சனி, 8 செப்டம்பர், 2018

பல்லவர்கள் தமிழர்தான்

பல்லவர்கள் யார்?
தமிழரான பல்லவர் வரலாறு ஆரிய பிராமணர்களாலும் திராவிடத் தெலுங்கர்களாலும் திரிக்கப்பட்டுள்ளது.

பல்லவர்கள் தொண்டைமான் வழிவந்த தமிழர்கள்.

பல்லவர்கள் தொடக்க காலத்தில் பிராக்கிருதம், சமஸ்கிருதம் போன்ற வடமொழியில் பட்டயங்களை வெளியிட்டுள்ளனர். அதனால் அவர்கள் ஆரியர் என்று வரலாற்றாய்வாளர் சிலர் தவறாகப் பதிவுசெய்துள்ளனர்.
பல்லவருக்கு முன்பே வட இந்தியாவிலிருந்து காஞ்சிபுரத்தில் புத்த, சமண துறவிகளும் சமஸ்கிருத வைதீகர்களும் குடியேறி அவர்தம் வடமொழியை மதத்தளத்தில் பரப்பி இருந்தமையே அக்காலத்தில் பல்லவர்கள் பிராக்கிருத, சமஸ்கிருதக் கல்வெட்டுகளை வெளியிட்டதற்கு காரணம்.

பல்லவர்கள் ஈரானியர்கள் என்று சிலர் நிறுவ முயன்றுள்ளனர். பல்லவர்கள் ஈரானியர் என்றால் ஈரானிய மொழியில் அல்லவா பட்டயங்களை வெளியிட்டிருக்க வேண்டும்.
பல்லவர்கள் தெலுங்கர்கள் என்றால் அவர்கள் தெலுங்கு மொழியில் அல்லவா பட்டயங்களை வெளியிட்டிருக்க வேண்டும்.

பல்லவர்களைத் தமிழரல்லர் என்று சொன்ன வரலாற்றாய்வாளர்கள் ஆரிய, தெலுங்க பக்தர்கள்தான். அதனால் பெருமைமிகு தமிழர் வரலாற்றை மறைக்க முயன்றனர்.  "பல்லவர் வரலாறு" என்ற நூலை எழுதிய ம.இராசமாணிக்கனார் ஒரு மிகப்பெரிய வரலாற்று திரிபுவாதி. அவர் நிச்சயமாக தெலுங்கராகத்தான் இருக்க வேண்டும்.  பல்லவர்கள் தெலுங்கர்கள் என்பதை நிறுவுவதற்காக பொய்ச் செய்தியை வலிந்து திணித்துள்ளார். அவருக்குத் தமிழர் மீதிருந்த காழ்ப்புணர்ச்சியை காரணம்.

பிற்காலச் சோழர்களும் சமஸ்கிருத ஆதவாளர்களாக இருந்தனர் . சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர். அதனால்
சோழர்களையும் தமிழரல்லர் அவர்கள் வடவர்கள் அல்லது ஈரானியர் என்று சொல்வார்கள் போலும். என்ன ஒரு குழப்படி வேலை.

முந்தைய வரலாற்றாய்வாளர்களின் ஆய்வு முடிவுகள் பல மறு ஆய்வுக்கு உட்பட்டவை.

பல்லவர்கள் தம்மைப் பரத்வாஜ கோத்திரத்திலிருந்து வந்த சத்திரியர்கள் என்று கல்வெட்டுகளில் பதிந்துள்ளனர் எனவும் அதனால் பல்லவர்கள் ஆரியர் எனவும் தமிழரல்லர் எனவும் சிலர் சொல்கின்றனர்.
தமிழகத்தில் வட இந்திய ஆரிய கலாச்சாரமும் மனுதரும நால்வருண கோட்பாடும் புகுந்த பிறகு பல தமிழ்க்குடிகள் தம் சாதிப் பெயரை வடமொழிப்படுத்தி புராணமயப்படுத்தினர்.
எடுத்துக்காட்டாக, கொங்கு மண்டல வேளாளர்கள் தம்மை மரபாள வம்சம் என்றனர். வடமொழியின் மரபாள புராணத்தைத் தழுவி வேளாள புராணம் எழுதிக்கொண்டனர்.
கோனார் என்னும் இடையர்கள் தம்மை யாதவர் என்று சொல்லிக்கொண்டனர்.
தொண்டை மண்டலம், நடுநாடு, வட கொங்கு மண்டலம் ஆகியவற்றைப் பூர்வீகமாக கொண்ட வன்னியர்களான பள்ளிகள் தம்மை அக்னி வம்சம் என்று சொல்லிக்கொண்டனர். வடமொழியில் உள்ள ஆக்னேய புராணத்தைத் தழுவி வன்னிய புராணம் எழுதிக்கொண்டனர்.
தச்சர்கள் தம்மை விஸ்வாமித்திர கோத்திரம் என்று சொல்லிக்கொண்டனர்.
நாடாண்ட மன்னர்கள் தம்மை சத்திரியர் என்று சொல்லிக்கொண்டனர்.

இவ்வாறே பல தமிழ்க்குடிகள் பெருமைக்காக வடமொழிப்பெயர்களையும் வடமொழி புராணங்களையும் தமக்கு ஏற்றிக்கொண்டன.
பல்லவர்கள் சொல்லும் பரத்வாஜ கோத்திரம் என்பதும் அவ்வாறுதான்.

உலக மொழிகள் பலவற்றில் தமிழ்ச்சொற்களை ஒத்த பல சொற்கள் உள்ளன.
ஈரானிய பஹலவா என்ற சொல்லுக்கும் தமிழ் பல்லவர் என்ற சொல்லுக்கும் உள்ள ஒலிப்பொற்றுமையை மட்டும் வைத்து பல்லவர்களை ஈரானியர் என்று கதைகட்ட வேண்டாம்.

பல்லவர்கள் தொண்டைநாட்டின் குறுநில மன்னராயிருந்த தமிழ் மன்னர்களான தொண்டைமான் வழிவந்த தமிழர்களே. தொண்டைமான் இளந்திரையன் என்போன் சங்ககாலத்தில் தொண்டை நாட்டை ஆண்ட சிறப்புமிக்க தமிழ் மன்னன் ஆவான்.
தொண்டைமான்கள் சோழர்களின் வழித்தோன்றல் ஆவர்.
பல்லவ மன்னர்கள் தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள் என்பதாலேயே பல்லவ மன்னர்களின் வழிவந்த சில மன்னர்களும் தளபதிகளும் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டனர். குலோத்துங்க சோழனின் படைத் தளபதியாய் இருந்த கருணாகரத் தொண்டைமானை பல்லவர் தோன்றல் என்று புகழ்கிறார் ஜெயங்கொண்டார். பல்லவ  வழித்தோன்றலாக இருந்த கருணாகரன் தொண்டைமான் என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? பல்லவ மன்னர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள்.
பல்லவர்கள் தமிழர்கள் என்பது சங்க இலக்கியங்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை நூலின் மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கும்
உண்மை.
கருணாகரத் தொண்டைமானை கலிங்கத்துப்பரணி 535ஆவது பாடலில் பல்லவர் தோன்றலைப் பாடீரோ என்கிறார் ஜெயங்கொண்டார்.
இதே கருணாகரத் தொண்டைமானை சிலை எழுபது நூலின் 68ஆவது பாடலில்-
" புவிக்காயிரம் பொன் இறைநீக்கி
கவிக்காயிரம் பொன் பரிசளித்தான்
கருணாகரத் தொண்டை வன்னியனே "
எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடுகிறார்
கவிச்சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார் கருணாகரத் தொண்டைமானைப் பல்லவர் என்று அடையாளப்படுத்துகிறார்.
அதே தொண்டைமான் வன்னியர் என்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் அடையாளப்
படுத்துகிறார்.

ஆகவே பல்லவர்கள் தமிழர்தான்.

களப்பிரர் காலத்தில் நிகழ்ந்த இருட்டடிப்பால் வடமொழிப்பண்பாடு, வடமொழி ஆதிக்கம் தமிழகத்தில் புகுந்து பல உண்மைகளை மறைத்திருக்கிறது.

தென்னிந்தியாவில் அமைந்த வலிமையான முதல் பேரரசு தமிழர்கள் அமைத்த பல்லவப் பேரரசு.
தமிழர்களான பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 9 நூற்றாண்டுகள் வலிமையான பேரரசாக இருந்து நல்லாட்சி செய்தார்கள். அதன்பிறகு காடவராயர், சம்புவராயர் என்ற பெயர்களில் குறுநில மன்னர்களாக இருந்தும் ஆண்டார்கள்.
பல்லவர்கள் சங்க காலத்தில் தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள் ஆவர். பல்லவர்கள் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தமிழகப் பகுதியான தொண்டைநாடு ஆந்திர எல்லைக்கு அருகில் இருப்பதால் பல்லவர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திராவின் பெரும்பகுதியைப் பிடித்து ஆளுவதற்கும் வசதியாக இருந்துவிட்டது.

பல்லவர்கள் தமிழகம், ஆந்திரம் மட்டுமல்லாமல் கடல்கடந்து இலங்கை, மலேசியா, கம்போடியா வரை சென்று ஆட்சி செய்தனர். கம்போடியாவின் அங்கோர்வாட் என்ற உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத் தளத்தைப் பல்லவர்கள்தான் கட்டினர்.