ஞாயிறு, 11 மார்ச், 2018

தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் பழித்த பெரியார்:

தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் பழித்த பெரியார்:
==============
"தமிழ் படித்து உனக்க ஆவதென்ன,
தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்று தமிழை இழிவாகப் பேசினார் பெரியார்.
திருக்குறளில் மலவாடை வீசுகிறது என்று திருக்குறளை இழிவுபடுத்தினார் பெரியார்.

சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தமிழ் இலக்கியங்களைக் குப்பைகள் என்று சொன்னார்.

திருக்குறளை மலம் என்று சொன்ன அதே பெரியார்தான் திருக்குறள் மாநாடு நடத்தினார் என்று சிலர் பெரியாரைப் புகழ்கின்றனர்.

திருக்குறளின் அருமை பெருமைகள் என்னவென்றே தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளறிய பெரியாரை வைத்தே திருக்குறள் மாநாட்டை நடத்தியவர்கள் தமிழறிஞர்கள்தான்.
தமிழறிஞர்களின் விழிப்புணர்வு இல்லாமல் போயிருந்தால் கம்பராமாயண எரிப்புப் போராட்டம் செய்தது போல பெரியாரியவாதிகள் திருக்குறள் எரிப்புப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்திருப்பார்கள்.

விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனா தாசன் ஆகிய மூன்று பேர் இணைந்து எழுதிய நூலான “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்” நூலில் பின்வருமாறு தெரிலிக்கப்பட்டுள்ளது.
“1949 பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் திருக்குறள் மாநாட்டைப் பெரியார் நடத்தினார். இதற்கு முன்பெல்லாம் அவர் மொத்தத்தில் புலவர்களே மோசம், தமிழ் இலக்கியமே குப்பை, தமிழே காட்டுமிராண்டி மொழி என்றெல்லாம் கருத்துக் கூறியதால் தமிழ்ப்புலவர்கள் மத்தியில் கடும் கோபமும் எதிர்ப்பும் ஏற்பட்டன.
அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன் போன்றவர்கள் பெரியாரிடம் “புராணங்களை எதிர்க்கிற வேகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றையும் சேர்த்துத் தாக்கிடுவது முறையல்ல. தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் நாமே பாதுகாப்பு. குறள் உலகப் பொதுமறை என்பதை நாம் உணர்த்த வேண்டும்” என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒதிய பிறகு தாமதித்தேனும் பலன் ஏற்பட்டது. இப்போதூ பெரியார் தமிழ் இலக்கியங்களையும், புலவர்களையும் தாக்குவதை நிறுத்திக் கொண்டார்.”
(பக். 169)
மேற்கண்ட செய்தியின் படி திருக்குறள் மாநாடு அண்ணா, ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன் ஆகியோரின் நிர்பந்தத்தின்படி நடத்தப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு எதிரான பெரியாரிடமே சில ஆண்டுகளாக அதுபற்றி நல்லவிதமாக  ஓதி வந்தபடியால் வேறு வழியின்றி திருக்குறள் மாநாடு நடத்த பெரியாரும் ஒப்புக் கொண்டார் என்பதும் விளங்கும்.
1950இல் மீண்டும் பெரியார் என்ற வேதாளம் முருங்கை மரம் ஏறியது. அவர் கூறுகிறார்: “வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம் எல்லாம் போய் விட்டால் நமக்கு எது தான் நூல் என்று கேட்டார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது என்று பதில் கூறினேன். (விடுதலை 1.6.1950)
பெரியாருக்கு சாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரையிலும் திருக்குறளின் மேல் நல்லெண்ணம் பிறக்க வில்லை.

27.12.1972இல் ‘கலைமகள்’ இதழுக்கு அளித்த பேட்டியில் பெரியார் கூறுகிறார்:
“குறளை எடுத்துக்குங்க. நான் மட்டும் தான் குறளை கண்டிக்கிறேன்…. நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர் கூட அதை ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக்கிட்டாரு. இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தியது குறள். அதை அப்படியே இப்பவும் நாம் ஏத்துக்கணும்னா?”
என்று கடைசிவரை திருக்குறளை ஏற்க மறுத்தார்.

பெரியார் வாயில் இருந்து உதிர்ந்த விஷ வார்த்தைகள்...
"சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை. தேவடியாள் எப்படி வெளியே அழகாக, உள்ளே வஞ்சகத்துடன் இருப்பாளோ அதுபோலவே சிலப்பதிகாரமும்"
"வள்ளுவன் மூடநம்பிக்கையும் ஆரிய மத கருத்தையும் சொன்னான். திருக்குறள் ஒரு மலம். அதை வீசி எறி"
"தமிழனுக்கு இலக்கியம், வரலாறு, குடும்பம், பண்பாடே கிடையாது. இங்கு பிராமணன் வந்து எழுதியதும், பிராமண அடிமை எழுதியதும்தான் இலக்கியம்"
"தமிழில் இலக்கியம், வரலாறு என்ன இருக்கிறது? தமிழை விட்டால் என்ன கேடு? தமிழ்த்தாய் சத்தில்லாமல், அதன் பிள்ளைகள் நடைப்பிணமாகவே இருக்கிறார்கள்."
"இந்தி எதிர்ப்பு அரங்குக்கு போனேன். இந்திக்கு பதில் இங்கிலீஷ் போதனாமொழி என ராஜகோபாலாச்சாரி சொன்னார். நான் இங்கிலிஷ் போதனாமொழி மட்டுமல்ல. பேச்சுமொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ் எழுத்துகளை நீக்கி, இங்கிலீஷ் எழுத்துகளை வைக்கவேண்டும் என்றேன்."
- பெரியார்
1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத்தமிழ்மாநாட
ு நடத்தப்பட்டது. அப்போது திருவள்ளுவர், கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலை திறக்கப்பட்டது.
அப்போது தந்தை பெரியார் "உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது
?" (விடுதலை 15.12.1967) என்று அறிக்கை விட்டார். தனது எதிர்ப்பை மேலும் காட்டுவதற்காக பெரியாரால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந் நூலின் பெயர் "தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?".
பிறகு அந்த நூலின் தலைப்பு "தமிழும் தமிழரும்" என்று மாற்றப்பட்டது. தற்போது வரை ஐந்து பதிப்புகள் திராவிடர்கழகம் சார்பில் வெளி வந்துள்ளது. "தமிழ் நீசபாஷை" என்று கூறும் ஆரிய நூல்களுக்கும், "பெரியார் தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்று எழுதிய இந்த நூலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
ஈ.வே.ராமசாமி பற்றியும் திராவிடம் பற்றியும் தலைவர்கள் கருத்து:
பொதுவுடைமை போராளி சீவானந்தம்:
1957ஆம் ஆண்டில்
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பின் இரட்டைத்தன்மை குறித்தும், அவரின் சாதி ஒழிப்புக்கொள்கை குறித்தும் ஒரு பொதுக்கூட்டத்தில் தோலுரித்துப் பேசினார் பா.சீவானந்தம். அது வருமாறு: "விரும்பினால் இராம மூர்த்தியை ஆதரிப்பார், இராஜ கோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார், இது ஒர் சித்தம்! வேறொரு பித்தம் கிளம்பினால், அக்கரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார். நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்கு ஒரு காரணம் சொன்னார். இன்று ஜாதிஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்லுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார். அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நாடறியும். அவர் காட்டிய வழியில் தமிழ்நாட்டில் ஜாதிய வெறியும், ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய கருத்து" என்றார்.
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்:
பெரியார் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கத்தை திடீரென்று 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று மாற்றினார். இதன் மூலம் எழுந்து வந்த தமிழ்த் தேசிய எழுச்சிப் போராட்டம் திசை திருப்பப்பட்டது. இதனை கி.ஆ.பெ.வி.யின் மனம் ஒப்புக் கொள்ள வில்லை. பெரியார் மீது 25 குற்றச்சாட்டுகள
ை கூறி நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார். பிறகு 1994இல் நீதிக்கட்சி 'திராவிடர் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்த போது அக்கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இது குறித்து தான் நடத்திய 'தமிழர் நாடு' (1950) இதழில் எழுதினார்: "நான் திராவிடர் கழகத்தில் இருக்கவுமில்லை. விலகவுமில்லை. அவர்கள் தான் 'தமிழ் வாழ்க' என்பதிலிருந்து 'தமிழ்நாடு தமிழருக்கே' என்பதிலிருந்து 'தமிழ்க்கொடி' தூக்குவதிலிருந்து விலகிப்போனவர்கள்."
நாவலர் சோமசுந்தர பாரதியார்:
"தமிழன் தன்னைத் தமிழெனன்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் தன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்" என்று இடித்துரைத்தார்.
1953 தங்கோவின் தமிழக எல்லை தற்காப்பு மாநாடில்,
"நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று" என்றார்.
அண்ணல் தங்கோ:
'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது " என்று 1950 முத்தமிழ் மாநாட்டில் பேசினார்.
உணர்ச்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்:
"அண்ணல்! பெரியாரும், அண்ணாத்துரையும் இல்லாத ஊருக்கு (திராவிட நாடு) வழிகாட்டி விட்டார்கள்!. தமிழினத்தை திசை திருப்பி விட்டார்கள். ஆனால் இறுதியில் உன்றனின் தனித்தமிழ்நாடு என்ற குறிக்கோளே வெற்றி பெறும்! அன்று தமிழகம் உன்னை நினைக்கும்" என்று தங்கோவிடம் கூறியுள்ளார்.
"நமக்கு திகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம்" என்றார்.
குடும்ப விளக்கு நூலின் 2ஆம் பதிப்பு 1960லும் 3ஆம் பதிப்பு 1963லும் வந்தது. இவ்விரு பதிப்பிலும் மேற்படி பாடலில் வரும் திராவிடன் என்பது தமிழன் என்றும் திராவிட மக்கள் என்பது தமிழ்மக்கள் என்றும் மாற்றப்பட்டது.
"....தமிழன் என்று நீ செப்படா தம்பி"
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய தமிழ் மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!"
தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகள் என்று பெரியார் கூறினார். அப்போது,
பாவேந்தர் பாரதிதாசன்,
"நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி!" என்று பெரியாருக்கு உறைக்கும்படி கூறினார்.
வடகெல்லை மீட்பு போராளி மா.போ.சிவஞானம்:
பெரியார்: தாய்ப்பாலை -தமிழை- எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?
ம.பொ.சி: தமிழ்மொழியோடு ஆங்கிலத்தையும் பயில வேண்டும், அதுவே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதல்ல பெரியார் கட்சி. "தமிழைப் படிக்க வேண்டாம்; ஆங்கிலம் படித்தாலே போதும். அதுவே வீட்டு மொழியாக- நாட்டு மொழியாக இருக்கலாம்" என்பது தான். இது "பரங்கி மொழிப் பைத்தியம்" அல்லாமல் வேறு எதுவோ? ஆனால் பெரியார் இன்றளவும் வீட்டில் கன்னடமும் நாட்டில் தமிழும் பேசித்தான் நடமாடுகிறார். ஆங்கிலத்தில் பேசுவதில்லையே!
இப்படி தமிழர் தலைவர்களை புரக்கணித்து, எதிர்த்து தமிழியத்தை விழுங்கி திராவிட கருத்தியலை திணித்தார்.
தமிழர் இன அடையாள ஒழிப்பு
தமிழ் ஆட்சி மொழியாவதற்கு எதிர்ப்பு
தமிழ் எல்லை மீட்புக்கு மறுப்பு
என தமிழினத்திற்கு சொல்லொனா துரோகம் செய்தவர் தான் ஈ.வே.ராமசாமி.
இன்றைய தமிழரின் இழிநிலைக்கும், மரபு வளங்கள் இழந்த நிலைக்கும், தமிழ் அழிந்து வரும் நிலைக்கும், தமிழர் உரிமை இழப்பிற்கும், அயலார் ஆட்சிக்கும் காரணமானவர் தான் ஈ.வே.ராமசாமி.
அயலார்கள் தமிழர் மேல் எளிதாக அதிகாரத்தை செலுத்தவும், தமிழர்கள் மேல் விமர்சனங்கள் வைக்கவும், தமிழர் நாட்டில் அழிவு திட்டங்களை திணிக்கவும், மண்ணின் மைந்தர்கள் தாய் மண்ணை ஆள்வதை இனவாதம் என்று கருத்தாக்கம் செய்யவும், வழிவகுத்தவர் தான் இந்த ஈ.வே.ராமசாமி.
இவரின் முகத்திரையை பயன்படுத்தி தமிழர் விரோத அரசியல் நடத்தவே இவர் உதவுகிறார் என்பதை தாண்டி தமிழர்களுக்கு ஈள்ளளவும் பயனில்லை என்பதை தமிழர் இனம் உணர தொடங்கிய காலம் இது.
தமிழியத்தால் வஞ்சனைகளையும் பகைகளையும் வென்றெடுப்போம். நாளை பறக்கும் தமிழ் கொடி மீது உறுதி. அமைய போகும் தமிழர் நாட்டின் மீது உறுதி. திழைக்கப் போகும் தமிழர் நல்லாட்சி மீது உறுதி.

நன்றி

https://m.facebook.com/745804385461175/photos/a.755752121133068.1073741829.745804385461175/1212978348743774/?type=3

சனி, 10 மார்ச், 2018

வீரபாண்டிய கட்டபொம்மன் தெலுங்கன்:

வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழனல்ல.
அவன் தெலுங்கன். கி.பி 1529 ம் ஆண்டுமுதல்
தெலுங்க நாயக்க மன்னர்கள் தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆண்டபோது இப்போதைய தாலுக்கா என்னும் வட்டங்களைப் போல அப்போது தமிழகத்தை பாளையங்களாகப் பிரித்தனர்.
ஒவ்வொரு பாளையத்திலும் தெலுங்க ராணுவத்தை நிறுத்தி தமிழரின் நிலங்களைப் பிடுங்கிக்கொண்டு தமிழரை அடிமைப்படுத்தினர்.
பாளையங்களின் பரம்பரை தெலுங்க ராணுவத் தளபதிகளே பாளையக்காரர்கள். அதாவது தெலுங்க நாயக்க மன்னர்களுக்குக் கீழ் குறுநில மன்னர்களாகவே பாளையக்காரர்கள் இருந்தனர்.
அந்த பாளையக்காரர்கள் பாளையங்களில் சர்வாதிகார ராணுவ ஆட்சி நடத்தினர்.
நிலம் அரசுக்கே சொந்தமென சொல்லி தமிழரின் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டதோடு தமிழரை அடிமைச் சாதிகளாக்கி வரிக்கொடுமையும் செய்தனர்.
உயர்குடியாக இருந்த தமிழ்ச்சாதியினர் தமது வளமான நிலங்களை இழந்து தாழ்ந்த சாதியினராக மாறிப்போயினர்.
தமிழ்ச்சாதியினர் விவசாய கூலிகளாக மாற்றப்பட்டனர்.
அந்த பாளையக்காரர்களே ஆங்கிலேயர் காலத்தில் ஜமீன்தார்களாக பெயர் மாற்றிக்கொண்டு ஆட்சி செய்தனர்.

கட்டபொம்மன் அந்த பாளையக்காரர் பரம்பரையில் வந்த தெலுங்கன்.

பெரியார் தமிழ்வளர்ச்சிக்கு என்ன செய்தார்?

பெரியார் தமிழ்வளர்ச்சிக்கு என்ன செய்தார் என்று கேட்டால் எழுத்துச்சீர்திருத்தம் கொண்டுவந்தார் என்கின்றனர் பெரியாரின் சில பக்தர்கள்.

ஏற்கனவே 12 உயிர், 18 மெய், 1 ஆயுதம், 216 உயிர்மெய் என்று தமிழ் எழுத்துக்களை நன்கு ஆராய்ந்து வடிவமைத்துள்ளனர் தமிழர்கள்.
பெரியார் ஒன்றும் தமிழ் எழுத்துக்களைப் படைக்கவில்லை. எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழ் எழுத்துருக்களைச் சீரழிக்க நினைத்தவர் பெரியார். எழுத்துரு மாற்றத்திற்காக அவர் பரிந்துரைத்த அனைத்தையும் எம்ஜிஆர் அரசு நடைமுறைப்படுத்தவில்லை. றா,னா,ணா
லை, ளை, னை, ணை இவற்றை மட்டுமே மாற்றியமைக்க அரசு ஆணையிட்டது. இச்சீர்திருத்தமும் பெரியாருக்கு முன்பே குத்தூசி குருசாமி முன்மொழிந்ததே ஆகும்.

பெரியார் சொன்னது எழுத்துச் சீர்திருத்தம் அல்ல. எழுத்துக்குறைப்பு. அதாவது தமிழ் எழுத்தைச் சீரழிப்பது.

"காட்டுமிராண்டி எழுத்துக்களை தூக்கி போட்டுட்டு, தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுத சொன்னா எந்த பயல் கேட்குறீங்க?" என்று தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதவேண்டுமெனச் சொல்லி ஒட்டுமொத்தமாகத் தமிழ் எழுத்துக்களை அழிக்கத்திட்டமிட்டார் பெரியார்.

அறிவியல் முறைப்படி நன்கு ஆராய்ந்து வரிசைப்படுத்தி வடிவமைத்த தமிழ் வரிவடிவத்தை சிதைக்க எண்ணிய கோடாரிக்காம்பே பெரியார் என்னும் கன்னடன்.

👇👇👇👇👇
" பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி என்பது உண்மையா?

தமிழ் எழுத்துகள் திடீரென உருக்கொண்டவையல்ல. சமூக வளர்ச்சிப் போக்கில் இவ்வெழுத்துகள் தேவை கருதி உருமாறி வளர்ந்திருக்கின்றன.
கற்பாறையிலும், அதன்பிறகு பனை ஓலையிலும் எழுதப்பட்ட எழுத்துகள் அதனதன் தேவைக்கேற்பவும், விரைவாக எழுதுவதற்கேற்பவும், ஓர் எழுத்துக்கும் பிரிதொரு எழுத்துக்குமிடையே ஒன்று போல கருதும் எழுத்து மயக்கம் ஏற்பட்டு விடாதபடியும் எழுத்துகளின் வடிவங்கள் உறுதி செய்யப்பட்டன. இன்றைக்கு நம் பயன்பாட்டில் உள்ள தமிழ் எழுத்து வடிவங்கள் பல ஆயிரம் ஆண்டுகளின் காலவளர்ச்சியில் மக்கள் பயன்பாட்டுத் தேவைக்கேற்ப வளர்ந்த வரிவடிவங்களாகும்.
19ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரங்களின் வருகையாலும், இன்ன பிற காரணங்களாலும் எழுத்துச் சீர்திருத்தம் கோரி குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. 1915ஆம் ஆண்டில் பாரதியாருக்கும், வ.உ.சிதம்பரனாருக்கும் நடந்த கருத்துப் பரிமாற்றம் முதன்மையான ஒன்றாகும். அதே ஆண்டில் சுப்பிரமணிய சிவா நடத்திய 'ஞான பாநு' ஏட்டில், 'தமிழ் எழுத்துகள்' என்ற தலைப்பில் வ.உ.சி. எழுதிய கட்டுரை ஒன்றில், இக்காலத்திலே (ஓணான் சுருட்டிய வால் போன்று உள்ள எழுத்துகள்) எழுதப்படும் எழுத்துகளுக்கு மாற்றாக றா, றோ, னா, னோ, என்று எழுத வேண்டும் என்று சிலர் கருதுவதாக குறிப்பிட்டுள்ள
ார்.
1930இல் காரைக்குடியில் இருந்து வெளிவந்த 'குமரன்' இதழில் அதன் ஆசிரியர் திரு.முருகப்பா என்பவர் ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களை பயன்படுத்தி கட்டுரையொன்றை எழுதி வாசகர்களின் கருத்தை கேட்டுள்ளார். 1931இல் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து பொறியியல் அறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கர் என்பவரும் தன்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தக்கால கட்டத்தில் தான் குத்தூசி குருசாமி அவர்கள் முன்மொழிந்திட பெரியாரும் எழுத்துச் சீர்திருத்தத்தை வலியுறுத்தியதோடு, தனது ஏடுகளில் தமிழில் உள்ள சில எழுத்துகளை மாற்றம் செய்து வெளியிட்டார். பெரியார் வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் எழுத்து சீர்திருத்த சிந்தனை பிறந்தது என்று கூறுவது தவறானதாகும். பெரியார் தனது குடியரசு, விடுதலை ஏடுகளில் எழுதி வந்தவை எழுத்து குறைப்பே அன்றி எழுத்துச் சீர்திருத்தம் அல்ல, அதுவும் கூட தமிழின் பழைய எழுத்து வரிவடிவமேயன்றி புதியன அல்ல. இதற்கு கல்வெட்டு சான்றுகளும் உள்ளன.
கவிமணி தேசிக விநாயகர் நாஞ்சில் நாட்டு கல்வெட்டுகளை இதற்கு சான்றாக கூறியிருப்பதாக தனித்தமிழியக்க மூத்த அறிஞர் இரா.இளங்குமரனார் குறிப்பிடுகிறார். அது வருமாறு:
" க், ங், ஞ், ட், த், ந், ப், ம், ய், ர், வ், ழ், ற், எனும் பதினான்கு மெய்களும் ஐகாரம் ஏறக் கை, ஙை, சை, என்றாயின. ஐகார அடையாளமாக இரட்டைச்சுழி அமைக்கப்பட்டு வந்தன. அப்படியே ண. ல. ள. ன, என்னும் நான்கு எழுத்துகளும் ணை, லை, ளை, னை என்று இரட்டைச்சுழி துணை எழுத்தோடு எழுதப்பட்டன. இந்த நான்கு எழுத்துகளும் மற்றைய எழுத்துகளில் வேறுபட்டவை. சுழிகளால் அமைந்தவை. 'ண' மூன்று சுழி. 'ல' ஒரு சுழி. 'ள' ஒரு சுழி. 'ன' இரண்டு சுழி. இச்சுழி எழுத்துகளோடு இரண்டு சுழித்துணை எழுத்து ஒட்டும் போது, (ணை) மூன்று சுழி ஐந்து சுழியாகவும், ஒரு சுழி (லை) மூன்று சுழியாகவும், ஒரு சுழி (ளை) மூன்று சுழியாகவும், இரண்டு சுழி (னை) மூன்று சுழியாகவும் மாறி விடும் அல்லவா? இச்சுழிகளுள் ஒவ்வொன்றைக் குறைக்கும் வகையால் மேலே துதிக்கையாக்கினர். 'வ' என்பது சுழியுடைய எழுத்தாக இருப்பினும், அதற்கு துதிக்கை இட்டால் லகரத்தோடு மயக்கம் ஏற்படுத்தும் என எண்ணி மற்றைப் பதின்மூன்று எழுத்துகள் போல் வைத்துக் கொண்டனர்....
'கா' முதலிய நெடில்களின் கால்கள் ண, ற, ன, என்பவற்றில் சுழியாக இருந்தன. அவற்றை மற்ற எழுத்துகளின்படியே கால் இட்டு எழுதுதல் புதிதாகத் தோன்றவில்லை. பெரிய சீர்திருத்தமாகவும் படாமல் இயல்பாக இருப்பவையாயின."
பெரியார் மேற்கண்ட பழைய வரி வடிவ எழுத்துகளோடு நில்லாது ஐ, ஒள, விலும் மாற்றம் செய்திட்டார். அவற்றை அய், அவ், என்றே எழுதினார். உயிர் எழுத்தை நீக்கி விட்டு உயிர்மெய்யை வைத்துக் கொள்வது குழப்பத்தையே தரும். அதாவது 'ஐ' என்ற உயிர் இல்லாமல் தலை, மலை, மனை முதலிய உயிர்மெய்கள் எவ்வாறு வரும்? மேலும் கய், தய்யல், பிழய், மழய், என்று எழுதியதோடு, வந்தான்= வன்தான், மாங்காய்= மான்காய், பஞ்சம்= பன்சம் என்றெல்லாம் பெரியார் எழுதத் தொடங்கினார்.
அதுமட்டுமின்றி, நண்பரை Fரண்ட்ஸ் என்றும், வரிக்குதிரை என்பதை Zப்பிரா என்றும் ஆங்கில எழுத்துகளை தமிழோடு கலந்து துணிந்து எழுதிட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் எழுத்துகளை அறவே அகற்றி விட்டு முழுவதும் ஆங்கில எழுத்துகளையே பயன்படுத்தினால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றும் கூறினார்.
1978இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்ட போது பாவலரேறு பெருஞ்சித்திரனார் சினங்கொண்டு "தமிழ்மொழியைப் பற்றி கவலைப்படாத நிலையில் தமிழ் எழுத்தைப்பற்றி மட்டும் ஏன் அக்கறை காட்ட வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார். பாவாணரும் கூட 1937இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது பெரியாருடன் தொடர்பு கொண்டு இறுதிவரை நெருங்கிப்பழகியும், அவர் 'விடுதலை' எழுத்தை மேற்கொள்ளும்படி சொல்லவோ, எழுதவோ இல்லை என்கிறார்.
தமிழ் ஆட்சிமொழியாகவும், கல்லூரிகளில் பயிற்றுமொழியாகவும் வருவதை யாரெல்லாம் விரும்பவில்லையோ யாரெல்லாம் ஆங்கிலமே தமிழர் வாழ்வில் தலைமை பெற்றுள்ள நிலை நீடிப்பதை விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் எழுத்துச் சீர்திருத்தம் பேசுவதாக சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் குறிப்பிடுவார்.
பெரியார் வழியில் வீரமணி, வ.செ.குழந்தைசாமி ஆகியோர் எழுத்துச் சீர்திருத்தம் பேசிக்கொண்டே ஆங்கிலமொழிக்கு பல்லக்கு தூக்கி வருவது கண்கூடான உண்மையாகும்.
தமிழின் தாழ்வுற்ற நிலை போக்காது எழுத்துச்சீர்தி
ருத்தம் எவர் பேசினாலும் அவர் தமிழுக்கு எதிரி என்பதை இனியாவது தமிழர்கள் உணர வேண்டும். "

(நன்றி: முதன்மொழி ஏப்.சூன் 2010,
நுமான் எழுதிய மொழியும், இலக்கியமும்: பெரியாரின் சிந்தனைகள்.
தென்மொழி- மே 1986)
நன்றி - கதிர்

தமிழகத்தில் தெலுங்கர் ஆட்சி வரலாறு

தமிழகத்தில் தெலுங்கர் ஆட்சி வரலாறு.
=================

பிற்கால சோழராட்சிக் காலத்தில் கி.பி 1070 ல் அநபாயன் என்ற தெலுங்கன், அதிராசேந்திர சோழனைச் சதிசெய்து கொன்றுவிட்டு குலோத்துங்க சோழன் என்ற பெயரில் சோழராட்சியைக் கைப்பற்றினான்.
அவன் வழிவந்த தெலுங்கசோழர் பரம்பரையை பிற்கால பாண்டியர்கள் ஆட்சியிலிருந்து அகற்றினர்.

1370 ம் ஆண்டு ஆந்திராவையும் கர்நாடகாவையும் ஆண்ட விஜயநகரப் பேரரசின் இளவரசன் குமாரகம்பணன் என்ற தெலுங்கர் மதுரையைக் கைப்பற்றினார்.
அப்போது முதல் தமிழகம் தெலுங்கர் ஆட்சிக்கு உள்ளானது.
1529 ஆம் ஆண்டு காலகட்டத்தில் விஜயநகர பேரரசின்  ஆளுநர்களாக இருந்த தெலுங்க நாயக்கர்களின் பரம்பரை இராணுவ ஆட்சியில் தமிழகம் முற்றாக தெலுங்கர்களிடம் அடிமை ஆனது. சிறிது காலத்தில் தெலுங்க நாயக்கர்கள் விஜயநகரப் பேரரசிடமிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு சர்வாதிகாரம் பொருந்திய மன்னர்களாக தமிழகத்தை ஆளத்தொடங்கினர். அந்த காலகட்டத்தில்
ஏராளமான தெலுங்கர்கள் ஆந்திரத்திலிருந்து தமிழகத்திற்குக் குடியேறினர்.
தெலுங்க பிராமணர்களையும் அவர்களே தமிழகத்தில் குடியேற்றினர்.

தமிழர்களின் வளமான நிலங்களை எல்லாம் அரசுக்கே சொந்தமென சொல்லி தெலுங்கர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.
பள்ளர்கள் உட்பட தமிழ் விவசாயப்பெருங்குடி மக்கள் வளமான நிலத்தை இழந்து அடிமைச் சாதிகளாக மாறிப்போயினர். தமிழர்கள் விவசாய கூலிகளாக மாற்றப்பட்டனர்.

தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களையும் பாளையங்களாகப் பிரித்து தெலுங்க ராணுவத்தை நிறுத்திவைத்து தமிழரை எல்லாம் அடிமைப்படுத்தினர்.

நாயக்க மன்னர்கள் சார்பில் ஒவ்வொரு பாளையத்திலும் நிலைகொண்டிருந்த இராணுவ அதிகாரி பாளையக்காரன் என்று அழைக்கப்பட்டான்.
இராணுவ வல்லாதிக்க பாளையக்காரர்கள் தமிழர்களிடம் நிலத்தைப் பறித்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் வரிக்கொடுமை செய்தனர்.

ஆங்கிலேயர்கள் வந்தபின் நாயக்க மன்னர்கள் மட்டுமே அதிகாரம் இழந்தனர். பாளையக்காரர்கள் எல்லாம் ஜமீன்தார்கள் என்று பெயரை மட்டுமே மாற்றிக் கொண்டனர்.
அதே ராணுவ ஆட்சியைத்தான் செய்தனர் தெலுங்க ஜமீன்தார்கள்.

ஆங்கிலேயர் இருக்கும் போதே பார்ப்பனப் பூச்சாண்டி காட்டி 1916 ல் நீதிக்கட்சியைத் தொடங்கி, 1920 முதல் பலமுறை அந்த தெலுங்கர்களே முதலமைச்சர்களாக இருந்தனர்.

1944 ல் திராவிடர் என்று பெயர்மாற்றிக் கொண்டு அந்த தெலுங்கர்களே பிறகு தமிழகத்தை நீண்டகாலம் ஆட்சி செய்துள்ளனர்.

1370 ஆம் ஆண்டுமுதல் இப்போதுவரை தமிழகத்தை ஆளுவது தெலுங்கர்கள்தான்.
அதுவே தொடர்கிறது.

திராவிட என்ற பெயருடைய கட்சி சார்பில் தமிழர்களான எடப்பாடியும் பன்னீரும் முதலமைச்சர் ஆகி இருப்பதுமட்டும் விதிவிலக்கு.

தமிழர்களிடம் ஆதிக்க சாதி என்றும் தலித் சாதி என்றும் சொல்லி சாதிச்சண்டைகளை மூட்டிவிட்டு தமிழரிடம் ஒற்றுமையைக் குலைப்பவர்கள் அந்த திராவிட தெலுங்கர்கள்தான்.
தமிழர்கள் சாதிச்சண்டை செய்துகொண்டு ஒற்றுமை அடையாமல் இருக்கும்வரை திராவிட தெலுங்கர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

" தமிழர்கள் ஒன்றுபட்டால் தமிழர்க்கு உண்டு வாழ்வு.
தமிழர்க்குள் ஒற்றுமை நீங்கினால் தமிழர்க்கே தாழ்வு".

" வாழும் உரிமை அனைவருக்கும்
ஆளும் உரிமை தமிழருக்கே".

பெரியார் சொன்னது எழுத்துச் சீர்திருத்தமா? எழுத்துச் சீரழிப்பா?

தமிழில் எழுத்துக்கள் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் தமிழ்கற்க சிரமப்படுவதாகவும், ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் மட்டும் உள்ளதால் ஆங்கிலத்தைக் கற்பது எளிதாக இருக்கிறது எனவும் கூறித் தமிழ் எழுத்துக்களைக் குறைக்கவேண்டும் என பண்டிதர்களிடம் பெரியார் கேட்டுக்கொண்டாராம்.

பெரியார் தமிழ் எழுத்துக்களை எந்தவகையில் குறைக்கச் சொன்னார்?
தமிழ் எழுத்துக்கள் உயிர் 12 + மெய் 18 + ஆயுதம் 1 =  மொத்தம் 31 மட்டுமே.
இவற்றில் உள்ள ஒரு உயிரொலியும் ஒரு மெய்யொலியும் சேர்ந்து ஒலிக்கும் போது பிறக்கும் ஒலி கூட்டொலி ஆகும்.
அந்தவகையில் கூட்டொலிகள் மொத்தம் 12×18=216 உருவாகின்றன.
இந்த 216 கூட்டொலிகளுக்குத்தான் 216 உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கியுள்ளனர். இந்த 216 உயிர்மெய் எழுத்துக்களுக்கும் தனித்தனி எழுத்துருக்களை உருவாக்காமல் ா, ி, ீ, ெ, ே,  போன்ற சில குறியீடுகளை மட்டும் உருவாக்கி அவற்றை 18 மெய்யெழுத்துக்களோடு சேர்த்து 216 உயிர்மெய் எழுத்துக்களையும் எழுத வழிசெய்தனர். எனவே 216 உயிர்மெய் எழுத்துக்களைக் கற்பது ஒன்றும் பெரிய சுமையல்ல.

ஆங்கிலம் போன்ற மொழிகளில் கூட்டொலிகளுக்கு எழுத்துக்களை உருவாக்காமல் உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் மட்டுமே வைத்துக்கொண்டு எழுதிக்கொள்கின்றனர்.
கூட்டொலிகளுக்கு தனி எழுத்துக்களை உருவாக்கும் அறிவு ஐரோப்பியர்களுக்கு இல்லாமல் போனது.
நாமும் தமிழில் உயிர்மெய் எழுத்துக்கள் இல்லாமல் 31 எழுத்துக்களை மட்டுமே வைத்துக்கொண்டு தமிழை எழுதமுடியும்.
தமிழ் என்பதை த்அம்இழ் என்றும்,
அமுதக்கனி என்பதை அம்உத்அக்க்அன்இ என்றும்,
வில்லவன் கோதை என்பதை வ்இல்ல்அவ்அன் க்ஓத்ஐ என்றும் எழுத முடியும். அவ்வாறு எழுதினால் எழுதுவதற்கான நேரமும் இடமும் அதிகம் தேவைப்படும் என்பதை உணர்ந்தே கூட்டொலிகளுக்கு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கினர்.
உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கிய தமிழர்களின் அறிவாராய்ச்சி வியக்கத்தக்கதாகத் தெரியவில்லையா?
ஆங்கிலேயர்களுக்கு அந்த அறிவு இல்லை. அவர்கள் முட்டாள்கள்தான். குறில், நெடில் வேறுபாட்டைக்கூட எழுதிக்காட்ட ஆங்கிலத்தில் எழுத்துக்கள் இல்லை.

ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் மட்டுமே உள்ளன என்று சொல்வதும் ஏமாற்று வேலைதான்.
உண்மையில் ஆங்கிலத்தில் 104 எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.
அச்சில் பயன்படுத்துவது பெரிய எழுத்துக்கள் 26 என்றும், சிறிய எழுத்துக்கள் 26 என்றும்,
கையெழுத்தில் பயன்படுத்துவது பெரிய எழுத்துக்கள் 26 என்றும், சிறிய எழுத்துக்கள் 26 என்றும் ஆக மொத்தம் 104 எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளன.

ஐகார, ஔகார எழுத்துக்கள் பற்றி,,,,,

அகர உயிரை அடுத்து யகர மெய் வந்தால் அது அஇ என்றவாறே ஒலிக்கிறது.
அகர உயிரை அடுத்து வகர மெய் வந்தால் அது அஉ என்றே ஒலிக்கிறது.
ஐ என்பது அஇ என்றே ஒலிக்கும். அய் என்று ஒலிக்காது.
ஔ என்பது அஉ என்றே ஒலிக்கும். அவ் என்று ஒலிக்காது.

அதனாலேயே அறிவியல் முறைப்படி தமிழர்கள் நுண்ணிய வேறுபாட்டைக் கண்டுபிடித்து ஐ, ஔ ஒலியன்களுக்கு எழுத்துக்களை உருவாக்கினர்.

பன்னாட்டு மொழியியல் அறிஞர்களும் தொல்காப்பியரின் ஒலியியல் மற்றும் ஒலியனியல் ஆராய்ச்சியைப் பாராட்டுகின்றனர்.

தொல்காப்பியரைவிட பெரியார் ஒன்றும் பெரிய மொழி அறிஞர் அல்ல.
எழுத்துக்களைப் பற்றிய ஆய்வில் பெரியார் பகுத்தறிவில்லாத ஒரு முட்டாள்.

தமிழைப் பொருத்தவரை பெரியாரைப் பின்பற்றினால் தமிழ் சிதைந்துதான் போகும்.

தமிழர்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பே பேச்சொலிகளை நுட்பமாக ஆராய்ந்து அவ்வொலிகளுக்கு எழுத்துக்களை உருவாக்கி தமிழுக்கான வரிவடிவத்தை வரிசைப்படுத்திக் கட்டமைத்திருப்பது வியக்கத்தக்க அறிவியலாகும்.

பெரியாரைப் பின்பற்றி அய், அவ், கய், ழய், ணய் என்று எழுதுவது மிகப்பெரிய முட்டாள்தனம்.

அய்யா, அவ்வை, அய்ப்பசி, மழய், தய், கய், வய், வெண்ணய், எண்ணய், பொட்டய், நெட்டய், குட்டய், தரய், குறய் என்று எழுதுபவர்கள் தமிழை அழிப்பவர்களே ஆவர்.

திராவிடர் என்ற சொல்லும் பொருண்மை மாற்றமும்

திராவிடர் என்ற சொல்லும் பொருண்மை மாற்றமும்:
=============
பண்டைக் காலத்தில் திராவிடர் என்ற சொல் விந்திய மலைக்குக் தெற்கே வாழ்ந்த பிராமணர்களை மட்டுமே குறித்தது. ஆந்திரம், கர்னாடகம், மஹாராஷ்ட்ரம் ஆகிய பகுதியை உள்ளடக்கிய தென்னிந்தியாவில் வாழ்ந்த பிராமணர்களை பஞ்ச திராவிடர் என்று அழைத்தனர். விந்திய மலைக்கு வடக்கே இருந்த வட இந்திய பிராமணர்களை பஞ்ச கௌடர் என்று அழைத்தனர்.
பஞ்ச திராவிடராகிய பிராமணர்கள் வாழும் நிலப்பரப்பை பஞ்ச திராவிடம் என்றும் அழைத்தனர்.
திருஞானசம்பந்தர் ஒரு பிராமணர். அதனாலேயே அவரை "திராவிட சிசு" என்று அழைத்தனர்.
தென்னிந்திய மொழிகளை ஆராய்ந்த மொழியறிஞர் எல்லீசு, கால்டுவெல் போன்றவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் ஒரு குடும்ப மொழிகள் என்பதைக் கண்டறிந்து அம் மொழிக்குடும்பத்துக்கு "திராவிட மொழிக் குடும்பம்" என்று பெயர் வைத்தனர்.
அதனால் தென்னிந்திய நிலப்பரப்பைக் குறிக்கப் பயன்படுத்திய திராவிடம் என்ற சொல் கால்டுவெல், எல்லீசு போன்றவர்களால் மொழிக்குடும்பத்தைக் குறிக்கும் சொல்லாக பொருண்மை மாற்றம் அடைகிறது.
அதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைத் தாய்மொழியாகப் பேசும் (பிராமணரல்லாத) மக்களைக் குறிக்கும் சொல்லாக திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

அதாவது பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்திய திராவிடர் என்ற சொல் பிராமணரல்லாத மக்களைக் குறிக்கும் சொல்லாக பொருண்மை மாற்றம் அடைகிறது.

இந்த திராவிடம், திராவிடர் என்ற கருத்தியலால் தமிழகத்தில் மட்டும் பார்ப்பனியத்தை எதிர்த்து திரவிடத்தேசியம் என்ற அரசியல் தத்துவம் வளர்ந்து 1920 முதல் தற்போதுவரை அரசாளுமை செலுத்தியுள்ளது.
இந்த திராவிடத் தேசிய அரசியல் தமிழகத்தில் மட்டும் இருப்பதாலும், திராவிடத் தேசிய அரசியலில் தமிழகத்தில் உள்ள கன்னடரும், தெலுங்கரும் மட்டும் தலைமைத்துவ ஆதிக்கம் செலுத்துவதாலும் இப்போது தமிழர்கள் தலைமைதாங்கும் தமிழ்த்தேசிய அரசியல் வளர்ந்து வருகிறது.

தமிழ்த்தேசிய அரசியலின் எழுச்சியால் இப்போது திராவிடர் என்ற சொல் தமிழகத்தில் வாழும் தெலுங்கரையும் கன்னடரையும் மட்டும் குறிக்கும் சொல்லாக பொருள் குறுக்கம் என்றவகையில் பொருண்மை மாற்றம் அடைந்துவருகிறது.
தமிழர் வேறு திராவிடர் வேறு என்று சொல்லும் வகையில் திராவிடர் என்ற சொல் பொருண்மை மாற்றம் அடைந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

மொழியில் தோன்றும் சொற்களும் அதன் பொருளும் காலத்திற்கு ஏற்ப மாறுவதைத்தான் பொருண்மை மாற்றம் என்கின்றனர் மொழியியலறிஞர்.

எள்+நெய்=எண்ணெய்.
முதலில் எள்ளின் நெய்யாக வழங்கி, பின் எண்ணெய் பொதுச்சொல்லாகி, எள்நெய்யைக் குறிக்க நல்லெண்ணெய் என்ற சொல் உருவாகிவிட்டதல்லவா?

காஷ்மீரத்தின் வரலாற்றைச் சொல்லும் ராஜதரங்கினி என்ற நூலை கல்ஹனர் என்பவர் 12 ம் நூற்றாண்டில் எழுதினார். அதில் வட இந்தியாவில் வாழ்ந்த ஐந்து பிராமணர் குழுக்களை பஞ்ச கௌடர் என்றும், விந்திய மலைக்குத் தெற்கே தென்னிந்தியாவில் வாழ்ந்த ஐந்து பிராமணர் குழுக்களை பஞ்ச திராவிடர் என்றும் குறிப்பிடுகிறார்.

ஆரியர் என்பது அவர்களின் (பிராமணர்களின்) பொதுவான இனப்பெயர்.
பஞ்ச திராவிடர், பஞ்ச கௌடர் என்பது இந்திய பிராமணர்களுக்குள் உட்பிரிவு.

கர்நாடகாஸ்²ச தைலங்கா³: த்³ரவிடா³: மஹராஷ்ட்ரகா​: |
கு³ர்ஜராஸ்²சேதி பஞ்சைவ த்³ரவிடா³: விந்த்⁴யத³க்ஷிணே ||

ஸாரஸ்வதா​: காந்யகுப்³ஜா: கௌ³டா³: உத்கலமைதி²லா​: |
பஞ்சகௌ³டா³: இதி க்²யாதா விந்த்⁴ஸ்யோத்தரவாஸின: ||

குஜராத் பகுதி பிராமணர்களையும் பஞ்ச திராவிட பிராமணர்களில் அடக்குகிறார்.