சனி, 24 மார்ச், 2018

தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்ததிற்கான பெருமை அண்ணாதுரையைச் சேருமா?

சென்னை மாகாணத்துக்கு, 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று முதல் குரல் எழுப்பியவர் ம.பொ.சியே. 29.11.1955-ல் தனது தமிழரசு கழகக் செயற் குழுக் கூட்டத்தில் முதன்முதலில் ம.பொ.சி தான், “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை மெட்ராஸ் ஸ்டேட் என்றழைக்கப்படுவதை எதிர்க்கிறோம். தமிழ்நாடு என்று பெயரிடப் பட வேண்டும்” என்று தீர்மானத்தை நிறை வேற்றினார்.

பொங்கல் திருநாளை தமிழினத்தின் தேசியத் திருநாளாகக் கொண்டாட முதன் முதலில் ஏற்பாடு செய்தவர் ம.பொ.சி. 1946-ம் ஆண்டு ஜனவரி 14-ல் சென்னை கோகலே மண்டபத்தில் முதல் தமிழர் திருநாள் கொண்டாடும் பழக்கத்தைத் தொடங்கி வைத்தவரும் இவரே.

தமிழ்நாடு என பெயர்மாற்றம் செய்யவேண்டி அதற்காகப் போராடி தன் உயிரையே போக்கியவர் சங்கரலிங்கநாடார்.

தமிழ்நாடு என பெயர்மாற்றம் செய்ய அண்ணாதுரை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது தமிழரின் எழுச்சியால்தான்.

அதைப்போல தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் தமிழ்மொழி உணர்வாளர்களும், தமிழ் மாணவர்களும்தான்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்த போது தவிர்க்கமுடியாமல் ஓட்டுக்காக திராவிடிஸ்ட்டுகளும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பின்னால் வந்த திராவிடிஸ்ட்டுகள் அண்ணாதுரைதான் தமிழ்நாடு என பெயர்மாற்றினார் என்று வெறுங்கூச்சல் போடுகின்றனர்.

வெள்ளி, 23 மார்ச், 2018

தமிழ்தான் திராவிடமா?

தமிழ்தான் திராவிடம், திராவிடம்தான் தமிழ் என்று திராவிடிஸ்டுகள் கதைக்கிறார்கள்.
அரசியல்தளத்தில் தமிழ்தான் திராவிடம், திராவிடம்தான் தமிழ் என்று சொல்லி தமிழரை அடிமைப்படுத்த கதைக்கிறார்கள்.

உடைந்த பானையை ஒட்டவைக்க முடியாது.
தெலுங்கையும் , கன்னடத்தையும் மீண்டும் தமிழாக மாற்ற முடியாது.
அவர்கள் செம்மொழி அங்கீகாரமே வாங்கிவிட்டார்கள்.

மொழிக்குடும்பம் ஒன்றுதான்.
பழந்தமிழ் பல மொழிகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது.
தமிழ்வேறு, கன்னடம் வேறு, தெலுங்கு வேறு என்றாகிவிட்டது.
உடைந்த பானையை ஒட்டவைக்க முடியாது.

தெலுங்கும் கன்னடமும் சமஸ்கிருதம் கலந்து தூய்மை இழந்துவிட்டன.
சமஸ்கிருதத்தைப் பிரித்தால் தனித்தியங்காத மொழிகளாகிவிட்டன.
அவற்றைத் திராவிட மொழிகள் என்றுசொல்லி தமிழோடு கலந்தால் தமிழும் கெட்டுவிடும்.

தமிழ் சமஸ்கிருதம் கலக்காத தூயமொழியாக உள்ளது.
தமிழில் இரண்டொரு சமஸ்கிருத சொற்கள் கலந்திருப்பினும் அவற்றை அகற்றிவிட முடியும்.
தமிழ் தனித்தியங்கும் செம்மொழி.
தூயமொழி.

இந்தியும் ஆங்கிலமும், பிரெஞ்சும் சமஸ்கிருதமும் ஒரே மொழிக்குடும்பம்தான். ஆரிய மொழிக்குடும்பம்.

இந்தி வேறு, சமஸ்கிருதம்ம் வேறு, ஆங்கிலம் வேறு, பிரெஞ்சு வேறு என்றாகிவிட்டது.

அவற்றை ஒன்றாக்க முடியாது.
உடைந்த பானையை ஒட்ட வைக்க முடியாது.

அதைப்போலவே தெலுங்கரும் கன்னடரும் மலையாளியும் தமிழராகமாட்டார்.
தமிழர் கன்னடராகவும் தெலுங்கராகவும் மலையாளியாகவும ஆகமாட்டார்.

தொன்றுதொட்டுத் தமிழைத் தாய்மொழியாகப் பேசும் மரபில் பிறந்தவர்தான் தமிழர்.

வியாழன், 22 மார்ச், 2018

சமஸ்கிருத மொழியில் தமிழ்ச்சொற்கள்

பல தமிழ்ச்சொற்கள் உருமாறி சமஸ்கிருதத்தில் வழங்குகின்றன.

தமிழ்ச்சொற்கள் பல சமஸ்கிருதத்தில் கலந்துள்ளன.

காரணம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர்கள் வருவதற்கு முன்பு இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் தமிழே இருந்தது.

ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபிறகு வட இந்தியாவில் ஆரிய மூலமொழியும் தமிழும் கலந்து பிராகிருதம் உருவானது.
அப் பிராகிருதம் வட இந்தியாவின் பேச்சு வழக்காக இருந்தது.

அப்பிராகிருதத்தின் செம்மைப் படுத்தப்பட்ட வடிவமே சமஸ்கிருதம்.
சமஸ்கிருதம் எக்காலத்திலும் பேச்சுவழக்கில் இருக்கவில்லை.
இலக்கிய மொழியாகவும் கோயில் பூசை மொழியாகவுமே அது இருந்து வந்துள்ளது.

சில சொற்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் ஒன்றாகவே இருப்பதைக்கண்டு அவற்றை சமஸ்கிருதச்சொற்கள் என்று எண்ணுவது தவறு.

தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு சென்ற சொற்கள் பல.
தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு சென்று உருமாறி மீண்டும் தமிழுக்கு திரும்பி வந்தவை பல.

சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்பே தமிழ் வளர்ச்சியடைந்திருந்த மொழி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .

புதன், 21 மார்ச், 2018

வர்ணாஸ்ரமம் தமிழர்களுக்கு அல்ல.

வர்ணாஸ்ரம வித்துவான்கள் கொஞ்சம் இங்க வாங்கப்பா!

////////// மனுஸ்மிருதி :

‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’

அதாவது – ‘சூத்திரன் பிராமணனாகி விடலாம்; பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், மகள்களும் வேறு வர்ணத்தை அடையலாம்’. ஆக, சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று சொல்லும் அதே மனு தர்மம்தான் அவர்கள் வேதம் ஓதும் பிராமணர்கள் ஆகலாம் என்று சொல்கிறது. இதை மற்றோர் விதமாய் சொல்ல வேண்டுமானால், வேதம் ஓத விருப்பம் தெரிவிப்பவன் பிராமணனாக மாறியே அவ்வாறு செய்ய இயலுமேயன்றி சூத்திரனாகவே இருந்து செய்ய இயலாது.  இதில் யாரும் எந்த வகையிலும் தடுக்கப்படவோ ஒடுக்கப்படவோ இல்லை.                                          
                               
மனுஸ்மிருதி :                                                    
அஜ்யேஷ்டாஸோ அகனிஷ்டாஸ ஏதே
ஸம் ப்ராதரோ வாவ்ருது: ஸௌபகாய
(ரிக்)

பொருள்:  உங்க‌ளில் உய‌ர்ந்த‌வ‌ர் தாழ்ந்தவ‌ர் என்று யாரும் கிடையாது. நீங்க‌ள் அனைவ‌ரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே! என‌வே ஒன்றுப‌ட்டு வாழ்வீர்க‌ளாக‌, மேன்மைய‌டைவீர்க‌ளாக‌!       
                                                                                          குறள்:972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

குறள் விளக்கம்
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே"//////
===============

மனு சாஸ்த்திரமே சொல்லியாச்சு.
அப்புறமென்ன?

பிராமணரல்லாத மற்ற சாதியினருக்கு பூணூல் மாட்டிவிட்டு பிராமணராக்கி வேதம் ஓதச் செய்யுங்கள்.
கருவறையில் பூசை செய்ய வையுங்கள்.

பிராமணரெல்லாம் அவரிடம் காணிக்கை போட்டுவிட்டு விபூதி, குங்குமம், பிரசாதம் வாங்கிக்கொள்ளுங்கள்.
அவர் காலைத்தொட்டு வணங்குங்கள்.

மனுஸ்மிருதி அதைத்தானே சொல்கிறது.

அனைத்து சாதியினரையும் பிராமணராக்கிவிட வேண்டியதுதானே.

அன்பர்களே!
வர்ணாசிரமக் கொள்கை பிராமணர்கள் வகுத்துக்கொண்டது.
அது தமிழருக்குப் பொருந்தாது.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்."
என்பதே தமிழர்கள் வகுத்துக்கொண்ட கொள்கை.

புதன், 14 மார்ச், 2018

இறைநம்பிக்கை தேவையா தேவையில்லையா?

இறைநம்பிக்கை தேவையா தேவையில்லையா?
இறைவழிபாடு உளவியல் சார்ந்த மருந்துவம் போன்றது. வாழ்க்கையில்
சிக்கல்கள், துன்பங்கள் நேரும்போது மனிதர்களை மனநோய்க்கு ஆளாக விடாமல் நம்பிக்கையின் அடிப்படையில் காப்பாற்றுவது.
இறைவழிபாட்டைக் குறை சொல்ல முடியாது.
அதனை வைத்து செய்யப்படும் மூடநம்பிக்கைகள், அதீத மதப்பற்றின் காரணமாக மற்ற மதத்தவர் மீது எழும் வெறுப்புணர்வு போன்றவைதான் களையப்பட வேண்டியவை.

இறைநம்பிக்கையை களைந்துவிட்டால் மனிதன் மிருகமாகத்தான் இருப்பான்.

அறிவியல் நம்பிக்கையால் இறைநம்பிக்கை அற்றுப்போன அமெரிக்காவில் ஒரு தனிமனிதன் நூற்றுக்கணக்கான மக்களை சுட்டுத் தள்ளுகிறான்.
அந்த மனநோய் வரக்காரணம் இறைநம்பிக்கை அற்றுப் போவதே.

இப்போது அறிவியல் கல்வியால் எல்லோரிடமும் பகுத்தறியும் மனப்பான்மை வந்துவிட்டது.
இருந்தாலும் இறைநம்பிக்கை தேவைப்படுகிறது.
இறைநம்பிக்கையை அழிக்கவேண்டியதில்லை.
அதை பகுத்தறிவோடு ஒன்றிய இறைநம்பிக்கையாக மாற்றவேண்டும்.

எல்லாவற்றையும் குற்றம் மூடநம்பிக்கை என்றால் மனிதன் அம்மணமாகத்தான் சுற்றுவான்.
மனிதாபிமானம் வளராது.

இறைநம்பிக்கை அன்புணர்வை உண்டாக்குவது.
உண்மையான இறைநம்பிக்கை வன்முறையைத் தடுப்பது.

கடவுள் என்ற பெயரில்தான் மதக்கலவரங்கள் நடக்கின்றன என்று நீங்கள் வாதிடலாம்.
அவர்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் அல்ல.
சுயநலவாதிகள்.

ஞாயிறு, 11 மார்ச், 2018

தமிழ் அறிவியல் மொழி

🌿🌿🌿
பெரியார் சொன்னதைப் போல தமிழ் காட்டுமிராண்டி மொழியல்ல.
சங்கர மடச் சாமியார் சொன்னதைப் போல தமிழ் நீச பாசை அல்ல.

தமிழ் அறிவியல் மொழி.
============
சித்தர்கள் என்போர் பண்டைய தமிழகத்தின் அறிவியலாளர்கள் ஆவர். அவர்கள் ஆன்மீகவாதிகளோ சாமியார்களோ அல்லர். அவர்கள் விஞ்ஞானிகள் (Scientists). அவர்கள் வானியல், மருத்துவம், வேதியியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்தனர்.

96 உடல்தத்துவங்களாகப் பிரித்து மனித உடற்கூறியலை ( Human Anatomy) ஆராய்ந்தனர்.

நோயியல் (Pathology) துறையில் மிக ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் 4448 என்று வரையறுத்தனர். இது நோயியல் துறையில் அவர்களின் ஆழமான ஆராய்ச்சி அறிவைக் காட்டுகிறது. மூச்சுறுப்புகளில் ஏற்படும் நோய்களை கப நோய்கள் எனவும், செரிமான உறுப்புகளில் ஏற்படும் நோய்களைப் பித்த நோய்கள் எனவும், மற்றவற்றை வாத நோய்கள் எனவும் வகைப்படுத்தினர்.

மருந்தியல் (Pharmacology) பற்றி விரிவான ஆய்வு செய்தனர். அதன் பயனாக கண்டுபிடித்த மருந்துகளை 32 வகை உள்மருந்துகள், 32 வகை வெளிமருந்துகள் என வகைப்படுத்தினர். மருந்தியல் துறையில் ஏராளமான நூல்களைப் படைத்துள்ளனர்.

நரம்பியலை ஆராய்ந்து வர்ம மருத்துவத்தைக் கண்டுபிடித்தனர். இந்த வர்ம மருத்துவம் சித்தர்கள் கண்டுபிடித்த நரம்பியல் மருத்துவம் (Neurological medicine) ஆகும்.

வேதியியல் துறையை வாதம் என்ற பெயரில் ஆராய்ந்தனர். போகர் வேதியியல் துறையில் ஆழமான விரிவான ஆய்வுகளைச் செய்தவர். செயற்கையாக வேதிப்பொருள்களாகிய தாதுக்களைத் தயாரிக்கும் முறைகளைக் கண்டுபிடித்தனர். அதற்கு வைப்புமுறை என்று பெயரிட்டனர். சித்தர்கள் எழுதிய வாதநூல்கள் அனைத்தும் வேதியியல் துறையில் அவர்களின் ஆழமான ஆராய்ச்சியை வெளிப்படுத்துபவை ஆகும்.

விண்பொறியியல் துறையில் போகர் ஆராய்ந்திருக்கிறார். அதன் பயனாக பஞ்சபூதத்தால் செய்த ஆகாயப்புரவி என்ற விமானத்தைக் கண்டுபிடித்து சீனாவுக்குப் பயணம் செய்திருக்கிறார். ஆகாயப்புரவி என்ற விமானம் பற்றிய குறிப்புகளை போகர் ஏழாயிரம் என்ற நூலில் காணமுடிகிறது.

உடல், மனம், அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் யோக ஆய்வுகளைச் செய்து யோக நூல்களையும் படைத்தனர்.

மெய்யியல் என்னும் தத்துவத்துறையிலும் ஆய்வுகளைச் செய்தனர். தமது தத்துவ ஆய்வுச் சிந்தனைகளை ஞானநூல்களாகப் படைத்தனர். மொத்தத்தில் சித்தர்கள் பலதுறை வல்லுநர்களாக விளங்கினர்.

சித்த மருந்தியலையும் , சித்த வேதியியலாகிய வாதத்தையும் நவீன வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி ஆராய்வதன் மூலம்  அறிவியல் உலகிற்குப் புதிய வெளிச்சத்தைத் தர முடியும். உலக அறிவியல் வரலாற்றில் சித்தர்களை அறிவியலாளர்களாகக் குறிப்பிடச்செய்ய வேண்டியது நமது கடமை.

இப்போதும் ஆங்கில மருத்துவத்திற்கு சித்த மருத்துவம் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது.
பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லாதபோதும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன என்பதை சித்த மருத்துவம் நிரூபித்துக் காட்டிக்கொண்டிருக்கிறது.

சித்தர்கள் தமிழில் எழுதிய மருத்துவ அறிவியல் நூல்கள் இப்போதும் 500 க்கும் மேற்பட்டவை நமக்குக் கிடைத்துள்ளன.

தமிழ் பண்டைக் காலத்திலிருந்தே அறிவியல் மொழி.
தமிழ் நமது தாய்மொழி என்பதால் பெருமைப்படுவோம்.

தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் பழித்த பெரியார்:

தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் பழித்த பெரியார்:
==============
"தமிழ் படித்து உனக்க ஆவதென்ன,
தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்று தமிழை இழிவாகப் பேசினார் பெரியார்.
திருக்குறளில் மலவாடை வீசுகிறது என்று திருக்குறளை இழிவுபடுத்தினார் பெரியார்.

சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தமிழ் இலக்கியங்களைக் குப்பைகள் என்று சொன்னார்.

திருக்குறளை மலம் என்று சொன்ன அதே பெரியார்தான் திருக்குறள் மாநாடு நடத்தினார் என்று சிலர் பெரியாரைப் புகழ்கின்றனர்.

திருக்குறளின் அருமை பெருமைகள் என்னவென்றே தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளறிய பெரியாரை வைத்தே திருக்குறள் மாநாட்டை நடத்தியவர்கள் தமிழறிஞர்கள்தான்.
தமிழறிஞர்களின் விழிப்புணர்வு இல்லாமல் போயிருந்தால் கம்பராமாயண எரிப்புப் போராட்டம் செய்தது போல பெரியாரியவாதிகள் திருக்குறள் எரிப்புப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்திருப்பார்கள்.

விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனா தாசன் ஆகிய மூன்று பேர் இணைந்து எழுதிய நூலான “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்” நூலில் பின்வருமாறு தெரிலிக்கப்பட்டுள்ளது.
“1949 பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் திருக்குறள் மாநாட்டைப் பெரியார் நடத்தினார். இதற்கு முன்பெல்லாம் அவர் மொத்தத்தில் புலவர்களே மோசம், தமிழ் இலக்கியமே குப்பை, தமிழே காட்டுமிராண்டி மொழி என்றெல்லாம் கருத்துக் கூறியதால் தமிழ்ப்புலவர்கள் மத்தியில் கடும் கோபமும் எதிர்ப்பும் ஏற்பட்டன.
அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன் போன்றவர்கள் பெரியாரிடம் “புராணங்களை எதிர்க்கிற வேகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றையும் சேர்த்துத் தாக்கிடுவது முறையல்ல. தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் நாமே பாதுகாப்பு. குறள் உலகப் பொதுமறை என்பதை நாம் உணர்த்த வேண்டும்” என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒதிய பிறகு தாமதித்தேனும் பலன் ஏற்பட்டது. இப்போதூ பெரியார் தமிழ் இலக்கியங்களையும், புலவர்களையும் தாக்குவதை நிறுத்திக் கொண்டார்.”
(பக். 169)
மேற்கண்ட செய்தியின் படி திருக்குறள் மாநாடு அண்ணா, ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன் ஆகியோரின் நிர்பந்தத்தின்படி நடத்தப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு எதிரான பெரியாரிடமே சில ஆண்டுகளாக அதுபற்றி நல்லவிதமாக  ஓதி வந்தபடியால் வேறு வழியின்றி திருக்குறள் மாநாடு நடத்த பெரியாரும் ஒப்புக் கொண்டார் என்பதும் விளங்கும்.
1950இல் மீண்டும் பெரியார் என்ற வேதாளம் முருங்கை மரம் ஏறியது. அவர் கூறுகிறார்: “வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம் எல்லாம் போய் விட்டால் நமக்கு எது தான் நூல் என்று கேட்டார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது என்று பதில் கூறினேன். (விடுதலை 1.6.1950)
பெரியாருக்கு சாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரையிலும் திருக்குறளின் மேல் நல்லெண்ணம் பிறக்க வில்லை.

27.12.1972இல் ‘கலைமகள்’ இதழுக்கு அளித்த பேட்டியில் பெரியார் கூறுகிறார்:
“குறளை எடுத்துக்குங்க. நான் மட்டும் தான் குறளை கண்டிக்கிறேன்…. நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர் கூட அதை ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக்கிட்டாரு. இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தியது குறள். அதை அப்படியே இப்பவும் நாம் ஏத்துக்கணும்னா?”
என்று கடைசிவரை திருக்குறளை ஏற்க மறுத்தார்.

பெரியார் வாயில் இருந்து உதிர்ந்த விஷ வார்த்தைகள்...
"சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை. தேவடியாள் எப்படி வெளியே அழகாக, உள்ளே வஞ்சகத்துடன் இருப்பாளோ அதுபோலவே சிலப்பதிகாரமும்"
"வள்ளுவன் மூடநம்பிக்கையும் ஆரிய மத கருத்தையும் சொன்னான். திருக்குறள் ஒரு மலம். அதை வீசி எறி"
"தமிழனுக்கு இலக்கியம், வரலாறு, குடும்பம், பண்பாடே கிடையாது. இங்கு பிராமணன் வந்து எழுதியதும், பிராமண அடிமை எழுதியதும்தான் இலக்கியம்"
"தமிழில் இலக்கியம், வரலாறு என்ன இருக்கிறது? தமிழை விட்டால் என்ன கேடு? தமிழ்த்தாய் சத்தில்லாமல், அதன் பிள்ளைகள் நடைப்பிணமாகவே இருக்கிறார்கள்."
"இந்தி எதிர்ப்பு அரங்குக்கு போனேன். இந்திக்கு பதில் இங்கிலீஷ் போதனாமொழி என ராஜகோபாலாச்சாரி சொன்னார். நான் இங்கிலிஷ் போதனாமொழி மட்டுமல்ல. பேச்சுமொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ் எழுத்துகளை நீக்கி, இங்கிலீஷ் எழுத்துகளை வைக்கவேண்டும் என்றேன்."
- பெரியார்
1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத்தமிழ்மாநாட
ு நடத்தப்பட்டது. அப்போது திருவள்ளுவர், கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலை திறக்கப்பட்டது.
அப்போது தந்தை பெரியார் "உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது
?" (விடுதலை 15.12.1967) என்று அறிக்கை விட்டார். தனது எதிர்ப்பை மேலும் காட்டுவதற்காக பெரியாரால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந் நூலின் பெயர் "தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?".
பிறகு அந்த நூலின் தலைப்பு "தமிழும் தமிழரும்" என்று மாற்றப்பட்டது. தற்போது வரை ஐந்து பதிப்புகள் திராவிடர்கழகம் சார்பில் வெளி வந்துள்ளது. "தமிழ் நீசபாஷை" என்று கூறும் ஆரிய நூல்களுக்கும், "பெரியார் தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்று எழுதிய இந்த நூலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
ஈ.வே.ராமசாமி பற்றியும் திராவிடம் பற்றியும் தலைவர்கள் கருத்து:
பொதுவுடைமை போராளி சீவானந்தம்:
1957ஆம் ஆண்டில்
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பின் இரட்டைத்தன்மை குறித்தும், அவரின் சாதி ஒழிப்புக்கொள்கை குறித்தும் ஒரு பொதுக்கூட்டத்தில் தோலுரித்துப் பேசினார் பா.சீவானந்தம். அது வருமாறு: "விரும்பினால் இராம மூர்த்தியை ஆதரிப்பார், இராஜ கோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார், இது ஒர் சித்தம்! வேறொரு பித்தம் கிளம்பினால், அக்கரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார். நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்கு ஒரு காரணம் சொன்னார். இன்று ஜாதிஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்லுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார். அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நாடறியும். அவர் காட்டிய வழியில் தமிழ்நாட்டில் ஜாதிய வெறியும், ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய கருத்து" என்றார்.
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்:
பெரியார் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கத்தை திடீரென்று 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று மாற்றினார். இதன் மூலம் எழுந்து வந்த தமிழ்த் தேசிய எழுச்சிப் போராட்டம் திசை திருப்பப்பட்டது. இதனை கி.ஆ.பெ.வி.யின் மனம் ஒப்புக் கொள்ள வில்லை. பெரியார் மீது 25 குற்றச்சாட்டுகள
ை கூறி நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார். பிறகு 1994இல் நீதிக்கட்சி 'திராவிடர் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்த போது அக்கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இது குறித்து தான் நடத்திய 'தமிழர் நாடு' (1950) இதழில் எழுதினார்: "நான் திராவிடர் கழகத்தில் இருக்கவுமில்லை. விலகவுமில்லை. அவர்கள் தான் 'தமிழ் வாழ்க' என்பதிலிருந்து 'தமிழ்நாடு தமிழருக்கே' என்பதிலிருந்து 'தமிழ்க்கொடி' தூக்குவதிலிருந்து விலகிப்போனவர்கள்."
நாவலர் சோமசுந்தர பாரதியார்:
"தமிழன் தன்னைத் தமிழெனன்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் தன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்" என்று இடித்துரைத்தார்.
1953 தங்கோவின் தமிழக எல்லை தற்காப்பு மாநாடில்,
"நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று" என்றார்.
அண்ணல் தங்கோ:
'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது " என்று 1950 முத்தமிழ் மாநாட்டில் பேசினார்.
உணர்ச்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்:
"அண்ணல்! பெரியாரும், அண்ணாத்துரையும் இல்லாத ஊருக்கு (திராவிட நாடு) வழிகாட்டி விட்டார்கள்!. தமிழினத்தை திசை திருப்பி விட்டார்கள். ஆனால் இறுதியில் உன்றனின் தனித்தமிழ்நாடு என்ற குறிக்கோளே வெற்றி பெறும்! அன்று தமிழகம் உன்னை நினைக்கும்" என்று தங்கோவிடம் கூறியுள்ளார்.
"நமக்கு திகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம்" என்றார்.
குடும்ப விளக்கு நூலின் 2ஆம் பதிப்பு 1960லும் 3ஆம் பதிப்பு 1963லும் வந்தது. இவ்விரு பதிப்பிலும் மேற்படி பாடலில் வரும் திராவிடன் என்பது தமிழன் என்றும் திராவிட மக்கள் என்பது தமிழ்மக்கள் என்றும் மாற்றப்பட்டது.
"....தமிழன் என்று நீ செப்படா தம்பி"
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய தமிழ் மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!"
தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகள் என்று பெரியார் கூறினார். அப்போது,
பாவேந்தர் பாரதிதாசன்,
"நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி!" என்று பெரியாருக்கு உறைக்கும்படி கூறினார்.
வடகெல்லை மீட்பு போராளி மா.போ.சிவஞானம்:
பெரியார்: தாய்ப்பாலை -தமிழை- எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?
ம.பொ.சி: தமிழ்மொழியோடு ஆங்கிலத்தையும் பயில வேண்டும், அதுவே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதல்ல பெரியார் கட்சி. "தமிழைப் படிக்க வேண்டாம்; ஆங்கிலம் படித்தாலே போதும். அதுவே வீட்டு மொழியாக- நாட்டு மொழியாக இருக்கலாம்" என்பது தான். இது "பரங்கி மொழிப் பைத்தியம்" அல்லாமல் வேறு எதுவோ? ஆனால் பெரியார் இன்றளவும் வீட்டில் கன்னடமும் நாட்டில் தமிழும் பேசித்தான் நடமாடுகிறார். ஆங்கிலத்தில் பேசுவதில்லையே!
இப்படி தமிழர் தலைவர்களை புரக்கணித்து, எதிர்த்து தமிழியத்தை விழுங்கி திராவிட கருத்தியலை திணித்தார்.
தமிழர் இன அடையாள ஒழிப்பு
தமிழ் ஆட்சி மொழியாவதற்கு எதிர்ப்பு
தமிழ் எல்லை மீட்புக்கு மறுப்பு
என தமிழினத்திற்கு சொல்லொனா துரோகம் செய்தவர் தான் ஈ.வே.ராமசாமி.
இன்றைய தமிழரின் இழிநிலைக்கும், மரபு வளங்கள் இழந்த நிலைக்கும், தமிழ் அழிந்து வரும் நிலைக்கும், தமிழர் உரிமை இழப்பிற்கும், அயலார் ஆட்சிக்கும் காரணமானவர் தான் ஈ.வே.ராமசாமி.
அயலார்கள் தமிழர் மேல் எளிதாக அதிகாரத்தை செலுத்தவும், தமிழர்கள் மேல் விமர்சனங்கள் வைக்கவும், தமிழர் நாட்டில் அழிவு திட்டங்களை திணிக்கவும், மண்ணின் மைந்தர்கள் தாய் மண்ணை ஆள்வதை இனவாதம் என்று கருத்தாக்கம் செய்யவும், வழிவகுத்தவர் தான் இந்த ஈ.வே.ராமசாமி.
இவரின் முகத்திரையை பயன்படுத்தி தமிழர் விரோத அரசியல் நடத்தவே இவர் உதவுகிறார் என்பதை தாண்டி தமிழர்களுக்கு ஈள்ளளவும் பயனில்லை என்பதை தமிழர் இனம் உணர தொடங்கிய காலம் இது.
தமிழியத்தால் வஞ்சனைகளையும் பகைகளையும் வென்றெடுப்போம். நாளை பறக்கும் தமிழ் கொடி மீது உறுதி. அமைய போகும் தமிழர் நாட்டின் மீது உறுதி. திழைக்கப் போகும் தமிழர் நல்லாட்சி மீது உறுதி.

நன்றி

https://m.facebook.com/745804385461175/photos/a.755752121133068.1073741829.745804385461175/1212978348743774/?type=3