புதன், 22 ஆகஸ்ட், 2018

1920 முதல் தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்தவர்களில் யார் தமிழர்?

*1920 முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்களில் யாரெல்லாம் தமிழர்?* யாரெல்லாம் தெலுங்கர்? யாரெல்லாம் மலையாளி? யாரெல்லாம் கன்னடர்? யாரெல்லாம் ஆரியர்?

1. சுப்பராயலு ரெட்டியார்- தெலுங்கர்

2. பனகல் ராஜா தெலுங்கர்

3. *பி. சுப்பராயன் - தமிழர்*

4. முனுசாமி நாயுடு- தெலுங்கர்

5. பொப்பிலி ராஜா- தெலுங்கர்

6. *பி.டி.ராஜன் -தமிழர்.*

7. கே.வி.ரெட்டி நாயுடு - தெலுங்கர்.

8. இராஜாஜி - தெலுங்க பிராமணர் - ஆரியர்

9. டி.பிரகாசம் - தெலுங்கர்.

10. ஓ.பி.ராமசாமி ரெட்டியார் - தெலுங்கர்.

11. பி.எஸ்.குமாரசாமிராஜா -தெலுங்கர்

11. *காமராஜர் - தமிழர்*

12. *எம்.பக்தவச்சலம் - தமிழர்*

13. அண்ணாதுரை - தெலுங்கர்

14. கருணாநிதி - தெலுங்கர்

15. எம்ஜிஆர் - மலையாளி

16. ஜானகி - மலையாளி

17. ஜெயலலிதா - கன்னட பிராமணர் - ஆரியர்

18. *ஓ.பன்னீர்செல்வம் - தமிழர்*

19. *எடப்பாடி பழனிசாமி -தமிழர்*

*தமிழ்நாடு தமிழர் நாடு. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்.*

அண்ணாதுரை தெலுங்கரா???
அவர் காஞ்சிபுரத்தில் முதலியார் அல்லவா? என்கின்றனர் விவரம் தெரியாதவர்கள்.
அண்ணாதுரையின் தாய் பங்காரு அம்மாள் சின்னமேளம் என்ற தெலுங்கு சாதி.
அண்ணாதுரையின் தந்தை நடேசன் தெலுங்கு முதலியார்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

ஆங்கில மொழியின் வரலாறு:

*தமிழில் பேசினாலோ எழுதினாலோ கேவலமாகப் பார்க்கும் பக்கிகளே!*
நாலு இங்கிலிஸ் வார்த்தைகளைத் தெரிந்துகொண்டு மேதாவி போல பந்தா காட்டும் உங்களுக்கு *ஆங்கில மொழியின் வரலாறு* தெரியுமா? நிச்சயமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தெரிந்துகொள்ளுங்கள்.
👇👇👇
*ஆங்கிலம் என்பது என்ன?*

*ஆங்கில மொழியின் வரலாறு*

மூன்று ஜெர்மானிய இனக்குழுவினர் பிரிட்டனின் மேல் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்ததில் இருந்து ஆங்கிலத்தின் வரலாறு ஆரம்பிக்கிறது. ஆங்லர்கள், சாக்சன்கள், யூட்டுகள் என்ற இந்த இனக்குழுக்கள் வட கடலைத் தாண்டி இன்றைய டென்மார்க் மற்றும் வட ஜெர்மனி பகுதிகளில் இருந்து வந்தனர். அப்போது பிரிட்டனில் வாழ்ந்து வந்தவர்கள் ஒரு செல்ட்டிக் மொழியைப் பேசி வந்தனர். ஆனால் பெரும்பாலான செல்டிக் மொழியினர், ஆக்கிரமிப்பாளர்களால் மேற்கும் வடக்குமாக நெருக்கித் தள்ளப்பட்டனர் – முக்கியமாக இன்று வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து என அழைக்கப்படும் பகுதிகளுக்கு. ஆங்கில்கள் ”எங்கலாந்த்” (மேற்கோள்படி)தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் மொழி “எங்கலிஸ்”. இந்தச் சொற்களில் இருந்து முறையே “இங்க்லாண்ட்” மற்றும் “இங்லிஷ்” என்ற சொற்கள் உருவாகின.
கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் ஜெர்மானிய ஆக்கிரமப்பாளர்கள் பிரிட்டனின் கிழக்கு மற்றும் தெற்குக் கடலோரம் நுழைந்தனர்.

*பழைய ஆங்கிலம் (450-1100 AD)*

படையெடுத்து வந்த ஜெர்மானிய இனக்குழுக்கள் பேசிய மொழிகள் ஒன்றுபோல் இருந்தன. அது பிரிட்டனில் நாம் இன்று அழைக்கும் பழைய ஆங்கிலமாக வளர்ந்தது. பழைய ஆங்கிலம் இன்றைய ஆங்கிலம் போல் இருக்கவும் இல்லை; ஒலிக்கவும் இல்லை. ஆங்கிலேயரால் இன்று பழைய ஆங்கிலத்தைபுரிந்து கொள்ளுவது மிகவும் சிரமம். இருந்த போதிலும் நவீன ஆங்கிலத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாதிச் சொற்களின் வேர்கள் பழைய ஆங்கிலமே. எடுத்துக்காட்டாக be, strong மற்றும் water ஆகிய சொற்கள் பழைய ஆங்கிலச் சொற்களே. ஏறத்தாழ கி.பி.1100 வரை பழைய ஆங்கிலம் பேசப்பட்டது.

*இடைக்கால ஆங்கிலம் (1100-1500)*

1066-ல் நார்மண்டி (நவீன பிரான்சின் ஒரு பகுதி) பிரபு வெற்றிவீரன் வில்லியம் இங்கிலாந்தின் மீது படையெடுத்து அதைப் பிடித்தான். இந்தப் புதிய ஆக்கிரமிப்பாளர்கள் (நார்மன்கள் என்று அழைக்கப்பட்டனர்) தங்களோடு ஒரு புதுவிதமான பிரஞ்சு மொழியைக் கொண்டு வந்தனர். இது அரசவை, அதிகார மற்றும் வணிக வர்க்கத்தின் மொழியானது. ஒரு கால கட்டத்திற்கு மொழி சார்ந்த வர்க்கப் பிரிவினை நிலவியது: உயர் வகுப்பினர் பிரஞ்சு மொழியும் தாழ்ந்த வகுப்பினர் ஆங்கிலத்தையும் பேசினர். 14 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலம் மீண்டும் தனது செல்வாக்கைப் பெற்றது. ஆனால் பல பிரஞ்சு சொற்கள் அதில் கலந்தன. இந்த மொழி இடைக்கால ஆங்கிலம் என அழைக்கப்பட்டது. இதுவே மாபெரும் கவிஞனான சாசரின் மொழி (கி.பி.1340-1400). ஆனால் இதனை இன்றைய ஆங்கிலேயர்களால் புரிந்து கொள்ளுவது மிகவும் கடினமே.

*தற்கால ஆங்கிலம்*

ஆரம்பகால நவீன ஆங்கிலம் (1500-1800)

இடைக்கால ஆங்கிலத்தின் இறுதிக் கட்டத்தில், உச்சரிப்பில் ஒரு குறிப்பிட்ட திடீர் மாற்றம் நிகழ்ந்தது (மாபெரும் உயிரெழுத்து மாற்றம்). உயிர் எழுத்துகள் குறுகலாக ஒலிக்கப்பட்டன. 16-ஆம் நூற்றாண்டில் இருந்து பிரிட்டானியர்கள் உலகின் பல மக்களோடும் தொடர்பு கொண்டனர்.
இதனாலும், செம்மொழிக் கல்வியின் மறுமலர்ச்சியாலும், பல புதிய சொற்களூம் சொற்றொடர்களும் மொழியில் புகுந்தன. அச்சு கண்டுபிடிக்கப்பட்டதால் ஒரே பொதுமொழி அச்சில் ஏறியது. புத்தகங்கள் மலிவானது. பலர் படிக்கக் கற்றனர். அச்சு, ஆங்கிலத்தைத் தரப்படுத்தியது. இலக்கணம் நிலையானது. பல பதிப்பகங்களைக் கொண்ட இலண்டனில் பேசப்பட்ட மொழி தரமானதாக மாறியது. 1604-ல் முதல் ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது.

பிற்கால நவீன ஆங்கிலம் (1800-இன்று வரை)

ஆரம்பகால நவீன ஆங்கிலத்திற்கும், பிற்கால நவீன ஆங்கிலத்திற்கும் இடையில் இருக்கும் முக்கிய வேறுபாடு சொற்தொகுதியே. பிற்கால நவீன ஆங்கிலத்தில் மிகவும் அதிகமான சொற்கள் உள்ளன. இவை இரண்டு முக்கிய காரணிகளில் இருந்து வந்தவை. முதலில், தொழிற் புரட்சியும் தொழிற்நுட்பமும் புதிய சொற்களுக்கான தேவையை உருவாக்கின. இரண்டாவதாக, ஆக்கிரமிப்பின் உச்சகட்டத்தில் பிரித்தானியப் பேரரசு உலகின் நான்கில் ஒரு பகுதியை ஆக்கிரமித்தது. ஆங்கில மொழி பல நாடுகளில் இருந்து சொற்களைத் தழுவிக்கொண்டது.

*ஆங்கிலத்தின் வகைகள்*

கி.பி. 1600 – களில் இருந்து வட அமெரிக்காவை இங்கிலாந்து குடியேற்ற நாடாக மாற்றியதால் தனித்துவமான அமெரிக்க வகை ஆங்கிலம் உருவானது. அமெரிக்க வகை ஆங்கிலம் நவீன பிரிட்டிஷ் ஆங்கிலத்தை விட ஷேக்ஸ்பியரின் ஆங்கிலத்தைப் போல் இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் அமெரிக்க ஆங்கிலம் என்று சொல்வது உண்மையில் குடியேற்ற நாடுகளில் பாதுகாக்கப்பட்ட சொற்றொடர்களே. ஆனால் அவை பிரிட்டனில் மறைந்து போய்விட்டிருந்தன. இன்று அமெரிக்க ஆங்கிலம் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய ஆங்கிலம், நியூசிலாந்து ஆங்கிலம், கனடா ஆங்கிலம், தென் ஆப்பிரிக்க ஆங்கிலம், இந்திய ஆங்கிலம், காரிபியன் ஆங்கிலம் என பலவகை ஆங்கிலம் உள்ளன.
ஆங்கிலம் ஜெர்மானிய குடும்ப மொழிகளைச் சார்ந்தது. ஜெர்மானியமொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிளைமொழி.

அமெரிக்க ஆங்கிலம் (History of American English):

மொழி வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான்.
பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்காவில் வரி செலுத்தல் தொடர்பில் 1775 இல் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா படு தோழ்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1776 யூலை 4 இல் சுதந்திர பிரகடனம் செய்துக்கொண்டது. அமெரிக்காவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஆங்கில பேச்சிலும் ஒலிப்பிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
பிரித்தானிய ஆட்சியிலிருந்து தன்னாட்சி பெற்றதைப் போன்று அவர்களது மொழியிலும் தனித்துவம் இருக்க வேண்டும் என பல அமெரிக்கர்கள் விரும்பினர்.
சில அமெரிக்க தலைவர்கள் தமது மொழியில் மாற்றங்கள் செய்ய தீர்மானித்தனர். அறிவியலாளர் பெஞ்சமின் பிறான்கிளின். (Benjamin Franklin [1706-1790]) அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் ஒரு சீர்திருத்த முறைமை அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
இருப்பினும் இவரது எண்ணம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அவரது எண்ணக்கருவை மற்றவர்கள் செயல்படுத்த விளைந்தனர்.
அவர்களில் ஒருவரே நோவா வெப்ஸரர்.
(Noah Webster [1758-1843]) நோவா வெப்ஸரர் பாடசாலைகளுக்கான புத்தகங்களை எழுதினார். அவை பிரித்தானிய ஆங்கில முறைமையில் இருந்து மாறுபட்டதாக, அதேவேளை அமெரிக்க இலக்கண முறைமைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன் அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்கப் புத்தகங்களையே கற்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அதுவே காலப்போக்கில் நிலைத்தும் விட்டது.
இவரே 1783ல் முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் புத்தகத்தையும் வெளியிட்டவராவர்.
அவரது மொழி சீர்த்திருத்தமை
ப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.
1828 இல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டவர் நோவா வெப்ஸ்டர்.(First American Dictionary) பிரிட்டிஸ் ஆங்கில சொல்லிலக்கண விதி முறைகள் மிகவும் சிக்கலானவை என நோவா வெப்ஸ்ர் கருத்து தெரிவித்தார். அதனால் அவர் அமெரிக்க சொல்லிலக்கணப்பட
ியே அமெரிக்க ஆங்கில பதிப்புக்கள் அமையவேண்டும் என எண்ணியதுடன் அதனை நடைமுறையில் செயல்படுத்தினார்.
அதன்படியே அமெரிக்க ஆங்கில எழுத்திணக்கத்தில் மாற்றங்கள் ஏற்படலாயின.
பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “ c-e-n-t-r-e” என எழுதப்படுவதில் கடைசி எழுத்துக்களான “t-r-e” (டர்) உச்சரிப்பிற்கு அமைவாக இல்லை என்பது நோவா வெப்ஸ்ரரின் முடிவு. எனவே அமெரிக்க ஆங்கிலத்தில் “center” “c-e-n-t-e-r” என மாற்றப்பட்டது.
பிரிட்டிஸ் ஆங்கிலம்: centre, theatre
அமெரிக்க ஆங்கிலம்: center, theater
பிரிட்டிஸ் ஆங்கிலத்தின் “h-o-n-o-u-r” – எனும் சொல்லின் “u” ஒலிப்பில் இல்லாத அவசியமற்ற எழுத்தென கருதி, அமெரிக்க ஆங்கிலத்தில் இந்த “u” அகற்றப்பட்டு “h-o-n-o-r” என எழுதப்படுகின்றது.
பிரிட்டிஸ் ஆங்கிலம்: colour, honour, favourite
அமெரிக்க ஆங்கிலம்: color, honor, favorite
பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “realise” என உச்சரிக்கும் போது இச்சொல்லின் கடைசி எழுத்துக்களான “se” ஒலிப்பு “றியலைZஸ்” என ஒலிப்பதால் இதுப்போன்ற சொற்களின் கடைசி எழுத்துக்கள் "ze" என அமெரிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
பிரிட்டிஸ் ஆங்கிலம்: realise, theorise, socialise, analyse
அமெரிக்க ஆங்கிலம்: realize, theorize, socialize, analyze
ஒரு சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒலிப்புடன் பேசப்படவேண்டும் என்பது நோவா வெப்ஸ்ரரின் விதி முறையாகும்.
நோவா வெப்ஸ்ரரின் இவ்விதி முறைக்கமைய ஒரு சொல்லின் ஒவ்வொரு பாகங்களும் ஒலிப்புடன் பேசப்பட வேண்டும் எனும் முறை, பிரித்தானிய ஆங்கிலத்தை விட, அமெரிக்க ஆங்கிலத்தை எவரும் எளிதாக கற்கக் கூடியதாக இருக்கின்றது.
ஐரோப்பிய மற்றும் உலகின் பல்வேறு மொழியினரும் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறியதன் விளைவால், பற்பல பிற மொழிச் சொற்களும் அமெரிக்க ஆங்கிலத்தில் உள் நுழைந்தன. அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்களின் மொழியில் இருந்தும் பல சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இவை அமெரிக்க ஆங்கிலத்தின் சீர்த்திருத்தத்திற்கு பெரிதும் உதவிதாகக் கூறப்படுகின்றது.
ஒப்பீட்டளவில் பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் இல்லாத நிறையச் சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தின் சொல்வளத்தை பெருக்கியுள்ளது. அமெரிக்க பூர்வீகக் குடிகளான செவ்விந்திய மொழிகளில் இருந்தும் பல சொற்களை அமெரிக்க ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டது.
இன்று அமெரிக்க, பிரிட்டிஸ் ஆங்கில சொற்களிற்கிடையே பல வேறுப்பாடுகள் உள்ளன. சில சமயம் இவர்கள் பேசும் போது ஒருவருக்கொருவர் விளங்கிக்கொள்ள முடியாத அளவில் பல சொற்கள் இருப்பதனையும் அறியமுடிகின்றது.
உதாரணம் சில சொற்கள்:
பிரிட்டிஸ் ஆங்கிலம்: Flat
அமெரிக்க ஆங்கிலம்: Apartment
பிரிட்டிஸ் ஆங்கிலம்: Lift
அமெரிக்க ஆங்கிலம்: Elavator
பிரிட்டிஸ் ஆங்கிலம்: Chips
அமெரிக்க ஆங்கிலம்: Fries
மேலும் அமெரிக்காவின் Hollywood திரைப்படத்துறையின் வளர்ச்சி, இசை, பாடல்கள், விஞ்ஞான வளர்ச்சி, நவீன கற்பித்தல் முறை, தொழில் வழங்கல், தொழில் நுட்பம், இணையம் என இன்னும் பல்வேறு வழிகளில் பிரித்தானிய ஆங்கிலத்தை விடவும் அமெரிக்க ஆங்கிலம் பலரையும் ஈர்த்து வருகிறது. அமெரிக்க நாகரிகமும் இன்று உலகின் பல்வேறு மக்களில் மோகமாக மாறிவருகின்றது என்பதும் ஒரு காரணியாகும். இவை அமெரிக்க ஆங்கிலத்தை உலக அரங்கில் மென்மேலும் வலுப்படுத்தி வருகிறது.
இன்று ஆங்கிலம் என்பது இன்னொரு மொழியினருடன் பேசும் கருவியாக மட்டுமன்றி, அதிகாரம், அரசியல், சமூக அந்தஸ்து, கலாச்சாரம் என பல்வேறு மட்டங்களில் ஈர்க்கும் இணைக்கும் ஒரு உலகலாவிய ஊடகமாக மாறிவருகிறது.
அமெரிக்க ஆங்கில வரலாற்றிற்கு முற்பட்ட ஆங்கில மொழியின் வரலாறு இங்கே சொடுக்கி பார்க்கலாம்.
பிரிட்டிஸ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையில் சொற்களில் மட்டுமன்றி, இலக்கணத்திலும், ஒலிப்பிலும் கூட வேறுபாடுகள் உள்ளன.




வியாழன், 26 ஜூலை, 2018

திராவிடச் சதியால் தமிழகம் இழந்த மண்:

*சென்னையை விட்டுக்கொடுத்தால் திருப்பதியை விட்டுவிடுகிறோம் எனத் தெலுங்கர்கள் சொன்னது பச்சை அயோக்கியத்தனப் பித்தலாட்டம்.*

400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் ஆந்திராவிலிருந்து சித்தூர், திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டப் பகுதிகளுக்கு 10% தெலுங்கு பேசும் மக்கள் குடியேறியுள்ளனர் என்பது உண்மை. அம் மாவட்டங்கள் இப்போதும் பெரும்பான்மையாக 90  சதவீதம் தமிழர் வாழும் மாவட்டங்கள்தான். தற்போது ஆந்திராவிலுள்ள நெல்லூரை இரண்டாகப் பிரிக்கும் வடபெண்ணை ஆறுவரை தமிழர் பகுதி.

தென்பெண்ணை ஆற்றுக்கும் வடபெண்ணை ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியை தொண்டைநாடு என்பர். சங்க காலத்தில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து திருப்பதி மலை வரை இருந்த பகுதியை அருவா நாடு என்றும், அதற்கு வடக்கே வடபெண்ணை ஆறுவரை இருந்த பகுதியை அருவா வடதலை நாடு என்றும் பெயர். திருப்பதியை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டம் அருவா நாட்டுக்குள் வருகிறது. நெல்லூர் மாவட்டம் அருவா வடதலை நாடு.
அருவா நாடு, அருவா வடதலை நாடு இரண்டையும் சேர்த்து தொண்டைநாடு என்பர்.
இப்போதும் தெலுங்கர்கள் தமிழர்களை அரவர் என்றும், தமிழை அரவ பாஷை என்றும் சொல்கின்றனர்.

திராவிடக் கட்சிகளின் தெலுங்கு அரசியல் தலைவர்களால் தமிழ் பேசும் சித்தூர் மாவட்டத்தையும், நெல்லூர் மாவட்டத்தில் பெரும் பகுதியையும் ஆந்திராவிடம் பறிகொடுத்து விட்டோம்.

மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது தெலுங்கன் அண்ணா, தெலுங்கன் கருணாநிதி, கன்னடன் பெரியார் போன்றவர்கள் தெலுங்க இனப்பாசத்தால் ஆந்திராவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டனர். கேரளத்தாரிடம் நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, மூணாறு, சித்தூர், பாலக்காடு பறிபோனது.
கர்நாடகத்திடம் காவிரி உருவாகும் குடகும், கோலாரும் பறிபோனது.

"கன்னடரும், தெலுங்கரும் தனிமாநிலம் கேட்டு பிரித்துச் செல்கிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று பெரியாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, நாலு ஊர்களையாவது நாம் ஆள்வதற்கு விட்டுவிட்டுத்தான் செல்வார்கள் என்று இளக்காரமாகப் பதில் சொன்னவர் கன்னடன் பெரியார்.

ம.பொ.சிவஞானம் இல்லாதிருந்திருந்தால் திருத்தணியைக்கூட மீட்டிருக்க முடியாது.
நேசமணி இல்லாதிருந்திருந்தால் கன்னியாகுமரியைக்கூட மீட்டிருக்க முடியாது.

திங்கள், 16 ஏப்ரல், 2018

அகத்தியர் குணவாகடம் என்ற நூல்:

☘🌿☘🌿
*அகத்தியர் குணவாகடம் என்ற நூல் மனித உடற்கூறியலை நவீன உடற்கூறியல் ஆய்வுக்கு நிகராக விளக்கிச்சொல்லும் நூல். ஒவ்வொரு உறுப்பின் அமைப்பையும் செயல்படும் விதத்தையும் சொல்லும் பாங்கு அருமை.*

அதேபோல இந்த நூல் நவீன நோயியல் என்று சொல்லும் Modern Pathology க்கு நிகராக நோய்களை விளக்கிச் சொல்லும் பாங்கும் அருமை.

அதாவது அகத்தியர் குணவாகடம் என்ற நூல் உடற்கூறியல் (Anatomy), உடல் இயங்கியல் (Physiology), நோயியல் (Pathology) ஆகிவற்றை அறிவியல் அணுகுமுறையில் விளக்கிச் சொல்லும் அற்புதமான நூல்.

சித்தர்கள் காலத்தில் postmortem என்னும் உடற்கூறாய்வு செய்துபார்த்திருக்காமல் இந்த நூலைப் படைத்திருக்க முடியாது.

*அகத்தியர் குணவாகடம் என்னும் நூலில் மகப்பேறு மருத்துவம்:*

அகத்தியர் குணவாகடம் என்ற நூல் உடற்கூறியல், உடலியங்கியல், நோயியல் ஆகியவற்றை மிக விரிவாக விளக்குவதோடு மகப்பேறு மருத்துவம் பற்றியும் விரிவாக விளக்குகிறது.

1193 ம் பாடல் முதல் 1501 ம் பாடல் வரை மகப்பேறு மருத்துவம் பற்றி விளக்குகிறது.

1193 ம் பாடல் முதல் 1246 ம் பாடல் வரை பிள்ளைப்பேறு, கருப்பிண்டம், நஞ்சு, கருப்பச்சின்னங்கள் ஆகிய தலைப்புகளில் ஆணின் விந்துக்கிருமி பெண்ணின் நாதத்துடன் சேர்ந்து குழந்தை உருவாகிறது என்றும், குழந்தை ஒவ்வொரு மாதமும் எந்தெந்த வளர்ச்சிப் படிநிலைகளைத் தாயின் வயிற்றில் அடைகிறது என்றும் விளக்குகிறது.

1247 ம் பாடல் முதல் 1501 ம் பாடல் வரை பிரசவம் பார்க்கும் முறைகளை விரிவாக விளக்குகிறது.

பிரசவ விதிகள், கிரமப் பிரசவம், பிரசவ இலட்சணம்,  செவ்வாப்பு, கஷ்டப் பிரசவம், அகாலப் பிரசவம், கிரமாதீதப் பிரசவம், இடைக்குழி, பிரசவ வேலைகள், சிசு திரும்புதல், சிசுவைத் திருப்புகிற விவரம், காலைப் பிடித்து திருப்புதல், ஆயுத விவரம், குறடு, சேதிக்கும் வகை, கருப்பாசய சேதன முறை ஆகிய தலைப்புகளில் மிக விரிவாக பிரசவம் பார்க்கும் முறைகளை விளக்குகிறது.

குழந்தை திரும்பி கொண்டோ, குழந்தையின் தலை பெரிதாக இருக்கும் போதோ குழந்தை பிறக்க முடியாமல் தாய் துன்பப்படும்போது தாயையும் குழந்தையையும் உயிரோடு காப்பாற்றுவதற்காக உதகருசி, குறடு, கத்தரிக்கோல், அங்குசம், மொட்டைக்குறடு ஆகிய ஆயுதங்களையும், மயக்க மருந்தாக சாராயத்தையும் பயன்படுத்துவதையும் விளக்குகிறது.
அவ்வாயுதங்களை கொதிக்கும் நீரில் சுத்தம் செய்து விளக்கெண்ணெய் பூசிக்கொண்டு பயன்படுத்த வேண்டும் என்கிறது.

கஷ்டப் பிரசவத்தின் போது குழந்தை பிறக்க முடியாமல் வயிற்றிலேயே இறந்துவிட்டால் அந்த குழந்தையை வெளியே எடுக்கும் முறைகளை விளக்கிச் சொல்லுவது சித்தர்களின் மகப்பேறு மருத்துவத்தின் அறுவைச் சிகிச்சை முறைகளைத் தெளிவுபடுத்துகிறது.
தலை பெரிதாக இருந்து குழந்தை வெளிவராவிட்டால் அதன் தலையைத் துளைத்து மூளையை வெளியேற்றித் தலையைச் சிறிதாக்கி இறந்த குழந்தையை வெளியேற்றும் பாங்கை அழகாகச் சொல்கிறது.
இவற்றை எல்லாம் பார்க்கும் போது சித்தர்கள் காலத்தில் மகப்பேறு மருத்துவம் மிகச் சிறப்பான வளர்ச்சி நிலையை எட்டி இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

சித்தர்கள் கண்டுபிடித்த மருத்துவம் தற்கால அலோபதி மருத்துவத்தை விட மிக உயரிய மருத்துவம் என்பதை எண்ணி தமிழரெல்லாம் பெருமையடைய வேண்டும்.

நவீன மருத்துவ அறிவியல் அடித்தளம் நமது சித்த மருத்துவமே ஆகும்.
ஐரோப்பியர்கள் அறிவற்ற காட்டுமிராண்டிகளாக இருந்த காலகட்டத்தில் மருத்துவ அறிவியல் ஆய்வுகளில் சிறந்து விளங்கியவர்கள் நமது சித்தர்கள்.

ஆங்கில மருத்துவம் அறிவியல் மருத்துவமாக வளர்ந்தது இருபதாம் நூற்றாண்டில்தான்.

தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தின் பெருமைகளை எண்ணி வியக்க வேண்டாமா?

திருவள்ளுவராண்டு

*தை முதல்நாள் தொடங்கும் திருவள்ளுவராண்டு பற்றிய விளக்கம்*
👇👇👇👇👇👇

*திருவள்ளுவராண்டு முறை தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு  இல்லாத குறையைப் போக்குகிறது*.

தொல்காப்பியர் ஓர் ஆண்டுக்கான ஆறு பெரும்பொழுதுகளைச் சொல்லும்போது ஆவணி மாதமாகிய கார்காலத்தையே தொடக்கமாகக் குறிப்பிடுகிறார். அதன்பிறகே கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் காலங்களை வரிசைப்படுத்துகிறார். இது 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கார்காலத் தொடக்கமாகிய ஆவணி மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டனர் என்பதை உணர்த்துகிறது.

சித்திரை முதல் நாளைப் புத்தாண்டு என்று கொண்டாடும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்ததில்லை.

தமிழர்களுக்குத் தொடராண்டுக் கணக்கு இல்லை என்ற குறையைப் போக்க 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர்கள் கூடி தை முதல் நாளைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு முறையைக் கொண்டுவந்தனர்.

சித்திரைப் புத்தாண்டு முறை என்பது தமிழ்நாட்டை விஜயநகரப் பேரரசு கைப்பற்றி ஆண்ட காலப்பகுதியில் வழக்கத்திற்கு வந்திருக்கலாம். ஆனால் தெலுங்கரது புத்தாண்டான உகாதி ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில நாள்காட்டியின் படி ஏப்ரல் 6 அல்லது 7 தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
இந்த வேறுபாட்டுக்குக் காரணம் தெலுங்கர், கன்னடர் மற்றும் சில மாநிலத்தவர் சந்திரனின் ஓட்டத்தை வைத்து மாதங்களைக் கணக்கிடுகிறார்கள். தமிழர்கள் சூரியன் மேட இராசிக்குள் நுழைவது முதல் அந்த இராசியை விட்டு விலகும் நாட்களை சித்திரை மாதம் எனக் கணக்கிட்டனர்.

இந்துக்களுக்கு என்று இந்திய அளவில் ஒரு புத்தாண்டு கிடையாது.
இப்போதெல்லாம் தமிழர்கள் சனவரி முதல்நாள் கிறித்தவர்களின் புத்தாண்டாக இருந்தாலும் அதனையும் கொண்டாடுகின்றனர். வருமானம் வருவதால் இந்துக் கோயில்களில் சனவரி முதல் நாள் நள்ளிரவில் நடை திறக்கிறார்கள்.

இப்போது வழங்கும் ‘பிரபவ’’ தொடங்கி ‘அட்சய’’‘ ஈறாக உள்ள 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டதனால் அவற்றின் பெயர்கள் வட மொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம்7 இந்து 10-03-1940)
இந்த 60 ஆண்டு முறையால் தமிழரின் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் இரண்டையும் எண்ணிப் பார்த்து உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி மூன்று முக்கிய முடிவுகளை எடுத்தார்கள்.

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது.
2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31 யைக் கூட்டினால்) திருவள்ளுவர் ஆண்டு.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை.

இந்த முடிவை எடுத்தவர்களில் தமிழகத்தின் மூத்ததமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இந்த முடிவுகளை 1967 – 2011 வரை தமிழ்நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் படிப்படையாக நடை முறைப்படுத்தி வந்தன. தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் தமிழ்புத்தாண்டு, திருவள்ளுவர் பிறந்த நாள், பொங்கல் நாள் என 2006 இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு சனவரி 28, 2008 அன்று ஒரு சட்டத்தை சட்ட சபையில் ஒரு மனமாக நிறைவேற்றியது. அதனை ஆதரித்து அதிமுக உறுப்பினர்களும் வாக்களித்தார்கள்.
தமிழர்களது புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மறைந்த ஜெயராம் ஜெயலலிதா மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஜெயலலிதா ஒரு இந்துத்துவ அடிப்படைவாதி. ஐயங்கார் பிரிவைச் சேர்ந்தவர். அண்ணாவின் பெயரைக் கட்சிப் பெயரிலும் அண்ணாவின் படத்தைக் கட்சிக் கொடியிலும் போட்டாலும் அவர் தனது குலம் மற்றும் மத நம்பிக்கைகளைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு இருந்தவர்.
“நான் ஒரு பிராமண இனத்தைச் சேர்ந்தவள். சாத்திரங்களின்படி அமைந்துள்ள புதுவருடத்தை தமிழ் என்ற போர்வையில் களங்கம் செய்வது தவறு. இது பிராமணிய இனத்தினையே அவதூறு செய்வது போல் உள்ளது. எனவே நான் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலை இந் நடைமுறையைத் தடைசெய்வேன்” என்று 2011 இல் நடந்த தேர்தல் மேடைகளில் முழங்கினார். இது ஒன்றே சித்திரை புத்தாண்டு தமிழர்க்கு உரியதல்ல அது பிராமணர்களுக்கு அதாவது ஆரியர்களுக்கு உரியது என்பது நன்கு புலப்படும்.

2011 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்தச் சட்டத்தை மாற்றிப் பழையபடி சித்திரை முதல்நாள்தான் தமிழரின் புத்தாண்டு என ஆகஸ்டு 23, 2011 அன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

சித்திரை மாதத்தின் தொடக்கத்தை தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வது ஏன் என்பது குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சுய விளம்பரத்திற்காக திமுக தலைவர் கருணாநிதி புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றியதாகக் குற்றம் சாட்டினார். மேலும் “சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயராகும்” என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்றப் பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லை.

திமுக தலைவர் மு.கருணாநிதி புத்தாண்டை தை மாதத்துக்கு மாற்றினாலும் அது அவர் எடுத்த முடிவல்ல. தமிழக அறிஞர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எடுத்த முடிவு!
சங்க இலக்கியத்தில் தை மாதத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பு சித்திரை மாதத்துக்குக் கொடுக்கப்படவில்லை. மேலே கூறியவாறு வானியல் அடிப்படையில் தை முதல் நாள் ஞாயிறு என்ற சூரியன் தனது தென்திசைச் (தட்சணாயனம்) செலவை முடித்துக் கொண்டு வடதிசை செலவைத் (உத்தராயணம்) தொடங்குகிறது. அதாவது தனு இராசியை விட்டு விலகி மகர இராசியல் ஞாயிறு புகுகிறது. தமிழர்களுடைய புத்தாண்டு ஞாயிற்றின் பயணத் தொடக்கத்தில் இருக்க வேண்டுமா? அல்லது நடுவில் இருக்க வேண்டுமா? அதாவது தையில் இருக்க வேண்டுமா? சித்திரையில் இருக்க வேண்டுமா?

தொல்காப்பியர் காலத்தில் ஆவணி மாதம் ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது எனத் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் மூலம் தெரிகிறது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.
முன்னூறு பாகை கொண்ட அண்டத்தை ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட 12 வீடுகளாகவும் 12 இராசிகளாகவும் 27 நட்சத்திரங்களாகவும் பிரித்தது மனிதர்களே. ஒரு இராசி என்பது ஞாயிற்றின் ஓடு பாதையின் இருமருங்கிலும் (10 பாகையில்) காணப்படும் நட்சத்திரங்களே. நட்சத்திரங்கள் உண்மை என்றாலும் அதனை விதிக் கட்டுப்பாடின்றி ஒன்றோடு ஒன்று தொடுக்கும் போது வரும் உருவங்கள் (இராசிகள்) கற்பனையே. சில உருவங்கள் சிங்கம் போல் தோற்றமளித்ததால் சிங்க இராசி என்று பெயரிட்டனர். மேட இராசி ஆடுபோல் தோற்றம் கொண்டது. இருபத்தேழு நட்சத்திரங்களை 12 வீடுகளில் சரி சமமாக அடக்க முடியாத காரணத்தால் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் 4 கால்களாகப் பிரித்து ஒவ்வொரு வீட்டிற்கும் 2 நட்சத்திரம் ஒரு கால் என ஒதுக்கியுள்ளனர்.

தமிழன் கோயிலில் சமஸ்கிருத மந்திரம், தமிழன் திருமணத்தில் சமஸ்கிருத மந்திரம் என்பதுபோல, தமிழன் ஆண்டையும் சமஸ்கிருதமாக்கிய பிற பண்பாட்டின் ஆதிக்கத்தையே தமிழக சட்டசபையில் ஜெயலலிதா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் காட்டுகிறது. தமிழிலே பெயரில்லாத, சமஸ்கிருதத்தில் பெயருள்ள ஆண்டுகள் எப்படித் தமிழ் ஆண்டுகளாகும்?

தமிழர்கள் வாழ்வு இயற்கையை அடிப்படையாய்க் கொண்டது. ஆண்டை மட்டுமல்ல, மாதம், கிழமை நாள் இவற்றையும் இயற்கையின் அடிப்படையிலேயே கணித்தனர். ஒரு நாள் என்பது சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு. மாதம் என்பதற்கு திங்கள் என்ற பெயருண்டு. திங்கள் என்பது நிலா. நிலாவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்பட்ட காலம் என்பதால் அது திங்கள் (மாதம்) எனப்பட்டது.

சூரியன் தென்கோடியிலிருந்து, வடக்கு நோக்கித் தொடங்கும் பயணத்தின் முதல் நாளை ஆண்டின் முதல் நாளாகக் கொள்வதென தமிழ் அறிஞர்கள் தீர்மானித்தனர். அதன்படி தை முதல் நாள் சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கி – சித்திரை மாதம் தலைக்கு மேல் நிற்கும். ஆனி மாதக் கடைசியில் வடகோடிக்குச் செல்லும். புரட்டாசி மாதக் கடைசியில் தலைக்கு மேல் மீண்டும் வரும். மார்கழிக் கடைசியில் தென் கோடிக்குச் செல்லும். ஆக, சூரியன் தென்கோடியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கி, மீண்டும் தென்கோடியைச் சென்றடைய எடுத்துக் கொள்ள ஆகும் காலம் ஓர் ஆண்டு ஆகும்.

சூரியன் பூமியை ஒரு முறை சுற்றி வரும் சுற்றுப் பாதை ஒவ்வொன்றும் 30 பாகைகள் (Degrees) அளவுள்ள 12 பகுதிகளாக விதிக்கட்டுப்பாடின்றிப் (arbitrary) பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவும் ஒரு இராசி எனவும் 12 இராசிகளினதும் தொகுதி இராசிச் சக்கரம் எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மகரம் முதல் தனு இராசி வரை உள்ள 12 சூரிய மாதங்கள் (இராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறது. பூமியைச் சுற்றிய சூரியனின் சார்பு இயக்கத்தில் இந்த ஒவ்வொரு இராசியிலும், சூரியன் இருக்கும் காலப்பகுதியே சூரியமாதம் ஆகும். இப்படி காலக்கணக்கைக் கணிப்பதை தமிழில் காலந்தேர் (காலம்+தேர்) என்று அழைத்தார்கள்.

தமிழர்கள் ஞாயிற்றின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கலைகளான சோதிடம், ஓரை பார்த்தல், சாதகம் பார்த்தல், முதலிய கலைகளுக்கு சூரியமாதத்தைக் கணித்துப் பயன்படுத்தினர். இந்தியாவில் மலையாளிகளும் தமிழரும் சூரியமாத முறையையே பின்பற்றுகிறார்கள். மலையாளிகள் மாதங்களுக்கு இராசிகளின் பெயரையே வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில்  சூரியமாத முறை வழக்கத்தில் இருந்தாலும் அம்மாதங்களைக் குறிக்க சந்திர மாதப்பெயர்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதால் மாதங்களும் ஆண்டுகளும் உருவாகின்றன. இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு தோற்றப்பாடாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும் புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதில்லை. தமிழ் முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் தொடக்கம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலப் பகுதியாகும்.
வானியல் அடிப்படையில் ஞாயிறு தனு இராசியில் இருந்து மகர இராசிக்குள் புகுவதே தை புத்தாண்டுப் பிறப்பாகும். சித்திரைப் பிறப்பு மீன இராசியில் இருந்து மேட இராசிக்கு ஞாயிறு புகும் போது இடம்பெறுகிறது. முன்னது ஞாயிறு வடதிசைப் பயணத்தின் தொடக்கம். பின்னது ஞாயிறு வடக்கு நோக்கிய பயணத்தின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையில் இருக்கிறது. அதாவது ஞாயிறு வான் நடுக்கோட்டை (celestial equator) கடக்கும் நாளாகும். எனவே பயணத்தின் தொடக்கத்தை வைத்து ஆண்டைக் கணிப்பதே பொருத்தமாக இருக்கும்.

சித்திரையை ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளும் பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுக் கணிப்பில் பல குறைபாடுகள் இருக்கின்றன. பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோர்பத்தி, ஆங்கீரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்ரபாணு, சுபாணு, பார்த்திய, விய,,....... ஹேவிளம்பி,.... ராஸஷ, குரோதன, அக்ஷய,,,,,,,, இவைதான் அறுபதாண்டு பெயர்கள். இவற்றில் எதுவும் தமிழ்ப் பெயரில்லை.

(1) பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இந்தப் புராணக் கதை அருவருப்பான, அறிவுக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கிறது. அவற்றைத் தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது தமிழ் ஆண்டுகள் என ஒப்புக் கொள்ளமாட்டான்.

(2) சித்திரை முதல் நாளில் தொடங்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும். ஒரு சுற்று 60 ஆண்டுகள் முடிந்தால் மீண்டும் பழையபடி பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகள் தொடங்குகின்றன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ‘ ஆண்டிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பது நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒவ்வாததாகும்.

வரலாற்றைப் பதிவு செய்யும் போது 60 க்கு மேலே ஒரு தொடராக ஆண்டைக் கணக்கிட முடியாது. ஒருவர் 60 வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்தால் அவர் அதற்கு மேல் தனது பிறந்த நாளைக் கொண்டாட முடியாது. மேலும் ஒருவர் மன்மத ஆண்டில் பிறந்தவர் என்று வைத்துக் கொண்டால் அவர் எந்த மன்மத ஆண்டில் பிறந்தவர் எனச் சொல்ல முடியாது. ஆக பற்சக்கர வடிவத்தில் வடமொழியில் அருவருப்பான பெயர்களைக் கொண்ட 60 ஆண்டுகளைப் பின்பற்றினால் வரலாற்றைப் பதிவு செய்வதில் குழப்பம் ஏற்படும். அறுபதுக்கு மேல் எண்ண முடியாது.

திருவள்ளுவர் பெயரில் உள்ள தொடர் ஆண்டு இந்தக் குழப்பத்தை அடியோடு நீக்க  உதவுகிறது. திருவள்ளுவர் ஆண்டு முறையில்,
· * 60 ஆண்டு சுழற்சி வராது.
· * தொடர்ச்சியாக ஆண்டுகளைக் கணக்கிடலாம்.
· * தமிழர்கள் வரலாற்றில் முதல் முறையாக தங்களுக்கென ஒரு தொடராண்டு (சகாப்தம்) உருவாக்கப் பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்படும்.
· * தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் திருவள்ளுவருக்குத் தலைசிறந்த நினைவாக அமையும்.
· * தமிழரின் திருநாளான பொங்கல் விழா தனிச் சிறப்படையும்.

ஒரு இனம் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருகின்ற மரபு அந்த இனத்திற்குத் தீங்கிழைக்கிறது என்று கண்டால் அந்த மரபு ஒழிக்கப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும். குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவை இன்று சட்டப்படி தடைசெய்யப்பட்டுவிட்டன. ஆதலால் தைப்பொங்கல் நாளான தைத்திங்கள் முதல் நாள் – திருவள்ளுவர் பிறந்த நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டு என ஏற்றுக் கொள்வதில் தவறில்லை!

இருந்தாலும் இந்து சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் சித்திரைப் புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்காமல் சித்திரைப் புத்தாண்டு என்று கொண்டாடலாம். தமிழ் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளை ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடலாம்.
ஆனால் சமய வேறுபாடின்றி ஒரு இந்துத் தமிழனும் ஒரு கிறித்தவ தமிழனும் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்றும் பொங்கல் நாள் என்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் என்றும் கொண்டாடுவதே "தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு! அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்" என்பதை மெய்ப்பிக்க உதவும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என நிறைவேற்றிய சட்டம் நீக்கப்பட வேண்டும்.

"“அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்குத் தைம்முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”

“தையே முதற்றிங்கள்; தைம்முதல் ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று; பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம்முதல்நாள் பொங்கல் நன்னாள்”

“நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”
- என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.