செவ்வாய், 18 செப்டம்பர், 2018

தமிழ்நாட்டை ஆண்டவர்கள்

*பழங்காலம் முதல் இக்காலம் வரை தமிழ்நாட்டை யாரெல்லாம் ஆண்டிருக்கிறார்கள்?*


👉 நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கிபி 2ஆம் நூற்றாண்டு வரை *சேரர், சோழர், பாண்டியர்* ஆகிய மூவேந்தர்கள் மற்றும் *தொண்டைமான்கள், பாரி, ஓரி, காரி, அதியமான் முதலான குறுநில மன்னர்கள்* (இவர்கள் *தமிழர்*).

 சோழர் தலைநகரம் பூம்புகார், உறையூர், பழையாறை. பாண்டியர் தலைநகரம் மதுரை. சேரர் தலைநகரம் பெரியாறு அரபிக் கடலில் கலக்கும் இடமான வஞ்சி என்ற கொடுங்களூர் மற்றும் கரூர்.. தொண்டைமான்களின் தலைநகரம் காஞ்சிபுரம். அதியமான்களின் தலைநகரம் தகடூர் என்னும் தருமபுரி..


👉 கிபி 2ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4ஆம் நூற்றாண்டு தொடக்கம்வரை *களப்பிரர்*. ( இவர்கள் தமிழரா? யார்? எங்கிருந்து வந்தார்கள்? என்று தெரியவில்லை).


👉 கிபி 4ஆம் நூற்றாண்டு தொடக்கம்முதல் கிபி 9ஆம் நூற்றாண்டு வரை *பல்லவர்கள்*. (இவர்கள் *தமிழர்*). இவர்கள் சங்க காலத் தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள்.. பல்லவர் தலைநகரம் காஞ்சிபுரம். இவர்களின் கடற்கரை தலைநகரம் மாமல்லபுரம்.


👉 கிபி 9ஆம் நூற்றாண்டு முதல் கிபி 13ஆம் நூற்றாண்டு வரை *சோழர்கள்.* இவர்கள் *தமிழர்*.

சோழர் தலைநகரம் பழையாறை, தஞ்சாவூர் பிறகு கங்கைகொண்டசோழபுரம். 250 ஆண்டுகள் கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரம்.. பிறகு தீவுக்கோட்டை. அதன் பிறகு சிதம்பரம் அருகே பிச்சாவரம்.. இந்தியா, இலங்கை, மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளின் பகுதிகள் சோழப்பேரரசில் அடங்கியிருந்த காலம்...

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் வலிமைமிக்க பேரரசர்களாக இருந்தனர்..


👉 கிபி 13ஆம் நூற்றாண்டு முதல் கிபி 14ஆம் நூற்றாண்டு வரை *பாண்டியர்*. (இவர்கள் *தமிழர்*). பாண்டியர் தலைநகரம் மதுரை.


👉 கிபி 14ஆம் நூற்றாண்டு முதல் கிபி 17ஆம் நூற்றாண்டு வரை *விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் தெலுங்க நாயக்க மன்னர்கள்*. (இவர்கள் *தெலுங்கர்*). விஜயநகரப் பேரரசர்கள் கர்நாடகாவில் ஹம்பி என்ற ஊரில் இருந்து ஆண்டார்கள். அவர்களின் ஆளுநர்களாகத் தமிழகத்திற்கு வந்த தெலுங்க நாயக்க மன்னர்கள் மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய ஊர்களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள்.


👉 கிபி 17ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் 1947 வரை *ஆங்கிலேயர்*. இவர்களின் தலைநகரம் சென்னை, கல்கத்தா, டில்லி.


👉 *1920 முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்களில் யாரெல்லாம் தமிழர்?* யாரெல்லாம் தெலுங்கர்? யாரெல்லாம் மலையாளி? யாரெல்லாம் கன்னடர்? யாரெல்லாம் ஆரியர்?


1. சுப்பராயலு ரெட்டியார்- தெலுங்கர்


2. பனகல் ராஜா தெலுங்கர்


3. *பி. சுப்பராயன் - தமிழர்*


4. முனுசாமி நாயுடு- தெலுங்கர்


5. பொப்பிலி ராஜா- தெலுங்கர்


6. *பி.டி.ராஜன் -தமிழர்.*


7. கே.வி.ரெட்டி நாயுடு - தெலுங்கர்.


8. இராஜாஜி - தெலுங்க பிராமணர் - ஆரியர்


9. டி.பிரகாசம் - தெலுங்கர்.


10. ஓ.பி.ராமசாமி ரெட்டியார் - தெலுங்கர்.


11. பி.எஸ்.குமாரசாமிராஜா -தெலுங்கர்


11. *காமராஜர் - தமிழர்*


12. *எம்.பக்தவச்சலம் - தமிழர்*


13. அண்ணாதுரை - தெலுங்கர்


14. கருணாநிதி - தெலுங்கர்


15. எம்ஜிஆர் - மலையாளி


16. ஜானகி - மலையாளி


17. ஜெயலலிதா - கன்னட பிராமணர் - ஆரியர்


18. *ஓ.பன்னீர்செல்வம் - தமிழர்*


19. *எடப்பாடி பழனிசாமி -தமிழர்*


தமிழ்நாடு தமிழர் நாடு. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்.


"வாழும் உரிமை அனைவருக்கும்.

ஆளும் உரிமை தமிழருக்கே".

குறிப்பு:
கீழைச்சாளுக்கிய நாட்டு இளவரசனாக இருந்த அனபாயன் என்பவனின் தந்தை இராஜராஜ நரேந்திர சாளுக்கியன். அவன் தெலுங்கன். தாய் சோழனின் மகள். அவள் தமிழச்சி. அதாவது அனபாயன் என்பவன் ராஜராஜ சோழனின் மகள் வழிக் கொள்ளுப்பேரன். இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரன்.
1070 ல் அதிராசேந்திர சோழன் சோழப்பேரரசின் மன்னனாக முடிசூட்டிக்கொள்கிறான். அவன் சில மாதங்களிலேயே இறந்துவிடுகிறான். அதிராசேந்திர சோழனுக்கு வாரிசு இல்லை. அதனால் கீழைச்சாளுக்கிய இளவரசனான அனபாயன் என்பவன் அதிராசேந்திர சோழனின் இறப்புக்குப் பிறகு குலோத்துங்க சோழன் என்ற பெயரில் சோழப்பேரரசின் மன்னனாக 1070 ல் முடிசூட்டிக் கொண்டான். அவன் வழியினர் 4 தலைமுறையினர் 1163 வரை சோழப்பேரரசை ஆண்டனர். அதன் பிறகு மீண்டும் நேரடி சோழர் பரம்பரையினர் ஆட்சிக்கு வந்துவிட்டனர்.

1163 ல் முடிசூடிய இரண்டாம் இராஜாதிராஜ சோழன் நேரடி சோழர் பரம்பரையைச் சேர்ந்தவர்..  இவர் முதலாம் குலோத்துங்க சோழனின் மகனான விக்கிரம சோழனின் மகள்வழிப் பேரன்... இவரது தந்தை சங்கமன் (நெறியுடைய பெருமாள்) ராஜராஜ சோழனின் நேரடி சோழர் பரம்பரையைச் சேர்ந்தவர்.. இந்த நேரடி சோழர் பரம்பரையைச் சேர்ந்தவர்களே பிச்சாவரம் சோழர்கள்..

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

பல்லவர்கள் தமிழரே!

பல்லவர்கள் தமிழரே!
பல்லவர்கள் யார்?
பல்லவர்கள் தொண்டைநாட்டின் குறுநில மன்னராயிருந்த தமிழ் மன்னர்களான தொண்டைமான் வழிவந்த தமிழர்களே. தொண்டைமான் இளந்திரையன் என்போன் சங்ககாலத்தில் தொண்டை நாட்டை ஆண்ட சிறப்புமிக்க தமிழ் மன்னன் ஆவான். சங்க காலத்திற்குப் பிறகு பல்லவப் பேரரசு அமையும்வரை தொண்டைமான்கள் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர் பேரரசுக்குக் அடங்கிய குறுநில மன்னர்களாக இருந்துள்ளனர்.
தொண்டைமான்கள் சோழர்களின் வழித்தோன்றல் ஆவர்.
பல்லவ மன்னர்கள் தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள் என்பதாலேயே பல்லவ மன்னர்களின் வழிவந்த சில மன்னர்களும் தளபதிகளும் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டனர். குலோத்துங்க சோழனின் படைத் தளபதியாய் இருந்த கருணாகரத் தொண்டைமானைப் "பல்லவர் தோன்றல்" என்று புகழ்கிறார் ஜெயங்கொண்டார். பல்லவ  வழித்தோன்றலாக இருந்த கருணாகரன் தொண்டைமான் என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? பல்லவ மன்னர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள்.

பல்லவர்களின் முன்னோரான தொண்டைமான்கள் தமிழர்கள் என்பது சங்க இலக்கியங்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை நூலின் மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கும்
உண்மை.
கருணாகரத் தொண்டைமானைக் கலிங்கத்துப்பரணி 535 ஆவது பாடலில் "பல்லவர் தோன்றலைப் பாடீரோ" என்கிறார் ஜெயங்கொண்டார்.
இதே கருணாகரத் தொண்டைமானைச் சிலை எழுபது என்ற நூலின் 68ஆவது பாடலில்-
" புவிக்காயிரம் பொன் இறைநீக்கி
கவிக்காயிரம் பொன் பரிசளித்தான்
கருணாகரத் தொண்டை வன்னியனே "
எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடுகிறார்.
கவிச்சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார் கருணாகரத் தொண்டைமானைப் பல்லவர் என்று அடையாளப்படுத்துகிறார்.
அதே தொண்டைமான் வன்னியர் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் அடையாளப்
படுத்துகிறார்.

ஆகவே பல்லவர்கள் தமிழர்தான். கம்பர் எழுதிய சிலை எழுபது என்ற நூலின் மூலம் பல்லவர்கள் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது.

தென்னிந்தியாவில் அமைந்த வலிமையான முதல் பேரரசு தமிழர்கள் அமைத்த பல்லவப் பேரரசு.
தமிழர்களான பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 9 நூற்றாண்டுகள் வலிமையான பேரரசாக இருந்து நல்லாட்சி செய்தார்கள். அதன்பிறகு காடவராயர், சம்புவராயர் என்ற பெயர்களில் குறுநில மன்னர்களாக இருந்தும் ஆண்டார்கள். பிற்கால சோழ, பாண்டிய பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகும் தெலுங்க நாயக்கர் ஆட்சிக்காலத்தில் உடையார்பாளையம், முகாசா பரூர் ஆகிய பகுதிகளில் பாளையக்காரர்களாக ஆட்சி செய்தனர். அதன்பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  உடையார்பாளையம், முகாசா பரூர் ஆகிய ஜமீன்களுக்கு ஜமீன்தாரர்களாகவும் தொடர்ந்து ஆட்சி செய்தனர். ஜமீன் ஒழிப்புச் சட்டம் வரும்வரை பல்லவர் வழிவந்தோர் ஜமீன்தாரர்களாக இருந்துவந்தனர்.
இப்போதும் வாழும் பல்லவ வழித்தோன்றல்கள் உடையார்பாளையத்திலும், முகாசா பரூரிலும் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகப் பகுதியான தொண்டைநாடு ஆந்திர எல்லைக்கு அருகில் இருப்பதால் பல்லவர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திராவின் பெரும்பகுதியைப் பிடித்து ஆளுவதற்கும் வசதியாக இருந்துவிட்டது.

பல்லவர்கள் தமிழகம், ஆந்திரம் மட்டுமல்லாமல் கடல்கடந்து இலங்கை, மலேசியா, கம்போடியா வரை சென்று ஆட்சி செய்தனர். கம்போடியாவின் அங்கோர்வாட் என்ற உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத் தளத்தைப் பல்லவர்கள்தான் கட்டினர்.

பல்லவர்கள் தொடக்க காலத்தில் பிராகிருத மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் பட்டயங்களை வெளியிட்டுள்ளனர். சங்க காலத்திற்குப் பிறகு பல்லவப் பேரரசு அமைவதற்கு முன்பு தொண்டைமண்டலம் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர் பேரரசுக்கு கட்டுப்பட்டு அடங்கிய நாடாக இருந்ததால் முற்காலப் பல்லவர்கள் சாதவாகனப் பேரரசின் தாக்கத்தால் பிராகிருத, சமஸ்கிருத ஆதரவாளர்களாக மாறியிருந்தனர். பல்லவப் பேரரசு அமைவதற்கு முன்பே வட இந்தியாவிலிருந்து சமண, பௌத்தத் துறவிகளும், சமஸ்கிருத வைதீகர்களும் காஞ்சிபுரத்தில் குடியேறி அவர்தம் பிராகிருத, சமஸ்கிருத மொழிகளை மதத்தளத்தில் பரப்பி இருந்ததும் முற்காலப் பல்லவர்கள் பிராகிருத, சமஸ்கிருதப் பட்டயங்களை வெளியிட்டமைக்கு காரணம் ஆகும்.

பல்லவர்கள் தொடக்கத்தில் சமணத்தைத் தழுவி இருந்தனர். முற்காலப் பல்லவர்கள் சமணத்தைத் தழுவியிருந்த போது பிராகிருதத்தையும், பிறகு இடைக்காலப் பல்லவர்கள் வைதீகத்தைப் பின்பற்றிய போது சமஸ்கிருதத்தையும், பிற்காலப் பல்லவர்கள் சைவத்தைப் பின்பற்றிய போது தமிழையும் ஆட்சிமொழியாகக் கொண்டிருந்தனர். சமண, பௌத்த, வைதீக சமயங்கள் சங்க காலத்திற்குப் பிறகு காஞ்சிபுரத்தில் செல்வாக்குடன் பரவியிருந்தன. சமண, பௌத்த மதங்களின் மொழி பிராகிருதம். வைதீக மதத்தின் மொழி சமஸ்கிருதம். தமிழரின் சைவம் தமிழைச் சமய மொழியாகக் கொண்டு வளர்ந்தது. பல்லவர்கள் பிராகிருதம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளை முறையே ஆட்சி மொழிகளாகக் கொண்டிருந்தமைக்கு அவர்கள் பின்பற்றிய மதங்களே முதன்மைக் காரணம் ஆகும்.
தற்காலத்தில் இசுலாம் மதத்தைத் தழுவியுள்ள சில தமிழர்கள் அரபு மொழியைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றனர் அல்லவா? இந்துக்கள் சமஸ்கிருதத்தில் வழிபாடு, திருமணச்சடங்கு போன்றவற்றைச் செய்யவில்லையா? அப்படித்தான்.

பல்லவர்கள் தம்மைப் பரத்வாஜ கோத்திரத்திலிருந்து வந்த சத்திரியர்கள் என்று கல்வெட்டுகளில் பதிந்துள்ளனர் எனவும் அதனால் பல்லவர்கள் ஆரியர் எனவும் தமிழரல்லர் எனவும் சிலர் சொல்கின்றனர்.
தமிழகத்தில் வட இந்திய ஆரிய கலாச்சாரமும் மனுதரும நால்வருண கோட்பாடும் புகுந்த பிறகு பல தமிழ்க்குடிகள் தம் சாதிப் பெயரை வடமொழிப்படுத்தி புராணமயப்படுத்தினர்.
எடுத்துக்காட்டாக, கொங்கு மண்டல வேளாளர்கள் தம்மை மரபாள வம்சம் என்றனர். வடமொழியின் மரபாள புராணத்தைத் தழுவி வேளாள புராணம் எழுதிக்கொண்டனர்.
கோனார் என்னும் இடையர்கள் தம்மை யாதவர் என்று சொல்லிக்கொண்டனர்.
தொண்டை மண்டலம், நடுநாடு, வட கொங்கு மண்டலம் ஆகியவற்றைப் பூர்வீகமாக கொண்ட வன்னியர்களான பள்ளிகள் தம்மை அக்னி வம்சம் என்று சொல்லிக்கொண்டனர். வடமொழியில் உள்ள ஆக்னேய புராணத்தைத் தழுவி வன்னிய புராணம் எழுதிக்கொண்டனர்.
தச்சர்கள் தம்மை விஸ்வாமித்திர கோத்திரம் என்று சொல்லிக்கொண்டனர்.
நாடாண்ட மன்னர்கள் தம்மை சத்திரியர் என்று சொல்லிக்கொண்டனர்.
இவ்வாறே பல தமிழ்க்குடிகள் பெருமைக்காக வடமொழிப்பெயர்களையும் வடமொழி புராணங்களையும் தமக்கு ஏற்றிக்கொண்டன.
பல்லவர்கள் சொல்லும் பரத்வாஜ கோத்திரம் என்பதும் அவ்வாறுதான்.

பல்லவர்கள் தமிழர் என்பதில் ஐயமில்லை.

பல்லவர் பற்றிய முந்தைய வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள் மறு ஆய்வுக்கு உட்பட்டவை.
முந்தைய வரலாற்று ஆய்வாளர்களின் பல்லவர் பற்றிய தரவு சேகரிப்புக்கு செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி நூலின் செய்தியும், கம்பரின் சிலையெழுபது நூலின் செய்தியும் எட்டாமல் இருந்திருக்கிறது.
அதனால் "பல்லவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை" என்று பொத்தாம் பொதுவாக எழுதிவிட்டுச் சென்றனர்.
"பல்லவர்கள் யார் என்று தெரியவில்லை" என்று வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய காரணத்தால் பல்லவர்கள் மீது தெலுங்கர்கள் உரிமை கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

சனி, 8 செப்டம்பர், 2018

பல்லவர்கள் தமிழர்தான்

பல்லவர்கள் யார்?
தமிழரான பல்லவர் வரலாறு ஆரிய பிராமணர்களாலும் திராவிடத் தெலுங்கர்களாலும் திரிக்கப்பட்டுள்ளது.

பல்லவர்கள் தொண்டைமான் வழிவந்த தமிழர்கள்.

பல்லவர்கள் தொடக்க காலத்தில் பிராக்கிருதம், சமஸ்கிருதம் போன்ற வடமொழியில் பட்டயங்களை வெளியிட்டுள்ளனர். அதனால் அவர்கள் ஆரியர் என்று வரலாற்றாய்வாளர் சிலர் தவறாகப் பதிவுசெய்துள்ளனர்.
பல்லவருக்கு முன்பே வட இந்தியாவிலிருந்து காஞ்சிபுரத்தில் புத்த, சமண துறவிகளும் சமஸ்கிருத வைதீகர்களும் குடியேறி அவர்தம் வடமொழியை மதத்தளத்தில் பரப்பி இருந்தமையே அக்காலத்தில் பல்லவர்கள் பிராக்கிருத, சமஸ்கிருதக் கல்வெட்டுகளை வெளியிட்டதற்கு காரணம்.

பல்லவர்கள் ஈரானியர்கள் என்று சிலர் நிறுவ முயன்றுள்ளனர். பல்லவர்கள் ஈரானியர் என்றால் ஈரானிய மொழியில் அல்லவா பட்டயங்களை வெளியிட்டிருக்க வேண்டும்.
பல்லவர்கள் தெலுங்கர்கள் என்றால் அவர்கள் தெலுங்கு மொழியில் அல்லவா பட்டயங்களை வெளியிட்டிருக்க வேண்டும்.

பல்லவர்களைத் தமிழரல்லர் என்று சொன்ன வரலாற்றாய்வாளர்கள் ஆரிய, தெலுங்க பக்தர்கள்தான். அதனால் பெருமைமிகு தமிழர் வரலாற்றை மறைக்க முயன்றனர்.  "பல்லவர் வரலாறு" என்ற நூலை எழுதிய ம.இராசமாணிக்கனார் ஒரு மிகப்பெரிய வரலாற்று திரிபுவாதி. அவர் நிச்சயமாக தெலுங்கராகத்தான் இருக்க வேண்டும்.  பல்லவர்கள் தெலுங்கர்கள் என்பதை நிறுவுவதற்காக பொய்ச் செய்தியை வலிந்து திணித்துள்ளார். அவருக்குத் தமிழர் மீதிருந்த காழ்ப்புணர்ச்சியை காரணம்.

பிற்காலச் சோழர்களும் சமஸ்கிருத ஆதவாளர்களாக இருந்தனர் . சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர். அதனால்
சோழர்களையும் தமிழரல்லர் அவர்கள் வடவர்கள் அல்லது ஈரானியர் என்று சொல்வார்கள் போலும். என்ன ஒரு குழப்படி வேலை.

முந்தைய வரலாற்றாய்வாளர்களின் ஆய்வு முடிவுகள் பல மறு ஆய்வுக்கு உட்பட்டவை.

பல்லவர்கள் தம்மைப் பரத்வாஜ கோத்திரத்திலிருந்து வந்த சத்திரியர்கள் என்று கல்வெட்டுகளில் பதிந்துள்ளனர் எனவும் அதனால் பல்லவர்கள் ஆரியர் எனவும் தமிழரல்லர் எனவும் சிலர் சொல்கின்றனர்.
தமிழகத்தில் வட இந்திய ஆரிய கலாச்சாரமும் மனுதரும நால்வருண கோட்பாடும் புகுந்த பிறகு பல தமிழ்க்குடிகள் தம் சாதிப் பெயரை வடமொழிப்படுத்தி புராணமயப்படுத்தினர்.
எடுத்துக்காட்டாக, கொங்கு மண்டல வேளாளர்கள் தம்மை மரபாள வம்சம் என்றனர். வடமொழியின் மரபாள புராணத்தைத் தழுவி வேளாள புராணம் எழுதிக்கொண்டனர்.
கோனார் என்னும் இடையர்கள் தம்மை யாதவர் என்று சொல்லிக்கொண்டனர்.
தொண்டை மண்டலம், நடுநாடு, வட கொங்கு மண்டலம் ஆகியவற்றைப் பூர்வீகமாக கொண்ட வன்னியர்களான பள்ளிகள் தம்மை அக்னி வம்சம் என்று சொல்லிக்கொண்டனர். வடமொழியில் உள்ள ஆக்னேய புராணத்தைத் தழுவி வன்னிய புராணம் எழுதிக்கொண்டனர்.
தச்சர்கள் தம்மை விஸ்வாமித்திர கோத்திரம் என்று சொல்லிக்கொண்டனர்.
நாடாண்ட மன்னர்கள் தம்மை சத்திரியர் என்று சொல்லிக்கொண்டனர்.

இவ்வாறே பல தமிழ்க்குடிகள் பெருமைக்காக வடமொழிப்பெயர்களையும் வடமொழி புராணங்களையும் தமக்கு ஏற்றிக்கொண்டன.
பல்லவர்கள் சொல்லும் பரத்வாஜ கோத்திரம் என்பதும் அவ்வாறுதான்.

உலக மொழிகள் பலவற்றில் தமிழ்ச்சொற்களை ஒத்த பல சொற்கள் உள்ளன.
ஈரானிய பஹலவா என்ற சொல்லுக்கும் தமிழ் பல்லவர் என்ற சொல்லுக்கும் உள்ள ஒலிப்பொற்றுமையை மட்டும் வைத்து பல்லவர்களை ஈரானியர் என்று கதைகட்ட வேண்டாம்.

பல்லவர்கள் தொண்டைநாட்டின் குறுநில மன்னராயிருந்த தமிழ் மன்னர்களான தொண்டைமான் வழிவந்த தமிழர்களே. தொண்டைமான் இளந்திரையன் என்போன் சங்ககாலத்தில் தொண்டை நாட்டை ஆண்ட சிறப்புமிக்க தமிழ் மன்னன் ஆவான்.
தொண்டைமான்கள் சோழர்களின் வழித்தோன்றல் ஆவர்.
பல்லவ மன்னர்கள் தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள் என்பதாலேயே பல்லவ மன்னர்களின் வழிவந்த சில மன்னர்களும் தளபதிகளும் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டனர். குலோத்துங்க சோழனின் படைத் தளபதியாய் இருந்த கருணாகரத் தொண்டைமானை பல்லவர் தோன்றல் என்று புகழ்கிறார் ஜெயங்கொண்டார். பல்லவ  வழித்தோன்றலாக இருந்த கருணாகரன் தொண்டைமான் என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? பல்லவ மன்னர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள்.
பல்லவர்கள் தமிழர்கள் என்பது சங்க இலக்கியங்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை நூலின் மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கும்
உண்மை.
கருணாகரத் தொண்டைமானை கலிங்கத்துப்பரணி 535ஆவது பாடலில் பல்லவர் தோன்றலைப் பாடீரோ என்கிறார் ஜெயங்கொண்டார்.
இதே கருணாகரத் தொண்டைமானை சிலை எழுபது நூலின் 68ஆவது பாடலில்-
" புவிக்காயிரம் பொன் இறைநீக்கி
கவிக்காயிரம் பொன் பரிசளித்தான்
கருணாகரத் தொண்டை வன்னியனே "
எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடுகிறார்
கவிச்சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார் கருணாகரத் தொண்டைமானைப் பல்லவர் என்று அடையாளப்படுத்துகிறார்.
அதே தொண்டைமான் வன்னியர் என்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் அடையாளப்
படுத்துகிறார்.

ஆகவே பல்லவர்கள் தமிழர்தான்.

களப்பிரர் காலத்தில் நிகழ்ந்த இருட்டடிப்பால் வடமொழிப்பண்பாடு, வடமொழி ஆதிக்கம் தமிழகத்தில் புகுந்து பல உண்மைகளை மறைத்திருக்கிறது.

தென்னிந்தியாவில் அமைந்த வலிமையான முதல் பேரரசு தமிழர்கள் அமைத்த பல்லவப் பேரரசு.
தமிழர்களான பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 9 நூற்றாண்டுகள் வலிமையான பேரரசாக இருந்து நல்லாட்சி செய்தார்கள். அதன்பிறகு காடவராயர், சம்புவராயர் என்ற பெயர்களில் குறுநில மன்னர்களாக இருந்தும் ஆண்டார்கள்.
பல்லவர்கள் சங்க காலத்தில் தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள் ஆவர். பல்லவர்கள் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தமிழகப் பகுதியான தொண்டைநாடு ஆந்திர எல்லைக்கு அருகில் இருப்பதால் பல்லவர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திராவின் பெரும்பகுதியைப் பிடித்து ஆளுவதற்கும் வசதியாக இருந்துவிட்டது.

பல்லவர்கள் தமிழகம், ஆந்திரம் மட்டுமல்லாமல் கடல்கடந்து இலங்கை, மலேசியா, கம்போடியா வரை சென்று ஆட்சி செய்தனர். கம்போடியாவின் அங்கோர்வாட் என்ற உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத் தளத்தைப் பல்லவர்கள்தான் கட்டினர்.

திங்கள், 3 செப்டம்பர், 2018

தமிழக இட ஒதுக்கீட்டின் அவலநிலை

தமிழக அரசின் சாதிவாரி இட ஒதுக்கீட்டில் 40 விழுக்காடுக்கும் மேலாக தமிழரல்லாத பிறமொழியினரே பயன்பெறுகின்றனர். தெலுங்க, கன்னட சாதியினரை எல்லாம் SC, ST, BC, MBC பிரிவுகளுக்குள் கொண்டுவந்ததே காரணம். தமிழக அரசுப் பணியில் தெலுங்க, கன்னட மொழியினரின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது.

ST பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 36

கொண்டாரெட்டி,
மலையாளி,
மலையக்கண்டி,
ஊராளி,
காட்டு நாயக்கர்,
கம்மாரா,
கொரகா,
மலை அரையர்,
குடியா,
கண்யான்,
இது போல இந்த பட்டியலில் உள்ள
36 சாதிகளில் 20 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள் உள்ளனர்.

SC பட்டியலில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை = 76

ஆதி ஆந்திரர்,
ஆதி கர்நாடகர்,
அஜிலா,
பைரா,
ராணேயர்,
பஞ்சமா,
நாயாடி,
டோம்,
ஜக்கலி,
பகூடா
இது போல இந்த பட்டியலில் உள்ள
76 சாதிகளில்
40 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

BC பட்டியலில் மொத்த சாதிகளின்
எண்ணிக்கை= 138

பில்லவா,
செளத்திரி,
கெளடா,
ஜெட்டி,
கன்னடிய நாயுடு,
கேரள முதலி,
மராட்டியர்,
ஒதியா,
ரெட்டி,
சாலிவாகனா,
லம்பாடி,
இது போல இந்த பட்டியலில் உள்ள
138 சாதிகளில்
65 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்,

MBC பட்டியலில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை= 41

பெஸ்கா,
பட்ராஜீ,
இசை வேளாளர்,
சீவியர்,
ஜோகி,
கொரச்சா,
தெலுங்கு பட்டி செட்டி,
தொம்மரா,
நோக்கர்,
ஜம்புவானோடை,
இது போல இந்த பட்டியலில் உள்ள
41 சாதிகளில் 20 சாதிகள் வேறு மொழியை சார்ந்தவர்கள்.

DC பட்டியலில் உள்ள மொத்த
சாதிகளின் எண்ணிக்கை = 68

பட்டுதுர்காஸ்,
சக்கலா,
தெலுங்கு பட்டி செட்டிகள்,
மொந்த கொல்லா,
தொங்க போயர்,
தொம்பர்கள்,
நோக்கர்கள்,
போயர்கள் ,
இது போல இந்த பட்டியலில் உள்ள
68 சாதிகளில் 35 சாதிகள்
வேறு மொழியை சார்ந்தவர்கள்.

முற்பட்டபட்டியலில் உள்ள
சாதிகளின் எண்ணிக்கை= 79,

ஆங்கிலோ இந்தியர்,
லண்டன் மிஷன்,
மலங்கரா,
சட்ஸி,
மைமன்,
நவாப்,
குதுப்பத்தான்,
நாயுடு,
மூசிக பலிஜ குலம்,
கொண்ட ரெட்டி,
இது போல இந்த பட்டியலில் உள்ள
79 சாதிகளில் 40 சாதிகள் பிற மொழியை சார்ந்தவர்கள்.

இவர்கள் எல்லாம் இங்கு இட ஒதுக்கீடு பெறுவது எப்படி என நாம் இது வரை சிந்தனை செய்தது
உண்டா?

தமிழர்களால் வேறு
மாநிலத்தில் அந்த
மாநில அரசுப் பணிக்கு விண்ணப்பம்
செய்ய முடியுமா?

ஆனால் இங்கு
மலையாளிகளும்,
கன்னடர்களும்,
தெலுங்கர்களும்,
மற்றும் பிற மொழியினரும் இங்கு
இட ஒதுக்கீட்டை அனுபவித்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும்
அனைத்து பலன்களையும் இந்த நிலத்தில் அனுபவித்து வருகின்றனர்.
இது யாருக்கும் தெரிவதில்லை.

தமிழகத்தில் உள்ள சாதிய  எண்ணிக்கையில் பிற மொழியை சார்ந்த சாதிகள் தான் அதிகம்.

இதைப் பற்றி யாராவது 
இந்த நிலத்தில் பேசியது உண்டா?

இது தெரியாமல் தமிழர்களுக்கு
இட ஒதுக்கீடு பற்றிய போதிய தெளிவான பார்வை இல்லை.

ஏதோ குறிப்பட்ட மக்களுக்கு மட்டுமே
இட ஒதுக்கீடு இருப்பது போல
பொது வெளியில் பேசிக் கொண்டு
தன்னை அறிவாளி போல காட்டி கொள்கிறது முட்டாள் தமிழ் சமூகங்கள்.

இட ஒதுக்கீடு முறையில்
தமிழர்களைவிட
பிறமொழி சாதிகள்தான்
அதிகளவு பயன் பெறுகிறார்கள்.

இதைக் கேட்க யாருக்கு
தைரியம் உள்ளது?
இங்குதான் தமிழ்ச் சாதிகளுக்குள்
அடித்துக்கொள்வதற்கு மட்டுமே
நேரம் உண்டு.

இத்தனை
உரிமைகளையும் ,
அதிகாரத்தையும் ,
பலன்களையும்,
பிறமொழி சாதியினருக்குக் கொடுத்தவர்கள்
திராவிடர்கள்தான்.

இத்தனை பிற மொழிச் சாதிகளை இங்கு இடம் பெறச் செய்து நாம் முழுமையாக பெற வேண்டியதை
பிறமொழி சாதியினரும் அனுபவிக்கக் காரணமானவர்கள் திராவிடர்கள்தான்.

இந்த மண்ணில் திராவிட ஆட்சி தொடரும் வரை இந்த அவல நிலை இருக்கத்தான் செய்யும்.

புதன், 22 ஆகஸ்ட், 2018

1920 முதல் தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்தவர்களில் யார் தமிழர்?

*1920 முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்களில் யாரெல்லாம் தமிழர்?* யாரெல்லாம் தெலுங்கர்? யாரெல்லாம் மலையாளி? யாரெல்லாம் கன்னடர்? யாரெல்லாம் ஆரியர்?

1. சுப்பராயலு ரெட்டியார்- தெலுங்கர்

2. பனகல் ராஜா தெலுங்கர்

3. *பி. சுப்பராயன் - தமிழர்*

4. முனுசாமி நாயுடு- தெலுங்கர்

5. பொப்பிலி ராஜா- தெலுங்கர்

6. *பி.டி.ராஜன் -தமிழர்.*

7. கே.வி.ரெட்டி நாயுடு - தெலுங்கர்.

8. இராஜாஜி - தெலுங்க பிராமணர் - ஆரியர்

9. டி.பிரகாசம் - தெலுங்கர்.

10. ஓ.பி.ராமசாமி ரெட்டியார் - தெலுங்கர்.

11. பி.எஸ்.குமாரசாமிராஜா -தெலுங்கர்

11. *காமராஜர் - தமிழர்*

12. *எம்.பக்தவச்சலம் - தமிழர்*

13. அண்ணாதுரை - தெலுங்கர்

14. கருணாநிதி - தெலுங்கர்

15. எம்ஜிஆர் - மலையாளி

16. ஜானகி - மலையாளி

17. ஜெயலலிதா - கன்னட பிராமணர் - ஆரியர்

18. *ஓ.பன்னீர்செல்வம் - தமிழர்*

19. *எடப்பாடி பழனிசாமி -தமிழர்*

*தமிழ்நாடு தமிழர் நாடு. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்.*

அண்ணாதுரை தெலுங்கரா???
அவர் காஞ்சிபுரத்தில் முதலியார் அல்லவா? என்கின்றனர் விவரம் தெரியாதவர்கள்.
அண்ணாதுரையின் தாய் பங்காரு அம்மாள் சின்னமேளம் என்ற தெலுங்கு சாதி.
அண்ணாதுரையின் தந்தை நடேசன் தெலுங்கு முதலியார்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

ஆங்கில மொழியின் வரலாறு:

*தமிழில் பேசினாலோ எழுதினாலோ கேவலமாகப் பார்க்கும் பக்கிகளே!*
நாலு இங்கிலிஸ் வார்த்தைகளைத் தெரிந்துகொண்டு மேதாவி போல பந்தா காட்டும் உங்களுக்கு *ஆங்கில மொழியின் வரலாறு* தெரியுமா? நிச்சயமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தெரிந்துகொள்ளுங்கள்.
👇👇👇
*ஆங்கிலம் என்பது என்ன?*

*ஆங்கில மொழியின் வரலாறு*

மூன்று ஜெர்மானிய இனக்குழுவினர் பிரிட்டனின் மேல் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்ததில் இருந்து ஆங்கிலத்தின் வரலாறு ஆரம்பிக்கிறது. ஆங்லர்கள், சாக்சன்கள், யூட்டுகள் என்ற இந்த இனக்குழுக்கள் வட கடலைத் தாண்டி இன்றைய டென்மார்க் மற்றும் வட ஜெர்மனி பகுதிகளில் இருந்து வந்தனர். அப்போது பிரிட்டனில் வாழ்ந்து வந்தவர்கள் ஒரு செல்ட்டிக் மொழியைப் பேசி வந்தனர். ஆனால் பெரும்பாலான செல்டிக் மொழியினர், ஆக்கிரமிப்பாளர்களால் மேற்கும் வடக்குமாக நெருக்கித் தள்ளப்பட்டனர் – முக்கியமாக இன்று வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து என அழைக்கப்படும் பகுதிகளுக்கு. ஆங்கில்கள் ”எங்கலாந்த்” (மேற்கோள்படி)தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் மொழி “எங்கலிஸ்”. இந்தச் சொற்களில் இருந்து முறையே “இங்க்லாண்ட்” மற்றும் “இங்லிஷ்” என்ற சொற்கள் உருவாகின.
கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் ஜெர்மானிய ஆக்கிரமப்பாளர்கள் பிரிட்டனின் கிழக்கு மற்றும் தெற்குக் கடலோரம் நுழைந்தனர்.

*பழைய ஆங்கிலம் (450-1100 AD)*

படையெடுத்து வந்த ஜெர்மானிய இனக்குழுக்கள் பேசிய மொழிகள் ஒன்றுபோல் இருந்தன. அது பிரிட்டனில் நாம் இன்று அழைக்கும் பழைய ஆங்கிலமாக வளர்ந்தது. பழைய ஆங்கிலம் இன்றைய ஆங்கிலம் போல் இருக்கவும் இல்லை; ஒலிக்கவும் இல்லை. ஆங்கிலேயரால் இன்று பழைய ஆங்கிலத்தைபுரிந்து கொள்ளுவது மிகவும் சிரமம். இருந்த போதிலும் நவீன ஆங்கிலத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாதிச் சொற்களின் வேர்கள் பழைய ஆங்கிலமே. எடுத்துக்காட்டாக be, strong மற்றும் water ஆகிய சொற்கள் பழைய ஆங்கிலச் சொற்களே. ஏறத்தாழ கி.பி.1100 வரை பழைய ஆங்கிலம் பேசப்பட்டது.

*இடைக்கால ஆங்கிலம் (1100-1500)*

1066-ல் நார்மண்டி (நவீன பிரான்சின் ஒரு பகுதி) பிரபு வெற்றிவீரன் வில்லியம் இங்கிலாந்தின் மீது படையெடுத்து அதைப் பிடித்தான். இந்தப் புதிய ஆக்கிரமிப்பாளர்கள் (நார்மன்கள் என்று அழைக்கப்பட்டனர்) தங்களோடு ஒரு புதுவிதமான பிரஞ்சு மொழியைக் கொண்டு வந்தனர். இது அரசவை, அதிகார மற்றும் வணிக வர்க்கத்தின் மொழியானது. ஒரு கால கட்டத்திற்கு மொழி சார்ந்த வர்க்கப் பிரிவினை நிலவியது: உயர் வகுப்பினர் பிரஞ்சு மொழியும் தாழ்ந்த வகுப்பினர் ஆங்கிலத்தையும் பேசினர். 14 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலம் மீண்டும் தனது செல்வாக்கைப் பெற்றது. ஆனால் பல பிரஞ்சு சொற்கள் அதில் கலந்தன. இந்த மொழி இடைக்கால ஆங்கிலம் என அழைக்கப்பட்டது. இதுவே மாபெரும் கவிஞனான சாசரின் மொழி (கி.பி.1340-1400). ஆனால் இதனை இன்றைய ஆங்கிலேயர்களால் புரிந்து கொள்ளுவது மிகவும் கடினமே.

*தற்கால ஆங்கிலம்*

ஆரம்பகால நவீன ஆங்கிலம் (1500-1800)

இடைக்கால ஆங்கிலத்தின் இறுதிக் கட்டத்தில், உச்சரிப்பில் ஒரு குறிப்பிட்ட திடீர் மாற்றம் நிகழ்ந்தது (மாபெரும் உயிரெழுத்து மாற்றம்). உயிர் எழுத்துகள் குறுகலாக ஒலிக்கப்பட்டன. 16-ஆம் நூற்றாண்டில் இருந்து பிரிட்டானியர்கள் உலகின் பல மக்களோடும் தொடர்பு கொண்டனர்.
இதனாலும், செம்மொழிக் கல்வியின் மறுமலர்ச்சியாலும், பல புதிய சொற்களூம் சொற்றொடர்களும் மொழியில் புகுந்தன. அச்சு கண்டுபிடிக்கப்பட்டதால் ஒரே பொதுமொழி அச்சில் ஏறியது. புத்தகங்கள் மலிவானது. பலர் படிக்கக் கற்றனர். அச்சு, ஆங்கிலத்தைத் தரப்படுத்தியது. இலக்கணம் நிலையானது. பல பதிப்பகங்களைக் கொண்ட இலண்டனில் பேசப்பட்ட மொழி தரமானதாக மாறியது. 1604-ல் முதல் ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது.

பிற்கால நவீன ஆங்கிலம் (1800-இன்று வரை)

ஆரம்பகால நவீன ஆங்கிலத்திற்கும், பிற்கால நவீன ஆங்கிலத்திற்கும் இடையில் இருக்கும் முக்கிய வேறுபாடு சொற்தொகுதியே. பிற்கால நவீன ஆங்கிலத்தில் மிகவும் அதிகமான சொற்கள் உள்ளன. இவை இரண்டு முக்கிய காரணிகளில் இருந்து வந்தவை. முதலில், தொழிற் புரட்சியும் தொழிற்நுட்பமும் புதிய சொற்களுக்கான தேவையை உருவாக்கின. இரண்டாவதாக, ஆக்கிரமிப்பின் உச்சகட்டத்தில் பிரித்தானியப் பேரரசு உலகின் நான்கில் ஒரு பகுதியை ஆக்கிரமித்தது. ஆங்கில மொழி பல நாடுகளில் இருந்து சொற்களைத் தழுவிக்கொண்டது.

*ஆங்கிலத்தின் வகைகள்*

கி.பி. 1600 – களில் இருந்து வட அமெரிக்காவை இங்கிலாந்து குடியேற்ற நாடாக மாற்றியதால் தனித்துவமான அமெரிக்க வகை ஆங்கிலம் உருவானது. அமெரிக்க வகை ஆங்கிலம் நவீன பிரிட்டிஷ் ஆங்கிலத்தை விட ஷேக்ஸ்பியரின் ஆங்கிலத்தைப் போல் இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் அமெரிக்க ஆங்கிலம் என்று சொல்வது உண்மையில் குடியேற்ற நாடுகளில் பாதுகாக்கப்பட்ட சொற்றொடர்களே. ஆனால் அவை பிரிட்டனில் மறைந்து போய்விட்டிருந்தன. இன்று அமெரிக்க ஆங்கிலம் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய ஆங்கிலம், நியூசிலாந்து ஆங்கிலம், கனடா ஆங்கிலம், தென் ஆப்பிரிக்க ஆங்கிலம், இந்திய ஆங்கிலம், காரிபியன் ஆங்கிலம் என பலவகை ஆங்கிலம் உள்ளன.
ஆங்கிலம் ஜெர்மானிய குடும்ப மொழிகளைச் சார்ந்தது. ஜெர்மானியமொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிளைமொழி.

அமெரிக்க ஆங்கிலம் (History of American English):

மொழி வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான்.
பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்காவில் வரி செலுத்தல் தொடர்பில் 1775 இல் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா படு தோழ்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1776 யூலை 4 இல் சுதந்திர பிரகடனம் செய்துக்கொண்டது. அமெரிக்காவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஆங்கில பேச்சிலும் ஒலிப்பிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
பிரித்தானிய ஆட்சியிலிருந்து தன்னாட்சி பெற்றதைப் போன்று அவர்களது மொழியிலும் தனித்துவம் இருக்க வேண்டும் என பல அமெரிக்கர்கள் விரும்பினர்.
சில அமெரிக்க தலைவர்கள் தமது மொழியில் மாற்றங்கள் செய்ய தீர்மானித்தனர். அறிவியலாளர் பெஞ்சமின் பிறான்கிளின். (Benjamin Franklin [1706-1790]) அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் ஒரு சீர்திருத்த முறைமை அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
இருப்பினும் இவரது எண்ணம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அவரது எண்ணக்கருவை மற்றவர்கள் செயல்படுத்த விளைந்தனர்.
அவர்களில் ஒருவரே நோவா வெப்ஸரர்.
(Noah Webster [1758-1843]) நோவா வெப்ஸரர் பாடசாலைகளுக்கான புத்தகங்களை எழுதினார். அவை பிரித்தானிய ஆங்கில முறைமையில் இருந்து மாறுபட்டதாக, அதேவேளை அமெரிக்க இலக்கண முறைமைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன் அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்கப் புத்தகங்களையே கற்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அதுவே காலப்போக்கில் நிலைத்தும் விட்டது.
இவரே 1783ல் முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் புத்தகத்தையும் வெளியிட்டவராவர்.
அவரது மொழி சீர்த்திருத்தமை
ப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.
1828 இல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டவர் நோவா வெப்ஸ்டர்.(First American Dictionary) பிரிட்டிஸ் ஆங்கில சொல்லிலக்கண விதி முறைகள் மிகவும் சிக்கலானவை என நோவா வெப்ஸ்ர் கருத்து தெரிவித்தார். அதனால் அவர் அமெரிக்க சொல்லிலக்கணப்பட
ியே அமெரிக்க ஆங்கில பதிப்புக்கள் அமையவேண்டும் என எண்ணியதுடன் அதனை நடைமுறையில் செயல்படுத்தினார்.
அதன்படியே அமெரிக்க ஆங்கில எழுத்திணக்கத்தில் மாற்றங்கள் ஏற்படலாயின.
பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “ c-e-n-t-r-e” என எழுதப்படுவதில் கடைசி எழுத்துக்களான “t-r-e” (டர்) உச்சரிப்பிற்கு அமைவாக இல்லை என்பது நோவா வெப்ஸ்ரரின் முடிவு. எனவே அமெரிக்க ஆங்கிலத்தில் “center” “c-e-n-t-e-r” என மாற்றப்பட்டது.
பிரிட்டிஸ் ஆங்கிலம்: centre, theatre
அமெரிக்க ஆங்கிலம்: center, theater
பிரிட்டிஸ் ஆங்கிலத்தின் “h-o-n-o-u-r” – எனும் சொல்லின் “u” ஒலிப்பில் இல்லாத அவசியமற்ற எழுத்தென கருதி, அமெரிக்க ஆங்கிலத்தில் இந்த “u” அகற்றப்பட்டு “h-o-n-o-r” என எழுதப்படுகின்றது.
பிரிட்டிஸ் ஆங்கிலம்: colour, honour, favourite
அமெரிக்க ஆங்கிலம்: color, honor, favorite
பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “realise” என உச்சரிக்கும் போது இச்சொல்லின் கடைசி எழுத்துக்களான “se” ஒலிப்பு “றியலைZஸ்” என ஒலிப்பதால் இதுப்போன்ற சொற்களின் கடைசி எழுத்துக்கள் "ze" என அமெரிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
பிரிட்டிஸ் ஆங்கிலம்: realise, theorise, socialise, analyse
அமெரிக்க ஆங்கிலம்: realize, theorize, socialize, analyze
ஒரு சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒலிப்புடன் பேசப்படவேண்டும் என்பது நோவா வெப்ஸ்ரரின் விதி முறையாகும்.
நோவா வெப்ஸ்ரரின் இவ்விதி முறைக்கமைய ஒரு சொல்லின் ஒவ்வொரு பாகங்களும் ஒலிப்புடன் பேசப்பட வேண்டும் எனும் முறை, பிரித்தானிய ஆங்கிலத்தை விட, அமெரிக்க ஆங்கிலத்தை எவரும் எளிதாக கற்கக் கூடியதாக இருக்கின்றது.
ஐரோப்பிய மற்றும் உலகின் பல்வேறு மொழியினரும் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறியதன் விளைவால், பற்பல பிற மொழிச் சொற்களும் அமெரிக்க ஆங்கிலத்தில் உள் நுழைந்தன. அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்களின் மொழியில் இருந்தும் பல சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இவை அமெரிக்க ஆங்கிலத்தின் சீர்த்திருத்தத்திற்கு பெரிதும் உதவிதாகக் கூறப்படுகின்றது.
ஒப்பீட்டளவில் பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் இல்லாத நிறையச் சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தின் சொல்வளத்தை பெருக்கியுள்ளது. அமெரிக்க பூர்வீகக் குடிகளான செவ்விந்திய மொழிகளில் இருந்தும் பல சொற்களை அமெரிக்க ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டது.
இன்று அமெரிக்க, பிரிட்டிஸ் ஆங்கில சொற்களிற்கிடையே பல வேறுப்பாடுகள் உள்ளன. சில சமயம் இவர்கள் பேசும் போது ஒருவருக்கொருவர் விளங்கிக்கொள்ள முடியாத அளவில் பல சொற்கள் இருப்பதனையும் அறியமுடிகின்றது.
உதாரணம் சில சொற்கள்:
பிரிட்டிஸ் ஆங்கிலம்: Flat
அமெரிக்க ஆங்கிலம்: Apartment
பிரிட்டிஸ் ஆங்கிலம்: Lift
அமெரிக்க ஆங்கிலம்: Elavator
பிரிட்டிஸ் ஆங்கிலம்: Chips
அமெரிக்க ஆங்கிலம்: Fries
மேலும் அமெரிக்காவின் Hollywood திரைப்படத்துறையின் வளர்ச்சி, இசை, பாடல்கள், விஞ்ஞான வளர்ச்சி, நவீன கற்பித்தல் முறை, தொழில் வழங்கல், தொழில் நுட்பம், இணையம் என இன்னும் பல்வேறு வழிகளில் பிரித்தானிய ஆங்கிலத்தை விடவும் அமெரிக்க ஆங்கிலம் பலரையும் ஈர்த்து வருகிறது. அமெரிக்க நாகரிகமும் இன்று உலகின் பல்வேறு மக்களில் மோகமாக மாறிவருகின்றது என்பதும் ஒரு காரணியாகும். இவை அமெரிக்க ஆங்கிலத்தை உலக அரங்கில் மென்மேலும் வலுப்படுத்தி வருகிறது.
இன்று ஆங்கிலம் என்பது இன்னொரு மொழியினருடன் பேசும் கருவியாக மட்டுமன்றி, அதிகாரம், அரசியல், சமூக அந்தஸ்து, கலாச்சாரம் என பல்வேறு மட்டங்களில் ஈர்க்கும் இணைக்கும் ஒரு உலகலாவிய ஊடகமாக மாறிவருகிறது.
அமெரிக்க ஆங்கில வரலாற்றிற்கு முற்பட்ட ஆங்கில மொழியின் வரலாறு இங்கே சொடுக்கி பார்க்கலாம்.
பிரிட்டிஸ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையில் சொற்களில் மட்டுமன்றி, இலக்கணத்திலும், ஒலிப்பிலும் கூட வேறுபாடுகள் உள்ளன.