 22, 23, 24-ஆகிய நாட்களில் ‘தமிழ் இணையம் 2000’ எனும் தலைப்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ‘உத்தமம்’ – உலகத்தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்று தமிழிலும் INFIT – International Forum for Information Technology in Tamil என்று ஆங்கிலத்திலும் குழுவொன்று உருவாக்கப்பட்டது.உத்தமம் குழு உருவான பின்னர் பல்வேறு ஆய்வுப் பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவை, தமிழ் கலைச்சொல் தொகுப்பு, யூனிகோடு தமிழ் ஆய்வு, இணையத்தள தமிழ் முகவரி வடிவமைத்தல், தமிழ் வரிவடிவக் குறியீட்டுத் தரப்பாடு, ஆங்கில வரிவடிவத் தமிழ்த் தரப்பாடு, தமிழ் எழுத்துரு படித்தறிதல் (Tamil OCR), லினக்ஸில் தமிழ் (Tamil in Linux), தமிழ் அனைத்து எழுத்துரு 16-பிட்டு தரம் போன்ற ஆய்வுகளை நடத்தி வருகின்றன.இக்குழுவில் உலகம் முழுவதிலும் வாழும் பல்வேறு தமிழ் கணினி வல்லுநர்கள் ஒன்றிணைந்தனர். இக்குழு மூலமே இனிவரும் காலங்களில் உலக இணையத் தமிழ் மாநாடுகள் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டன.</p>
<p dir="ltr"><b>நான்காவது</b><b> </b><b>உலகத்</b><b> </b><b>தமிழ்</b><b> </b><b>இணைய</b><b> </b><b>மாநாடு</b><b> – 2001</b></p>
<p dir="ltr">நான்காம் உலகத் தமிழ் இணைய மாநாடு 2001-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இம்மாநாடு ‘வளர்ச்சிக்கான வழிகள்’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.இம்மாநாட்டில் ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ (Tamil Heritage Foundation) என்னும் அமைப்பு ஜெர்மனி பேராசிரியர் நா. கண்ணன் தலைமையில் துவக்கப்பட்டது. இவ்வமைப்பிற்கு அந்நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமுவேல் அவர்கள் 10000 அமெரிக்க டாலர் நிதியை வழங்கினார். சர்வதேச அளவில் நூற்றுக்கணக்கான அறிஞர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் சுமார் ஐம்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைக்கப்பட்டன.</p>
<p dir="ltr"><b>ஐந்தாம் உலகத் தமிழ் இணைய மாநாடு – 2002</b></p>
<p dir="ltr">ஐந்தாம் உலகத் தமிழ் இணைய மாநாடு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27, 28, 29-ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ‘மின் இணையப் பயன்பாட்டில் மக்களிடையே நிலவும் இடைவெளியை குறைத்தல்’ – ‘Bridging the Digital divide’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இம்மாநாடு நடைபெற்றது.இம்மாநாட்டில் தமிழ்த்தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி உள்ளிட்ட பல பணித்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன், தமிழ் யூனிகோடு சிக்கல்கள் தொடர்பாக யூனிகோடு குழும உறுப்பினர்களோடு கலந்தாய்வு, உலக அளவில் நடத்தப்பட்ட இணையதள வடிவமைப்புப் போட்டி ஆகியன இடம் பெற்றன.இம்மாநாட்டில் தான் திரு. மணி மணிவண்ணன் முயற்சியால் ‘உத்தமம்’ அமெரிக்காவில் ஒரு பதிவுபெற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டது. மேலும் இம்மாநாட்டில் மின்னஞ்சல் இணையத்தளங்கள் வழி தகவல் பரிமாற்றம், பல்லூடக அடிப்படையில் இணையவழிக் கல்வி, இணையவழி நூலகம், மின்-ஆளுமை போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.</p>
<p dir="ltr">ஆறாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2003</p>
<p dir="ltr">ஆறாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2003-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22, 23, 24-ஆம் தேதிகளில் ‘தமிழ்க் கல்விக்குத் தகவல் தொழில்நுட்பம்’ என்னும் தலைப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.</p>
<p dir="ltr"><b>ஏழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2004</b></p>
<p dir="ltr">ஏழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11, 12-ஆம் தேதிகளில் நடைபெற்றது. ‘நாளைய தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் – Tamil IT for Tomorrow’ என்னும் கருப்பொருளில் நடைபெற்றது.</p>
<p dir="ltr"><b>எட்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு – 2009</b></p>
<p dir="ltr">சிங்கப்பூரில் நடைபெற்ற ஏழாவது இணைய மாநாட்டிற்குப் பிறகு 2005, 2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகள் தமிழ் இணைய மாநாடுகள் நடைபெறவில்லை. பின்னர் 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23, 24, 25 ஆகிய தேதிகளில் எட்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்மாநாடு ‘கணினிவழிக் காண்போம் தமிழ்’ என்னும் மையப்பொருளில் நடைபெற்றது. இணையவழிக் கல்வி, மொழிப் பகுப்பாய்வு, தமிழ்த்தரவுகள், மின்னகராதிகள் ஆகிய பொருண்மையில் கட்டுரைகள் படிக்கப்பட்டன.</p>
<p dir="ltr"><b>ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2010</b></p>
<p dir="ltr">தமிழ்மொழி செம்மொழியென நடுவணரசால் அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விழாவாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் 2010-ஆம் ஆண்டு ஜீன் மாதம் 23-27 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாட்டு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டோடு இணைந்து ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடு ‘இணையம் வளர்க்கும் தமிழ்’ என்னும் கருப்பொருளில் நடத்தப்பட்டது.இம்மாநாட்டில் இணையவழி தமிழ் கற்றல்-கற்பித்தல், கணினிவழி மொழியியல் ஆய்வுகள், சொற்திருத்திகள், பேச்சு மற்றும் சொற்பகுப்பு ஆய்வுகள், எழுத்து உணரி செயற்பாடுகள், கையடக்க கருவிகளில் தமிழ், தமிழ் ஒருங்குறி போன்ற தலைப்பினை ஒட்டி பல்வேறு கட்டுரைகள் படிக்கப்பட்டன.இம்மாநாட்டில் நடுவணரசின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சராயிருந்த ஆ. இராசா தமிழ் மென்பொருள்கள் மற்றும் கல்விக்கான குறுந்தகடை வெளியிட்டார். இம்மாநாட்டில் தமிழ் ஒருங்குறி (Unicode)யே இனி அரசின் அதிகாரப்பூர்வமான எழுத்துருவாக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.</p>
<p dir="ltr"><b>பத்தாவது</b><b> </b><b>உலகத்</b><b> </b><b>தமிழ்</b><b> </b><b>இணைய</b><b> </b><b>மாநாடு</b><b> – 2011</b></p>
<p dir="ltr">உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. அதற்கு அடுத்து பத்தாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டினை உத்தமம் அமைப்பு 2011 ஜீன் மாதம் 17 முதல் 19-ஆம் தேதிவரை அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஹெராய்டு ஷிஃப்மேன் மற்றும் முனைவர் வாசு அரங்கநாதன் முன்னின்று நடத்தினர்.</p>
<p dir="ltr"><b>ஆதாரம் </b>: தமிழ் இணைய இணையம்</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-29223140720972074282019-03-27T00:53:00.001+05:302019-03-27T00:53:13.240+05:30இணையத்தமிழ்<p dir="ltr">*இணையத்தமிழ் -ஓர் ஆய்வு.*<br>
(Internet Tamil -A study)</p>
<p dir="ltr">கணித்தமிழ், கணினித்தமிழ், இணையத்தமிழ் என்று பல்வேறு சொற்தொடர்களால அழைக்கப்பட்டாலும் இச்சொற்தொடர்களெல்லாம் ஒரு பொருளையே சுட்டுகின்றன. கடந்த இருபது வருடங்களில் இணையத்தமிழ் பல்வேறு துறைகளிலும் காத்திரமாகக்கால்பதித்து ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது. இணையத்தமிழின் வளர்ச்சி நம்பிக்கையூட்டுவது. மகிழ்ச்சியினைத்தருவது. ஆனால் , இணையத்தின் சகல ஆரோக்கியமான அம்சங்கள் பலவற்றை கலை, இலக்கியத்துறையிலுள்ளவர்கள் அனைவரும் முறையாகப் பாவிக்கின்றார்களா? பாவித்துப் பயனடைகின்றார்களா? என்று பார்த்தால் கிடைக்கின்ற பதில் ஏமாற்றமே. இங்குள்ள எத்தனை பேர் வலைப்பூக்களை வைத்திருக்கின்றீர்கள்? எத்தனைபேர் மின்னூல்களைப் பதிப்பித்திருக்கின்றீர்கள்? எத்தனைபேர் இணைய இதழ்களில் எழுதுகின்றீர்கள்? எத்தனைபேர் இணைய இதழ்களை நடாத்துகின்றீர்கள்? இன்று கூட இணையத்தில் தமிழில் எழுதத்தெரியாதவர்கள் பலர் இருக்கின்றார்கள். பாமினி எழுத்துருவில் எழுதியதை ஒருங்குகுறி எழுத்துக்கு மாற்றத்தெரியாதவர்கள் இருக்கின்றார்கள்? இன்று விண்டோஸ் போன்ற 'ஒபரேட்டிங் சிஸ்டம்' எல்லாம் ஒருங்குறியை மையமாகக்கொண்டே இயங்குகின்றன. இருந்தும் MSWord போன்ற விண்டோஸ் அப்ளிகேசன்களில் தமிழில் எழுத எத்தனை பேருக்குத்தெரியும்? இணையத்தில் பலருக்குத் தமிழ்ப்பாட்டுகளைக் கேட்பதும், முகநூலில் புகைப்படங்களை இடுவதும் போன்ற செயற்பாடுகளுடன் பொழுது முடிந்துவிடுகின்றது. இதற்கு முக்கிய காரணம் இணையத்தொழில்நுட்பம் வழங்கும் பயன்கள் பற்றிய பூரண அறிவில்லாமலிருப்பதும், அவற்றை எவ்விதம் பாவிப்பது என்பதுபற்றிய தெளிவில்லாமலிருப்பதும்தான் என்று கருதுகின்றேன்.</p>
<p dir="ltr">கடந்த பல வருடங்களாக தமிழகம், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பல கணினித்தமிழ் பற்றிய ஆய்வரங்குகள் பல நடைபெற்றிருக்கின்றன. கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் பல நடைபெற்றிருக்கின்றன. அந்த வகையில் 'டொராண்டோத்தமிழ்ச்சங்கத்தினர்' நடாத்தும் இந்தக்கருத்தரங்கும் முக்கியமானதோர் ஆரம்பம். மாதாமாதம் இதுபோன்று பல்துறைகளில் கருத்தரங்குகள் நடாத்தி வருவதன் மூலம் ஆரோக்கியமான செயற்பாட்டினைச்செய்துவரும் டொராண்டோத்தமிழ்ச்சங்கத்தினருக்கு எனது பாராட்டுகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.</p>
<p dir="ltr">இணையத்தமிழ் பற்றிச் சுருக்கமான அறிமுகத்தைத்தருவதும், அவற்றைப்பாவித்து பயன்களை எவ்விதம் அடைவது என்பது பற்றியும், இணையத்தமிழின் வளர்ச்சிக்காக இணையத்தொழில் நுட்பம பற்றிய அறிவினை மேலும் எவ்விதம் அதிகரிப்பது என்பது பற்றியும் பார்ப்பதே இக்கட்டுரையின் முக்கியமான நோக்கம்.</p>
<p dir="ltr">இணையத்தமிழ் பற்றிய சுருக்கமான அறிமுகம்.</p>
<p dir="ltr">இணையத்தமிழ் பற்றிக்குறிப்பிடும் முனைவர் மு.பழனியப்பன் "ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதாம் ஆண்டு முதல் கணினியில் தமிழ் இடம் பெற ஆரம்பித்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு முதல் தமிழ் இணையத்தில் உலாவர ஆரம்பித்தது. இணையத்தில் தமிழ் இடம் பெற்று ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த சூழலில் அதன் வளர்ச்சி குறிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கணினி அல்லது இணையம் தமிழை வளர்க்க ஒரு துணை கருவியாகப் பயன்பட்டு வந்தது. ஆனால் தற்போது கணினித் தமிழே தனித் துறையாக வளர்ந்து வருகிறது. ஆங்கில வழியாகக் கற்ற கணினித் தொழில் நுட்ப வல்லுநர்கள் மெல்லத் தமிழில் நுழைந்து தொழில் நுட்பங்களைத் தமிழ்ப் படுத்தித் தமிழ இணையத்தை வலுப் பெறச் செய்து வருகின்றனர்" என்பார்.</p>
<p dir="ltr">இணையத்தில் தமிழினால் அதாவது இணையத்தமிழினால் ஏற்படும் முக்கியமான நன்மை பற்றிக்குறிப்பிடும் அவர் "கல்வெட்டுக்களிலும், ஓலையிலும், காகிதத்திலும் உலா வந்த தமிழ தற்போது வலையேறி இணையத்தில் இணைந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளத்தில் அழியாமல், வெந்தணலில் வேகாமல், கள்வரால் கொள்ளப்படாமல் காக்கின்ற நிலைபெற்ற தன்மைக்குத் தமிழ் வந்துவிட்டது." என்பார்.</p>
<p dir="ltr">இணையத்தின் முக்கியமான அம்சங்களாக தேடுபொறிகள், நூலகங்கள், கலைக்களஞ்சியங்கள், இணைய இதழ்கள், மின்னூல்கள், சமூக ஊடகங்கள் மற்றும் வலைப்பூக்கள் ஆகியவற்றைக்குறிப்பிடலாம். இவை அனைத்தையும் தமிழ் மொழி மூலம வாசிக்கும் வகையில் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. சுருக்கமாகத்தமிழ் எவ்விதம் இத்தொழில்நுட்பங்களில் நுழைந்து சிறந்து விளங்குகின்றதென்பதைப்பார்ப்போம்.</p>
<p dir="ltr">நூலகங்கள் மற்றும் கலைக்களஞ்சியங்கள்!</p>
<p dir="ltr">இணையத்தொழில்நுட்பத்தின் வாயிலாக இணையத்தில் தமிழ் நூலகங்கள் , கலைக்களஞ்சியங்கள் போன்றவை விளங்குகின்றன. தமிழகத்தமிழர்கள், மற்றும் உலகின் பல பாகங்களிலும் வாழும் தமிழர்கள் எனப்பலராலும் இவ்வகையான நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வகையான நூலகங்களுக்கு ஆக்கங்களைத் தட்டச்சு செய்து அவற்றை நூல்களாக்கிப்பதிவேற்றுவதென்பது மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் பணி. பல தன்னார்வத்தொண்டர்களின் சேவையினால் இப்பணி சாத்தியமாகியுள்ளது.</p>
<p dir="ltr">இவ்வகையான நூலகங்களினால் என்ன பயன் என்று பார்த்தால் முக்கியமான பயன்களாகப் பின்வருவனற்றைக் கூறலாம்.</p>
<p dir="ltr">* சங்க காலத்து இலக்கியங்கள் தொடக்கம், தற்கால இலக்கியப்படைப்புகள் வரையில் நூல்களை அதிக அளவில் இவ்வகையான நூலகங்களில் சேகரித்து வைக்க முடியும். இவ்வளவு நூல்களையும் வீடுகளில் சேர்த்து வைப்பதென்பது மிகுந்த இடத்தை அடைத்துக்கொள்ளுமென்பதால் பலருக்குச் சாத்தியமாகாத விடயமது. மேலும் இந்நூல்கள் அனைத்தையும் வாங்கி வைப்பதென்றால் மிகவும் செலவான விடயமது. ஆனால் இந்நூல்களை ஆயிரக்கணக்கில் மிகவும் இலகுவாக இணையத்தில் சேகரித்து வைக்க முடியும். இதனால் அச்சு நூல்களைப் பாவிக்கும் நிலை குறைவடைகின்றது. இது சூழலுக்குத் தொலை நோக்கில் மிகுந்த பயனுள்ளது.</p>
<p dir="ltr">* இந்நூலகங்கள் வாயிலாக வருடத்தில் எந்த நாளிலென்றாலும், எந்த நேரத்திலென்றாலும் இங்கு காணப்படும் நூல்கள், சஞ்சிகைகளை வாசிக்க முடியும். பொதுவாக நூலகங்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பாவிக்க முடியும்.</p>
<p dir="ltr">* கலை, இலக்கியம் பற்றிய பல்வேறு ஆய்வுகளுக்கு இந்நூலகங்கள் மிகுந்த உதவியாக இருக்கின்றன. உதாரணமாக நூலகம் மற்றும் படிப்பகம் ஆகிய இணைய நூலகங்களில் மல்லிகை, சிரித்திரன், கலைச்செல்வி, மல்லிகை, தாயகம் (கனடா), தேடல் (கனடா), வைகறை (கனடா), சுவடுகள் (நோர்வே), உயிர்நிழல் (பிரான்சு) , ழகரம் (கனடா) போன்ற பல சஞ்சிகைகளைச் சேகரித்து வைத்திருக்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் (புலம் பெயர்ந்த தமிழர்களையும் உள்ளடக்கி) படைப்புகள் (புனைவுகள், அபுனைவுகள்) பல இந்நூலகங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.</p>
<p dir="ltr">* மின் நூலகங்களை அமைப்பதற்குச் செலவு அதிகமில்லை. இணையத்தளமொன்றினை உருவாக்கி இயக்குவதற்குரிய சேவையினை இணைய சேவை வழங்குநர் ஒருவரிடமிருந்து இலவசமாக அல்லது மிகவும் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ள முடியும். இணையப்பக்கங்களை அமைப்பதற்குரிய தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியினைப் பெரும்பாலும் தன்னார்வத்தொண்டு அடிப்படையில் பெற்று நூலகங்களை அமைத்துக்கொள்ள முடியும்.</p>
<p dir="ltr">* இவ்விதமான நூலகங்களின் சேவையினை இலட்சக்கணக்கான மக்கள் உலகின் பல பாகங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.</p>
<p dir="ltr">இதுபோன்ற பல காரணங்களைக் கூற முடியும். உதாரணத்துக்குச் சில முக்கியமான நூலகத்தளங்களைப் பார்ப்போம்.</p>
<p dir="ltr">* மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் (Project Madurai) | இதற்குரிய இணையத்தள முகவரி: http://www.projectmadurai.org/</p>
<p dir="ltr">இத்திட்டம் பற்றி இத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிமுகத்தின்படி 1998இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் எந்தவித அரசாங்க மற்றும் தனியார் நிறுவன உதவியின்றி , வியாபார நோக்கற்று , தன்னார்வத்தொண்டர்களின் சேவையினால் உருவாகிப்பராமரிக்கப்பட்டுவரும் திட்டம் என்று கூறப்பட்டுள்ளது.</p>
<p dir="ltr">ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்துகள் பாவிக்கப்பட்டு மின்பதிப்புகள் உருவாக்கப்பட்டாலும் 1999ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தகுதர அதாவது 'திஸ்கி' (TSCII - Tamil Script Code for Information Interchange) எனப்படும் எழுத்துருகொண்டு உருவாக்கப்பட்ட மின்பதிப்புகளும், 2003ஆம் ஆண்டிலிருந்து ஒருங்குக்குறி (Unicode) எழுத்துருகொண்ட மின்பதிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.</p>
<p dir="ltr">இத்திட்டதிலுள்ள மின்பதிப்புகள் இணையப்பக்க வடிவிலும் (HTML Format), PDF வடிவிலும் காணப்படுகின்றன. இவற்றை நீங்கள் இணையத்திலேயே வாசித்துக்கொள்ளலாம் அல்லது உங்கள் கணினிகளுக்குப் பதிவிறக்கிச் சேமித்துத் தேவையானபோது வாசித்துக்கொள்ளலாம்.</p>
<p dir="ltr">இத்திட்டத்தில் காணப்படும் நூல்களில் சில: திருக்குறள், அவ்வையார் நூல்கள், திருவாசகம் போன்ற சமய நூல்கள், நளவெண்பா, பாரதியார் பாடல்கள், சிலப்பதிகாரம், புறநானூறு, இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம், கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, ஜெயகாந்தனின் சிறுகதைத்தொகுதிகள் மூன்று, கம்பராமாயணம், நா.பார்த்தசாரதி நாவல்கள் (பாண்டிமாதேவி, சமுதாய வீதி இவ்விதம் 512 நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.</p>
<p dir="ltr">* சென்னைநூலகம்.காம் | இதற்குரிய இணையத்தள முகவரி: http://www.chennailibrary.com/index.html<br>
2006 செப்டம்பர் 25 ஆரம்பமாகிய இந்நூலகம் தமிழ் நூல்களை முற்றிலும் இலவசமாக வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். கோ.சந்திரசேகரனால் நடாத்தப்பட்டுவரும் இந்நூலகத்தின் ஆரம்பக்காலகட்டத்தில் ஆலோசனைகள் கூறி உதவிய தேன்கூடு நிறுவனரான திரு.சாகரன் அவர்களின் பங்களிப்பு முக்கியமானதென்பதைத தளம் பற்றிய அறிமுகத்தில் குறிப்பிடடப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டிலிருந்து இத்தளமானது "கௌதம் வெப் சர்வீசஸ்" (Gowtham Web Services) நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p dir="ltr">இத்தளத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், சைவ சித்தாந்த நூல்கள், இலக்கண நூல்கள், கம்பராமாயணம் போன்ற்) தொடக்கம் தற்கால இலக்கியப்படைப்புகள் வரை (ராஜம் கிருஷ்ணன் படைப்புகள், நா.பார்த்தசாரதி, சு.சமுத்திரம், புதுமைப்பித்தன், கல்கி, அறிஞர் அண்ணா, ந.பிச்சமூர்த்தி போன்றோரின் பல படைப்புகள்) இத்தளத்தில் இலவசமாக வாசிக்க முடியும். பதிவிறக்கிக்கொள்ள முடியும். அதே சமயம் இந்நூலகத்தில் உறுப்பினர்களாகச் சேருவதன் மூலம் இந்நூலகத்தின் அனைத்து மின்னூல்களையும் இலவசமாகப்பதிவிறக்கிக்கொள்ள முடியும். அத்துடன் கெளதம் பதிப்பக வெளியீடுகளை 20% தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளவும் முடியும். உறுப்பினர்களிலும் பல்வேறு வகையான பிரிவுகள், ( அடிப்படை உறுப்பினர் / சிறப்பு உறுப்பினர் / கெளரவ உறுப்பினர் ) உண்டு.</p>
<p dir="ltr">இத்தளத்தில் தேடுதலுக்காக தேடுபொறி வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.</p>
<p dir="ltr">* முக்கியமான இன்னுமொரு தளம் தமிழ் இணையக்கல்விக்கழகம் ஆகும். முன்னர் தமிழ் இணையப்பல்கலைக்கழகம் என்றழைக்கப்பட்ட தளம்தான் இன்று இவ்விதம் மாறியுள்ளது.</p>
<p dir="ltr">இத்தளத்தின் நூலகத்தில் நூல்கள்,அகராதிகள், கலைச்சொற்கள், சுவடிகள், நிகண்டுகள், சுவடிக்காட்சியகம், பண்பாட்டுக்காட்சியகம் என்ற பிரிவுகளுண்டு. இத்தளத்தில் தேடுபொறி வசதியுமுண்டு.</p>
<p dir="ltr">நூல்களைப்பொறுத்தவரையில் இலக்கணம், சங்க இலக்கியம், காப்பியங்கள், இருபதாம் நூற்றாண்டு கவிதைகள் / உரைநடைகள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், மற்றும் அகராதிகள், நிகண்டுகள் போன்ற பிரிவுகளில் நூற்றுக்கணக்கில் நூல்களூள்ளன. இது தவிர பல்வேறு வகையான கற்கை நெறிகளில் கல்வி கற்றும் பட்டங்கள் பெறும் வசதிகளையும் கொண்டது. இத்தளத்தின் இணையத்தள முகவரி: http://www.tamilvu.org/</p>
<p dir="ltr">இவை தவிர மேலும் முக்கியமான இரு தளங்கள் ஈழத்தமிழர்களால் நடாத்தப்பட்டு வருவது. நூலகம் ( http://www.noolaham.org ) , படிப்பகம் ஆகிய இணைய நூலகங்கள் ஆகும். நூலகம் தளத்தின் இணையத்தள முகவரி: http://www.noolaham.org இத்தளத்தில் நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், பிரசுரங்கள் ஆகியன எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வெளியிட்ட ஆண்டு ஆகிய பகுப்புகளில் பிரித்து வெளியிட்டுள்ளார்கள். மேலும் தளத்திலுள்ள விடயங்களை மலையக ஆவணகம், முஸ்லீம் ஆவணகம், இதழகம், வாசிகசாலை, சுவடியகம், நிறுவனங்கள், ஆளுமைகள் போன்ற பல உபபிரிவுகளில் இலகுவாகப்பெறும் வசதியினையும் செய்துள்ளார்கள். தளத்தின் செயற்பாடுகளுக்குப் பல்வேறு வழிகளில் உதவிய தன்னார்வத்தொண்டர்கள் பற்றிய விபரங்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள், வெளிவந்த சஞ்சிகைகள் போன்றவற்றை இந்நூலகத்தில் வாசிக்கலாம். எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளையும் அனுப்பி வைக்கலாம். தங்கள் தளத்தின் நோக்கம் "நூலகத் திட்டம்: இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி." என்று குறிப்பிடும் நூலகக்குழுவினரின் சேவை பாராட்டுதற்குரியது.</p>
<p dir="ltr">இது போன்ற இன்னுமொரு நூலகம்தான் 'படிப்பகம்" இணையத்தளமும் ஆகும். இதன் இணையத்தள முகவரி: http://padippakam.com/ இப்படிப்பகத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகப்போராடிய அரசியல் அமைப்புகளின் பிரசுரங்கள், வரலாற்றுப்பதிவுகள், புலம் பெயர் தமிழர்களினால் வெளியிடப்பட்ட சஞ்சிகைகள் பலவற்றின் pdf வடிவப்பிரதிகள், மார்க்சிய நூல்கள், இயக்கங்கள், தமிழ் அரசியல் கட்சிகள் பற்றிய விபரங்கள் என படைப்புகள் பலவற்றை படிக்கலாம்.</p>
<p dir="ltr">இங்கு இன்னுமொருவரின் இணையத்தளத்தினையும் நிச்சயம் பதிவிட வேண்டும். பொள்ளாச்சி நசனின் 'தமிழம்' என்ற தளத்தினைத்தான் கூறுகின்றேன். இணையத்தள முகவரி: http://www.thamizham.net/ 1903 ஆம் ஆண்டிலிருந்து வெளியான சிற்றிதழ்கள் பலவற்றின் பட்டியல்கள், 31,000 வரையில் மின்னூல்கள் (பிடிஃப் கோபபாக) என மேலும் பல அரிய கதவல்களுடன் விளங்கும் தளமிது.</p>
<p dir="ltr">தமிழ் விக்கிபீடியாவும் மறக்கப்பட முடியாத தளங்களிலொன்று. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவின் தமிழ் வடிவமிது. இதன் இணையத்தள முகவரி:</p>
<p dir="ltr">இவை போன்ற மேலும் பல முக்கியமான இணையத்தளங்கள் இருக்கும்; இருக்கலாம். எல்லாவற்றையும் விரிவாக இங்கு கூற முடியாது. எனக்கு முக்கியமானவை என்று பட்டவற்றையே இங்கு தந்துள்ளேன்.</p>
<p dir="ltr">இணைய இதழ்கள் மற்றும் வலைப்பூக்கள் பற்றி....</p>
<p dir="ltr">இணைய இதழ்களைப்பற்றிக்குறிப்பிடுகையில் இணையத்தில் மட்டுமே வெளிவரும் இதழ்களூள்ளன; அச்சூடகங்களின் இணையப்பதிப்புகளுமுள்ளன. அவையும் இணையத்தில் வெளிவரும் இதழ்கள்தாம். இருந்தாலும் இணையத்தில் மட்டுமே வெளியாகும் இதழ்களை மட்டுமே இணைய இதழ்கள் என்று அழைக்கும்போக்கு தமிழ் அறிஞர்களிடையே நிலவுகின்றது. சு. துரைக்குமரன் பி.லிட் , எம்.ஏ அவர்களும் 'தமிழ் இணைய இதழ்கள் ஒரு முன்னோட்டம்' என்ற கட்டுரையில் :அச்சு இதழ்களி¢ல் பேர்போன இதழ்களும் தங்கள் இதழ்ப்பகுதிகளை இணையவழியாகத் தந்து வருகின்றன. அவற்றை மீள்பிரசுரம் என்பதாகக் கருத இயலுமே தவிர இணைய இதழ்களாகக் கருதத் தகாது." என்று கூறுவார். இணையத்தில் மட்டுமே வெளிவரும் இதழ்கள்தாம் இணையத்தில் தமிழை முதலில் ஏற்றின. அந்த அடிப்படையிலேயே இணைய இதழ்கள் பற்றி இக்கட்டுரையாளரின் கருத்துமுள்ளது.</p>
<p dir="ltr">இணையத்தொழில்நுட்பம் வெளிவருவதற்கு முன்னர் ஒரு சஞ்சிகையினை வெளிக்கொணர்வது மிகுந்த பொருட் செலவு மிக்கது. அவ்விதம் வெளியாகும் சஞ்சிகைளும் கூட 500 அல்லது 1000 பிரதிகள் வரையில் அல்லது இவற்றிலும் குறைவான எண்ணிக்கையிலேயே அச்சடிக்கப்படுவதும் வழக்கம். இவ்விதம் வெளியாகும் சஞ்சிகைகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே நின்று விடுவது வழக்கம். ஆனால் இணையம் இந்த நிலையினை மாற்றியது. கலை, இலக்கியத்தில் ஆர்வம் மிக்க ஒருவர் , இணையத்தொழில் நுட்பமும் அறிந்திருந்தால் , அத்துடன் நோக்கத்தில் அர்ப்பணிப்பும் இருந்தால் தனித்து ஒருவராலேயே இணைய இதழொன்றினைக் கொண்டுவரமுடியும். அதற்குதாரமாக நான் என்னையே கூறுவேன். 2000ஆம் ஆண்டிலிருந்து 'பதிவுகள்' இணைய இதழ் வெளிவருகின்றது. உலகின் பல பாகங்களிலிருந்தும் பதிவுகள் இணைய இதழுக்குத் தீவிர வாசகர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் அதிகமான வாசகர்களிருக்கிறார்கள். பல படைப்பாளிகளுக்குப் பதிவுகள் களமைத்துக்கொடுக்கிறது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் பதிவுகள் இணைய இதழுக்கு மிகுந்த மரியாதையும், வரவேற்புமுண்டு. அதனால்தான் பதிவுகள் இணைய இதழுக்குத் தமிழகத்துப் பல்கலைக்கழகங்களிலிருந்து ஆய்வுகள் கட்டுரைகள் அனுப்பப்படுகின்றன. இதனைச் சாதிக்க வைத்தது இணையம்தான். இங்கிருக்கும் நீங்களும் இது போன்ற இணைய இதழ்களை நடத்த முடியும். ஆர்வமிருந்தால், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பிருந்தால் நிச்சயம் மிகவும் இலகுவாக இணைய இதழொன்றினை நடாத்திட முடியும்."</p>
<p dir="ltr">இணைய இதழ்களைப்பற்றி 'இணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்' என்னும் கட்டுரையில் முனைவர் பழனியப்பன் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:</p>
<p dir="ltr">"இணையில்லா இணைய இதழ்கள்: தற்காலத்தில் இணைய இதழ்கள் குறிக்கத்தக்க அளவில் வாசகத் தளத்தைப் பெற்றுவருவது கவனிக்கத்தக்கது. இணையத்தில் மட்டுமே தன் ஆளுமையைச் செலுத்தும் இதழ்களே இணைய இதழ்கள் ஆகும். இவ்வகையில் திண்ணை http://www.thinnai.com, பதிவுகள்http://www.pathivukal.com, வார்ப்பு http://www.vaarppu.com(கவிதையிதழ்), நிலாச்சாரல்http://www.nillasaral.com, வரலாறு.காம் http://www.varalaaru.com, தமிழ்த்திணை, முத்துக்கமலம் போன்ற பல இதழ்களைக் குறிப்பிடலாம். பல இலட்சங்கள் போட்டு அச்சிதழாகக் கொண்டுவருவதைக் காட்டிலும் இவ்விதழ்கள் வண்ணமயமாக அதிக பணச்செலவின்றி வாசகர்களை எட்டும் நிலையில் சிறந்தனவாகும். மேலும் இவ்விதழ்களில் வந்த ஆக்கங்களை பகுதி பிரித்து வைத்துக் கொள்ள முடியும். மேலும் நாள்படி, ஆசிரியர்படி தேட முடியும் என்பது இன்னுமொரு சிறப்பு. இதனைத் தமிழ் இணைய இதழ்கள் அனைத்தும் கடைபிடித்து வருவது குறிக்கத்தக்கது. உலகத் தமிழர்கள் ஒருங்கு கூடும் இடமாக இந்த இணைய இதழ்கள் விளங்குகின்றன. பிரபலமான எழுத்தாளர்களும் இதில் எழுதி வருவது குறிக்கத்தக்கது."</p>
<p dir="ltr">வலைப்பூக்கள் பற்றிச்சில வார்த்தைகள் .....</p>
<p dir="ltr">இணையத்தளங்களை வடிவமைப்பதற்கு ஒருவருக்கு அவற்றை வடிவமைப்பதற்குரிய தொழில்நுட்ப அறிவு அவசியம். HTML , Java script, CSS போன்ற அடிப்படை அறிவு தேவை. தளத்தினை நிறுவிப்பராமரிப்பதற்கு ஒரு 'சேர்வர்' என்னும் கணினி அல்லது அச்சேவையினை வழங்குமொரு நிறுவனத்தின் உதவி தேவை. ஆனால் இவை எதுவுமில்லாமல் ஒருவரால் வாசகர்களுடன் தம் படைப்புகளையும், அவர்களின் பின்னூட்டங்களையும், கால வரிசைப்படி , பல்வேறு படிம அச்சுகளில் (Templates) இலவசமாக உருவாக்கவும் , அவ்விதம் உருவாக்கிய படைப்புகளை உலகமெங்கும் பரந்து வாழும் ஏனைய வலைப்பதிவாளர்களுடனும், பொதுமக்களுடனும், கலை, இலக்கிய ஆளுமைகளுடனும் பகிர்ந்துகொள்ள முடியும். சில சமயங்களில் இவ்விதமாக உருவாக்கப்படும் இணையத்தளங்களின் மூலம் மேலதிகமாக வருமானமும் பெற்றுக்கொள்ள முடியும். இவ்விதமான தொழில் நுட்பம்தான் வலைப்பதிவுகளாகும். ஆங்லிலத்தில் 'பிளாக்ஸ்' என்பார்கள். Web Blogs என்பதன் சுருங்கிய வடிவம்தான் ''பிளாக்' ஆகும்.</p>
<p dir="ltr">இந்தவிதமான வலைப்பதிவுகள் இணையத்தில் பல்வேறு மொழிகளிலும் மில்லியன் கணக்கிலுள்ளன. இவற்றை உருவாக்குவதற்கு உங்களிடம் சொந்தமாகக்கூடக் கணினி இருக்க வேண்டிய தேவையில்லை. பொதுநூலகங்களில் அல்லது இணையச்சேவை வழங்கும் நிறுவனங்களிலுள்ள கணினிகள் மூலமும் உருவாக்க முடியும்.</p>
<p dir="ltr">வர்த்தகம், இலக்கியம், சினிமா, பெண்ணியம், பங்குச்சந்தை, விளையாட்டு என்று எந்தத்துறையிலும் எண்ணிலடங்கா வலைப்பதிவுகளை இணையப்பரப்பில் காணலாம். கூகுள் போன்ற தேடு பொறியில் தேடுவதன் மூலம் இவற்றைக்கண்டு கொள்ளலாம்.</p>
<p dir="ltr">வலைப்பூக்கள் எண்ணிலடங்காதனவாகவிருப்பதால், இவற்றைத்திரட்டித்தரும் இணையத்தளங்களும், 'தமிழ்மணம்' போன்ற, இருக்கின்றன. இவை திரட்டித்தருவதால் 'திரட்டிகள்' எனவும் அழைக்கப்படுகின்றன. திரட்டி, வலைப்பூக்கள், தமிழ்மணம், தேன்கூடு போன்றவற்றை உதாரணத்துக்குக் கூறலாம்.</p>
<p dir="ltr">இவ்விதமான வலைப்பூக்களை உருவாக்குவதற்குப் பல நிறுவனங்களுள்ளன. இருந்தாலும் முக்கியமான இரு நிறுவனங்களாகப்பின்வரும் நிறுவனங்களைக்கூறலாம்:</p>
<p dir="ltr">1.பிளாக்கர்ஸ்.காம் (http://www.blogger.com)<br>
2.வேர்டுபிரஸ்.காம் (http://www.wordpress.com)</p>
<p dir="ltr">இத்தளங்களில் ஏதாவதொன்றில் அங்கத்தவராக இணைந்து, அத்தளங்கள் வழங்கும் தொழில்நுட்ப உதவிகளைக்கொண்டு நீங்கள் சில நிமிடங்களிலேயே உங்களுக்கான வலைப்பதிவினை உருவாக்கி விடலாம். உங்களுக்கு மட்டுமேயுரிய தனித்துவமான 'டொமைன்' பெயர் வேண்டுமானால் மாதாந்தக் கட்டணத்தில் அவ்விதமான வலைப்பூக்களை அந்நிறுவனங்களினூடு உருவாக்கிக்கொள்ளலாம்.</p>
<p dir="ltr">நடிகர்கள் , எழுத்தாளர்கள் எனச் சமூகத்தின் பல்வேறு ஆளுமைகளில் பலரும் வலைப்பூக்களை வைத்திருக்கின்றார்கள்.</p>
<p dir="ltr">ஆங்கிலத்திலும், தமிழிலும் இது பற்றிய விளக்கங்களுடன் கூடிய நூல்கள் பல உள்ளன. இணையத்திலும் எழுத்து வடிவிலும், யு டியூப் காணிளிகள் வடிவிலும் பல வளங்கள் உள்ளன. இவற்றைப்பயன்படுத்துவதன் மூலம் பயனடையலாம்.</p>
<p dir="ltr">மின்னூல்கள் பற்றி...</p>
<p dir="ltr">மின்னூல்களைப்பொறுத்தவரையில் மின்னூல்களை வாசிப்பதற்குப் பல வகையான கருவிகளுள்ளன. கிண்டில், கோபோ போன்ற பல கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. இக்கருவிகளின் மின் மை (E-Ink) திரையில் நூல்களை பக்கங்களைப்புரட்டி, அடிக்கோடிட்டு ஆனந்தமாக வாசிக்கலாம். இவ்வகையான கருவிகளில் epub, mobi போன்ற கோப்பு வகைகளில் வாசிக்கலாம். அத்துடன் சகலருக்கும் அறிமுகமான pdf வகைக்கோப்புகளையும் வாசிக்கலாம். அமெசன் நிறுவனத்தின் கிண்டில் வகை மின்னூல் வாசிப்புக்கருவிகள் mobi வகையான மின்னூல்களை வாசிப்பதற்கு உகந்தவை. கிண்டில் வாசிப்புக் கருவியால epub வகைக்கோப்புகளை வாசிக்க முடியாது. ஆண்டிராய்ட் கருவிகளில் fbreader மென்பொருள் மூலமும், ஆப்பிள் கருவிகளில் ibook மென்பொருள் மூலமும் மின்னூல்களை வாசிக்க முடியும்.</p>
<p dir="ltr">epub வகை மின்னூல்களை mobi வகை மின்னூல்களாக மாற்றுவதற்குரிய மாற்றிகளுமுள்ளன. calibre என்ற மென்பொருள் இதற்கு உதவுகின்றது. msword , pdf வகைக்கோப்புகளையும் மேற்படி epub, mobi வகை மின்னூல்களாக மாற்ற முடியும்.</p>
<p dir="ltr">எழுத்தாளர்கள் தமது படைப்புகளை மின்னூல்களாக்க இணையத்தில் பல தளங்களுள்ளன. Issuu.Com, Calameo.Com போன்ற தளங்களில் 'மைக்ரோசாவ்ட் வேர்ட்' அல்லது 'பிடிஃப்' கோப்புகளை மின்னூல்களாக்கும் வசதிகளுள்ளன. இத்தளங்களில் அங்கத்தவர்களாகி இலவசமாக உங்கள் படைப்புகளை மின்னூல்களாக்க முடியும். இந்நிறுவனங்களிடம் பல்வேறு வகையாக திட்டங்களுள்ளன. அடிப்படைத்திட்டம் இலவசமானது. ஏனையவை மாதா மாதம் கட்டணம் கட்ட வேன்டிய திட்டங்கள். அடிப்படைத்திட்டங்களை விட மேலதிகப் பயன்களைக்கொண்டவை. இத்தளங்களுக்குச் சென்று மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்.</p>
<p dir="ltr">எழுத்தாளர் முல்லை அமுதனின் மாத இதழான காற்றுவெளி சஞ்சிகை Issuu.com மூலமாகவே வெளிவந்து உலகமெங்கும் பரந்திருக்கும் வாசகர் வட்டத்தைச்சென்றடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர உங்களது அச்சில் வெளிவரும் சஞ்சிகைகளின் இணையப்பதிப்புகளை அல்லது இணையத்தில் மட்டுமே வெளிவரும் இணைய சஞ்சிகைகளை மின்னூல்களாக்கி விற்பனைச் செய்யவும் முடியும். Magzter.Com என்ற நிறுவனத்தில் பல தமிழ்ச்சஞ்சிகைகளை (கணையாழி உட்பட) இவ்விதம் வாங்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.<br></p>
<p dir="ltr">தமிழில் மின்னூல்களை வழங்கும் நிறுவனங்கள்.</p>
<p dir="ltr">பிரதிலி.காம்<br>
தமிழில் உங்கள் படைப்புகளை உள்வாங்கி மின்னூல்களாக்கி வெளியிடும் தளங்களுமுள்ளன. அண்மையில் ஆரம்பமான 'பிரதிலிபி.காம்' குறிப்பிடத்தக்க தளமாகும் இந்நிறுவனத்தின் இணையத்தள முகவரி வருமாறு: http://www.pratilipi.com. தற்போது இந்திய மொழிகளான ஹிந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியான படைப்புகளை இத்தளத்தில் வாசிக்கலாம். தற்போது சிறுகதைகள், கவிதைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள் ஆகிய பிரிவுகளில் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகளுடன் படைப்புகளை வெளியிட்டு வருகின்றார்கள். எதிர்காலத்தில் மேலும் பல இந்திய மொழிகளில் படைப்புகளை உள்வாங்கப்பட்டும் சாத்தியங்களுள்ளன. இத்தளத்தினை உருவாக்கி நடாத்தும் குழுவில் ரஞ்சித் பிரதாப் சிங் (Ranjeet Pratap Singh - KIIT University, B.Tech, FMS, Delhi MBA), பிரசாந்த குப்தா (Prashant Gupta - BITS Pilani, B.E. and M.E.), ராகுல் ரஞ்சன் (Rahul Ranjan - KIIT University, B.Tech.), சலி மோடி (Shally Modi - SP University, M.Sc., M.B.A), சங்கர நாராயண தேவராஜன் (Sankarnarayana Devarajan - Anna University, B.Tech, FMS, Delhi MBA) ஆகியோருள்ளனர். தமிழ் எழுத்தாளர்கள் தம் படைப்புகள் மேற்படி தளத்தில் மின்னூல்களாக வெளிவரவேண்டுமானால் சங்கர நாராயண தேவராஜனுடன் sankar@pratilipi.com என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளுங்கள். பிரதிலிபி தளத்துக்குச் சென்று இத்தளம் வழங்கும் சேவைகள், நிபந்தனைகள் போன்றவற்றை அறிந்துகொள்ளுங்கள்.</p>
<p dir="ltr">FreeTamilebooks.Com<br>
தமிழில் மின்னூல்களை உருவாக்கி வெளியிடும் இன்னுமொரு இணையத்தளம் freetamilebooks.com ஆகும். இத்தளம் மின்னூல்களை அறிவியல், ஆன்மிகம், ஆளூமைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவை, நுட்பம், புதினங்கள், வரலாறு ஆகிய பிரிவுகளில் வெளியிட்டு வருகின்றது. மேலும் உங்கள் படைப்புகளை மின்னூல்களாக்கி பல்வேறு மின்னூல்களை வாசிக்கும் கருவிகளுக்கும் கணினிகளுக்கும் ஏற்ற வகையில் வெளியிடும் இந்நிறுவனத்தின் இணையத்தளத்தில் மின்னூல்கள் பற்றி, அவற்றின் உருவாக்கம் பற்றி பயனுள்ள தகவல்களுள்ளன.</p>
<p dir="ltr">இந்நிறுவனத்தை நடாத்தும் குழுவில் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களான பிரியா (மும்பாய்) , இராஜேஸ்வரி (ஆஸ்திரேலியா), து.நித்யா (சென்னை), சிவமுருகன் பெருமாள் (அமெரிக்கா), கிஷோர் (சிங்கப்பூர்), ஜெயேந்திரன் சுப்பிரமணியம் (பூனே), ஜெயேந்திரன் சுப்பிரமணியம் (அரபு நாடு) , லெனின் குருசாமி (காரைக்குடி), மு. சிவலிங்கம் (ஓய்வு பெற்ற பொறியியலாளர், தமிழகம்), மனோஜ் குமார் (கோவை), கலீல் ஜாகீர் (விழுப்புரம்), அன்வர் (சென்னை), அ. இரவிசங்கர் (புதுக்கோட்டை), த.சீனிவாசன் (சென்னை) மற்றும் ஜெகதீஸ்வரன் (சென்னை) ஆகியோருள்ளனர். மேற்படி தளத்துக்குச் சென்று மேலதிக விபரங்களைப்பெற்றுக்கொள்ளலாம். இணையத்தள முகவரி: http://freetamilebooks.com</p>
<p dir="ltr">தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் மின்னூல்களை வெளியிடும் நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு அவற்றின் சேவையினை இலவசமாகப்பெற்றுப் பயனடையுங்கள்.</p>
<p dir="ltr">மின்னூல்களால் ஏற்படும் நன்மைகள் பல. அவற்றில் சில வருமாறு:</p>
<p dir="ltr">உங்கள் படைப்புகள் உலகின் பல்வேறு பாகங்களிலும் வசிக்கும் வாசகர்களைச் சென்றடைகிறது. இலவசமாக மின்னூல்களைத்தயாரிக்க முடிகின்றது. காகிதங்களைப் பாவிக்காததால், தபாற் செலவு இல்லையென்பதால் சூழலுக்கு மிகவும் பயனை மின்னூல்கள் தருகின்றன. இயற்கை அழிவுகள் பலவற்றிலிருந்து உங்கள் படைப்புகள் தப்பி, நீண்ட காலத்துக்கு நிலைபெற்று நிற்க முடிகின்றது. இணையத்தமிழின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இது போல் பல காரணங்களை மின்னூல்கள் வழங்குகின்றன.</p>
<p dir="ltr">சமூக ஊடகங்கள் பற்றிச்சில வார்த்தைகள்....</p>
<p dir="ltr">தற்போது மிக அதிகமானவர்களால் பாவிக்கப்படும் சமூக ஊடகம் முகநூலே. சுமார் ஒரு பில்லியன் அங்கத்தவர்களைக்கொண்ட ஊடகமிது. முகநூல் மூலம் அடையும் நன்மைகள் பல. அவற்றில் சில வருமாறு:</p>
<p dir="ltr">உங்களது உறவினர்களுடன், அல்லது உங்களது பால்ய காலத்து நண்பர்களுடன், உங்களுடன் வேலை பார்க்கும் நண்பர்களுடன், பல்வேறு நாடுகளில் வாழும் உங்களுக்குத்தெரிந்த எவருடனும் மிகவும் இலகுவாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடிகின்றது. புகைப்படங்களை, காணொளிகளை, நீங்கள் அறிந்த பல்வேறு விடயங்களை, சமூக, அரசியல் மற்றும் இலக்கியம் பற்றிய உங்கள் கருத்துகளை மிகவும் இலகுவாகப் பொது வெளியிலும், அந்தரங்க வெளியிலும் பரிமாறிக்கொள்வதற்குரிய வசதிகளைக்கொண்ட ஊடகம் முகநூல்.</p>
<p dir="ltr">மேலும் பொதுவான அச்சு ஊடகங்களில் வெளிவராத விடயங்களை, தகவல்களையெல்லாம் உடனுக்குடன் எழுத்துகளாகவோ, புகைப்படங்களாகவொ அல்லது காணொளிகளாகவோ முகநூல் மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.</p>
<p dir="ltr">சமூக, அரசியற் களத்தில் முகநூல் மூலம் ஆர்ப்பாட்டங்களை, அரசியல் நிகழ்வுகளை மிகவும் இலகுவாக ஒருங்கிணைந்து நடாத்திட முடிகின்றது. கலை, இலக்கிய விழாக்கள் பற்றிய தகவல்களை விரைவாகப் பலருக்கு அறிவிக்கவும், அவர்களுக்கு அழைப்புகளை அனுப்பவும் வழியினை முகநூல் ஏற்படுத்தித்தந்திருக்கின்றது.</p>
<p dir="ltr">மேலும் நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும் (குழுவாகவும், தனியாகவும்) முடிகின்றது.</p>
<p dir="ltr">உங்கள் வாழ்நாளில் நேரில் சந்திக்கவே சாத்தியமற்ற சமூக, அரசியல், கலை, இலக்கிய ஆளுமைகளுடன் நட்பினைப்பேணிட, அவர்களூடன் கருத்துகளைப் பரிமாறிட முகநூல் வழியேற்படுத்தித்தந்திருக்கின்றது.</p>
<p dir="ltr">இவைபோல் பல் ஆரோக்கியமான காரணங்களைப் பட்டியலிடலாம். அதே சமயம் எந்தவொரு தொழில் நுட்பமும் ஆரோக்கியமான நன்மைகளுடன், எதிர்மறையான விளைவுகளையும் கூடவே கொண்டு வருவது வழக்கமானதொன்றே. முகநூல் போன்ற சமூக உடகங்களும் அதற்கு விதிவிலக்கானவை அல்ல. இவற்றைப்பாவிக்கும் நாம்தாம் நன்மை, தீமைகளை ஆராய்ந்து, உரிய முறையில் இவ்வூடகங்களைப் பாவிக்க வேண்டும். அணுச்சக்தியினை ஆக்கச்சக்திக்குப் பாவிப்பதைப்போல் இவ்வகையான சமூக ஊடகங்களையும் பாவிக்க வேண்டும்.</p>
<p dir="ltr">முகநூலென்ற சமூக ஊடகத்தினை உலகுக்கு வழங்கிய மார்க் எலியட் சுக்கர்பெர்க் (Mark Elliot Zuckerberg) மானுடர்களின் நன்றிக்குரியவர்.</p>
<p dir="ltr">ஏனைய சமூக ஊடகங்களான 'லிங்க்டின்' (Linkedin) , 'ட்வீட்டர் (twitter)', 'யு டியூப்' (youtube)போன்ற சமூக ஊடகங்களெல்லாம் மானுடருக்குப் பல்வேறு வகைகளில் பயனளிக்கின்றன. குறிப்பாக யு டியூப் மூலம் பாடல்களைக் கேட்க, திரைப்படங்களை, அரிய பழைய காலத்துத்திரைப்படங்களைப் பார்க்க, அரசியல் தலைவர்களின், கலை, இலக்கிய ஆளுமைகளின் உரைகளைக் கேட்க, ஆவணப்படங்களைப் பார்க்க, அறிவியல் நூல்கள் மற்றும் பல்வேறு தொழில் நுட்பங்கள் பற்றிய விடயங்களைக்கற்க என இவை போன்ற பல நன்மைகளைப்பெற முடிகிறது.</p>
<p dir="ltr">இளங்கலைஞர்கள் தம் படைப்புகளைக் காணொளிகள் மூலம் வெளியிட்டு சர்வதேசரீதியாகத் தம்மை இனங்காட்டிட முடிகின்றது. ஆவணப்படங்களை, குறுந்திரைப்படங்களை வெளியிட முடிகிறது. என்னைப்பொறுத்தவரையில் முகநூலுக்கு அடுத்து நான் அதிகம் பாவிக்கும் சமூக ஊடகம் யு டியூப் தளமே ஆகும்.</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-16180134801195347862019-03-10T21:43:00.001+05:302019-03-10T21:43:20.592+05:30கணினியில் தமிழ் வளர்ச்சி<p dir="ltr">*கணினியில் தமிழ் மொழி வளர்ச்சி*</p>
<p dir="ltr">நமது ஆழ்மனத்தின் எண்ணங்கள், உள்ளத்தில் அமிழ்ந்து கிடக்கும் கனவுகள், ஆசைகள், கற்பனைகள் இவற்றை எல்லாம் பிறரிடம் பகிர்ந்து கொள்கையில், அவற்றின் சாரம் மாறாமல், தயக்கமோ, தடையோ ஏதுமில்லாது எடுத்துக் கூற ஓர் கருவியாக இருப்பது அவரவரது தாய் மொழி. என்ன தான் நாம் நமது பணி நிமித்தமாக, அந்நிய மொழியை கற்று, அதையே பயன்படுத்தி, நம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டாலும், அந்நிய மொழியில் வார்த்தைகளை கோர்வையாக்கி, அதை நம் மனதுள் நிச்சயமாக நமது தாய் மொழியில் சொல்லி ஒத்திகை பார்த்துக் கொள்வோம். இப்போது, நமது எண்ணங்களை கருத்துக்களை எல்லாம் நமது தாய் மொழியிலேயே விளக்க விவரிக்க நல்லதோர் வாய்ப்பாக நம்மால் கணினியிலும் நமது தமிழ் மொழியை பயன்படுத்த முடிகிறது. </p>
<p dir="ltr">கணினியில் தமிழ் மொழியை கருத்துப் பரிமாற்றத்திற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் பெரும்பாலும் பயன்படுத்துபவர்கள் யார் ? தமிழை சரளமாக பேசும் தமிழ் மக்கள் அனைவராலும் எளிதாக தமிழை கணினியில் பயன்படுத்த முடிகிறதா ? தமிழ் மொழியை கருத்துப் பரிமாற்றத்திற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் பயன் படுத்துவோர், தமிழ் மொழி மீது ஈடுபாடும் ஆர்வமும், கணினியில் தமிழ் பயன்பாட்டினை பெரிதும் விரும்புவோர் மட்டுமே. இது தமிழ் மொழியை கணினியில் பயன்படுத்தும் ஓவ்வொருவரும் அவரவரது தனிப்பட்ட முயற்சியால் அறிந்து கொண்டு, செயல்படுத்தப்பட்டது ஆகும். இப்படி அறிந்து கொள்ள வாய்ப்பில்லாது, ஆனால், தமிழ் மொழியை மட்டுமே தங்களது கருத்துப் பரிமாற்றத்திற்கு பயன் படுத்தும் பலருக்கு கணினியில் அல்லது கைபேசிகளில் தமிழில் தட்டச்சு செய்வது எங்ஙனம் என்பது தெரிவதில்லை. இதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் ? தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தகவல் பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள். இன்றளவும் தமிழில் மின்னஞ்சல் அனுப்பினாலோ, அல்லது மின்னஞ்சல் அரட்டையில் ( chat ) தமிழில் எழுதி உரையாடினாலோ, எப்படி முடிகிறது என்று ஆச்சர்யமாக கேட்பவர்கள் உண்டு. இதில் மகிழ்ச்சிகரமான செய்தி என்னவெனில், தமிழ் தட்டச்சிற்கான வழிமுறைகளை கேட்டறிந்து, அவற்றை பின்பற்றி, தாங்களும் மகிழ்வுடன் தமிழிலேயே தட்டச்சு செய்து, உரையாடி, நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவோரும் உண்டு. நாமும் பிறருக்கு புதியாய் ஒன்றை கற்க உதவி புரிந்துள்ளோம் என்ற மனநிறைவு கிடைக்கும்.</p>
<p dir="ltr">தமிழில் தட்டச்சு செய்ய கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் முதலில் முயற்சித்து பார்ப்பது, கூகுள் வழங்கும் ஒலிபெயர்ப்பு (Google transliteration) முறை தான். அதில் முயற்சி செய்து பார்த்து விட்டு, மனதிற்கு திருப்தியும் நிறைவும் ஏற்பட்ட பின், மெல்ல மெல்ல தமிழ் தட்டச்சு மென்பொருட்களான, ஏ - கலப்பை (E- kalappai) , என் எஹெச் எம் ரைட்டர் (NHM Writer), அழகி (Azhagi) போன்றவற்றை பயன்படுத்த முயற்சி எடுக்கின்றனர். ஆனால், அறிந்து கொள்ள ஆர்வம் இருப்பினும், அவர்தம் பணிக்கோ, அல்லது கல்வியறிவு வளர்ச்சிக்கோ முக்கியமானதாக இவை இருப்பதில்லை. அதனால், தமிழ் தட்டச்சினை யாரும் விரும்பி கற்றுக் கொள்வதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.</p>
<p dir="ltr">தமிழை தங்களது முதல் பாடமாக கொண்டோர், தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட விரும்புவோர், தமிழில் முனைவர் பட்டப்படிப்பு பயில்வோர் என்று தமிழைச் சார்ந்து இருப்பவர்கள் கூட கணினித் தமிழ் குறித்து விரிவாக அறிந்திருப்பதில்லை. கணினித் தமிழில் ஆராய்ச்சி மேற்கொள்வோர், தமிழ் ஆவணங்களை எண்ணிமப் (Digitize/ Digital) படுத்தி உலகிலுள்ளோர் அனைவரும் பயன்படுத்தி மகிழ்வுற வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர், தங்களது தாய்மொழியாம் தமிழ் மொழியிலேயே தங்களது எண்ணங்களை, கருத்துக்களை, தங்களது மொழி பால் கொண்ட பற்றின் காரணமாக இலக்கியங்கள் படைத்து வெளியிடுவோர் என்று சொற்பமானவர்களே கணினியில் தமிழை பயன்படுத்துகின்றார்கள்.</p>
<p dir="ltr">இன்னொரு சாராரும் கணினியில் தமிழ் தட்டச்சு கற்றுக் கொள்கிறார்கள். யார் தெரியுமா ? DTP (Desktop Publishing) நிறுவனங்களில் பணிபுரிவோர். தமிழில் ஆவணங்கள் தட்டச்சு செய்பவர்கள் இவர்கள். ஆங்கில ஆவணங்கள் தட்டச்சு செய்ய ஆகும் கட்டணத்தைவிட, தமிழில் ஆவணங்களை தட்டச்சு செய்ய ஆகும் கட்டணம் அதிகம். தமிழ் படிப்பு சோறு போடுமா ? என்று கேட்கும் பலருக்கு பதில் இதோ ! தமிழ் யாரையும் கைவிட்டு விடாது. தமிழ் தட்டச்சு முறை பலரது வருமானத்திற்கு வழி செய்கிறது. எதையும் விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் கற்றுக் கொள்ளும் முறையில் தான் இருக்கிறது, அதிலிருந்து நாம் பயனடைகிறோமா இல்லையா என்பது.</p>
<p dir="ltr">கணினியில் தமிழ் வளர்க்க பல அறிவியல் துறை சார்ந்த கலைச்சொற்களை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் மொழி வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். இது கணினி அறிவியலுக்கு மட்டுமன்றி, அனைத்து அறிவியல் துறைகளுக்கும் பொருந்தும். கணினி அறிவியல், மருத்துவம், பொறியியல் துறைகளை சேர்ந்த சொற்களை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், அது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். மொழி பெயர்த்து பத்திரமாக வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. அவற்றை நிச்சயம் அன்றாட பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் வேண்டும்.</p>
<p dir="ltr">கணினியில் தமிழ் வளர்ச்சி குறித்து விவாதிக்கும் வேளையில், இன்னொரு முக்கியமான விடயம் குறித்தும் சொல்வது அவசியமாகிறது. அது என்னவெனில் எழுத்துப் பிழை. பிழையின்றி எழுதுவதிலும் பேசுவதிலும் தானே மொழியின் அழகு அடங்கியிருக்கிறது. டண்ணகர, றண்ணகர பிழைகள், லகர, ழகர, ளகர வேறுபாடு அறியாது, ஒன்றிற்கு ஒன்று மாற்றி எழுதி சொல்லும் பொருளும் பிழையாக இணையத்தில் பதிந்து வைத்திட்டால், நாளை அந்த ஆவணங்களை இணையத்தில் வாசிக்க தலைப்படுவோருக்கு தவறான வழிகாட்டுதலாக அவை அமைந்து விடக்கூடாது அல்லவா ?</p>
<p dir="ltr">ஆங்கில மொழியில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக சொற் செயலிகளை (Word Processors) பயன்படுத்துகையில், அல்லது வலைப்பதிவுகள் (blog post) தட்டச்சு செய்கையில், நாம் ஏதேனும் சொல்லை பிழையாக தட்டச்சு செய்து விட்டால், அதற்கான சரியான சொல், அதைப் போன்றே ஒலிக்கும் வேறு சரியான சொற்கள் என்று நமக்கு பரிந்துரை (suggestions) வழங்குகின்றது , பிழையான சொற்களை சிகப்பு அடிக்கோட்டினால் குறிப்பிட்டு காட்டுகிறது. சில செயலிகளில் தானியங்கி திருத்தம் (Auto-correct) வசதியும் உண்டு. தமிழ் தட்டச்சு செய்கையில், இது போன்று தானியங்கி திருத்தம் மற்றும் சொல் பரிந்துரை வசதிகள் உருவாக்கப் பட்டால், தமிழ் ஆவணங்கள் பிழையின்றி உருவாக்க பேருதவியாக இருக்கும். Google வழங்கும் blogger உதவி கொண்டு நாம் தமிழில் வலைப்பதிவுகள் உருவாக்கினால், வார்த்தைகளை தானியங்கு பரிந்துரைக்கும் (auto-suggest) வசதியும் உண்டு. அதைப் பயன்படுத்தியேனும் பிழையில்லா ஆவணங்களை இணையத்தில் உலவ விடலாமே. பிழை நிறைந்த ஆவணங்கள் மொழியின் வளர்ச்சிக்கு தடையாகத் தானே இருக்கும். இணையத்தில் தமிழ் தட்டச்சு செய்து ஆவணங்களை உருவாக்குவோர் யாவரும் இதனை நினைவில் கொள்ளுதல் அவசியம்.</p>
<p dir="ltr">இணையத்தில் தமிழ் இலக்கணம், பழங்கால இலக்கியம் தொடங்கி தற்கால இலக்கியம் வரை, கதை, கவிதை, கட்டுரை என்று தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் விரவிக் கிடக்கின்றன. தமிழ் எண்ணிம நூலகங்களில் பல ஆண்டுகளுக்கு முன் அச்சில் ஏற்றப்பட்ட நூல்களும் கூட கிடைக்கின்றன. அது மட்டுமல்லாது, தற்காலத்தில் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களால் அவர்தம் படைப்புகளை மின்னூலாக வெளியிட்டு அவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பும் கிட்டுகிறது. இதில் இன்னொரு வசதி என்னவெனில், தங்களது மின்னூல்களை ஆண்டிடாய்ட் (Android), கிண்டில் (Kindle) போன்ற சாதனங்களுக்கு தரவிறக்க விரும்புவோரிடம் கட்டணம் வசூலிக்க விரும்பினாலும் வசூலித்துக் கொள்ளலாம். இது எழுத்தாளருக்கு வருவாய்க்கான வாய்ப்பாகவும் அமைகிறது. நமது மின்நூல்களை அமேசான்.காம் போன்ற வர்த்தக இணையதளங்களிலும் விற்பனை செய்யலாம். நூல்களை அச்சில் ஏற்ற ஆகும் செலவு, பதிப்பகத்தாரால் வெளியிட ஆகும் செலவு இவற்றை கருத்தில் கொண்டு பலரும் தற்போது தங்களது படைப்புகளை மின்னூலாக வெளியிடுகின்றனர். இப்படி வெளியிடும் நூல்கள் கண்டிப்பாக பல வாசகர்களை சென்றடையும். இதனால், புத்தகம் வெளியிடுவோருக்கும் செலவில்லை, வாசிப்போரும் இலவசமாகவே வாசித்து தங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். வாசகர்களின் வரவேற்பினை பொறுத்து, நூலினை அச்சில் ஏற்றலாம்.</p>
<p dir="ltr">மேற்கூறியுள்ள கருத்துக்கள் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு பயனுள்ளவையாய் இருக்கும் என்ற நோக்கில், என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்கள் மற்றும் கருத்துகளின் தொகுப்பே ஆகும். கருத்துகள் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று நம்புகிறேன்.</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-65903041999409750232019-03-08T18:10:00.001+05:302019-03-08T18:10:09.699+05:30சமஸ்கிருதத்தின் தாய் தமிழ்.<p dir="ltr">எவ்வளவு சொன்னாலும் ஒரு ஆரிய பிராமண சாதிவெறியர் தமிழில் எழுத மறுக்கிறார். தமிழைத் தரம்தாழ்த்தி எழுதுகிறார். சமஸ்கிருதத்தை உயர்த்திப் பேசுகிறார். ஆங்கிலத்திலேயே எழுதுகிறார்.</p>
<p dir="ltr">அவருக்கான பதிவு இது.</p>
<p dir="ltr">கைபர் போலன் கணவாய் வழியாக வந்த நாடோடி கூட்டத்தைச் சேர்ந்த பிராமணரே! சொந்தமாகத் தாய்மொழி இல்லாதவரே!</p>
<p dir="ltr">சமஸ்கிருதம் எப்பொழுது, எப்படி உருவானது?<br>
நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பேச்சு மொழியாகவும் நாட்டு மொழியாகவும் இருந்தது. நாடோடியான ஆரியர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்த பிறகு ஆரியர்கள் பேசிய மொழியும் தமிழ் மொழியும் கலந்து வட இந்தியாவில் ஒரு புதிய மொழி உருவாயிற்று. அந்த மொழி பிராகிருதம். பிராகிருதம் வட இந்தியாவில் பேச்சுமொழி ஆகியது. காலப்போக்கில் பிராகிருதத்தைச் செம்மைப்படுத்தி இலக்கியம் படைத்தனர். செம்மைப்படுத்தப்பட்ட பிராகிருதமே செயற்கையான சமஸ்கிருதம் ஆனது. பிராகிருதம் பேச்சு மொழி. சமஸ்கிருதம் ஏட்டு மொழி. சமஸ்கிருதம் ஒரு காலத்திலும் பேச்சு மொழியாக இருந்ததில்லை.<br>
சமஸ்கிருதம் இந்தி உள்ளிட்ட வட இந்திய மொழிகளின் இலக்கண அமைப்பும் தமிழ் இலக்கண அமைப்பும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருப்பதற்கு காரணம் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பேசிவந்ததாலேயே ஆகும். தமிழோடு நாடோடிகளின் ஆரிய மொழி கலந்து உருவானவையே சமஸ்கிருதம் இந்தி போன்ற மொழிகள். <br>
மொழியியல் பேரறிஞர் தேவநேயப்பாவாணர் இதே கருத்தைச் சொல்லியுள்ளார். சமஸ்கிருதத்துக்கே தாய் தமிழ்தான். சமஸ்கிருதத்தில் ஏராளமான தமிழ்ச்சொற்கள் கலந்து உருமாறியுள்ளன.</p>
<p dir="ltr">இந்தி உருவாகி 300 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆங்கிலம் உருவாகி 600 ஆண்டுகள்தான் ஆகிறது.</p>
<p dir="ltr">சமஸ்கிருத மொழிக்கு என சொந்தமாக எழுத்துகள் கிடையாது. சமஸ்கிருத இலக்கியங்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்புவரை வாய்மொழிப் பாடல்களாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளன. ரிக் வேதம் முதலிய வேத நூல்கள் எல்லாம் வாய்மொழியாக கற்பிக்கப்பட்டுவந்து 1500 ஆண்டுகளுக்கு முன்புதான் ஏட்டில் எழுதப் பட்டுள்ளன என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.</p>
<p dir="ltr">தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இயற்கை மொழி. மனித இனம் தோன்றி முதன்முதலாகப் பேசிய மொழி. வாழும் மொழி.</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-41337141598834065752019-02-26T08:08:00.001+05:302019-03-26T00:48:00.780+05:30வேப்ப மர விதைகளை விதைத்தல்<p dir="ltr">*மரங்களை நடாமலேயே ஒரு தனிமனிதரால் இலட்சக்கணக்கான மரங்களை உருவாக்க முடியும். எப்படி?*<br>
🌳🌳🌳🌳🌳<br>
கோடைக்காலம் முடிவடையும் சமயத்தில் வேப்பங்கொட்டை *(வேம்பு விதை)* கிடைக்கும் பருவம். வேம்பு விதைகளைக் கிலோ கணக்கில் விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள்.<br>
*இருசக்கர வாகனத்திலோ, காரிலோ செல்லும்போது ஒரு கிலோ வேம்பு விதைகளுடன் செல்லுங்கள்!* *செல்லும் வழியெங்கும் சாலையோரங்களில் அவ் விதைகளை வீசிவிட்டுச் செல்லுங்கள்*. *மரம் நடுவதைக் காட்டிலும் மர விதைகளை விதைப்பது எளிது. அவை மழைக்காலங்களில் தாமாக முளைத்து தாமாகவே வளரும்.*</p>
<p dir="ltr">🌳🌳🌳<br>
*வறட்சியை வெல்வதற்கு வழிசெய்யும் நாட்டு மரங்கள்!*</p>
<p dir="ltr">வெளிநாட்டு இறக்குமதி என்றால் தனிமதிப்புதான் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு மாயை பொதுவாக இருப்பதைப் பார்க்கிறோம். மரங்கள் நடுவதிலும் கூட நம் நாட்டு மரங்களை விட்டுவிட்டு வெளிநாட்டு மரங்களை நடும் வழக்கம் உள்ளது. இக்கட்டுரை நம் நாட்டு மரங்களை நடுவதிலுள்ள நன்மைகளை உணர்த்துகிறது!</p>
<p dir="ltr">தமிழகம் முழுக்க பரவலாக பருவமழை பொய்த்துப்போக, இது வரலாறு காணாத வறட்சி என்றும், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வறட்சி என்றும் பலரும் பலவிதமாகக் கூறிவருகிறார்கள். எந்த ஒரு செயலுக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்கிறார் நியூட்டன் தன் மூன்றாம் விதியில். இந்த வறட்சியும் நாம் முன்பு செய்த வினைகளின் எதிர்விளைவுதான் என்பது சற்று கவனித்துப் பார்த்தால் புரியும்.<br>
காகம், மைனா போன்ற பறவைகளின் எச்சத்தில் ஆங்காங்கே விழுந்து முளைத்துக் கிடக்கும் வேம்பு, புங்கன், வாகை, ஆலம், அரசு போன்ற மரக்கன்றுகளை சேகரித்து, நமது வீடுகளின் முற்றத்திலும் விவசாய நிலங்களின் ஓரங்களிலும் நடலாம்.</p>
<p dir="ltr">அதிக அளவிலான மக்கள் தொகை, அதற்கேற்ப மரங்கள் அழிப்பு என மனித இனம் செய்த செயல்களே இன்றைய நிலைக்குக் காரணம் என்பது நமக்குப் புரிந்தாலும், தற்போது நாம் செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வி நம் முன்னால் நிற்கிறது! மரங்கள் நடுவதே இதற்கான தீர்வு என்பதை நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகள் மட்டுமல்லாது இயற்கை ஆர்வலர்கள் பலரும் முன்வைத்து வருகின்றனர். ஆனால், இப்படியொரு வறட்சியில் எங்கே கொண்டுபோய் மரம் நடுவது. நட்டாலும் அந்த மரங்கள் வறட்சியைத் தாங்கி உயிர்பிழைத்து வளருமா என்ற கேள்விகள் எழுவது இயல்பானதுதான்! இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் நமக்கு தீர்வாய் நம் கையில் இருப்பதுதான் நம் நாட்டு மரங்கள்.<br>
நாட்டு மரங்களில் குறிப்பிடத்தக்கவை வேம்பு, புங்கன், பூவரசு, நாட்டு வாகை, புளிய மரம், அரசு, ஆலமரம் போன்ற மரங்களாகும். எண்ணற்ற மர வகைகள் இருக்க, இவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வது ஏனென்றால், இதுபோன்ற மரங்கள் கோடை வெப்பத்தை தாங்கி, குறைந்த அளவு நீரை எடுத்துக்கொண்டு வளர்வதோடு, நல்ல நிழல் தந்து சுற்றுப்புறத்தைக் குளுமையாக்குகின்றன.</p>
<p dir="ltr">நாட்டு மரங்கள் என்பவை நம் மண்ணிற்கு ஏற்ற மரங்களாகும். அதாவது, நம் ஊரின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. நீங்கள் பொதுவாகக் கோடைகாலங்களில் மரங்களைப் பார்க்கும்போது வேம்பு, புங்கன் போன்ற மரங்கள் மட்டும் பசுமையான இலைகளுடன் தளைத்து இருப்பதையும் பிற இறக்குமதி செய்யப்பட்டுள்ள மரங்கள் கோடையில் இலைகளை உதிர்த்துவிட்டு வாடி இருப்பதையும் பார்க்கமுடியும்.</p>
<p dir="ltr">குறிப்பாக தமிழகத்தில் வேப்ப மரத்திற்கு தனித்துவமான இடம் உண்டு! கோயில் திருவிழா என்றால் ஊரைச் சுற்றி காப்பு கட்டுவது முதற்கொண்டு, நாட்டு வைத்தியத்தில் நோயை விரட்டும் மூலிகையாக இருப்பது வரை வேம்பு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.</p>
<p dir="ltr">வேப்பிலைகள் மட்டுமல்லாமல், வேப்ப மரத்தின் பூ, காய், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவையே! நம் அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு வேப்பமரம் இருப்பது அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு மருத்துவர் இருப்பதற்கு சமமானதாகும்.</p>
<p dir="ltr">கோடைகாலத்தில் வேப்ப மரங்கள் தழைத்து வளருகின்றன. காகம், மைனா போன்ற பறவைகளின் எச்சத்தில் ஆங்காங்கே விழுந்து முளைத்துக் கிடக்கும் வேம்பு, புங்கன், வாகை, ஆலம், அரசு போன்ற மரக்கன்றுகளை சேகரித்து, நமது வீடுகளின் முற்றத்திலும் விவசாய நிலங்களின் ஓரங்களிலும் நடலாம். இதற்கெல்லாம் நேரமில்லாதவர்கள் "நர்சரி கார்டன்" என்னும் நாற்றுப் பண்ணைகளிலிருந்து மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p>
<p dir="ltr">நாம் ஆளுக்கொரு வேம்பு நட்டு வளர்த்தால், ஆரோக்கியமான அடுத்த தலைமுறைகளைப் பெறமுடியும் என்பது உறுதி. தமிழகத்தின் பருவநிலையும் மண்ணும் வேம்பு வளர்வதற்கு உகந்ததாக அமைந்துள்ளதால், வேப்ப மரங்களைப் பராமரிப்பதற்கு பெரிதாக நாம் மெனக்கெடத்தேவையில்லை.</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-52552546506480761772019-02-14T16:34:00.001+05:302019-03-04T23:22:05.914+05:30எது கொங்கு மண்டலம்?<p dir="ltr">சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வன்னியர் மண்டலம்.</p>
<p dir="ltr">எது கொங்கு மண்டலம்???<br>
கொங்கு மண்டலம் என்பது ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர், கரூர் மாவட்ட மேற்குப் பகுதி ஆகியவை மட்டுமே ஆகும்.<br>
அங்கு மட்டுமே கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.</p>
<p dir="ltr">சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்கள் கொங்குநாடல்ல. இம்மாவட்டங்கள் மழநாடு, தலைநீர் நாடு, தகடூர் நாடு என சங்க காலம் முதல் அழைக்கப்பட்டு வந்தன. இம்மாவட்டங்கள் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் ஆகும்.</p>
<p dir="ltr">காவிரிக்குத் தெற்கேதான் கொங்கு மண்டலம்.<br>
கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல் பழனியைத் தெற்கெல்லையாகவும், ஈரோடு மாவட்டத்திலுள்ள தலமலையை வடக்கெல்லையாகவும் கொண்டதே கொங்கு மண்டலம் என்கிறது........</p>
<p dir="ltr">வன்னியர் பெரும்பான்மை என்பதாலேயே சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் அரசியல் வன்னியர் வசம் உள்ளது.</p>
<p dir="ltr">விதிவிலக்காக எடப்பாடி பழனிச்சாமி வென்றுள்ள எடப்பாடி தொகுதியும் பாமகவின் கோட்டைதான். பலமுறை பாமக வென்ற தொகுதி அது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பார்த்து மக்கள் ஓட்டுபோட்டதால் எடப்பாடியார் வென்றுள்ளார். எடப்பாடி தொகுதி வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதி.</p>
<p dir="ltr">இம்மாவட்டங்களில் கொங்கு கவுண்டர் ஒரு எம்எல்ஏ கூட ஆகமுடியாது. காரணம் கொங்கு கவுண்டர்கள் மிகச் சிறுபான்மையாகவே உள்ளனர். இவர்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு உள்ளாக குடியேறியவர்கள். இவர்கள் யாருக்கும் இம்மாவட்டங்களில் குலதெய்வக்கோயில் கிடையாது. குலதெய்வக் கோயிலைத் தேடி ஈரோடு, காங்கேயம் பகுதிக்கே செல்கின்றனர். ஈரோடு, காங்கேயம் பகுதியே அவர்களின் பூர்வீகம்.</p>
<p dir="ltr">நாமக்கல் பகுதியில் வசிக்கும் நாட்டுக்கவுண்டர்கள் காவிரிக்குத் தெற்கே காங்கேயம் பகுதியிலிருந்து காவிரிக்கு வடக்கே குடியேறியவர்கள். அவர்கள் காவிரிக்கு தெற்கே உள்ள கொங்கு வேளாளர்களுடன் திருமண உறவை முறித்துக் கொண்டு தனி சாதியினராக பிரிந்து காணப்படுகிறார்கள்.<br>
கொங்கு வேளாளர்கள் அனைவரின் பூர்வீகமும் காவிரிக்கு தெற்கில் உள்ள ஈரோடு , காங்கேயம் பகுதிதான் என்பது உறுதியாகிறது.....</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-89405039630283501782019-02-04T21:18:00.001+05:302019-02-04T21:18:31.676+05:30பழந்தமிழ் இலக்கியத்தில் தமிழ்நாடு<p dir="ltr">#தமிழ்நாடு_என்ற_சொற்கள் இருக்கும்<br>
சில நூல்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.....</p>
<p dir="ltr">#பரிபாடல்,<br>
#பதிற்றுபத்து,<br>
#சிலப்பதிகாரம்,<br>
#மணிமேகலை </p>
<p dir="ltr">பரிபாடலில் வருகிற 'தண்டமிழ் வெளி #தமிழ்நாட்டு_அகமெல்லாம்' என்ற வாக்கியத்துக்கு, மூன்று பகுதிகளும் <br>
#இனிமையானதமிழ்_சூழ்ந்த_தமிழ்நாடு என்று பொருள்.</p>
<p dir="ltr">2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பதிற்றுபத்தில் ' #இமிழ்கடல்_வெளி_தமிழகம்' என்று எழுதப்பட்டு இருக்கிறது. அதாவது #கடலை_எல்லையாகக்_கொண்ட_தமிழ்நாடு.</p>
<p dir="ltr">சிலப்பதிகாரத்தில், <br>
#தென்தமிழ்_நந்நாடு' என கூறப்பட்டிருக்கிறது. இதன் பொருள் #நல்ல_தமிழ்நாடு. </p>
<p dir="ltr">மணிமேகலையில், '<br>
#சம்புதீவினில்_தமிழக_மருங்கில்' என வருகிறது. #தமிழ்நாடு_சம்புத்தீவு என அழைக்கப்படுகிறது என்பதே இதன் பொருள். </p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-34370569589773834272019-02-04T20:31:00.001+05:302019-02-04T20:31:06.705+05:30மழநாடு<p dir="ltr">*மழநாடு*<br>
மழவர்கள் ஆண்ட நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது.</p>
<p dir="ltr">இடம்</p>
<p dir="ltr">திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி முதல் பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூர்) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதி, திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு. கி.மு. முதல் கி.பி. வரை மழநாட்டின் வரலாறு நீள்கிறது. சங்ககால புலவர் ஔவையாரால் பாடப்பட்ட அதியமான்கள், வல்வில் ஓரி, கொல்லி மழவன், அரியலூர் ஜமீன் சமஸ்தானத்தை கி.பி. 14ம் நூற்றாண்டில் ஆண்ட ஒப்பில்லா மழவராயர், திருவக்கரை வல்லவ நாட்டை கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆண்ட மழவராய பண்டாரத்தார் போன்றோர் மழநாட்டை ஆண்டு வந்தனர். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையரின் முன்னோர்கள் இந்த அரியலூர் மழவராயர்களால் போற்றப்பட்டனர். மழநாடு எல்லை குறித்த கல்வெட்டுகள் கருநாடக மாநிலத்தில் கிடைத்துள்ளன.</p>
<p dir="ltr">மழகொங்கம்	</p>
<p dir="ltr">கி.பி. 770ல் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் மழகொங்கம் பகுதியைக் குறிப்பிடுகின்றன. அதில், இராஜசிம்மன்(மாறவர்மன்), பூக்கள் விரிகின்ற சோலைகளையுடைய காவிரியைக் கடந்து அழகமைந்த வில்லினால் மழகொங்கம் பகுதியை அடிப்படுத்தினான் என்றுள்ளது. இந்த மழகொங்கம் தமிழ் நாட்டிலே காவிரியின் வடகரையில் உள்ளது. அப்போது, சங்க இலக்கியத்தில் மழவர் பெருமகன் என்றழைக்கப்படும் அதியமான்கள் இப்பகுதியை ஆண்டு வந்தார்கள். அதியமான்கள் உருவாக்கிய கோயில்களே நாமக்கல் குகைக்கோயில்கள். தமிழக அரசியல் வரலாற்றில் மழகொங்கம் முக்கிய பங்கு வகித்தது. மலை வளமும் நீர் வளமும் மிக்கது. இப்பகுதி கிழக்கே பாச்சில்(திருவாசி) வரை பரவியிருந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமழபாடி பண்டை நாளில் மழவர் ஊராகத் திகழ்ந்தது.</p>
<p dir="ltr">மழநாடு</p>
<p dir="ltr">தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பிரம்மியம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 998ஆம் ஆண்டு கல்வெட்டில் மழநாடு என்றொரு நாடு இருப்பது பதிவாகியுள்ளது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு இயற்றப்பட்ட இளம்பூரணர் உரையில் மழநாடு என்றொரு நாடு இருப்பது குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த மழநாடு திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி என்று அகராதிகள் கூறுகின்றன. மேலும், மழகொங்கம், மழபுலம் ஆகிய சொற்களுக்கு அருத்தம் மழநாடு என்று அகராதிகள் குறிப்பிடுகின்றன. கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இயற்றப்பட்ட பெரியபுராணம் மேல்மழநாட்டை மேன்மழநாடு எனும் நீர்நாடு என்று குறிப்பிடுகிறது. சங்க இலக்கியமான புறநானூற்றில் அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் மழவர் பெருமகன் என்றும் தலை நீர் நாடன் என்றும் அழைக்கிறார். இதன் மூலம், மழவர் பெருமகனான அதியமான் நெடுமான் அஞ்சியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது என்பதும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. கல்வெட்டுகளில் தலைநீர் என்ற சொல் முதல் மடைப் பாய்ச்சல் என்ற அருத்தத்தில் பயின்று வரும். இதன் மூலம் காவிரியாறு முதன்முதலில் பாயும் நாடு தலைநீர் நாடு என்பது புலப்படும். இப்பெரியபுராணத்துப் பாடலின் உரையிலிருந்து மழநாடு மேல்மழநாடு, கீழ்மழநாடு முதலிய நிலப்பகுப்புகளை உடையது என்றும் அதில் கீழ்மழநாட்டை திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவாசியைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன் எனும் அரசன் ஆண்டான் என்றும் அறியமுடிகிறது. இதன்மூலம், மழவர் ஆண்ட நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது என்று அறியமுடிகிறது. மேலும், சுமார்த்தப்பிராமணரின் ஒரு உட்பிரிவு மழநாட்டுப்பிருகச்சரணம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலமும், மழநாடு என்றொரு நாடு இருப்பது நமக்குத் தெரியவருகிறது.</p>
<p dir="ltr">மழவர் பெயரில் உள்ள இடங்கள்</p>
<p dir="ltr">வரலாற்று இடப்பெயர்கள்</p>
<p dir="ltr">தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம் என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், கங்க மன்னன் ஸ்ரீ புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார்(கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்) என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார் என்றும் அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற வீரன் இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.<br>
தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிந்தல்பாடி என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டில், கானப்பள்ளி எனும் ஊரில் மழவராயப்புத்தேரி எனும் ஏரி இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.</p>
<p dir="ltr">வரலாற்றுச் சான்றுகள்</p>
<p dir="ltr">தொல்லியல் மூலங்கள் தரும் செய்திகள்</p>
<p dir="ltr">கி.பி. 6ஆம் நூற்றாண்டு</p>
<p dir="ltr">வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் அசுரம்சேரி எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற கி.பி. 6ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், பல்லவன் சிம்மவர்மனுடைய இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 524) ஆடி மாதம் புணர்பூச நட்சத்திரம் கூடிய நாளின் போது தகடூரின் பிடி மண்ணேரிக் கிழக்குப் பகுதியை ஆள்பவருடைய படையை எதிர்த்து இலாட நாடு ஆளும் அரைசர், மழவரைசர் ஆகியோர் இணைந்த கூட்டுப் படையைச் சேர்த்துக் கொண்டு போரிட்டு வென்று வீர சாவடைந்தார் கங்க அதி அரைசர் உடைய படைத் தலைவரான கல்நாட்டின் மாதன் பெருதிஅரைசர் என்பவர், என்னும் செய்தி பதிவாகியுள்ளது.<br>
கி.பி. 8ஆம் நூற்றாண்டு	தொகு<br>
கி.பி. 770ல் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் மழகொங்கம் பகுதியைக் குறிப்பிடுகின்றன. அதில், இராஜசிம்மன்(மாறவர்மன்), பூக்கள் விரிகின்ற சோலைகளையுடைய காவிரியைக் கடந்து அழகமைந்த வில்லினால் மழகொங்கம் பகுதியை அடிப்படுத்தினான் என்றுள்ளது. இந்த மழகொங்கம் தமிழ் நாட்டிலே காவிரியின் வடகரையில் உள்ளது.<br>
வேள்விக்குடி செப்பேடுகள் வழங்கிய பராந்தகன் நெடுஞ்சடையன் பாண்டியனின் தாய் மழவர் குடியில் பிறந்தவராவார். இவரை மழவேந்திரனின் மகள்(செப்பேட்டில் உள்ள சங்கத சுலோகத்தின் படி மளவேந்திரன்) அதாவது மழவ மன்னன் மகள் என்றும் இவரை பாண்டிய வேந்தன் இராஜசிம்மன்(மாறவர்மன்) மணந்தான் என்றும் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இச்செப்பேட்டுகள் பராந்தகன் நெடுஞ்சடையன் பாண்டியனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் வழங்கப்பட்டன என்பதால் இவற்றின் காலம் கி.பி.770 என அறியமுடிகிறது.</p>
<p dir="ltr">கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு</p>
<p dir="ltr">தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம் என்னும் ஊரில் கிடைத்த நடுகல் கல்வெட்டில், கங்க மன்னன் ஸ்ரீ புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார்(கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்) என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார் என்றும் அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற வீரன் இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.</p>
<p dir="ltr">கி.பி. 9ஆம் நூற்றாண்டு</p>
<p dir="ltr">தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள செல்லம்பட்டி என்னும் ஊரில் கிடைத்த நடுகல் கல்வெட்டில், கி.பி.898ஆம் ஆண்டு தகடூர் மாவலிவாணராயரடியான் கூடல் மாணிக்கன் உளைக்குன்றினை ஆண்டு வந்தான். அவனுடைய மாமனும் கோவூர் நாட்டு ஐந்நூறின் தலைவனாக விளங்கியவனுமான மழற்பையன் என்பவனின் அடியான் சூழிபுளியன் என்பவன், புலியைக் கொன்றபோது இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது. இக்கல்வெட்டில் மழற்பையன் என்ற சொல் மழவர் மகன் என்ற அருத்தத்தில் பயின்று வந்துள்ளது.</p>
<p dir="ltr">கி.பி. 10ஆம் நூற்றாண்டு</p>
<p dir="ltr">கண்டராதித்த சோழனின் பட்டத்தரசி, அருண்மொழிவர்மனை(முதலாம் இராஜராஜ சோழன்) வளர்த்த வளர்ப்புத்தாய், செம்பியன் மாதேவி, மழவர் குடியில் பிறந்தவராவார். இவர் கொல்லி மலை மழவரையரின் மகளாராவார். இவரை கல்வெட்டுக்கள் ஸ்ரீ உத்தம சோழதேவரை திருவயிறு வாய்த்த மழவரையர் மகளார் பராந்தக மாதேவ (டிகளார்) ராந செம்பியன் ம(ர)ஹ(ர) தேவியார் என்றும் மேற்கெழுந்தருளிய தேவர் கண்டராதித்த தேவர் தேவியார், மழப் பெருமானடிகள் மகளார் பராந்தகன் மா தேவடிகளான செம்பியன் மா தேவியார் என்றும் கூறும். இவரது காலம் கி.பி.910-1001 ஆகும்.<br>
அருண்மொழிவர்மனின்(முதலாம் இராஜராஜ சோழன்) தந்தை சுந்தர சோழனின் மனைவி, முதலாம் இராஜராஜ சோழனின் தாய், வானவன் மாதேவி, மலையமான் வமிசத்து மழவர் குடியில் பிறந்தவராவார்.<br>
தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பிரம்மியம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 998ஆம் ஆண்டு கல்வெட்டில் மழநாடு என்ற சொல் பதிவாகியுள்ளது.<br>
தற்கால கருநாடக மாநிலம் ராமநகரம் மாவட்டம் சன்னபட்னா வட்டத்தில் உள்ள ஊர் மாலூர்பட்டினம். இந்த ஊரில் கிடைத்த கல்வெட்டுகள் படி இவ்வூர் மழவூர் என்றும் முடிகொண்டசோழமண்டலத்து இராஜேந்திரசோழவளநாட்டுக் கிழலைநாட்டு மழவூரான இராசேந்திரசிங்கச்சதுர்வேதிமங்கலம் என்றும் முடிகொண்டசோழமண்டலத்து கரிகாலசோழவளநாட்டு பெரிய மழவூர் இராசேந்திரசிங்கச்சதுர்வேதிமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.மற்றொரு கல்வெட்டு சன்னபட்னா எனும் ஊரை சிறியமழவூர் என்று குறிப்பிடுகிறது. இதன்மூலம், மழவூர்பட்டினம் என்னும் ஊர் மாலூர்பட்டினம் என்றும் சின்னமழவூர்பட்டினம் என்ற பெயர் சின்னபட்டினம் என்றாகி இன்று சன்னபட்னா என்றும் வழங்கப்படுவது புலனாகிறது.<br>
கி.பி. 14ஆம் நூற்றாண்டு	தொகு<br>
தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிந்தல்பாடி என்னும் ஊரில் கிடைத்த கல்வெட்டில், கானப்பள்ளி எனும் ஊரில் மழவராயப்புத்தேரி எனும் ஏரி இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.</p>
<p dir="ltr">கி.பி. 16ஆம் நூற்றாண்டு</p>
<p dir="ltr">தற்கால திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேசூர் பேரூராட்சியில் உள்ள ஈசுவரன் கோவிலில் உள்ள கி.பி. 1528ஆம் ஆண்டு கல்வெட்டில், சி(சீ)ர்மழவர் குலம் என்ற சொல் பதிவாகியுள்ளது. இக்கல்வெட்டு படி, கரிதுர்க்க நாவலற்கருள் கம்பையாதிபன் கன்னன் மிகு பொன்னைநாடன் கார்போலவந்த பாரியாழ்வானுக்கந்ததொரு கருணை உண்ணாமுலையன் என்பவன், திருமருவுமிசுரத்திம்மையன் என்பவனின் கிறுபைகொண்டு, சி(சீ)ர்மழவர் குலம் விளங்கத் தேசூரிலே செங்கை வேலாயுதனுக்கொரு திருக்கோவிலைக் கட்டுவித்தான் என்றுள்ளது.<br>
தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மயில்ரங்கம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 1532ஆம் ஆண்டு கல்வெட்டில் மாடைகளில் மழவராயர், அவினாசி மழவராயர் ஆகிய சொற்கள் பதிவாகியுள்ளன.</p>
<p dir="ltr">இலக்கிய மூலங்கள் தரும் செய்திகள்</p>
<p dir="ltr">சங்ககாலம்</p>
<p dir="ltr">சங்க இலக்கியங்களில் மழவர்</p>
<p dir="ltr">இவர்கள் மணிகட்டிய வேலை ஏந்திப் போர் புரியும் பாங்கினர். வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சியும் வள்ளல் ஓரியும் மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகின்றனர். பல்யானைச் செல்கெழு குட்டுவன் மூன்றாம் பத்தின் தலைவன். இவன் மழவர்களைக் காக்கும் கவசமாக விளங்கினான். இவர்கள் ஆயர் குலத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இம்மழவர் குடியினர் தண்டாரணியப் பகுதியிலும் வாழ்ந்தனர். இவர்கள் வருடை ஆடுகளைப் பிடித்துவந்து பழக்கப்படுத்தி வளர்த்து அதன் பயனைத் துய்த்து வந்தனர். ஆறாம்பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அவர்களின் ஆடுகளைக் கவர்ந்துவந்து தன் நாட்டுத் தொண்டி மக்களுக்கு வழங்கினான். அன்றியும் ஆடுகளைக் கவர்ந்து வரும்போது எதிர்த்த ஏனை கரந்தை மழவரையும் போரில் வென்றான்.மழவர் வில்லும் அம்பும் ஏந்தியவராய் வீளை (வாய் ஊதல்) அடித்துக்கொண்டு நாள்தோறும் ஆனிரைகள் மேய்த்து வருவர். </p>
<p dir="ltr">பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விடியும் பொழுதில் தன்னைத் தாக்கிய மழவர்களை விரட்டினான் மழவர் குடியினர் குதிரைமலை நாட்டில் வாழ்ந்துவந்தனர். பொதினி எனப்பட்ட பழனிமலை அரசன் தனைத் தாக்கிய இந்த மழவர்களை விரட்டினான். திருச்சி மாவட்டத்தில் திருப்பாச்சில் ஆசிரமத்தைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன் என்பவன் ஆட்சிபுரிந்துவந்தான். இது இடைக்கால நிலை. இக்காலத்துத் திருமழபாடி முற்காலத்தில் மழவர்குடியினர் வாழ்ந்த இடம் எனக் கருத இடமுண்டு. இவர்கள் வாழ்ந்த ஊர் பாடி என்று வருவதால் இவர்கள் முல்லை நில குடியினர் என்பது விளங்குகிறது.</p>
<p dir="ltr">சிற்றுரை சேர்ந்த ஆயர்கள் கையை தலை மீது வைத்து வருந்தும்படி கொழுத்த ஆவினை கவர்ந்து அதன் இறைச்சியை பாலைத்திணை மழவர் உண்டனர் என்றும், கன்றினையுடைய பசுவினை கொன்று உண்டனர் என்றும் கடவுளுக்கும் காணிக்கையாக பலியிட்டனர் என்றும் அறிய முடிகிறது.</p>
<p dir="ltr">மழபுலம்</p>
<p dir="ltr">மழபுலம் என்பது சங்ககாலத்தில் மழவர் வாழ்ந்த நாடு.<br>
வேங்கட நாட்டை ஆண்ட தமிழ்மன்னன் புல்லி<br>
இவன் மழவர்களை வணங்கச் செய்து அவர்களது நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.<br>
சங்ககாலப் புலவர் மாமூலனார் இந்தச் செய்தியைக் குறிப்பிடுகிறார்.. கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி </p>
<p dir="ltr">கி.பி. 11ஆம் நூற்றாண்டு</p>
<p dir="ltr">தொல்காப்பியம் - இளம்பூரணர் உரை</p>
<p dir="ltr">கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு இயற்றப்பட்ட இளம்பூரணர் உரையில் மழநாடு என்றொரு நாடு இருப்பது குறிப்பிடப்படுகிறது.</p>
<p dir="ltr">திருத்தொண்டர் திருவந்தாதி<br>
கி.பி. 11ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் இயற்றப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதியில் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றிக் கூறும் பாடலில் மேல்மழநாட்டைப் பற்றி குறிப்புள்ளது.</p>
<p dir="ltr">கி.பி. 12ஆம் நூற்றாண்டு</p>
<p dir="ltr">பெரியபுராணம்</p>
<p dir="ltr">கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பெரியபுராணம் மேல்மழநாட்டை மேன்மழநாடு எனும் நீர்நாடு என்று குறிப்பிடுகிறது.</p>
<p dir="ltr">கி.பி. 13-17ஆம் நூற்றாண்டு</p>
<p dir="ltr">கைலாயமாலை</p>
<p dir="ltr">கைலாய மாலை எனும் இவ்விலக்கியம் செகராசசேகரன் என்னும் அரசன் யாழ்ப்பாணத்தை ஆளத் துவங்கிய போது உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது. இதில், பாண்டி மழவன் என்பவன், செகராசசேகரனிடம் சென்று யாழ்ப்பாண அரசை ஏற்கும் படி வேண்டினார் என்ற செய்தி பதிவாகியுள்ளது. மேலும், பாண்டி மழவனை விவரிக்கையில், இவனை பொன்பற்றியூரன், அண்டர் போரில் அழல்சூரன், மின்பற்று காலின் விலங்குதன்னை - அன்புற்று வெட்டுவித்து விட்டபுகழ் வேளாளர் வங்கிஷத்தில் திட்டமுடன் வந்து செனனித்தோன் என இன்னும் பலவாறு விவரிக்கிறது.</p>
<p dir="ltr">கி.பி. 15ஆம் நூற்றாண்டு</p>
<p dir="ltr">திருப்புகழ்	</p>
<p dir="ltr">கி.பி. 15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழில் காவிரி ஆறு நிறைந்து வரும் கால்வாய்கள் உள்ள சிறந்த மழ நாட்டுப் பகுதியில் சிறப்புடன் உள்ள பூவாளூரில் வீற்றிருக்கும் பெருமாளே என்று குறிப்பிடப்படுகிறது.</p>
<p dir="ltr">கி.பி. 18ஆம் நூற்றாண்டு</p>
<p dir="ltr">சோழ மண்டல சதகம்</p>
<p dir="ltr">கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் மறுபதிப்பாக வெளியிடப்பட்ட சோழ மண்டல சதகத்தில் மழநாட்டுப் பகுதிகள் இராசாச்சிரய வளநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-63173330445782678542019-02-03T17:40:00.001+05:302019-02-03T17:49:18.373+05:30கொங்குநாடு கற்பனையே<p dir="ltr">*கொங்குநாடு கற்பனையே*</p>
<p dir="ltr">கொங்கு நாடு என்பது வரலாற்றில் எக்காலத்திலும் இருந்ததில்லை. அது கொங்கு வேளாளக் கவுண்டர்களால் உருவாக்கப்பட்ட கற்பனையே.</p>
<p dir="ltr">தமிழ்நாட்டில் சோழ நாடு, சேரநாடு, பாண்டிய நாடு, தொண்டைநாடு,  பல்லவநாடு, தகடூர் நாடு ஆகிய நாடுகளே மன்னர் பரம்பரையைக் கொண்டு ஆட்சி செய்த நாடுகளாக இருந்தன.</p>
<p dir="ltr">தற்போது கொங்கு மண்டலம் என்று சொல்லப்படும் பகுதிகள் சங்க காலத்தில் பல சிற்றரசுகளால் ஆளப்பட்ட சிறுசிறு குறுநாடுகளாக இருந்தன. அக்காலத்தில் சேரநாட்டை ஆண்ட சேரர்கள் அச் சிற்றரசர்களை வென்று அப்பகுதிகளைச் சேர நாட்டின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டனர். பின்னர் வந்த பல்லவர், சோழர், பாண்டியர் ஆகிய பேரரசுகள் அப்பகுதியை தங்கள் பேரரசுடன் இணைத்து ஆண்டு வந்துள்ளனர்.<br>
கொங்கு நாடு என்பது எக்காலத்திலும் தனிநாடாகவோ, தனியாக மன்னர் பரம்பரையைக் கொண்ட நாடாகவோ இருந்ததில்லை.</p>
<p dir="ltr">கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தங்கள் சாதிக்கு என தனியாக ஒரு மாநிலத்தை உருவாக்குவதற்காக இல்லாத கற்பனையான கொங்குநாடு என்ற ஒன்றைச் சொல்லி அதன் பெயரில் சாதிக் கட்சிகளைத் தொடங்கி நடத்துகின்றனர். கொங்கு சாதிக்கட்சிகள் தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தானவை.</p>
<p dir="ltr">கொங்கு வேளாளக் கவுண்டர் கட்சிகள் சொல்லும் கொங்குநாடு என்ற வரம்புக்குள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்காது. ஏனெனில் சேலம், தர்மபுரி, கி<u>ரு</u>ஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வன்னியர் சாதி தமிழர்கள் பெரும்பான்மையானோர் பூர்வீகமாகக் வாழ்ந்துகொண்டிருக்கும் பகுதிகள் ஆகும். இம்மாவட்டங்களில் ஏதோ ஒரு சில சிற்றூர்களில் மட்டுமே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் வாழ்கின்றனர். அந்த கொங்கு வேளாளர்களும் தங்கள் குலதெய்வக் கோயில்களை நாடி நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலுள்ள கோயில்களுக்கே செல்கின்றனர். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் எவருக்கும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குலத்தெய்வக் கோயில்கள் கிடையாது. எனவே சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள ஒருசில  சிற்றூர்களில் மட்டுமே வாழும் கொங்கு வேளாளர்கள் நாமக்கல், ஈரோடு மாவட்டப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அங்கிருந்து மிக அண்மைக் காலத்தில்தான் சேலம் பகுதிக்கு வாழ்வாதாரம் தேடிக் குடிபெயர்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.<br>
நாமக்கல் வட்டாரத்தில் வாழும் கொங்கு இன மக்கள் காவிரிக்குத் தெற்கில் காங்கேயம் முதலிய பகுதிகளிலிருந்து காவிரிக்கு வடக்கே குடிபெயர்ந்துள்ளனர். இவர்கள் காவிரிக்குத் தெற்கில் வாழும் கொங்கு இன மக்களுடன் திருமண உறவை முறித்துக்கொண்டு நாட்டுக்கவுண்டர் என்ற தனி சாதியினராகப் பிரிந்துவிட்டனர்.</p>
<p dir="ltr">கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அனைவரின் பூர்வீகம் காவிரிக்குத் தெற்கே உள்ள ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களே ஆகும். கொங்கு மண்டலம் என்பது இம்மூன்று மாவட்டங்களை மட்டுமே குறிக்கும்.</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-62967239867164792872019-02-03T02:42:00.001+05:302019-02-05T13:10:26.613+05:30எது கொங்குநாடு?<p dir="ltr">எது கொங்குநாடு?</p>
<p dir="ltr">கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல் கொங்கு மண்டல வடக்கெல்லையாகச் சொல்லும் தலைமலை என்பது ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்களத்திற்கு வடக்கே உள்ள தலைமலை.<br>
கொங்கு மண்டல சதகம் வடக்கெல்லையாகச்  சொல்லும் பெரும்பாலை என்பது ஈரோடு மாவட்டத்திற்கு வடக்கே மேட்டூருக்குத் தெற்கே உள்ள பாலமலை.</p>
<p dir="ltr">அதாவது காவிரிக்கு தென்மேற்கிலும், தெற்கிலும் உள்ள ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மற்றும் கரூர் மாவட்ட மேற்குப் பகுதி ஆகியவை மட்டுமே கொங்கு மண்டலம் என்பது தெளிவு.</p>
<p dir="ltr">சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கொங்கு மண்டலத்தில் அடங்காது. காவிரிக்கு வடக்கே உள்ள இப்பகுதிகள் தகடூர் நாடு எனவும், தலைநீர் நாடு எனவும், மழநாடு எனவும் அழைக்கப்பட்டது. தகடூர் நாட்டை சங்க காலத்திலிருந்து 13 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டவர்கள் அதியமான் மரபினர். இப்பகுதி மழவர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் மழநாடு என்று பெயர். மழவர்கள் மழவராயர் பட்டத்துடன் இப்போது வன்னியரில் உட்பிரிவினராக உள்ளனர். மழநாட்டைச் சேர்ந்த இப்பகுதி மக்கள் காவிரிக்குத் தெற்கே வாழும் கொங்கு வெள்ளாள மக்களிடமிருந்து சாதியாலும், பழக்கவழக்கங்களாலும், பண்பாட்டாலும், குலத்தெய்வ வழிபாட்டு முறைகளாலும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.</p>
<p dir="ltr">கோவைக் கிழார், புலவர் குழந்தை, வேங்கடசாமி நாட்டார் உள்ளிட்டவர்கள் சாதி உணர்வோடு கொங்குநாட்டின் பரப்பளவைப் பெரிதாகக் காட்ட வேண்டும் என்பதற்காக வலிந்து தகடூர் நாட்டைக் கொங்கு நாடு என்கின்றனர்.<br>
காவிரிக்கு வடக்கே உள்ள சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, <u>நாமக்கல்</u> மாவட்டங்களில் வன்னியர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.<br>
கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல் கொங்கு நாட்டின் எல்லையாக பழனி தெற்கு, தலைமலை வடக்கு என்றுதான் சொல்கிறது. கொங்கு மண்டல சதகம் கொங்கு நாட்டின் வடக்கெல்லை எனச் சொல்லும் பெரும்பாலை என்பது ஈரோடு மாவட்டம் சத்தியமங்களத்தை அடுத்த பகுதியிலுள்ள மனிதர்கள் வாழாத வறண்ட காட்டுபகுதி அல்லது ஈரோடு மாவட்டத்திற்கு வடக்கே மேட்டூருக்குத் தெற்கே உள்ள பாலமலை ஆகும்.<br>
தலைமலை என்பது ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலத்திற்கு வடக்கே உள்ள தலமலை ஆகும். </p>
<p dir="ltr">கொங்கு வெள்ளாள சாதி மக்கள் பெரும்பான்மையாகப் பாரம்பரியமாக செறிந்து வாழும் மாவட்டங்கள் காவிரிக்குத் தெற்கே ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களே ஆகும். இம்மாவட்டங்களுக்கு வெளியே மற்ற மாவட்டங்களில் சிறுபான்மையினராக வாழும் கொங்கு வெள்ளாளர்கள் தங்கள் குலத்தெய்வக் கோயில்களைத் தேடி காவிரிக்குத் தெற்கே ஈரோடு, காங்கேயம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள குலத்தெய்வக் கோயில்களுக்கே செல்கின்றனர். இம்மூன்று மாவட்டங்களைத் தவிர்த்து வெளிமாவட்டங்களில் கொங்கு வெள்ளாளர்களுக்குக் குலத்தெய்வக் கோயில்கள் கிடையாது. சேலம், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட காவிரிக்கு வடக்கே உள்ள மாவட்டங்களில் மிகச் சிறுபான்மையினராக வாழும் கொங்கு வெள்ளாளர்கள் காவிரிக்குத் தெற்கு, தென்மேற்குப் பகுதிகளிலிருந்து அண்மைப் காலத்தில்தான் குடிபெயர்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.</p>
<p dir="ltr">கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல்களும், கொங்கு மண்டல சதகமும் சொல்லும் கொங்கு மண்டல எல்லைக்குள் ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களும், கரூர் மாவட்ட மேற்குப் பகுதியும் மட்டுமே அடங்கும்.</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-52212245220503678902019-02-02T21:14:00.001+05:302019-02-02T21:21:12.577+05:30தகடூர் நாடு, மழநாடு<p dir="ltr">*மழநாடு* <br>
*தகடூர் நாடு*</p>
<p dir="ltr">திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதிமுதல் பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூரு) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு. கிமு முதல் கிபி வரை மழநாட்டின் வரலாறு நீள்கிறது. சங்ககாலப் புலவர் ஔவையாரால் பாடப்பட்ட அதியமான்கள், வல்வில் ஓரி, கொல்லி மழவன், அரியலூர் ஜமீன் சமஸ்தானத்தை 14ம் நூற்றாண்டில் ஆண்ட ஒப்பில்லா மழவராயர் போன்றோர் மழநாட்டைச் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தனர். தமிழ்த் தாத்தா உவே சாமிநாதையரின் முன்னோர்கள் அரியலூர் மழவராயர்களால் போற்றப்பட்டனர்.<br>
(எ. கா.) மங்கல மென்பதோர் ஊருண்டு போலும் மழநாட்டுள் (தொல். சொல். 273, இளம்பூரணர்)</p>
<p dir="ltr">ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.<br>
சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகள் தகடூரைத்(தருமபுரியைத்) தலைநாகராகக் கொண்ட தகடூர் நாடு எனவும், மழவர்கள் வாழும் நிலப்பரப்பு என்பதால் மழநாடு எனவும் சங்ககாலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது.</p>
<p dir="ltr">எக்காலத்திலும் இப்பகுதிகள் கொங்குநாடு என்ற வரம்புக்குள் இருக்கவில்லை. கொங்குநாடு என்பதே கொங்கு வெள்ளாளர்களால் உருவாக்கப்பட்ட தனிமாநிலக் கோரிக்கைக்கான கற்பனை. கொங்குநாடு என்ற பெயரில் எக்காலத்திலும் தனியாக அரசாட்சி செலுத்தியிருக்கவில்லை. அது கற்பனையே.</p>
<p dir="ltr">கோவைக் கிழார், புலவர் குழந்தை உள்ளிட்டவர்கள் சாதி உணர்வோடு வலிந்து தகடூர் நாட்டை கொங்கு நாடு என்கின்றனர்.<br>
காவிரிக்கு வடக்கே உள்ள சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வன்னியர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.<br>
கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல் கொங்கு நாட்டின் எல்லையாக பழனி தெற்கு, தலைமலை வடக்கு என்றுதான் சொல்கிறது. கொங்கு மண்டல சதகம் கொங்கு நாட்டின் வடக்கெல்லை எனச் சொல்லும் பெரும்பாலை என்பது ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் பகுதியிலுள்ள மனிதர்கள் வாழாத வறண்ட காட்டுபகுதியே ஆகும்.<br>
தலைமலை என்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி அருகே உள்ள தலமலை கிராமம் ஆகும். கொங்கு இன மக்கள் பெரும்பான்மையாக பாரம்பரியமாக செறிந்து வாழும் மாவட்டங்கள் காவிரிக்குத் தெற்கே ஈரோடு, திருப்பூர், கோவை ஆகியவையே ஆகும்.</p>
<p dir="ltr">"தமிழ்பேசும் நிலம் தமிழர் நிலம். தமிழர் நிலத்தில் தமிழுக்கு முதன்மை தமிழர்க்குத் தலைமை" என்பது தமிழ்த்தேசியக் கொள்கை. இந்த தமிழ்த்தேசியக் கொள்கைக்கு எதிரானது ஆரியமும் திராவிடமும் மட்டுமல்ல. கொங்குத்தேசியப் பிரிவினை வாதமும் தமிழ்த்தேசியத்திற்கு ஆபத்தானது. எதிரானது.</p>
<p dir="ltr">கொங்கு வெள்ளாள சாதிவெறியர்களில் சிலர் தங்கள் சாதிக்கு தனிமாநிலம் அமைக்கவேண்டும் என்னும் சுயநலத்தால் "வரலாற்று ஆய்வாளர்" என்னும் முகமூடி அணிந்துகொண்டு "கொங்குநாட்டு வரலாறு" என்ற பெயரில் தவறான தகவல்களைத் தந்து வரலாற்றைத் திரித்து எழுதிவருகின்றனர். அது தமிழினத்தின் ஒற்றுமைக்கும் தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கும் ஆபத்தானது.</p>
<p dir="ltr">கொங்குநாடு என்பதே வரலாற்றில் எக்காலத்திலும் இருந்ததில்லை. அது கொங்கு வெள்ளாளர்களால் தங்கள் சாதிக்கு தனிமாநிலம் அமைக்கும் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட கற்பனை. அதற்குத் தனியாட்சி செய்த அரச மரபினர் கிடையாது. கொங்குநாடு என்ற பெயரில் தனி நாடோ அதற்குத் தலைநகரமோ மன்னர் பரம்பரையோ எக்காலத்திலும் இருக்கவில்லை.</p>
<p dir="ltr">சோழநாடு, சேரநாடு, பாண்டியநாடு, தொண்டைநாடு, தகடூர்நாடு, மழநாடு, பல்லவநாடு என்பவையே சங்ககாலத்திற்கு முன்பிருந்து அரச மரபினர் ஆண்ட நாடுகளாக இருந்தன.</p>
<p dir="ltr">கொங்குநாடு பிரிவினைவாதம் பேசும் சாதிவெறியர்களை முளைக்கும்போதே கிள்ளி எறிய வேண்டியது தமிழ்த்தேசியவாதிகளின் கடமை.</p>
<p dir="ltr">*தகடூர் நாடு*</p>
<p dir="ltr">தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கொங்கு நாட்டைச் சேர்ந்தவை அல்ல. இம்மாவட்டங்கள் தகடூர் நாட்டைச் சேர்ந்தவை.</p>
<p dir="ltr">தமிழக வரலாற்றுக்குத் தனித்த புகழைத் தேடித் தந்துள்ளது தகடூர். பண்டைய தகடூரே தற்போது தருமபுரி. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்புகூட இதன் பெயர் தகடூர்தான். சுமார் 2000 ஆண்டுகளாக வழங்கி வந்த பெயர். தகடூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது “அதியமான் நெடுமான் அஞ்சி”. இவ்வூரைத் தலைநகராக கொண்டு ஆண்டவர். அதியனைப் போற்றிப் புகழ்ந்து பாடிய ஔவையார் அதியனின் சபையை அலங்கரித்தார். தித்திக்கும் கரும்பை முதன்முதலில் பயிர் செய்யக் கண்டுபிடித்தவன் அதியமான்.</p>
<p dir="ltr">தகடூர் நாட்டில் இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுகளில் தகடூர் நாடு என்றே உள்ளது (தகடூர் நாட்டுத் தகடூர்), சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டு கூட “கொங்கு” என்ற பெயருடன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p dir="ltr">ஆனால் இன்றுள்ள சில மக்கள் அறியாமையால் இதைக் கொங்கு நாடு/கொங்கு மண்டலம் என்றழைக்கின்றனர். தகடூர் நாட்டில் வாழும் சில பாமர மக்களும் தகடூர் என்ற வராலாற்று சிறப்பு மிக்க பெயரை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகின்றனர்.</p>
<p dir="ltr">தகடூர் என்றாலே இந்த நாட்டின் பூர்வகுடி மக்களான “மழவர்கள்” வாழ்ந்த பூமி. கொங்கு நாட்டிற்கும் தகடூர் நாட்டிற்கும் நிறைய கலாச்சார வேறுபாடுகள் உண்டு.</p>
<p dir="ltr">தமிழகத்திலேயே எங்கும் காணப்படாத நடுகல் வழிபாடு என்பது தகடூர் நாட்டில் அதிகம். இவ்வாறு வழிபாடு, மொழி, மக்களின் கலாச்சாரம், இனம் அனைத்திலும் கொங்கு நாட்டிலிருந்து வேறுபட்டவர்கள் இந்த தகடூர் நாட்டு மக்கள். </p>
<p dir="ltr">இப்படி தனி நாடாக இருந்த  தகடூர் நாட்டை (சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி) அறியாமையால் கொங்கு நாடாகக் கூறுகின்றனர். கிடைத்த பல தகவல்களை வைத்துப்பார்க்கும் போது இது ஒரு தனி நாடாக இருந்துள்ளது.</p>
<p dir="ltr">தகடூர் நாடு. சங்க காலம் முதல் 13 ஆம் நூற்றாண்டுவரை இந்த நாட்டை அதியமான் மரபினர் ஆண்டுவந்துள்ளனர். இப்பகுதி கொங்கு நாடல்ல. இது தகடூர் நாடு. அதியமான் மரபினர் மழவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். மழவர்கள் மழவராயர் பட்டத்துடன் வன்னியரில் உட்பிரிவினராக இப்போது உள்ளனர். இந்த மன்னர்களில் ஐந்து மன்னர்களின் பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாழும் மக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் செறிந்து வாழும் கொங்கு இன மக்களிடமிருந்து பேச்சு வழக்கு, பழக்கவழக்கம், பண்பாடு, குலத்தெய்வ <u>வழிபாட்டுமுறை</u> ஆகியவற்றால் முற்றிலும் வேறுபட்டவர்கள். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டப் பகுதி ஆகியவை தகடூர் நாட்டில் அடங்குகிறது. இப்பகுதியில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் எதிலும் கொங்கு என்ற சொல்லே இடம்பெறவில்லை. தகடூர் நாடு என்றே கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.</p>
<p dir="ltr">தகடூர் நாடு கொங்கு நாட்டோடு சேர்ந்ததல்ல. இது தனிநாடாக இருந்த ஒன்று.</p>
<p dir="ltr">பல ஆய்வுகளிலிருந்து பார்க்கும்போது தகடூர் நாடு என்பது சங்ககாலம் முதல் தனி நாடே அது எந்த நாட்டுடனும் (கொங்கு நாட்டுடன்) சேர்ந்தது அல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது.</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-63298347285183596312018-09-18T22:02:00.003+05:302023-07-31T09:44:12.687+05:30தமிழ்நாட்டை ஆண்டவர்கள்<p dir="ltr">*பழங்காலம் முதல் இக்காலம் வரை தமிழ்நாட்டை யாரெல்லாம் ஆண்டிருக்கிறார்கள்?*</p><p dir="ltr"><br></p><p dir="ltr">👉 நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கிபி 2ஆம் நூற்றாண்டு வரை *சேரர், சோழர், பாண்டியர்* ஆகிய மூவேந்தர்கள் மற்றும் *தொண்டைமான்கள், பாரி, ஓரி, காரி, அதியமான் முதலான குறுநில மன்னர்கள்* (இவர்கள் *தமிழர்*).</p><p dir="ltr"> சோழர் தலைநகரம் பூம்புகார், உறையூர், பழையாறை. பாண்டியர் தலைநகரம் மதுரை. சேரர் தலைநகரம் பெரியாறு அரபிக் கடலில் கலக்கும் இடமான வஞ்சி என்ற கொடுங்களூர் மற்றும் கரூர்.. தொண்டைமான்களின் தலைநகரம் காஞ்சிபுரம். அதியமான்களின் தலைநகரம் தகடூர் என்னும் தருமபுரி..</p><p dir="ltr"><br></p><p dir="ltr">👉 கிபி 2ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4ஆம் நூற்றாண்டு தொடக்கம்வரை *களப்பிரர்*. ( இவர்கள் தமிழரா? யார்? எங்கிருந்து வந்தார்கள்? என்று தெரியவில்லை).</p><p dir="ltr"><br></p><p dir="ltr">👉 கிபி 4ஆம் நூற்றாண்டு தொடக்கம்முதல் கிபி 9ஆம் நூற்றாண்டு வரை *பல்லவர்கள்*. (இவர்கள் *தமிழர்*). இவர்கள் சங்க காலத் தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள்.. பல்லவர் தலைநகரம் காஞ்சிபுரம். இவர்களின் கடற்கரை தலைநகரம் மாமல்லபுரம்.</p><p dir="ltr"><br></p><p dir="ltr">👉 கிபி 9ஆம் நூற்றாண்டு முதல் கிபி 13ஆம் நூற்றாண்டு வரை *சோழர்கள்.* இவர்கள் *தமிழர்*.</p><p dir="ltr">சோழர் தலைநகரம் பழையாறை, தஞ்சாவூர் பிறகு கங்கைகொண்டசோழபுரம். 250 ஆண்டுகள் கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரம்.. பிறகு தீவுக்கோட்டை. அதன் பிறகு சிதம்பரம் அருகே பிச்சாவரம்.. இந்தியா, இலங்கை, மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளின் பகுதிகள் சோழப்பேரரசில் அடங்கியிருந்த காலம்...</p><p dir="ltr">ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் வலிமைமிக்க பேரரசர்களாக இருந்தனர்..</p><p dir="ltr"><br></p><p dir="ltr">👉 கிபி 13ஆம் நூற்றாண்டு முதல் கிபி 14ஆம் நூற்றாண்டு வரை *பாண்டியர்*. (இவர்கள் *தமிழர்*). பாண்டியர் தலைநகரம் மதுரை.</p><p dir="ltr"><br></p><p dir="ltr">👉 கிபி 14ஆம் நூற்றாண்டு முதல் கிபி 17ஆம் நூற்றாண்டு வரை *விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் தெலுங்க நாயக்க மன்னர்கள்*. (இவர்கள் *தெலுங்கர்*). விஜயநகரப் பேரரசர்கள் கர்நாடகாவில் ஹம்பி என்ற ஊரில் இருந்து ஆண்டார்கள். அவர்களின் ஆளுநர்களாகத் தமிழகத்திற்கு வந்த தெலுங்க நாயக்க மன்னர்கள் மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய ஊர்களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள்.</p><p dir="ltr"><br></p><p dir="ltr">👉 கிபி 17ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் 1947 வரை *ஆங்கிலேயர்*. இவர்களின் தலைநகரம் சென்னை, கல்கத்தா, டில்லி.</p><p dir="ltr"><br></p><p dir="ltr">👉 *1920 முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்களில் யாரெல்லாம் தமிழர்?* யாரெல்லாம் தெலுங்கர்? யாரெல்லாம் மலையாளி? யாரெல்லாம் கன்னடர்? யாரெல்லாம் ஆரியர்?</p><p dir="ltr"><br></p><p dir="ltr">1. சுப்பராயலு ரெட்டியார்- தெலுங்கர்</p><p dir="ltr"><br></p><p dir="ltr">2. பனகல் ராஜா தெலுங்கர்</p><p dir="ltr"><br></p><p dir="ltr">3. *பி. சுப்பராயன் - தமிழர்*</p><p dir="ltr"><br></p><p dir="ltr">4. முனுசாமி நாயுடு- தெலுங்கர்</p><p dir="ltr"><br></p><p dir="ltr">5. பொப்பிலி ராஜா- தெலுங்கர்</p><p dir="ltr"><br></p><p dir="ltr">6. *பி.டி.ராஜன் -தமிழர்.*</p><p dir="ltr"><br></p><p dir="ltr">7. கே.வி.ரெட்டி நாயுடு - தெலுங்கர்.</p><p dir="ltr"><br></p><p dir="ltr">8. இராஜாஜி - தெலுங்க பிராமணர் - ஆரியர்</p><p dir="ltr"><br></p><p dir="ltr">9. டி.பிரகாசம் - தெலுங்கர்.</p><p dir="ltr"><br></p><p dir="ltr">10. ஓ.பி.ராமசாமி ரெட்டியார் - தெலுங்கர்.</p><p dir="ltr"><br></p><p dir="ltr">11. பி.எஸ்.குமாரசாமிராஜா -தெலுங்கர்</p><p dir="ltr"><br></p><p dir="ltr">11. *காமராஜர் - தமிழர்*</p><p dir="ltr"><br></p><p dir="ltr">12. *எம்.பக்தவச்சலம் - தமிழர்*</p><p dir="ltr"><br></p><p dir="ltr">13. அண்ணாதுரை - தெலுங்கர்</p><p dir="ltr"><br></p><p dir="ltr">14. கருணாநிதி - தெலுங்கர்</p><p dir="ltr"><br></p><p dir="ltr">15. எம்ஜிஆர் - மலையாளி</p><p dir="ltr"><br></p><p dir="ltr">16. ஜானகி - மலையாளி</p><p dir="ltr"><br></p><p dir="ltr">17. ஜெயலலிதா - கன்னட பிராமணர் - ஆரியர்</p><p dir="ltr"><br></p><p dir="ltr">18. *ஓ.பன்னீர்செல்வம் - தமிழர்*</p><p dir="ltr"><br></p><p dir="ltr">19. *எடப்பாடி பழனிசாமி -தமிழர்*</p><p dir="ltr"><br></p><p dir="ltr">தமிழ்நாடு தமிழர் நாடு. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்.</p><p dir="ltr"><br></p><p dir="ltr">"வாழும் உரிமை அனைவருக்கும்.</p><p dir="ltr">ஆளும் உரிமை தமிழருக்கே".</p>
<p dir="ltr">குறிப்பு:<br>கீழைச்சாளுக்கிய நாட்டு இளவரசனாக இருந்த அனபாயன் என்பவனின் தந்தை இராஜராஜ நரேந்திர சாளுக்கியன். அவன் தெலுங்கன். தாய் சோழனின் மகள். அவள் தமிழச்சி. அதாவது அனபாயன் என்பவன் ராஜராஜ சோழனின் மகள் வழிக் கொள்ளுப்பேரன். இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரன். <br>
1070 ல் அதிராசேந்திர சோழன் சோழப்பேரரசின் மன்னனாக முடிசூட்டிக்கொள்கிறான். அவன் சில மாதங்களிலேயே இறந்துவிடுகிறான். அதிராசேந்திர சோழனுக்கு வாரிசு இல்லை. அதனால் கீழைச்சாளுக்கிய இளவரசனான அனபாயன் என்பவன் அதிராசேந்திர சோழனின் இறப்புக்குப் பிறகு குலோத்துங்க சோழன் என்ற பெயரில் சோழப்பேரரசின் மன்னனாக 1070 ல் முடிசூட்டிக் கொண்டான். அவன் வழியினர் 4 தலைமுறையினர் 1163 வரை சோழப்பேரரசை ஆண்டனர். அதன் பிறகு மீண்டும் நேரடி சோழர் பரம்பரையினர் ஆட்சிக்கு வந்துவிட்டனர்.</p><p dir="ltr">1163 ல் முடிசூடிய இரண்டாம் இராஜாதிராஜ சோழன் நேரடி சோழர் பரம்பரையைச் சேர்ந்தவர்.. இவர் முதலாம் குலோத்துங்க சோழனின் மகனான விக்கிரம சோழனின் மகள்வழிப் பேரன்... இவரது தந்தை சங்கமன் (நெறியுடைய பெருமாள்) ராஜராஜ சோழனின் நேரடி சோழர் பரம்பரையைச் சேர்ந்தவர்.. இந்த நேரடி சோழர் பரம்பரையைச் சேர்ந்தவர்களே பிச்சாவரம் சோழர்கள்..</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-49710169640976756492018-09-16T11:51:00.001+05:302018-09-26T20:27:01.418+05:30பல்லவர்கள் தமிழரே!<p dir="ltr">பல்லவர்கள் தமிழரே!<br>
பல்லவர்கள் யார்?<br>
பல்லவர்கள் தொண்டைநாட்டின் குறுநில மன்னராயிருந்த தமிழ் மன்னர்களான தொண்டைமான் வழிவந்த தமிழர்களே. தொண்டைமான் இளந்திரையன் என்போன் சங்ககாலத்தில் தொண்டை நாட்டை ஆண்ட சிறப்புமிக்க தமிழ் மன்னன் ஆவான். சங்க காலத்திற்குப் பிறகு பல்லவப் பேரரசு அமையும்வரை தொண்டைமான்கள் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர் பேரரசுக்குக் அடங்கிய குறுநில மன்னர்களாக இருந்துள்ளனர்.<br>
தொண்டைமான்கள் சோழர்களின் வழித்தோன்றல் ஆவர்.<br>
பல்லவ மன்னர்கள் தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள் என்பதாலேயே பல்லவ மன்னர்களின் வழிவந்த சில மன்னர்களும் தளபதிகளும் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டனர். குலோத்துங்க சோழனின் படைத் தளபதியாய் இருந்த கருணாகரத் தொண்டைமானைப் "பல்லவர் தோன்றல்" என்று புகழ்கிறார் ஜெயங்கொண்டார். பல்லவ  வழித்தோன்றலாக இருந்த கருணாகரன் தொண்டைமான் என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? பல்லவ மன்னர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள்.</p>
<p dir="ltr">பல்லவர்களின் முன்னோரான தொண்டைமான்கள் தமிழர்கள் என்பது சங்க இலக்கியங்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை நூலின் மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கும்<br>
உண்மை.<br>
கருணாகரத் தொண்டைமானைக் கலிங்கத்துப்பரணி 535 ஆவது பாடலில் "பல்லவர் தோன்றலைப் பாடீரோ" என்கிறார் ஜெயங்கொண்டார்.<br>
இதே கருணாகரத் தொண்டைமானைச் சிலை எழுபது என்ற நூலின் 68ஆவது பாடலில்-<br>
" புவிக்காயிரம் பொன் இறைநீக்கி<br>
கவிக்காயிரம் பொன் பரிசளித்தான்<br>
கருணாகரத் தொண்டை வன்னியனே "<br>
எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடுகிறார்.<br>
கவிச்சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார் கருணாகரத் தொண்டைமானைப் பல்லவர் என்று அடையாளப்படுத்துகிறார்.<br>
அதே தொண்டைமான் வன்னியர் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் அடையாளப்<br>
படுத்துகிறார்.</p>
<p dir="ltr">ஆகவே பல்லவர்கள் தமிழர்தான். கம்பர் எழுதிய சிலை எழுபது என்ற நூலின் மூலம் பல்லவர்கள் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது.</p>
<p dir="ltr">தென்னிந்தியாவில் அமைந்த வலிமையான முதல் பேரரசு தமிழர்கள் அமைத்த பல்லவப் பேரரசு.<br>
தமிழர்களான பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 9 நூற்றாண்டுகள் வலிமையான பேரரசாக இருந்து நல்லாட்சி செய்தார்கள். அதன்பிறகு காடவராயர், சம்புவராயர் என்ற பெயர்களில் குறுநில மன்னர்களாக இருந்தும் ஆண்டார்கள். பிற்கால சோழ, பாண்டிய பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகும் தெலுங்க நாயக்கர் ஆட்சிக்காலத்தில் உடையார்பாளையம், முகாசா பரூர் ஆகிய பகுதிகளில் பாளையக்காரர்களாக ஆட்சி செய்தனர். அதன்பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  உடையார்பாளையம், முகாசா பரூர் ஆகிய ஜமீன்களுக்கு ஜமீன்தாரர்களாகவும் தொடர்ந்து ஆட்சி செய்தனர். ஜமீன் ஒழிப்புச் சட்டம் வரும்வரை பல்லவர் வழிவந்தோர் ஜமீன்தாரர்களாக இருந்துவந்தனர்.<br>
இப்போதும் வாழும் பல்லவ வழித்தோன்றல்கள் உடையார்பாளையத்திலும், முகாசா பரூரிலும் வாழ்ந்து வருகின்றனர்.</p>
<p dir="ltr">தமிழகப் பகுதியான தொண்டைநாடு ஆந்திர எல்லைக்கு அருகில் இருப்பதால் பல்லவர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திராவின் பெரும்பகுதியைப் பிடித்து ஆளுவதற்கும் வசதியாக இருந்துவிட்டது.</p>
<p dir="ltr">பல்லவர்கள் தமிழகம், ஆந்திரம் மட்டுமல்லாமல் கடல்கடந்து இலங்கை, மலேசியா, கம்போடியா வரை சென்று ஆட்சி செய்தனர். கம்போடியாவின் அங்கோர்வாட் என்ற உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத் தளத்தைப் பல்லவர்கள்தான் கட்டினர்.</p>
<p dir="ltr">பல்லவர்கள் தொடக்க காலத்தில் பிராகிருத மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் பட்டயங்களை வெளியிட்டுள்ளனர். சங்க காலத்திற்குப் பிறகு பல்லவப் பேரரசு அமைவதற்கு முன்பு தொண்டைமண்டலம் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர் பேரரசுக்கு கட்டுப்பட்டு அடங்கிய நாடாக இருந்ததால் முற்காலப் பல்லவர்கள் சாதவாகனப் பேரரசின் தாக்கத்தால் பிராகிருத, சமஸ்கிருத ஆதரவாளர்களாக மாறியிருந்தனர். பல்லவப் பேரரசு அமைவதற்கு முன்பே வட இந்தியாவிலிருந்து சமண, பௌத்தத் துறவிகளும், சமஸ்கிருத வைதீகர்களும் காஞ்சிபுரத்தில் குடியேறி அவர்தம் பிராகிருத, சமஸ்கிருத மொழிகளை மதத்தளத்தில் பரப்பி இருந்ததும் முற்காலப் பல்லவர்கள் பிராகிருத, சமஸ்கிருதப் பட்டயங்களை வெளியிட்டமைக்கு காரணம் ஆகும்.</p>
<p dir="ltr">பல்லவர்கள் தொடக்கத்தில் சமணத்தைத் தழுவி இருந்தனர். முற்காலப் பல்லவர்கள் சமணத்தைத் தழுவியிருந்த போது பிராகிருதத்தையும், பிறகு இடைக்காலப் பல்லவர்கள் வைதீகத்தைப் பின்பற்றிய போது சமஸ்கிருதத்தையும், பிற்காலப் பல்லவர்கள் சைவத்தைப் பின்பற்றிய போது தமிழையும் ஆட்சிமொழியாகக் கொண்டிருந்தனர். சமண, பௌத்த, வைதீக சமயங்கள் சங்க காலத்திற்குப் பிறகு காஞ்சிபுரத்தில் செல்வாக்குடன் பரவியிருந்தன. சமண, பௌத்த மதங்களின் மொழி பிராகிருதம். வைதீக மதத்தின் மொழி சமஸ்கிருதம். தமிழரின் சைவம் தமிழைச் சமய மொழியாகக் கொண்டு வளர்ந்தது. பல்லவர்கள் பிராகிருதம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளை முறையே ஆட்சி மொழிகளாகக் கொண்டிருந்தமைக்கு அவர்கள் பின்பற்றிய மதங்களே முதன்மைக் காரணம் ஆகும்.<br>
தற்காலத்தில் இசுலாம் மதத்தைத் தழுவியுள்ள சில தமிழர்கள் அரபு மொழியைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றனர் அல்லவா? இந்துக்கள் சமஸ்கிருதத்தில் வழிபாடு, திருமணச்சடங்கு போன்றவற்றைச் செய்யவில்லையா? அப்படித்தான்.</p>
<p dir="ltr">பல்லவர்கள் தம்மைப் பரத்வாஜ கோத்திரத்திலிருந்து வந்த சத்திரியர்கள் என்று கல்வெட்டுகளில் பதிந்துள்ளனர் எனவும் அதனால் பல்லவர்கள் ஆரியர் எனவும் தமிழரல்லர் எனவும் சிலர் சொல்கின்றனர்.<br>
தமிழகத்தில் வட இந்திய ஆரிய கலாச்சாரமும் மனுதரும நால்வருண கோட்பாடும் புகுந்த பிறகு பல தமிழ்க்குடிகள் தம் சாதிப் பெயரை வடமொழிப்படுத்தி புராணமயப்படுத்தினர்.<br>
எடுத்துக்காட்டாக, கொங்கு மண்டல வேளாளர்கள் தம்மை மரபாள வம்சம் என்றனர். வடமொழியின் மரபாள புராணத்தைத் தழுவி வேளாள புராணம் எழுதிக்கொண்டனர்.<br>
கோனார் என்னும் இடையர்கள் தம்மை யாதவர் என்று சொல்லிக்கொண்டனர்.<br>
தொண்டை மண்டலம், நடுநாடு, வட கொங்கு மண்டலம் ஆகியவற்றைப் பூர்வீகமாக கொண்ட வன்னியர்களான பள்ளிகள் தம்மை அக்னி வம்சம் என்று சொல்லிக்கொண்டனர். வடமொழியில் உள்ள ஆக்னேய புராணத்தைத் தழுவி வன்னிய புராணம் எழுதிக்கொண்டனர்.<br>
தச்சர்கள் தம்மை விஸ்வாமித்திர கோத்திரம் என்று சொல்லிக்கொண்டனர்.<br>
நாடாண்ட மன்னர்கள் தம்மை சத்திரியர் என்று சொல்லிக்கொண்டனர்.<br>
இவ்வாறே பல தமிழ்க்குடிகள் பெருமைக்காக வடமொழிப்பெயர்களையும் வடமொழி புராணங்களையும் தமக்கு ஏற்றிக்கொண்டன.<br>
பல்லவர்கள் சொல்லும் பரத்வாஜ கோத்திரம் என்பதும் அவ்வாறுதான்.<br></p>
<p dir="ltr">பல்லவர்கள் தமிழர் என்பதில் ஐயமில்லை.</p>
<p dir="ltr">பல்லவர் பற்றிய முந்தைய வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள் மறு ஆய்வுக்கு உட்பட்டவை.<br>
முந்தைய வரலாற்று ஆய்வாளர்களின் பல்லவர் பற்றிய தரவு சேகரிப்புக்கு செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி நூலின் செய்தியும், கம்பரின் சிலையெழுபது நூலின் செய்தியும் எட்டாமல் இருந்திருக்கிறது.<br>
அதனால் "பல்லவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை" என்று பொத்தாம் பொதுவாக எழுதிவிட்டுச் சென்றனர்.<br>
"பல்லவர்கள் யார் என்று தெரியவில்லை" என்று வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய காரணத்தால் பல்லவர்கள் மீது தெலுங்கர்கள் உரிமை கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-84681684550439967162018-09-08T21:16:00.001+05:302018-09-12T17:32:35.460+05:30பல்லவர்கள் தமிழர்தான்<p dir="ltr">பல்லவர்கள் யார்?<br>
தமிழரான பல்லவர் வரலாறு ஆரிய பிராமணர்களாலும் திராவிடத் தெலுங்கர்களாலும் திரிக்கப்பட்டுள்ளது.</p>
<p dir="ltr">பல்லவர்கள் தொண்டைமான் வழிவந்த தமிழர்கள்.</p>
<p dir="ltr">பல்லவர்கள் தொடக்க காலத்தில் பிராக்கிருதம், சமஸ்கிருதம் போன்ற வடமொழியில் பட்டயங்களை வெளியிட்டுள்ளனர். அதனால் அவர்கள் ஆரியர் என்று வரலாற்றாய்வாளர் சிலர் தவறாகப் பதிவுசெய்துள்ளனர்.<br>
பல்லவருக்கு முன்பே வட இந்தியாவிலிருந்து காஞ்சிபுரத்தில் புத்த, சமண துறவிகளும் சமஸ்கிருத வைதீகர்களும் குடியேறி அவர்தம் வடமொழியை மதத்தளத்தில் பரப்பி இருந்தமையே அக்காலத்தில் பல்லவர்கள் பிராக்கிருத, சமஸ்கிருதக் கல்வெட்டுகளை வெளியிட்டதற்கு காரணம். </p>
<p dir="ltr">பல்லவர்கள் ஈரானியர்கள் என்று சிலர் நிறுவ முயன்றுள்ளனர். பல்லவர்கள் ஈரானியர் என்றால் ஈரானிய மொழியில் அல்லவா பட்டயங்களை வெளியிட்டிருக்க வேண்டும்.<br>
பல்லவர்கள் தெலுங்கர்கள் என்றால் அவர்கள் தெலுங்கு மொழியில் அல்லவா பட்டயங்களை வெளியிட்டிருக்க வேண்டும்.</p>
<p dir="ltr">பல்லவர்களைத் தமிழரல்லர் என்று சொன்ன வரலாற்றாய்வாளர்கள் ஆரிய, தெலுங்க பக்தர்கள்தான். அதனால் பெருமைமிகு தமிழர் வரலாற்றை மறைக்க முயன்றனர்.  "பல்லவர் வரலாறு" என்ற நூலை எழுதிய ம.இராசமாணிக்கனார் ஒரு மிகப்பெரிய வரலாற்று திரிபுவாதி. அவர் நிச்சயமாக தெலுங்கராகத்தான் இருக்க வேண்டும்.  பல்லவர்கள் தெலுங்கர்கள் என்பதை நிறுவுவதற்காக பொய்ச் செய்தியை வலிந்து திணித்துள்ளார். அவருக்குத் தமிழர் மீதிருந்த காழ்ப்புணர்ச்சியை காரணம்.</p>
<p dir="ltr">பிற்காலச் சோழர்களும் சமஸ்கிருத ஆதவாளர்களாக இருந்தனர் . சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர். அதனால்<br>
சோழர்களையும் தமிழரல்லர் அவர்கள் வடவர்கள் அல்லது ஈரானியர் என்று சொல்வார்கள் போலும். என்ன ஒரு குழப்படி வேலை.</p>
<p dir="ltr">முந்தைய வரலாற்றாய்வாளர்களின் ஆய்வு முடிவுகள் பல மறு ஆய்வுக்கு உட்பட்டவை.</p>
<p dir="ltr">பல்லவர்கள் தம்மைப் பரத்வாஜ கோத்திரத்திலிருந்து வந்த சத்திரியர்கள் என்று கல்வெட்டுகளில் பதிந்துள்ளனர் எனவும் அதனால் பல்லவர்கள் ஆரியர் எனவும் தமிழரல்லர் எனவும் சிலர் சொல்கின்றனர்.<br>
தமிழகத்தில் வட இந்திய ஆரிய கலாச்சாரமும் மனுதரும நால்வருண கோட்பாடும் புகுந்த பிறகு பல தமிழ்க்குடிகள் தம் சாதிப் பெயரை வடமொழிப்படுத்தி புராணமயப்படுத்தினர்.<br>
எடுத்துக்காட்டாக, கொங்கு மண்டல வேளாளர்கள் தம்மை மரபாள வம்சம் என்றனர். வடமொழியின் மரபாள புராணத்தைத் தழுவி வேளாள புராணம் எழுதிக்கொண்டனர்.<br>
கோனார் என்னும் இடையர்கள் தம்மை யாதவர் என்று சொல்லிக்கொண்டனர்.<br>
தொண்டை மண்டலம், நடுநாடு, வட கொங்கு மண்டலம் ஆகியவற்றைப் பூர்வீகமாக கொண்ட வன்னியர்களான பள்ளிகள் தம்மை அக்னி வம்சம் என்று சொல்லிக்கொண்டனர். வடமொழியில் உள்ள ஆக்னேய புராணத்தைத் தழுவி வன்னிய புராணம் எழுதிக்கொண்டனர்.<br>
தச்சர்கள் தம்மை விஸ்வாமித்திர கோத்திரம் என்று சொல்லிக்கொண்டனர்.<br>
நாடாண்ட மன்னர்கள் தம்மை சத்திரியர் என்று சொல்லிக்கொண்டனர்.</p>
<p dir="ltr">இவ்வாறே பல தமிழ்க்குடிகள் பெருமைக்காக வடமொழிப்பெயர்களையும் வடமொழி புராணங்களையும் தமக்கு ஏற்றிக்கொண்டன.<br>
பல்லவர்கள் சொல்லும் பரத்வாஜ கோத்திரம் என்பதும் அவ்வாறுதான்.</p>
<p dir="ltr">உலக மொழிகள் பலவற்றில் தமிழ்ச்சொற்களை ஒத்த பல சொற்கள் உள்ளன.<br>
ஈரானிய பஹலவா என்ற சொல்லுக்கும் தமிழ் பல்லவர் என்ற சொல்லுக்கும் உள்ள ஒலிப்பொற்றுமையை மட்டும் வைத்து பல்லவர்களை ஈரானியர் என்று கதைகட்ட வேண்டாம்.</p>
<p dir="ltr">பல்லவர்கள் தொண்டைநாட்டின் குறுநில மன்னராயிருந்த தமிழ் மன்னர்களான தொண்டைமான் வழிவந்த தமிழர்களே. தொண்டைமான் இளந்திரையன் என்போன் சங்ககாலத்தில் தொண்டை நாட்டை ஆண்ட சிறப்புமிக்க தமிழ் மன்னன் ஆவான்.<br>
தொண்டைமான்கள் சோழர்களின் வழித்தோன்றல் ஆவர்.<br>
பல்லவ மன்னர்கள் தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள் என்பதாலேயே பல்லவ மன்னர்களின் வழிவந்த சில மன்னர்களும் தளபதிகளும் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டனர். குலோத்துங்க சோழனின் படைத் தளபதியாய் இருந்த கருணாகரத் தொண்டைமானை பல்லவர் தோன்றல் என்று புகழ்கிறார் ஜெயங்கொண்டார். பல்லவ  வழித்தோன்றலாக இருந்த கருணாகரன் தொண்டைமான் என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? பல்லவ மன்னர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள்.<br>
பல்லவர்கள் தமிழர்கள் என்பது சங்க இலக்கியங்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை நூலின் மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கும்<br>
உண்மை.<br>
கருணாகரத் தொண்டைமானை கலிங்கத்துப்பரணி 535ஆவது பாடலில் பல்லவர் தோன்றலைப் பாடீரோ என்கிறார் ஜெயங்கொண்டார்.<br>
இதே கருணாகரத் தொண்டைமானை சிலை எழுபது நூலின் 68ஆவது பாடலில்-<br>
" புவிக்காயிரம் பொன் இறைநீக்கி<br>
கவிக்காயிரம் பொன் பரிசளித்தான்<br>
கருணாகரத் தொண்டை வன்னியனே "<br>
எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடுகிறார்<br>
கவிச்சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார் கருணாகரத் தொண்டைமானைப் பல்லவர் என்று அடையாளப்படுத்துகிறார்.<br>
அதே தொண்டைமான் வன்னியர் என்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் அடையாளப்<br>
படுத்துகிறார்.</p>
<p dir="ltr">ஆகவே பல்லவர்கள் தமிழர்தான்.</p>
<p dir="ltr">களப்பிரர் காலத்தில் நிகழ்ந்த <u>இருட்டடிப்பால்</u> வடமொழிப்பண்பாடு, வடமொழி ஆதிக்கம் தமிழகத்தில் புகுந்து பல உண்மைகளை மறைத்திருக்கிறது.</p>
<p dir="ltr">தென்னிந்தியாவில் அமைந்த வலிமையான முதல் பேரரசு தமிழர்கள் அமைத்த பல்லவப் பேரரசு.<br>
தமிழர்களான பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 9 நூற்றாண்டுகள் வலிமையான பேரரசாக இருந்து நல்லாட்சி செய்தார்கள். அதன்பிறகு காடவராயர், சம்புவராயர் என்ற பெயர்களில் குறுநில மன்னர்களாக இருந்தும் ஆண்டார்கள்.<br>
பல்லவர்கள் சங்க காலத்தில் தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள் ஆவர். பல்லவர்கள் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். <br>
தமிழகப் பகுதியான தொண்டைநாடு ஆந்திர எல்லைக்கு அருகில் இருப்பதால் பல்லவர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திராவின் பெரும்பகுதியைப் பிடித்து ஆளுவதற்கும் வசதியாக <u>இருந்துவிட்டது</u>.</p>
<p dir="ltr">பல்லவர்கள் தமிழகம், ஆந்திரம் மட்டுமல்லாமல் கடல்கடந்து இலங்கை, மலேசியா, கம்போடியா வரை சென்று ஆட்சி செய்தனர். கம்போடியாவின் அங்கோர்வாட் என்ற உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத் தளத்தைப் பல்லவர்கள்தான் கட்டினர்.<br>
</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-82755497586875915392018-09-03T19:50:00.001+05:302018-09-04T17:56:06.552+05:30தமிழக இட ஒதுக்கீட்டின் அவலநிலை<p dir="ltr">தமிழக அரசின் சாதிவாரி இட ஒதுக்கீட்டில் 40 விழுக்காடுக்கும் மேலாக தமிழரல்லாத பிறமொழியினரே பயன்பெறுகின்றனர். தெலுங்க, கன்னட சாதியினரை எல்லாம் SC, ST, BC, MBC பிரிவுகளுக்குள் கொண்டுவந்ததே காரணம். தமிழக அரசுப் பணியில் தெலுங்க, கன்னட மொழியினரின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது.</p>
<p dir="ltr">ST பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 36</p>
<p dir="ltr">கொண்டாரெட்டி,<br>
மலையாளி,<br>
மலையக்கண்டி,<br>
ஊராளி,<br>
காட்டு நாயக்கர்,<br>
கம்மாரா,<br>
கொரகா,<br>
மலை அரையர்,<br>
குடியா,<br>
கண்யான்,<br>
இது போல இந்த பட்டியலில் உள்ள<br>
36 சாதிகளில் 20 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள் உள்ளனர்.</p>
<p dir="ltr">SC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 76</p>
<p dir="ltr">ஆதி ஆந்திரர்,<br>
ஆதி கர்நாடகர்,<br>
அஜிலா,<br>
பைரா,<br>
ராணேயர்,<br>
பஞ்சமா,<br>
நாயாடி,<br>
டோம்,<br>
ஜக்கலி,<br>
பகூடா<br>
இது போல இந்த பட்டியலில் உள்ள<br>
76 சாதிகளில்<br>
40 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.</p>
<p dir="ltr">BC பட்டியலில் மொத்த சாதிகளின்<br>
எண்ணிக்கை= 138 </p>
<p dir="ltr">பில்லவா,<br>
செளத்திரி,<br>
கெளடா,<br>
ஜெட்டி,<br>
கன்னடிய நாயுடு,<br>
கேரள முதலி,<br>
மராட்டியர்,<br>
ஒதியா,<br>
ரெட்டி,<br>
சாலிவாகனா,<br>
லம்பாடி,<br>
இது போல இந்த பட்டியலில் உள்ள<br>
138 சாதிகளில்<br>
65 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்,</p>
<p dir="ltr">MBC பட்டியலில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 41</p>
<p dir="ltr">பெஸ்கா,<br>
பட்ராஜீ,<br>
இசை வேளாளர்,<br>
சீவியர்,<br>
ஜோகி,<br>
கொரச்சா,<br>
தெலுங்கு பட்டி செட்டி,<br>
தொம்மரா,<br>
நோக்கர்,<br>
ஜம்புவானோடை,<br>
இது போல இந்த பட்டியலில் உள்ள <br>
41 சாதிகளில் 20 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.</p>
<p dir="ltr">DC பட்டியலில் உள்ள மொத்த <br>
சாதிகளின் எண்ணிக்கை = 68</p>
<p dir="ltr">பட்டுதுர்காஸ்,<br>
சக்கலா,<br>
தெலுங்கு பட்டி செட்டிகள்,<br>
மொந்த கொல்லா,<br>
தொங்க போயர்,<br>
தொம்பர்கள்,<br>
நோக்கர்கள்,<br>
போயர்கள் ,<br>
இது போல இந்த பட்டியலில் உள்ள <br>
68 சாதிகளில் 35 சாதிகள் <br>
வேறு மொழியை சார்ந்தவர்கள்.</p>
<p dir="ltr">முற்பட்டபட்டியலில் உள்ள <br>
சாதிகளின் எண்ணிக்கை= 79,</p>
<p dir="ltr">ஆங்கிலோ இந்தியர்,<br>
லண்டன் மிஷன்,<br>
மலங்கரா,<br>
சட்ஸி,<br>
மைமன்,<br>
நவாப்,<br>
குதுப்பத்தான்,<br>
நாயுடு,<br>
மூசிக பலிஜ குலம்,<br>
கொண்ட ரெட்டி,<br>
இது போல இந்த பட்டியலில் உள்ள <br>
79 சாதிகளில் 40 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள்.</p>
<p dir="ltr">இவர்கள் எல்லாம் இங்கு இட ஒதுக்கீடு பெறுவது எப்படி என நாம் இது வரை சிந்தனை செய்தது<br>
உண்டா?</p>
<p dir="ltr">தமிழர்களால் வேறு <br>
மாநிலத்தில் அந்த<br>
மாநில அரசுப் பணிக்கு விண்ணப்பம் <br>
செய்ய முடியுமா?</p>
<p dir="ltr">ஆனால் இங்கு<br>
மலையாளிகளும்,<br>
கன்னடர்களும்,<br>
தெலுங்கர்களும்,<br>
மற்றும் பிற மொழியினரும் இங்கு <br>
இட ஒதுக்கீட்டை அனுபவித்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும் <br>
அனைத்து பலன்களையும் இந்த நிலத்தில் அனுபவித்து வருகின்றனர்.<br>
இது யாருக்கும் தெரிவதில்லை.</p>
<p dir="ltr">தமிழகத்தில் உள்ள சாதிய  எண்ணிக்கையில் பிற மொழியை சார்ந்த சாதிகள் தான் அதிகம்.</p>
<p dir="ltr">இதைப் பற்றி யாராவது  <br>
இந்த நிலத்தில் பேசியது உண்டா?</p>
<p dir="ltr">இது தெரியாமல் தமிழர்களுக்கு<br>
இட ஒதுக்கீடு பற்றிய போதிய தெளிவான பார்வை இல்லை.</p>
<p dir="ltr">ஏதோ குறிப்பட்ட மக்களுக்கு மட்டுமே<br>
இட ஒதுக்கீடு இருப்பது போல <br>
பொது வெளியில் பேசிக் கொண்டு<br>
தன்னை அறிவாளி போல காட்டி கொள்கிறது முட்டாள் தமிழ் சமூகங்கள்.</p>
<p dir="ltr">இட ஒதுக்கீடு முறையில் <br>
தமிழர்களைவிட <br>
பிறமொழி சாதிகள்தான் <br>
அதிகளவு பயன் பெறுகிறார்கள்.</p>
<p dir="ltr">இதைக் கேட்க யாருக்கு<br>
தைரியம் உள்ளது?<br>
இங்குதான் தமிழ்ச் சாதிகளுக்குள் <br>
அடித்துக்கொள்வதற்கு மட்டுமே<br>
நேரம் உண்டு.</p>
<p dir="ltr">இத்தனை <br>
உரிமைகளையும் ,<br>
அதிகாரத்தையும் ,<br>
பலன்களையும்,<br>
பிறமொழி சாதியினருக்குக் கொடுத்தவர்கள்<br>
திராவிடர்கள்தான்.</p>
<p dir="ltr">இத்தனை பிற மொழிச் சாதிகளை இங்கு இடம் பெறச் செய்து நாம் முழுமையாக பெற வேண்டியதை <br>
பிறமொழி சாதியினரும் அனுபவிக்கக் காரணமானவர்கள் திராவிடர்கள்தான்.</p>
<p dir="ltr">இந்த மண்ணில் திராவிட ஆட்சி தொடரும் வரை இந்த அவல நிலை இருக்கத்தான் செய்யும்.</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-86772152048422151142018-08-22T18:37:00.001+05:302018-08-22T19:54:42.373+05:301920 முதல் தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்தவர்களில் யார் தமிழர்?<p dir="ltr">*1920 முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்களில் யாரெல்லாம் தமிழர்?* யாரெல்லாம் தெலுங்கர்? யாரெல்லாம் மலையாளி? யாரெல்லாம் கன்னடர்? யாரெல்லாம் ஆரியர்?</p>
<p dir="ltr">1. சுப்பராயலு ரெட்டியார்- தெலுங்கர்</p>
<p dir="ltr">2. பனகல் ராஜா தெலுங்கர்</p>
<p dir="ltr">3. *பி. சுப்பராயன் - தமிழர்*</p>
<p dir="ltr">4. முனுசாமி நாயுடு- தெலுங்கர்</p>
<p dir="ltr">5. பொப்பிலி ராஜா- தெலுங்கர்</p>
<p dir="ltr">6. *பி.டி.ராஜன் -தமிழர்.*</p>
<p dir="ltr">7. கே.வி.ரெட்டி நாயுடு - தெலுங்கர்.</p>
<p dir="ltr">8. இராஜாஜி - தெலுங்க பிராமணர் - ஆரியர் </p>
<p dir="ltr">9. டி.பிரகாசம் - தெலுங்கர்.</p>
<p dir="ltr">10. ஓ.பி.ராமசாமி ரெட்டியார் - தெலுங்கர்.</p>
<p dir="ltr">11. பி.எஸ்.குமாரசாமிராஜா -தெலுங்கர்</p>
<p dir="ltr">11. *காமராஜர் - தமிழர்*</p>
<p dir="ltr">12. *எம்.பக்தவச்சலம் - தமிழர்*</p>
<p dir="ltr">13. அண்ணாதுரை - தெலுங்கர் </p>
<p dir="ltr">14. கருணாநிதி - தெலுங்கர் </p>
<p dir="ltr">15. எம்ஜிஆர் - மலையாளி </p>
<p dir="ltr">16. ஜானகி - மலையாளி </p>
<p dir="ltr">17. ஜெயலலிதா - கன்னட பிராமணர் - ஆரியர் </p>
<p dir="ltr">18. *ஓ.பன்னீர்செல்வம் - தமிழர்*</p>
<p dir="ltr">19. *எடப்பாடி பழனிசாமி -தமிழர்*</p>
<p dir="ltr">*தமிழ்நாடு தமிழர் நாடு. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்.*</p>
<p dir="ltr">அண்ணாதுரை தெலுங்கரா???<br>
அவர் காஞ்சிபுரத்தில் முதலியார் அல்லவா? என்கின்றனர் விவரம் தெரியாதவர்கள்.<br>
அண்ணாதுரையின் தாய் பங்காரு அம்மாள் சின்னமேளம் என்ற தெலுங்கு சாதி.<br>
அண்ணாதுரையின் தந்தை நடேசன் தெலுங்கு முதலியார்.</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-14478754856307709122018-08-10T23:21:00.001+05:302018-08-10T23:57:56.642+05:30ஆங்கில மொழியின் வரலாறு:<p dir="ltr">*தமிழில் பேசினாலோ எழுதினாலோ கேவலமாகப் பார்க்கும் பக்கிகளே!*<br>
நாலு இங்கிலிஸ் வார்த்தைகளைத் தெரிந்துகொண்டு மேதாவி போல பந்தா காட்டும் உங்களுக்கு *ஆங்கில மொழியின் வரலாறு* தெரியுமா? நிச்சயமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.<br>
தெரிந்துகொள்ளுங்கள்.<br>
👇👇👇<br>
*ஆங்கிலம் என்பது என்ன?*</p>
<p dir="ltr">*ஆங்கில மொழியின் வரலாறு*</p>
<p dir="ltr">மூன்று ஜெர்மானிய இனக்குழுவினர் பிரிட்டனின் மேல் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்ததில் இருந்து ஆங்கிலத்தின் வரலாறு ஆரம்பிக்கிறது. ஆங்லர்கள், சாக்சன்கள், யூட்டுகள் என்ற இந்த இனக்குழுக்கள் வட கடலைத் தாண்டி இன்றைய டென்மார்க் மற்றும் வட ஜெர்மனி பகுதிகளில் இருந்து வந்தனர். அப்போது பிரிட்டனில் வாழ்ந்து வந்தவர்கள் ஒரு செல்ட்டிக் மொழியைப் பேசி வந்தனர். ஆனால் பெரும்பாலான செல்டிக் மொழியினர், ஆக்கிரமிப்பாளர்களால் மேற்கும் வடக்குமாக நெருக்கித் தள்ளப்பட்டனர் – முக்கியமாக இன்று வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து என அழைக்கப்படும் பகுதிகளுக்கு. ஆங்கில்கள் ”எங்கலாந்த்” (மேற்கோள்படி)தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் மொழி “எங்கலிஸ்”. இந்தச் சொற்களில் இருந்து முறையே “இங்க்லாண்ட்” மற்றும் “இங்லிஷ்” என்ற சொற்கள் உருவாகின.<br>
கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் ஜெர்மானிய ஆக்கிரமப்பாளர்கள் பிரிட்டனின் கிழக்கு மற்றும் தெற்குக் கடலோரம் நுழைந்தனர்.</p>
<p dir="ltr">*பழைய ஆங்கிலம் (450-1100 AD)*</p>
<p dir="ltr">படையெடுத்து வந்த ஜெர்மானிய இனக்குழுக்கள் பேசிய மொழிகள் ஒன்றுபோல் இருந்தன. அது பிரிட்டனில் நாம் இன்று அழைக்கும் பழைய ஆங்கிலமாக வளர்ந்தது. பழைய ஆங்கிலம் இன்றைய ஆங்கிலம் போல் இருக்கவும் இல்லை; ஒலிக்கவும் இல்லை. ஆங்கிலேயரால் இன்று பழைய ஆங்கிலத்தைபுரிந்து கொள்ளுவது மிகவும் சிரமம். இருந்த போதிலும் நவீன ஆங்கிலத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாதிச் சொற்களின் வேர்கள் பழைய ஆங்கிலமே. எடுத்துக்காட்டாக be, strong மற்றும் water ஆகிய சொற்கள் பழைய ஆங்கிலச் சொற்களே. ஏறத்தாழ கி.பி.1100 வரை பழைய ஆங்கிலம் பேசப்பட்டது.</p>
<p dir="ltr">*இடைக்கால ஆங்கிலம் (1100-1500)*</p>
<p dir="ltr">1066-ல் நார்மண்டி (நவீன பிரான்சின் ஒரு பகுதி) பிரபு வெற்றிவீரன் வில்லியம் இங்கிலாந்தின் மீது படையெடுத்து அதைப் பிடித்தான். இந்தப் புதிய ஆக்கிரமிப்பாளர்கள் (நார்மன்கள் என்று அழைக்கப்பட்டனர்) தங்களோடு ஒரு புதுவிதமான பிரஞ்சு மொழியைக் கொண்டு வந்தனர். இது அரசவை, அதிகார மற்றும் வணிக வர்க்கத்தின் மொழியானது. ஒரு கால கட்டத்திற்கு மொழி சார்ந்த வர்க்கப் பிரிவினை நிலவியது: உயர் வகுப்பினர் பிரஞ்சு மொழியும் தாழ்ந்த வகுப்பினர் ஆங்கிலத்தையும் பேசினர். 14 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலம் மீண்டும் தனது செல்வாக்கைப் பெற்றது. ஆனால் பல பிரஞ்சு சொற்கள் அதில் கலந்தன. இந்த மொழி இடைக்கால ஆங்கிலம் என அழைக்கப்பட்டது. இதுவே மாபெரும் கவிஞனான சாசரின் மொழி (கி.பி.1340-1400). ஆனால் இதனை இன்றைய ஆங்கிலேயர்களால் புரிந்து கொள்ளுவது மிகவும் கடினமே.</p>
<p dir="ltr">*தற்கால ஆங்கிலம்*</p>
<p dir="ltr">ஆரம்பகால நவீன ஆங்கிலம் (1500-1800)</p>
<p dir="ltr">இடைக்கால ஆங்கிலத்தின் இறுதிக் கட்டத்தில், உச்சரிப்பில் ஒரு குறிப்பிட்ட திடீர் மாற்றம் நிகழ்ந்தது (மாபெரும் உயிரெழுத்து மாற்றம்). உயிர் எழுத்துகள் குறுகலாக ஒலிக்கப்பட்டன. 16-ஆம் நூற்றாண்டில் இருந்து பிரிட்டானியர்கள் உலகின் பல மக்களோடும் தொடர்பு கொண்டனர்.<br>
இதனாலும், செம்மொழிக் கல்வியின் மறுமலர்ச்சியாலும், பல புதிய சொற்களூம் சொற்றொடர்களும் மொழியில் புகுந்தன. அச்சு கண்டுபிடிக்கப்பட்டதால் ஒரே பொதுமொழி அச்சில் ஏறியது. புத்தகங்கள் மலிவானது. பலர் படிக்கக் கற்றனர். அச்சு, ஆங்கிலத்தைத் தரப்படுத்தியது. இலக்கணம் நிலையானது. பல பதிப்பகங்களைக் கொண்ட இலண்டனில் பேசப்பட்ட மொழி தரமானதாக மாறியது. 1604-ல் முதல் ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது.</p>
<p dir="ltr">பிற்கால நவீன ஆங்கிலம் (1800-இன்று வரை)</p>
<p dir="ltr">ஆரம்பகால நவீன ஆங்கிலத்திற்கும், பிற்கால நவீன ஆங்கிலத்திற்கும் இடையில் இருக்கும் முக்கிய வேறுபாடு சொற்தொகுதியே. பிற்கால நவீன ஆங்கிலத்தில் மிகவும் அதிகமான சொற்கள் உள்ளன. இவை இரண்டு முக்கிய காரணிகளில் இருந்து வந்தவை. முதலில், தொழிற் புரட்சியும் தொழிற்நுட்பமும் புதிய சொற்களுக்கான தேவையை உருவாக்கின. இரண்டாவதாக, ஆக்கிரமிப்பின் உச்சகட்டத்தில் பிரித்தானியப் பேரரசு உலகின் நான்கில் ஒரு பகுதியை ஆக்கிரமித்தது. ஆங்கில மொழி பல நாடுகளில் இருந்து சொற்களைத் தழுவிக்கொண்டது.</p>
<p dir="ltr">*ஆங்கிலத்தின் வகைகள்*</p>
<p dir="ltr">கி.பி. 1600 – களில் இருந்து வட அமெரிக்காவை இங்கிலாந்து குடியேற்ற நாடாக மாற்றியதால் தனித்துவமான அமெரிக்க வகை ஆங்கிலம் உருவானது. அமெரிக்க வகை ஆங்கிலம் நவீன பிரிட்டிஷ் ஆங்கிலத்தை விட ஷேக்ஸ்பியரின் ஆங்கிலத்தைப் போல் இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் அமெரிக்க ஆங்கிலம் என்று சொல்வது உண்மையில் குடியேற்ற நாடுகளில் பாதுகாக்கப்பட்ட சொற்றொடர்களே. ஆனால் அவை பிரிட்டனில் மறைந்து போய்விட்டிருந்தன. இன்று அமெரிக்க ஆங்கிலம் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய ஆங்கிலம், நியூசிலாந்து ஆங்கிலம், கனடா ஆங்கிலம், தென் ஆப்பிரிக்க ஆங்கிலம், இந்திய ஆங்கிலம், காரிபியன் ஆங்கிலம் என பலவகை ஆங்கிலம் உள்ளன.<br>
ஆங்கிலம் ஜெர்மானிய குடும்ப மொழிகளைச் சார்ந்தது. ஜெர்மானியமொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிளைமொழி.</p>
<p dir="ltr">அமெரிக்க ஆங்கிலம் (History of American English):</p>
<p dir="ltr">மொழி வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான்.<br>
பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்காவில் வரி செலுத்தல் தொடர்பில் 1775 இல் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா படு தோழ்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1776 யூலை 4 இல் சுதந்திர பிரகடனம் செய்துக்கொண்டது. அமெரிக்காவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஆங்கில பேச்சிலும் ஒலிப்பிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.<br>
பிரித்தானிய ஆட்சியிலிருந்து தன்னாட்சி பெற்றதைப் போன்று அவர்களது மொழியிலும் தனித்துவம் இருக்க வேண்டும் என பல அமெரிக்கர்கள் விரும்பினர்.<br>
சில அமெரிக்க தலைவர்கள் தமது மொழியில் மாற்றங்கள் செய்ய தீர்மானித்தனர். அறிவியலாளர் பெஞ்சமின் பிறான்கிளின். (Benjamin Franklin [1706-1790]) அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் ஒரு சீர்திருத்த முறைமை அவசியம் என்பதை வலியுறுத்தினார்.<br>
இருப்பினும் இவரது எண்ணம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அவரது எண்ணக்கருவை மற்றவர்கள் செயல்படுத்த விளைந்தனர்.<br>
அவர்களில் ஒருவரே நோவா வெப்ஸரர்.<br>
(Noah Webster [1758-1843]) நோவா வெப்ஸரர் பாடசாலைகளுக்கான புத்தகங்களை எழுதினார். அவை பிரித்தானிய ஆங்கில முறைமையில் இருந்து மாறுபட்டதாக, அதேவேளை அமெரிக்க இலக்கண முறைமைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன் அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்கப் புத்தகங்களையே கற்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அதுவே காலப்போக்கில் நிலைத்தும் விட்டது.<br>
இவரே 1783ல் முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் புத்தகத்தையும் வெளியிட்டவராவர்.<br>
அவரது மொழி சீர்த்திருத்தமை<br>
ப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.<br>
1828 இல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டவர் நோவா வெப்ஸ்டர்.(First American Dictionary) பிரிட்டிஸ் ஆங்கில சொல்லிலக்கண விதி முறைகள் மிகவும் சிக்கலானவை என நோவா வெப்ஸ்ர் கருத்து தெரிவித்தார். அதனால் அவர் அமெரிக்க சொல்லிலக்கணப்பட<br>
ியே அமெரிக்க ஆங்கில பதிப்புக்கள் அமையவேண்டும் என எண்ணியதுடன் அதனை நடைமுறையில் செயல்படுத்தினார்.<br>
அதன்படியே அமெரிக்க ஆங்கில எழுத்திணக்கத்தில் மாற்றங்கள் ஏற்படலாயின.<br>
பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “ c-e-n-t-r-e” என எழுதப்படுவதில் கடைசி எழுத்துக்களான “t-r-e” (டர்) உச்சரிப்பிற்கு அமைவாக இல்லை என்பது நோவா வெப்ஸ்ரரின் முடிவு. எனவே அமெரிக்க ஆங்கிலத்தில் “center” “c-e-n-t-e-r” என மாற்றப்பட்டது.<br>
பிரிட்டிஸ் ஆங்கிலம்: centre, theatre<br>
அமெரிக்க ஆங்கிலம்: center, theater<br>
பிரிட்டிஸ் ஆங்கிலத்தின் “h-o-n-o-u-r” – எனும் சொல்லின் “u” ஒலிப்பில் இல்லாத அவசியமற்ற எழுத்தென கருதி, அமெரிக்க ஆங்கிலத்தில் இந்த “u” அகற்றப்பட்டு “h-o-n-o-r” என எழுதப்படுகின்றது.<br>
பிரிட்டிஸ் ஆங்கிலம்: colour, honour, favourite<br>
அமெரிக்க ஆங்கிலம்: color, honor, favorite<br>
பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “realise” என உச்சரிக்கும் போது இச்சொல்லின் கடைசி எழுத்துக்களான “se” ஒலிப்பு “றியலைZஸ்” என ஒலிப்பதால் இதுப்போன்ற சொற்களின் கடைசி எழுத்துக்கள் "ze" என அமெரிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.<br>
பிரிட்டிஸ் ஆங்கிலம்: realise, theorise, socialise, analyse<br>
அமெரிக்க ஆங்கிலம்: realize, theorize, socialize, analyze<br>
ஒரு சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒலிப்புடன் பேசப்படவேண்டும் என்பது நோவா வெப்ஸ்ரரின் விதி முறையாகும்.<br>
நோவா வெப்ஸ்ரரின் இவ்விதி முறைக்கமைய ஒரு சொல்லின் ஒவ்வொரு பாகங்களும் ஒலிப்புடன் பேசப்பட வேண்டும் எனும் முறை, பிரித்தானிய ஆங்கிலத்தை விட, அமெரிக்க ஆங்கிலத்தை எவரும் எளிதாக கற்கக் கூடியதாக இருக்கின்றது.<br>
ஐரோப்பிய மற்றும் உலகின் பல்வேறு மொழியினரும் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறியதன் விளைவால், பற்பல பிற மொழிச் சொற்களும் அமெரிக்க ஆங்கிலத்தில் உள் நுழைந்தன. அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்களின் மொழியில் இருந்தும் பல சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இவை அமெரிக்க ஆங்கிலத்தின் சீர்த்திருத்தத்திற்கு பெரிதும் உதவிதாகக் கூறப்படுகின்றது.<br>
ஒப்பீட்டளவில் பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் இல்லாத நிறையச் சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தின் சொல்வளத்தை பெருக்கியுள்ளது. அமெரிக்க பூர்வீகக் குடிகளான செவ்விந்திய மொழிகளில் இருந்தும் பல சொற்களை அமெரிக்க ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டது.<br>
இன்று அமெரிக்க, பிரிட்டிஸ் ஆங்கில சொற்களிற்கிடையே பல வேறுப்பாடுகள் உள்ளன. சில சமயம் இவர்கள் பேசும் போது ஒருவருக்கொருவர் விளங்கிக்கொள்ள முடியாத அளவில் பல சொற்கள் இருப்பதனையும் அறியமுடிகின்றது.<br>
உதாரணம் சில சொற்கள்:<br>
பிரிட்டிஸ் ஆங்கிலம்: Flat<br>
அமெரிக்க ஆங்கிலம்: Apartment<br>
பிரிட்டிஸ் ஆங்கிலம்: Lift<br>
அமெரிக்க ஆங்கிலம்: Elavator<br>
பிரிட்டிஸ் ஆங்கிலம்: Chips<br>
அமெரிக்க ஆங்கிலம்: Fries<br>
மேலும் அமெரிக்காவின் Hollywood திரைப்படத்துறையின் வளர்ச்சி, இசை, பாடல்கள், விஞ்ஞான வளர்ச்சி, நவீன கற்பித்தல் முறை, தொழில் வழங்கல், தொழில் நுட்பம், இணையம் என இன்னும் பல்வேறு வழிகளில் பிரித்தானிய ஆங்கிலத்தை விடவும் அமெரிக்க ஆங்கிலம் பலரையும் ஈர்த்து வருகிறது. அமெரிக்க நாகரிகமும் இன்று உலகின் பல்வேறு மக்களில் மோகமாக மாறிவருகின்றது என்பதும் ஒரு காரணியாகும். இவை அமெரிக்க ஆங்கிலத்தை உலக அரங்கில் மென்மேலும் வலுப்படுத்தி வருகிறது.<br>
இன்று ஆங்கிலம் என்பது இன்னொரு மொழியினருடன் பேசும் கருவியாக மட்டுமன்றி, அதிகாரம், அரசியல், சமூக அந்தஸ்து, கலாச்சாரம் என பல்வேறு மட்டங்களில் ஈர்க்கும் இணைக்கும் ஒரு உலகலாவிய ஊடகமாக மாறிவருகிறது.<br>
அமெரிக்க ஆங்கில வரலாற்றிற்கு முற்பட்ட ஆங்கில மொழியின் வரலாறு இங்கே சொடுக்கி பார்க்கலாம்.<br>
பிரிட்டிஸ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையில் சொற்களில் மட்டுமன்றி, இலக்கணத்திலும், ஒலிப்பிலும் கூட வேறுபாடுகள் உள்ளன.<br><br><br><br><br></p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7526829361504871648.post-63496574923453458482018-07-26T16:59:00.001+05:302018-07-26T17:00:38.963+05:30திராவிடச் சதியால் தமிழகம் இழந்த மண்:<p dir="ltr">*சென்னையை விட்டுக்கொடுத்தால் திருப்பதியை விட்டுவிடுகிறோம் எனத் தெலுங்கர்கள் சொன்னது பச்சை அயோக்கியத்தனப் பித்தலாட்டம்.*</p>
<p dir="ltr">400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் ஆந்திராவிலிருந்து சித்தூர், திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டப் பகுதிகளுக்கு 10% தெலுங்கு பேசும் மக்கள் குடியேறியுள்ளனர் என்பது உண்மை. அம் மாவட்டங்கள் இப்போதும் பெரும்பான்மையாக 90 சதவீதம் தமிழர் வாழும் மாவட்டங்கள்தான். தற்போது ஆந்திராவிலுள்ள நெல்லூரை இரண்டாகப் பிரிக்கும் வடபெண்ணை ஆறுவரை தமிழர் பகுதி. </p>
<p dir="ltr">தென்பெண்ணை ஆற்றுக்கும் வடபெண்ணை ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியை தொண்டைநாடு என்பர். சங்க காலத்தில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து திருப்பதி மலை வரை இருந்த பகுதியை அருவா நாடு என்றும், அதற்கு வடக்கே வடபெண்ணை ஆறுவரை இருந்த பகுதியை அருவா வடதலை நாடு என்றும் பெயர். திருப்பதியை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டம் அருவா நாட்டுக்குள் வருகிறது. நெல்லூர் மாவட்டம் அருவா வடதலை நாடு.<br>
அருவா நாடு, அருவா வடதலை நாடு இரண்டையும் சேர்த்து தொண்டைநாடு என்பர்.<br>
இப்போதும் தெலுங்கர்கள் தமிழர்களை அரவர் என்றும், தமிழை அரவ பாஷை என்றும் சொல்கின்றனர். </p>
<p dir="ltr">திராவிடக் கட்சிகளின் தெலுங்கு அரசியல் தலைவர்களால் தமிழ் பேசும் சித்தூர் மாவட்டத்தையும், நெல்லூர் மாவட்டத்தில் பெரும் பகுதியையும் ஆந்திராவிடம் பறிகொடுத்து விட்டோம்.</p>
<p dir="ltr">மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது தெலுங்கன் அண்ணா, தெலுங்கன் கருணாநிதி, கன்னடன் பெரியார் போன்றவர்கள் தெலுங்க இனப்பாசத்தால் ஆந்திராவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டனர். கேரளத்தாரிடம் நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, மூணாறு, சித்தூர், பாலக்காடு பறிபோனது.<br>
கர்நாடகத்திடம் காவிரி உருவாகும் குடகும், கோலாரும் பறிபோனது.</p>
<p dir="ltr"> "கன்னடரும், தெலுங்கரும் தனிமாநிலம் கேட்டு பிரித்துச் செல்கிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று பெரியாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, நாலு ஊர்களையாவது நாம் ஆள்வதற்கு விட்டுவிட்டுத்தான் செல்வார்கள் என்று இளக்காரமாகப் பதில் சொன்னவர் கன்னடன் பெரியார்.</p>
<p dir="ltr">ம.பொ.சிவஞானம் இல்லாதிருந்திருந்தால் திருத்தணியைக்கூட மீட்டிருக்க முடியாது.<br>
நேசமணி இல்லாதிருந்திருந்தால் கன்னியாகுமரியைக்கூட மீட்டிருக்க முடியாது.</p>
தமிழ் மகேந்திரன்http://www.blogger.com/profile/04063512442715049980noreply@blogger.com