திங்கள், 18 நவம்பர், 2019

கொங்கு வெள்ளாளர் குடியேற்ற வரலாறு

கொங்கு வெள்ளாளர் குடியேற்ற வரலாறு...

வன்னியர்களான சோழமன்னர்களால் சோழநாட்டிலிருந்தும், தொண்டை நாட்டிலிருந்தும் 900 ஆண்டுகளுக்கு முன்பு கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய கொங்குமண்டல பகுதிக்கு குடியேற்றப்பட்டவர்கள்தான் தற்போதைய கொங்கு வெள்ளாளர்கள்.
இவர்களின் பூர்வீகம் கொங்குமண்டலம் அல்ல.
வன்னியர்களான சோழர் மன்னர்களால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் இந்த கொங்கு வெள்ளாளர்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார கொங்கு வெள்ளாளர்கள் பிற்காலத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு காவிரிக்குத் தெற்கிலிருந்து குடியேறியவர்கள்.
இவர்கள் காவிரிக்கு வடக்கே குடியேறிய பிறகு காவிரிக்குத் தெற்கிலுள்ள கொங்கு வெள்ளாளர்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்ளாமல் நாட்டுக்கவுண்டர் என்ற பெயரில் தனி சாதியினராகப் பிரிந்துவிட்டனர். நாமக்கல் மாவட்ட கொங்கு வெள்ளாளர்கள் அனைவருமே காவிரிக்குத் தெற்கே இருந்து காவிரிக்கு வடக்கே பிற்காலத்தில் குடியேறியவர்கள்தான்.

பிறகு அங்கிருந்து குறைந்த எண்ணிக்கையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் பகுதிக்கு குடியேறியுள்ளனர்.
இங்கிருந்து பிறகு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்புதான் தருமபுரி பகுதிக்கு பஞ்சம் பிழைக்க மிகக்குறைந்த எண்ணிக்கையில் சென்றுள்ளனர்.

400 ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது.
100 ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது.
40 ஆண்டுகளுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது.

காவிரிக்கு வடக்கே நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கொங்குநாடு அல்ல. இப்பகுதி மழநாடு. வன்னியர் மண்டலம்.
இங்குள்ள கொங்குவெள்ளாளர்கள் வந்தேறிகள்.

ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்கள், கரூர் மாவட்ட மேற்குப்பகுதி ஆகிய பகுதிகள் மட்டுமே கொங்குநாடு. இந்த கொங்கு பகுதியின் பூர்வ குடிமக்கள் வேட்டுவர்கள்..

கொங்கு வெள்ளாளர்கள் கொங்கு மண்டலத்தில் குடியேறிகள்......

ஆதாரம்: சோழன் பூர்வ பட்டயம்....

கொங்கு நாட்டில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வெள்ளாளர்களை அடிமைகளாக அழைத்து வந்தவர்கள் வேட்டுவ மன்னர்கள் .

சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வந்த வெள்ளாளர்களை படைதலை வெள்ளாளர் ,செந்தலை வெள்ளாளர்,பால வெள்ளாளர்,தென்திசை வெள்ளாளர் என்று அழைக்கபடுகிறது .பதினெண் குடிமக்களில் உழவு தொழில் செய்பவர்கள் வெள்ளாளர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .

கொங்கு நாட்டில் 36 ஊர்களில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டு வெள்ளாளர்களை அழைத்து வந்தவர்கள் சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .

சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊருக்கும் தாசிகளை  வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊர்களில் 32 ஊர்களுக்கு கோட்டை ,நகர் ,ஊர் அதிகாரத்துக்கு வேட்டுவர்களை வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .

வேட்டுவ மண்ணாடிகளுக்கு ,வெள்ளாளர்கள் வரி கொடுத்ததை பற்றி சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
(மண்ணாடி-நில தலைவன் ).

வெள்ளாள சாதியினர் ,வேட்டுவ இனத்தை அண்டிப் பிழைத்தவர்கள்.
இன்று கொங்கு நாட்டில் வெள்ளாள சாதியினர் வழிபாடும்  அனைத்து காளி கோயில்களும் வேட்டுவ இனத்தை ஏமாற்றி  வெள்ளாள சாதியினர் உரிமையாக்கிக் கொண்டவையாகும் . 

கிபி 1975 களில் "வெள்ளாள சாதி" என்ற பெயரை "கொங்கு வெள்ளாளர்" என்று சாதிகள் பட்டியலில் கொண்டுவந்தனர். அதற்கு முன்பு கொங்கு வெள்ளாளர் என்ற பெயர் கிடையாது. வெள்ளாளக் கவுண்டர், நாட்டுக்கவுண்டர் என்றுதான் சொல்வார்கள்.

இந்த கொங்கு மண்டத்தில் குடியேறிகளான கொங்கு வெள்ளாள சாதிக்குத் தனியாக "கொங்குநாடு" என்ற பெயரில் தனிமாநிலம் வேண்டுமாம். 
ஒவ்வொரு சாதிக்கும் தனிமாநிலம் பிய்த்துக்கொடுப்பதற்குத் தமிழ்நாடு ஒன்றும் பஞ்சுமிட்டாய் அல்ல.